கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.
முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..
அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.
விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..
***
சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்லபுரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்லபுரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?
***
மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(
இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.
டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.
அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Monday, February 22, 2010
Monday, June 1, 2009
ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும் (சிறுகதை)
முன்குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.
இனி கதை...
வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..
******
கி.பி. 1885
சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.
இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.
"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"
"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"
"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்"
"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"
பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.
"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"
"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"
"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"
திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.
"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.
"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.
****
இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.
"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"
"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."
"என்ன பிரச்சினை?"
பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"
"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"
*****
கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...
1972ன் இறுதியில்..
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.
"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"
"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.
இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."
"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"
விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"
"என்ன சொல்றீங்க?"
"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.
அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவது ஒரு பிரச்சினை. அது எல்லாத்தையும் இப்ப உருவாக்கி இருக்கிற இந்த ஒன்பதாவது கருவுல சரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு"
"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"
"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபலம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.
இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"
பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,
"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."
'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.
"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."
"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..
****
ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.
அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.
ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.
இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.
இனி கதை...
வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..
******
கி.பி. 1885
சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.
இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.
"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"
"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"
"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்"
"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"
பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.
"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"
"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"
"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"
திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.
"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.
"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.
****
இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.
"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"
"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."
"என்ன பிரச்சினை?"
பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"
"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"
*****
கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...
1972ன் இறுதியில்..
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.
"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"
"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.
இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."
"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"
விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"
"என்ன சொல்றீங்க?"
"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.
அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவது ஒரு பிரச்சினை. அது எல்லாத்தையும் இப்ப உருவாக்கி இருக்கிற இந்த ஒன்பதாவது கருவுல சரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு"
"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"
"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபலம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.
இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"
பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,
"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."
'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.
"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."
"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..
****
ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.
அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.
ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.
இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.
Wednesday, March 25, 2009
துணுக்ஸ் - 2009/03/25
எப்படியோ 33 வருசத்துக்கு அப்புறமா நம்ம துளசி டீச்சர் ஊர்ல ஒரு டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சி. எதிர்பார்த்த முடிவுதான்னாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால இருந்தே எப்படியாவது இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 535 ரன்னுக்கு மேல அடிக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன், அது நடக்காம போயிடுச்சி. அது என்ன 535? கடைசியா சொல்றேன் :)))
இந்த தொடரையும் ஜெயிச்சா 40 வருசத்துக்கு அப்புறமா நம்ம ஜெயிக்குற தொடரா இருக்கும். செய்வாங்களா?
*****
விகடன்ல இந்த வாரம் ரெண்டு விசயம் ஆச்சர்யப்படுத்துனது. ஒண்ணு கிருஷ்ணா டாவின்சி எழுதுன "அச்சக்காடு" சிறுகதை. அற்புதமான களம், அருமையான நடை, மிஸ் பண்ணாதீங்க.
அடுத்தது "ஹாய் மதன்"ல ஒருத்தர் கேட்ட "காந்திஜி தாஜ் மஹாலை பாத்திருக்காரா?"ன்ற கேள்வி. ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இந்தியான்னு சொன்னவுடனே இந்தியர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வர்ற ரெண்டு விசயம் காந்திஜியும், தாஜ் மஹாலும்தான். மதனும் அதே பிரமிப்பை தன் பதில்ல காட்டியிருந்தாரு. ரொம்ப வித்தியாசமான கேள்வி இது.
ரெண்டு நல்ல விசயம் இருந்தா ஒரு உறுத்துற விசயமும் இருக்கணும்ல. அது என்ன இப்பவெல்லாம் விகடன் சினிமா மார்க் 43ஐ தாண்டுறதே இல்லை. சிவா மனசுல சக்திக்கு 42, நான் கடவுளுக்கு 43, காஞ்சிவரத்துக்கு 43.. ஒண்ணுமே புரியல, விகடன் மார்க் குடுக்குறத மறுபரிசீலனை பண்ணுறது நல்லதுன்னு நெனக்கிறேன்.
*****
இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...
*****
இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவுல கிரிக்கெட் வேற. அதுக்கு பாதுகாப்பு தர முடியலன்னு மத்திய அரசு உண்மையை சொன்னா, உடனே "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசம் இல்லையா?"ன்னு பொசக்கெட்டத்தனமா ஒரு கேள்வி கேக்குறாங்க. விட்டா தேர்தலை தள்ளி வைக்க சொல்லுவாங்க போல. ஏன்யா, நாட்டோட அடுத்த பிரதமர் யார்னு முடிவு பண்ணுறத விட, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நமக்காக திட்டங்களைத் தீட்டப்போற அமைச்சர்கள் யாருன்னு தெரிஞ்சுக்குறத விட, நமக்காக நாடாளுமன்றத்துல பேசப்போற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குறத விட விளையாட்டு முக்கியமா போச்சா?
இத்தன நாளா விளையாட்டுலதான் அரசியல் பண்ணிகிட்டு இருந்தீங்க, இப்ப அரசியல்ல விளையாட்டா?
*****
இப்போ ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுல நடக்குதாம். எல்லா கிரிக்கெட் வீரர்கள், டீமை ஏலம் எடுத்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பி சி சி ஐ நிர்வாகிகள் எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தென்னாப்பிரிக்காவுலதான் இருப்பாங்க.
எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?
*******
அது என்னா 535?
161 + 121 + 99 + 154 = 535
வேற ஒண்ணுமில்லை, இதுக்கு முன்னால 2002 டிசம்பர் மாசம் நியூஸிலாந்துல நம்ம ஆளுங்க ரெண்டு டெஸ்ட் விளையாண்டு ரெண்டுலயும் தோத்தாங்க. அந்த ரெண்டு மேட்சுல நாலு இன்னிங்க்ஸ்லயும் இந்திய அணி அடிச்ச மொத்த ஸ்கோர்தான் இது.. :))))
இந்த தொடரையும் ஜெயிச்சா 40 வருசத்துக்கு அப்புறமா நம்ம ஜெயிக்குற தொடரா இருக்கும். செய்வாங்களா?
*****
விகடன்ல இந்த வாரம் ரெண்டு விசயம் ஆச்சர்யப்படுத்துனது. ஒண்ணு கிருஷ்ணா டாவின்சி எழுதுன "அச்சக்காடு" சிறுகதை. அற்புதமான களம், அருமையான நடை, மிஸ் பண்ணாதீங்க.
அடுத்தது "ஹாய் மதன்"ல ஒருத்தர் கேட்ட "காந்திஜி தாஜ் மஹாலை பாத்திருக்காரா?"ன்ற கேள்வி. ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இந்தியான்னு சொன்னவுடனே இந்தியர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வர்ற ரெண்டு விசயம் காந்திஜியும், தாஜ் மஹாலும்தான். மதனும் அதே பிரமிப்பை தன் பதில்ல காட்டியிருந்தாரு. ரொம்ப வித்தியாசமான கேள்வி இது.
ரெண்டு நல்ல விசயம் இருந்தா ஒரு உறுத்துற விசயமும் இருக்கணும்ல. அது என்ன இப்பவெல்லாம் விகடன் சினிமா மார்க் 43ஐ தாண்டுறதே இல்லை. சிவா மனசுல சக்திக்கு 42, நான் கடவுளுக்கு 43, காஞ்சிவரத்துக்கு 43.. ஒண்ணுமே புரியல, விகடன் மார்க் குடுக்குறத மறுபரிசீலனை பண்ணுறது நல்லதுன்னு நெனக்கிறேன்.
*****
இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...
*****
இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவுல கிரிக்கெட் வேற. அதுக்கு பாதுகாப்பு தர முடியலன்னு மத்திய அரசு உண்மையை சொன்னா, உடனே "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசம் இல்லையா?"ன்னு பொசக்கெட்டத்தனமா ஒரு கேள்வி கேக்குறாங்க. விட்டா தேர்தலை தள்ளி வைக்க சொல்லுவாங்க போல. ஏன்யா, நாட்டோட அடுத்த பிரதமர் யார்னு முடிவு பண்ணுறத விட, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நமக்காக திட்டங்களைத் தீட்டப்போற அமைச்சர்கள் யாருன்னு தெரிஞ்சுக்குறத விட, நமக்காக நாடாளுமன்றத்துல பேசப்போற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குறத விட விளையாட்டு முக்கியமா போச்சா?
இத்தன நாளா விளையாட்டுலதான் அரசியல் பண்ணிகிட்டு இருந்தீங்க, இப்ப அரசியல்ல விளையாட்டா?
*****
இப்போ ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுல நடக்குதாம். எல்லா கிரிக்கெட் வீரர்கள், டீமை ஏலம் எடுத்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பி சி சி ஐ நிர்வாகிகள் எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தென்னாப்பிரிக்காவுலதான் இருப்பாங்க.
எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?
*******
அது என்னா 535?
161 + 121 + 99 + 154 = 535
வேற ஒண்ணுமில்லை, இதுக்கு முன்னால 2002 டிசம்பர் மாசம் நியூஸிலாந்துல நம்ம ஆளுங்க ரெண்டு டெஸ்ட் விளையாண்டு ரெண்டுலயும் தோத்தாங்க. அந்த ரெண்டு மேட்சுல நாலு இன்னிங்க்ஸ்லயும் இந்திய அணி அடிச்ச மொத்த ஸ்கோர்தான் இது.. :))))
Thursday, February 12, 2009
தங்கமான வண்டியும் தங்கமணியும்
"வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க"
"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்"
"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?"
"போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்"
"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?"
"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற?"
"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"
"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "
"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க"
"ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?"
"மாத்திடுங்க"
"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. "
"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்"
"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன எனக்கா கேக்குறேன்?"
"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க"
"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்"
"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?"
"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?"
"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா"
"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது.."
"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"
"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"
"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?"
""
"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?"
"மொத்தம் எவ்ளோ வரும்?"
"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி"
"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"
"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"
"#$%#%#$%#$%&$%&"
"*(&*(&^%&^%%^%$$&$^$"
"^%(**()&()&()*"
"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்"
"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?"
"போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்"
"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?"
"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற?"
"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"
"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "
"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க"
"ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?"
"மாத்திடுங்க"
"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. "
"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்"
"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன எனக்கா கேக்குறேன்?"
"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க"
"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்"
"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?"
"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?"
"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா"
"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது.."
"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"
"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"
"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?"
""
"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?"
"மொத்தம் எவ்ளோ வரும்?"
"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி"
"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"
"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"
"#$%#%#$%#$%&$%&"
"*(&*(&^%&^%%^%$$&$^$"
"^%(**()&()&()*"
Monday, November 3, 2008
துணுக்ஸ்
சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..
தங்கமணி: என்னங்க?
நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?
தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?
நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.
தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?
நான் (சரியாக அவர் சொன்னதை காதில் வாங்காமல்): தலைப்பு "பேய் பிடித்தவன்" அப்படின்னு வெக்கலாம்னு இருக்கேன்.
"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)
*******
பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.
என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட செல்ல முடிவதில்லை.
ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.
முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.
இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.
இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..
*******
என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.
அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.
அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.
தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"
*********
இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.
அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.
அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.
வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.
தங்கமணி: என்னங்க?
நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?
தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?
நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.
தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?
நான் (சரியாக அவர் சொன்னதை காதில் வாங்காமல்): தலைப்பு "பேய் பிடித்தவன்" அப்படின்னு வெக்கலாம்னு இருக்கேன்.
"டிடங்க்..." (ஹி..ஹி.. அவங்க கையில இருந்த கரண்டி ஹால்ல லேண்ட் ஆன சத்தம் அது)
*******
பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.
என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட செல்ல முடிவதில்லை.
ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.
முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.
இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.
இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..
*******
என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.
அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.
அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.
தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"
*********
இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.
அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.
அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.
வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.
Tuesday, October 21, 2008
என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்
இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..
இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..
****
எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.
நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.
போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.
ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.
சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.
அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).
அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..
"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."
அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.
"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..
எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.
மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.
திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.
அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"
பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..
*****
மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!
இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..
****
எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.
நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.
போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.
ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.
சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.
அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).
அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..
"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."
அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.
"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..
எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.
மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.
திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.
அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"
பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..
*****
மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!
Labels:
25ம் பதிவு,
அனுபவம்,
நகைச்சுவை,
நிகழ்வு
Saturday, September 20, 2008
என் அன்பு மகனே...

வீட்டிற்குள் நுழைந்ததும்
நாசியை நிறைக்கிறது
மணம்
எந்த அறைக்கு சென்றாலும்
தரையில் காண முடிகிறது
உன் திருவிளையாடலை
படுக்கையில் படுத்து
கண் திறந்தால்
பார்க்காமல் இருக்க
முடியவில்லை
நீ தீற்றிய ஓவியங்கள்
நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன உச்சா...
( டிஸ்கி 1: திட்டுவதற்கு முன் லேபிளை பார்க்கவும்.
டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே விக்கியை யாரும் திட்டவேண்டாம் )
Labels:
கவுஜ,
கொலைவெறி கவிதை,
நகைச்சுவை
Sunday, August 10, 2008
சென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)
நாள்: ஆகஸ்ட் 10, 2008 ஞாயிற்றுக்கிழமை
இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம், மரத்தடி மற்றும் டீக்கடை
நேரில் சிறப்பித்த பதிவர்கள்: அதிஷா, ஜிங்காரோ, பாலபாரதி, லக்கிலுக், டோண்டு ராகவன், வெண்பூ, ரமேஷ் வைத்யா, கடலையூர் செல்வம், முரளி கண்ணன், டாக்டர் புருனோ
போனில் சிறப்பித்தவர்கள்: வால்பையன், பரிசல்காரன்
எதிர்பாராத வருகை: மழை (பதிவர் இல்லை, நிஜ மழைதான்)
நடந்த நிகழ்வுகளும் போடப்பட்ட மொக்கைகளும்:
1. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
2. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
3. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
4. புதிய பதிவர்கள் அறிமுகம்
5. பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்
6. முரளிகண்ணன் வீட்டில் சொன்ன காரணம் குறித்த விளக்கம்
7. மழைக்கு மரத்தடி ஒதுங்கல்
8. பாலபாரதியின் புத்தகம் குறித்த விவாதம்
9. அதிஷா ஸ்பான்சரில் குல்பி ஐஸ்
10. வலைப்பதிவு மூலம் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்பது பற்றிய லக்கிலுக்கின் பேச்சு
11. தமிழ் வலைப்பதிவுலகின் வரலாறு குறித்து டோண்டு, புருனோ, லக்கிலுக் மற்றும் பாலபாரதியின் உரை
12. டோண்டு ராகவன் ஸ்பான்சரில் டீ மற்றும் பிஸ்கட்
13. விகடனின் புதிய வடிவம் குறித்த வருத்தங்கள்
14. நன்றி நவிலல்
பதிவர் சந்திப்புக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். புகைப்படங்கள் கீழே...
Labels:
நகைச்சுவை,
நிகழ்வு,
பதிவர் சந்திப்பு
Thursday, August 7, 2008
டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!
(சரோஜ் நாராயண்சாமி ஸ்டைலில் படிக்கவும்)
நேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.
டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா? புரியலயே தயவு செஞ்சி விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.
அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.
இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க? என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் "வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல?" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.
ஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.
அவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
******
ஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோசிச்சதுல..
நேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.
டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா? புரியலயே தயவு செஞ்சி விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.
அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.
இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க? என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் "வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல?" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.
ஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.
அவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
******
ஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோசிச்சதுல..
Labels:
நகைச்சுவை,
நிகழ்வுகள்,
நையாண்டி
Friday, August 1, 2008
கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்
காமெடி நடிகர் கவுண்ட பெல் அவரது தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவசர அவசரமாக வருகிறார் உதவி இயக்குனர்.
"அண்ணே! அண்ணே! ஒரு சின்ன பிரச்சினைனே!!!"
"என்னடா நாயே?"
"அண்ணே! நீங்க நடிக்கிற புதுப்படத்துல உங்ககிட்ட அடிவாங்குற கேரக்டர நடிக்கிறதுக்கு செந்தேள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருணே"
"அந்த பச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்கல?"
"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே"
"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்"
"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்"
"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"
"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்"
"ஏண்டா! அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா?"
"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"
"அடப்பாவிகளா! அப்ப அவனுங்களத்தானு அப்பணும்"
"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு"
"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க" என்று ஒரு பெயரை சொல்கிறார்.
"அண்ணே! அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே?"
"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் " அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.
"அண்ணே!! என்னண்ணே சொன்னீங்க?"
"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது."
"அண்ணே! அண்ணே! ஒரு சின்ன பிரச்சினைனே!!!"
"என்னடா நாயே?"
"அண்ணே! நீங்க நடிக்கிற புதுப்படத்துல உங்ககிட்ட அடிவாங்குற கேரக்டர நடிக்கிறதுக்கு செந்தேள் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருணே"
"அந்த பச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்கல?"
"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே"
"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்"
"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்"
"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"
"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்"
"ஏண்டா! அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா?"
"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"
"அடப்பாவிகளா! அப்ப அவனுங்களத்தானு அப்பணும்"
"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு"
"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க" என்று ஒரு பெயரை சொல்கிறார்.
"அண்ணே! அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே?"
"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் " அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.
"அண்ணே!! என்னண்ணே சொன்னீங்க?"
"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது."
Labels:
நகைச்சுவை,
நாட்டு நடப்பு,
நையாண்டி
Wednesday, July 30, 2008
ஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 3
ஐயாக்களே..அம்மாக்களே... வலையுலக மகாஜனங்களே!! நான்பாட்டுக்கு ஏதோ எனக்கு இருக்குற அறிவை(?) வச்சி யோசிச்சி, யோசிச்சி(?) அறிவியல் கதையா எழுதி குமிச்சிட்டு(?) இருந்தா, ஒரு மனுசனுக்கு அது அடுக்கலை. நான் அந்த போட்டியில பரிசு வாங்கிட்டாம பண்ணிடனும்ன்றதுக்காக என்னை இந்த மொக்கையில இழுத்து விட்டுட்டு அவரு வேலையை பாத்துக்கிட்டு நல்ல புள்ளன்னு பேரு வாங்கிட்டு இருக்காரு.
அதனால இந்த மொக்கைக்காக திட்டறதா இருந்தா என்னை திட்டாதீங்க.. அவரை திட்டுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்ற மாதிரி, எல்லா வசவும் பரிசலுக்கே!!! (சும்மானாச்சிக்கு பரிசல்...உல்லல்லாய்ய்ய்ய்..)
நம்ம மேட்டருக்கு போவோம்..
*******
பார்ட் 1
பார்ட் 2
எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..
“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”
இனி......
"யாருய்யா இவன்.. நம்ம போனை நம்மள கேக்காம எடுத்து பேசுறான்.. லேண்ட்லைன்ல கான்ஃப்ரன்ஸ் கால்ன்றான்.." என்கிறார் டைரக்டர்.
மீஜிக்.. "அதுகூட பரவாயில்லங்க.. அந்த போன் 3 நாளா டெட். நானே டெலிபோன் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுல எடுத்து பேசிட்டு போவுது பைத்தியம்"
"இப்பதான் புரியுது மீஜிக். இவன் எதுனா வலைப்பதிவரா இருப்பான். ஒருத்தருமே படிக்கலைன்னாலும் தினமும் 4 பதிவு போடுவானுங்க. யாருமே பின்னூட்டம் போடுலைன்னா அவனுங்களே அனானியா பின்னூட்டம் போட்டு ஹிட் கவுண்ட் ஏத்துவானுங்க. ரொம்ப முத்திப்போயி இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்"
'டொக்..டொக்..'
"இவனை விடுங்க, கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு பாருங்க"
கதவைத் திறந்தவுடன் டைரக்டர் டெர்ரராகிறார்.. அங்கே நிற்பது..
கார்த்திக், எஸ்.ஜே.சூர்யாவுடன்..... ஜே.கே.ரித்தீஷ்..
டைரக்டர் மனதிற்குள் 'இன்னிக்கு காலையில ராசிபலன்ல எதிர்பாராத வரவுன்னு போட்டிருந்தப்பவே டவுட் ஆனேன். இப்படி மாட்டிகிட்டேனே' என்றவர் சத்தமா "வாங்க..வாங்க.. நீங்கல்லாம் வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை, என் பொண்டாட்டியோட சின்ன பாட்டி வயசுக்கு வந்துட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது.. மன்னிக்கணும் நான் உடனே கிளம்பியாகணும்" என்றவாறே எஸ்ஸாகிறார்.
தப்பிக்க வழியில்லாமல் மீஜிக் நடுங்கி கொண்டே உட்காருகிறார்.
கார்த்திக்: நாங்க.... இங்க... எதுக்கு... வந்தமுன்னா... இப்ப.. எனக்கு அரஷியல்ல... கொஷ்சம்.. ரெஸ்ட் கிடைச்சிருக்கு
மீஜிக் (மனதிற்குள்): 'அதுக்கு மறுபடியும் படத்துல நடிக்கப் போறியா? வேணான்டா தமிழ்நாடு தாங்காது'
கார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைரக்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..
மீஜிக் : 'உலகம் அழிஞ்சிரும்டா மக்கா' (சத்தமாக) அதுக்கு...
எஸ்.ஜே: நீங்கதான் ம்யூஸிக் போடணும்...
மீஜிக் : 'உன் படத்துக்கு எதுக்குடா தனியா ம்யூசிக்..எதோ ரெண்டு பாரின் சி.டி.யிலருந்து சவுண்ட் எஃபக்ட் காப்பி பண்ணாபோதாதா'.. கண்டிப்பா பண்ணிடலாம் சார்.
ரித்தீஷ்: படத்துக்கு டைட்டில் "பாட்ஷா" அப்படின்னு வெச்சிக்கலாமா?
மீஜிக் : 'வாடா உன்னைத்தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன்! கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா?' சார் டைட்டானிக் அப்படின்னு வேணும்னா வெக்கலாமே?
ரித்தீஷ்: நல்லாயிருக்கே.. இந்த படத்துக்கு அப்புறம் நடிக்கப்போற அடுத்த படத்துக்கு இந்த பேரையே வெச்சிக்கிறேன்..
மீஜிக் : 'ஆஹா.. இன்னும் ஒரு படமா... நானெல்லாம் இன்னும் கானல் நீர் பாதிப்புல இருந்தே வெளியில வருல'
ரித்தீஷ்: சூர்யா சார்... இந்த படத்துக்காக நான் எதுனா கெட்அப் சேஞ்ச் பண்ணனுமா?
மீஜிக் : 'பண்ணிட்டாலும்'
சூர்யா : ஆஆ.. அதெல்லாம் தேவையில்ல.. நான் ரொம்ப இயற்கையா எல்லாத்தையும் காட்டுவேன்..
மீஜிக் : 'ஆமா.. எல்லா நடிகைகளையும் இவரு ரொம்ப இயற்கையா காட்டுவாரு'
ரித்தீஷ்: இந்த படத்துக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு கெடக்கணும். நீங்கதான் பொறுப்பு. என்னா செலவானாலும் பரவாயில்ல..
மீஜிக் : 'அடப்பாவி! அது என்னா அரசாங்க அவார்டா! ஆளுங்கட்சி மேடையில எதிர்கட்சிகாரனை கெட்டவார்த்தையில பேசுனா குடுக்குறதுன்னு நெனச்சியா!'
கார்த்திக்கின் செல்போன் அடிக்கிறது.
கார்த்திக் போனை எடுத்து "ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்.." என்றவர் மீஜிக் பக்கம் திரும்பி "என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா?" என்கிறார்.
மீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..
கார்த்திக் போனில்.. "அப்படியா.. உடனே வர்றேன்.." என்றவர் மற்றவர்களிடம் "வாங்க ஸீர்யா..ரித்தீஷ் தம்பி.. போய் அவரை பாத்துட்டு அப்புறமா வரலாம்" என்றவாறு கிளம்புகிறார்.
எல்லாம் சென்றவுடன் "அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்" என்றாவாறு உட்கார,
'டொக்..டொக்..'
சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..
****
இந்த இடத்திலிருந்து திருப்பூர் தங்கம், நொய்யல் ஆற்றங்கரை நல்லவர், கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் பரிசல் தொடர்வாராக...
அதனால இந்த மொக்கைக்காக திட்டறதா இருந்தா என்னை திட்டாதீங்க.. அவரை திட்டுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்ற மாதிரி, எல்லா வசவும் பரிசலுக்கே!!! (சும்மானாச்சிக்கு பரிசல்...உல்லல்லாய்ய்ய்ய்..)
நம்ம மேட்டருக்கு போவோம்..
*******
பார்ட் 1
பார்ட் 2
எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..
“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”
இனி......
"யாருய்யா இவன்.. நம்ம போனை நம்மள கேக்காம எடுத்து பேசுறான்.. லேண்ட்லைன்ல கான்ஃப்ரன்ஸ் கால்ன்றான்.." என்கிறார் டைரக்டர்.
மீஜிக்.. "அதுகூட பரவாயில்லங்க.. அந்த போன் 3 நாளா டெட். நானே டெலிபோன் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுல எடுத்து பேசிட்டு போவுது பைத்தியம்"
"இப்பதான் புரியுது மீஜிக். இவன் எதுனா வலைப்பதிவரா இருப்பான். ஒருத்தருமே படிக்கலைன்னாலும் தினமும் 4 பதிவு போடுவானுங்க. யாருமே பின்னூட்டம் போடுலைன்னா அவனுங்களே அனானியா பின்னூட்டம் போட்டு ஹிட் கவுண்ட் ஏத்துவானுங்க. ரொம்ப முத்திப்போயி இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்"
'டொக்..டொக்..'
"இவனை விடுங்க, கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு பாருங்க"
கதவைத் திறந்தவுடன் டைரக்டர் டெர்ரராகிறார்.. அங்கே நிற்பது..
கார்த்திக், எஸ்.ஜே.சூர்யாவுடன்..... ஜே.கே.ரித்தீஷ்..
டைரக்டர் மனதிற்குள் 'இன்னிக்கு காலையில ராசிபலன்ல எதிர்பாராத வரவுன்னு போட்டிருந்தப்பவே டவுட் ஆனேன். இப்படி மாட்டிகிட்டேனே' என்றவர் சத்தமா "வாங்க..வாங்க.. நீங்கல்லாம் வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை, என் பொண்டாட்டியோட சின்ன பாட்டி வயசுக்கு வந்துட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது.. மன்னிக்கணும் நான் உடனே கிளம்பியாகணும்" என்றவாறே எஸ்ஸாகிறார்.
தப்பிக்க வழியில்லாமல் மீஜிக் நடுங்கி கொண்டே உட்காருகிறார்.
கார்த்திக்: நாங்க.... இங்க... எதுக்கு... வந்தமுன்னா... இப்ப.. எனக்கு அரஷியல்ல... கொஷ்சம்.. ரெஸ்ட் கிடைச்சிருக்கு
மீஜிக் (மனதிற்குள்): 'அதுக்கு மறுபடியும் படத்துல நடிக்கப் போறியா? வேணான்டா தமிழ்நாடு தாங்காது'
கார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைரக்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..
மீஜிக் : 'உலகம் அழிஞ்சிரும்டா மக்கா' (சத்தமாக) அதுக்கு...
எஸ்.ஜே: நீங்கதான் ம்யூஸிக் போடணும்...
மீஜிக் : 'உன் படத்துக்கு எதுக்குடா தனியா ம்யூசிக்..எதோ ரெண்டு பாரின் சி.டி.யிலருந்து சவுண்ட் எஃபக்ட் காப்பி பண்ணாபோதாதா'.. கண்டிப்பா பண்ணிடலாம் சார்.
ரித்தீஷ்: படத்துக்கு டைட்டில் "பாட்ஷா" அப்படின்னு வெச்சிக்கலாமா?
மீஜிக் : 'வாடா உன்னைத்தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன்! கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா?' சார் டைட்டானிக் அப்படின்னு வேணும்னா வெக்கலாமே?
ரித்தீஷ்: நல்லாயிருக்கே.. இந்த படத்துக்கு அப்புறம் நடிக்கப்போற அடுத்த படத்துக்கு இந்த பேரையே வெச்சிக்கிறேன்..
மீஜிக் : 'ஆஹா.. இன்னும் ஒரு படமா... நானெல்லாம் இன்னும் கானல் நீர் பாதிப்புல இருந்தே வெளியில வருல'
ரித்தீஷ்: சூர்யா சார்... இந்த படத்துக்காக நான் எதுனா கெட்அப் சேஞ்ச் பண்ணனுமா?
மீஜிக் : 'பண்ணிட்டாலும்'
சூர்யா : ஆஆ.. அதெல்லாம் தேவையில்ல.. நான் ரொம்ப இயற்கையா எல்லாத்தையும் காட்டுவேன்..
மீஜிக் : 'ஆமா.. எல்லா நடிகைகளையும் இவரு ரொம்ப இயற்கையா காட்டுவாரு'
ரித்தீஷ்: இந்த படத்துக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு கெடக்கணும். நீங்கதான் பொறுப்பு. என்னா செலவானாலும் பரவாயில்ல..
மீஜிக் : 'அடப்பாவி! அது என்னா அரசாங்க அவார்டா! ஆளுங்கட்சி மேடையில எதிர்கட்சிகாரனை கெட்டவார்த்தையில பேசுனா குடுக்குறதுன்னு நெனச்சியா!'
கார்த்திக்கின் செல்போன் அடிக்கிறது.
கார்த்திக் போனை எடுத்து "ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்.." என்றவர் மீஜிக் பக்கம் திரும்பி "என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா?" என்கிறார்.
மீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..
கார்த்திக் போனில்.. "அப்படியா.. உடனே வர்றேன்.." என்றவர் மற்றவர்களிடம் "வாங்க ஸீர்யா..ரித்தீஷ் தம்பி.. போய் அவரை பாத்துட்டு அப்புறமா வரலாம்" என்றவாறு கிளம்புகிறார்.
எல்லாம் சென்றவுடன் "அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்" என்றாவாறு உட்கார,
'டொக்..டொக்..'
சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..
****
இந்த இடத்திலிருந்து திருப்பூர் தங்கம், நொய்யல் ஆற்றங்கரை நல்லவர், கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் பரிசல் தொடர்வாராக...
Wednesday, July 23, 2008
புது ப்ராஜக்ட் (சின்னக் கதைகள் - 1)
"உங்களையெல்லாம் நான் எதுக்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்டிருக்கன்னா, ஒரு புது ப்ராஜக்ட் வருது, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ப்ராஜக்ட், டெக்னிகலி சேலஞ்சிங்..
அதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..
பல வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..
சொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய 'சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்' ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..
குட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்...
ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"
அதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..
பல வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..
சொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய 'சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்' ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..
குட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்...
ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"
Labels:
சிறுகதை,
சின்னக்கதைகள்,
நகைச்சுவை
Monday, July 14, 2008
நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு
வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?
2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?
3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?
4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?
5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?
6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?
7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?
8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?
9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?
10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?
தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.
நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.
மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி..."
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.
1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?
2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?
3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?
4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?
5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?
6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?
7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?
8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?
9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?
10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?
தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.
நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.
மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி..."
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.
Labels:
நகைச்சுவை,
நையாண்டி,
பின்நவீனத்துவம்
Saturday, July 12, 2008
ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...
டிஸ்கி 1: இந்த இடுகையில் வரும் எல்லா பாத்திரங்களும் கற்பனையே. கண்டிப்பாக உண்மையில்லை
டிஸ்கி 2:....
டிஸ்கி 3:...
டிஸ்கி 4: இடுகையின் தலைப்பிலோ அல்லது முதல் 3 வரிகளிலோ சாமம், சட்டி போன்ற தவிர்க்கப்படவேண்டிய போன்ற வார்த்தைகள் வரவில்லை.
இனி இடுகைக்குப் போவோம்..
அது ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகம். வடிவேலு அமர்ந்திருக்க வேக வேகமாக ஓடி வருகிறார் ஒரு அடிப்பொடி.
"அண்ணே, அண்ணே, அந்த ஜ்யோலட்சுமண கந்தர் மறுபடியும் சாமக்கதைகள போட்டிருக்காரு"
விருட்டென எழுகிறார் வடிவேலு.
"அந்த சைடுநவீனத்துவ கும்பலுக்கு இதுவே வேலயா போச்சி, உடனே கிளம்புறேன்"
வழியில் பார்க்கும் ஒருவர்....
"கால்புள்ள கோவமா கிளம்பிட்டான் போல இருக்கு, இன்னிக்கு எத்தன பதிவர்கள் தலை உருளப்போவுதோ?"
வடிவேலு வருகிறார். அங்கே ஜ்யோலட்சுமண கந்தர், பைத்தியம் தெளிந்தவன், களர், லக்கியில்லாத லுக் எல்லாம் நிற்கின்றனர்.
"டாய் கந்தர்...எதுக்குடா அதைப் போட்ட?"
"ம்ம்ம்ம்ம்ம்... என்ன சொல்றன்னு புரியல... உன் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் ரொம்ப சின்ன எழுத்துல இருக்கு.. கொஞ்சம் பெரிய ஃபான்ட்ல போடு"
"டாய் கந்தர், நீ ஒரு கீ போர்டுல டைப் பண்ற ஆளா இருந்தா இன்னொரு இடுகை போடுறா பாக்கலாம்"
அதற்குள் லக்கியில்லாத லுக் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா" என்று ஒரு பதிவிடுகிறார்.
"ஒத்துக்கறேன்.. நீங்க எல்லாம் ஒரே கீ போர்டுல டைப் பண்றவங்கன்றதான்கறத ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்"
திரும்பி நடக்கிறார். எல்லோரும் சுற்றி நிற்கிறார்கள்.
"உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. இதுவரைக்கும் யாரும் என்னை கும்முனதில்ல"
"போன மாசம்தான ஆங்கிலச்சி விசயத்துல உன் டவுசர கிழிச்சோம்"
"அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்..."
பைத்தியம் தெளிந்தவர் ஒரு பதிவிடுகிறார் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு விண்ணப்பம்" என்ற தலைப்பில்.
"வேணாம்"
லக்கியில்லாத லுக் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு அவசர கடிதம்" என்ற தலைப்பில் அடுத்த பதிவிடுகிறார்.
"வலிக்குது"
எல்லோரும் பின்னூட்டமிட ஆரம்பிக்க,
"அழுதுடுவேன்... அழுதுடுவேன்..."
அங்கே இருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லாரும் வரிசையாக பின்னூட்ட கும்மியை ஆரம்பிக்கிறார்கள்.
டிஸ்கி 2:....
டிஸ்கி 3:...
டிஸ்கி 4: இடுகையின் தலைப்பிலோ அல்லது முதல் 3 வரிகளிலோ சாமம், சட்டி போன்ற தவிர்க்கப்படவேண்டிய போன்ற வார்த்தைகள் வரவில்லை.
இனி இடுகைக்குப் போவோம்..
அது ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகம். வடிவேலு அமர்ந்திருக்க வேக வேகமாக ஓடி வருகிறார் ஒரு அடிப்பொடி.
"அண்ணே, அண்ணே, அந்த ஜ்யோலட்சுமண கந்தர் மறுபடியும் சாமக்கதைகள போட்டிருக்காரு"
விருட்டென எழுகிறார் வடிவேலு.
"அந்த சைடுநவீனத்துவ கும்பலுக்கு இதுவே வேலயா போச்சி, உடனே கிளம்புறேன்"
வழியில் பார்க்கும் ஒருவர்....
"கால்புள்ள கோவமா கிளம்பிட்டான் போல இருக்கு, இன்னிக்கு எத்தன பதிவர்கள் தலை உருளப்போவுதோ?"
வடிவேலு வருகிறார். அங்கே ஜ்யோலட்சுமண கந்தர், பைத்தியம் தெளிந்தவன், களர், லக்கியில்லாத லுக் எல்லாம் நிற்கின்றனர்.
"டாய் கந்தர்...எதுக்குடா அதைப் போட்ட?"
"ம்ம்ம்ம்ம்ம்... என்ன சொல்றன்னு புரியல... உன் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் ரொம்ப சின்ன எழுத்துல இருக்கு.. கொஞ்சம் பெரிய ஃபான்ட்ல போடு"
"டாய் கந்தர், நீ ஒரு கீ போர்டுல டைப் பண்ற ஆளா இருந்தா இன்னொரு இடுகை போடுறா பாக்கலாம்"
அதற்குள் லக்கியில்லாத லுக் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா" என்று ஒரு பதிவிடுகிறார்.
"ஒத்துக்கறேன்.. நீங்க எல்லாம் ஒரே கீ போர்டுல டைப் பண்றவங்கன்றதான்கறத ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்"
திரும்பி நடக்கிறார். எல்லோரும் சுற்றி நிற்கிறார்கள்.
"உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. இதுவரைக்கும் யாரும் என்னை கும்முனதில்ல"
"போன மாசம்தான ஆங்கிலச்சி விசயத்துல உன் டவுசர கிழிச்சோம்"
"அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்..."
பைத்தியம் தெளிந்தவர் ஒரு பதிவிடுகிறார் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு விண்ணப்பம்" என்ற தலைப்பில்.
"வேணாம்"
லக்கியில்லாத லுக் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு அவசர கடிதம்" என்ற தலைப்பில் அடுத்த பதிவிடுகிறார்.
"வலிக்குது"
எல்லோரும் பின்னூட்டமிட ஆரம்பிக்க,
"அழுதுடுவேன்... அழுதுடுவேன்..."
அங்கே இருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லாரும் வரிசையாக பின்னூட்ட கும்மியை ஆரம்பிக்கிறார்கள்.
Labels:
தற்போதைய நிகழ்வுகள்,
நகைச்சுவை,
பகடி
Sunday, June 22, 2008
வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்
டிஸ்கி: இந்த பதிவில் ஒரு சில மிகச்சிறந்த பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் கோபப் பட மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களின் பெயர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தாலே எனக்கு வெற்றிதான்.
மதுரை செல்லும் டெக்கான் ஏர்வேஸ் விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். "வெல்கம் சார்" என்ற விமானப் பணிப்பெண்ணிடம் "ஏதாவது அரசியல்வாதிகள் இருக்காங்களா?" என்று செக் செய்து கொள்கிறார். பணிப்பெண் "இருக்காங்க சார், அது மட்டும் இல்ல, இந்த தடவை வலைப்பதிவர் மாநாடு மதுரையில நடக்குதாம். அதனால கொஞ்சம் வலைப்பதிவர்களும் இருக்காங்க" என்கிறார். "அவங்களால நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை" என்று நினைத்துக் கொண்டே சென்று காலியான ஒரு சீட்டில் உட்கார்கிறார் விஜயகாந்த் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியாமல்.
அருகில் இருப்பவர் "வணக்கம் சார்" என்கிறார், பார்த்தால் பண்ருட்டி ராமச்சந்திரன்.
வி: நீங்க எப்படி சார் இங்க?
ப.ரா: நீங்க வரதா சொன்னாங்க, அதுதான் நானும் ஒரு டிக்கெட் போட்டுட்டேன். ஒரு முக்கியமான விசயம். 2011ல் நம்ம ஜெயிச்ச உடனே துணை முதலமைச்சர்னு ஒரு பதவிய ஏற்படுத்தி, அதுல ஒங்க கூடவே இருக்குற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிய போடுங்க, அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்
வி: (மனதுக்குள்) நானே ராமு வசந்தன கழட்டி விட்டுட்டு நெம்பர் 2 இடத்துல சுதீஷ ஒக்கார வெக்க படாத பாடு பட்டுட்டு இருக்கேன். இதுல இவரு வேற (சத்தமாக) இந்த சீட் செரியில்ல, நான் பின்னால உக்காந்துக்கிறேன்..
எழுந்து பின்னால் அமர்கிறார், அருகில் பார்த்தால் சுதீஷ்..
சு: மாமா 2011 நம்ம ஜெயிச்ச உடனே பதவியேற்பு விழாவ எங்க வெச்சுக்கலாம்? மெட்றாஸ் யுனிவர்சிட்டி ஆடிட்டோரியத்திலயா? இல்ல நேரு ஸ்டேடியத்திலயா?
வி: (மனதுக்குள்) இப்பதான் குழந்தை பொறந்து தவழவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள வயசுக்கு வர சடங்குக்கு வளையல் என்ன டிசைன்ல போடறதுன்னு இவனுக்கு கவலை. திட்டவும் முடியாது, உடனே அவங்க அக்காட்ட வத்தி வெச்சுடுவான் (சத்தமாக) எது நல்லா பெருசா இருக்கோ அதிலயே வெச்சுக்கலாம் மாப்ளே.
எழுந்து வேறு ஒரு சீட்டில் அமர்கிறார். அருகில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர் திரும்புகிறார்...ஓ.பி.எஸ். விஜயகாந்த் சுதாரித்து எழுவதற்குள் ஓ.பி.எஸ் விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு தனது துண்டை எடுத்து இருவரின் கையயும் மூடுகிறார்.
வி: சார்... சார்... என்ன பண்றீங்க? ஏன் என்னோட ஒரு விரல மட்டும் புடிச்சி இந்த அழுத்து அழுத்துறீங்க?
ஓ.பி.எஸ்: உஷ்.. கூட்டணி பத்தி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்குறப்ப சத்தம் போடாதீங்க. இதுக்கு ஒத்துக்குறீங்களா இல்லயா?
வி: (மனதுக்குள்) ஒத்துக்கலன்னா விட மாட்டான் போல இருக்கே இந்த ஆளு, கை வேற இந்த வலி வலிக்குதே (சத்தமாக) ஒத்துக்கிறேன் சார், கைய விடுங்க.
கையை விடுகிறார் ஓ.பி.எஸ்.
சிரித்துக்கொண்டே ஓ.பி.எஸ்.: அப்பாடா வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு தொகுதிக்கே ஒத்துகிட்டீங்க. நான் அம்மாட்ட பேசிடறேன், உங்களுக்கு பொட்டி வந்துரும். எந்த தொகுதின்னு முடிவு பண்ணி அம்மா சொல்வாங்க, நீங்க உடனே தமிழகம் முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பிச்சிடுங்க.. அனேகமா உங்களுக்கு பாண்டிச்சேரி தொகுதிய அம்மா கொடுப்பாங்கன்னு நினக்கிறேன்...
விஜயகாந்த் டெரர்ராகி வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் இருப்பவர் புதிய முகமாக ஜெர்மானிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க தைரியமாக பேச ஆரம்பிக்கிறார்.
வி: வணக்கம் சார். அரசியல்வாதிங்கள பாத்தாலே பயமா இருக்கு.
அவர்: கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?
வி: (என்னாது சோ கிட்ட போய் ஆலோசனையா? விளங்குனா மாதிரிதான்) பரவாயில்ல சார், நான் அந்த சீட்ல போய் உக்காந்துக்கிறேன்.
உட்கார்ந்த பின்புதான் கவனிக்கிறார், அருகில் சுப்பிரமணிய சாமி.
சு.சாமி: இங்க பாருங்கோ.. நான் ஜெயலலிதாட்ட பேசிட்டேன், அவா உங்களுக்கு 2 சீட் தர சம்மதிச்சுட்டா. இப்படியே நாம கோயமுத்தூர் போயி அங்க இருந்து கார்ல கொடநாடு போயிறலாம். ஃப்ளைட் மதுரைக்கு போகுதேன்னு கவலப்படாதேள், இந்த ஏர் டெக்கான் பைலட் ஜெட் ஏர்வேஸ்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதோட சி.டி. எங்கிட்ட இருக்கு, அதை சொல்லி அவாள மிரட்டி கோயமுத்தூருக்கு போக சொல்லலாம்.
வி: நான் யோசிச்சி சொல்றேன்
சு.சாமி: இதுக்கு நீங்க ஒத்துக்கலேன்னா, ஒபாமாவ தோக்கடிக்கறது எப்படின்னு உங்க மச்சான் சுதீஷ், பி.ஜே.பி வட்டச் செயலாளர்கிட்ட பேசிட்டு இருந்த சி.டி. இருக்கு, ஆதாரத்தோட வெளிய விட்டுடுவேன், பாத்துகோங்க.
(கொல்றானுங்களே) என்று நினைத்துக் கொண்டு வேறு சீட்டில் அமர்கிறார்.
அருகிலிருப்பவர்: நீங்க என்கிட்டதான் வருவீங்கன்னு தெரியும். மதுரை போனதும் அஞ்சா நெஞ்சன போயி பாத்துடுவோம். அப்படியே கிளம்பி சென்னை வந்தீங்கன்னா, மடிப்பாக்கத்துல ஒங்களுக்கு ஒரு வார்டு கவுன்சிலர் பதவி உறுதி. தேர்தல்ல நான், நம்ம உடன்பிறப்புங்க எல்லாம் உங்களுக்கு வேலை செய்றோம். உண்மைத்தமிழன்ட மட்டும் போயிடாதீங்க, அவரு அம்மா கட்சிக்காரரு..
வி: (என்னது வார்டு கவுன்சிலரா? இதுக்கு அவனுங்களே பரவாயில்லயே) ஆமா யாரு நீங்க?
அருகிலிருப்பவர்: கட்சியல உப்புமா போஸ்ட்ல இருக்குறானே இவன் வந்து கூட்டணி பத்தி பேசுறானேன்னு நினைக்காதிங்க. நான் மடிப்பாக்கத்துலயே ரொம்ப லக்கியான ஆளு..
வி: யேய் அவனா நீயி....
அலறியடித்துக் கொண்டு போய் வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் அ.இ.நா.ம.க கார்த்திக். (ஆஃப் ஆன லேப்டாப்பையே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)
கா: அது.. வந்து... நீங்களும்... நானும்... கூட்டணி வெஷ்ஷா...நாமதான் ஜெயிப்போம்... என்...கட்சிக்காரங்க 190... தொகுதியில நிக்கறதுக்கு....ரெடியா இருக்காங்க...மீதியில ... உங்க ஆளுங்கள....நிறுத்துங்க...
வி: அது என்னா 190 கணக்கு?
கா: அது... வந்து.. கட்ஷியில... இது...வரைக்கும்... 190.... பேர்தான்.... சேர்ந்திருக்காங்க. அதுதான்....
வி: (இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேன்னே தெரியலயே)
ஃப்ளைட் முழுக்கத் தேடி சாந்தமான ஒருவர் அருகில் அமர்கிறார்.
அவர்: நீங்க யாரு?
வி: (லேசான ஏமாற்றத்துடன்) நாந்தான் விஜயகாந்த், நல்லா ஆக்சன் படம்லாம் நடிப்பேன், இப்பதான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். நீங்க?
அவர்: நான் ஒரு வாத்தியார், ரொம்ப நாளா நம்ம பசங்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன். என் கையில பிரம்பு எல்லாம் இல்ல. அடிச்சு சொல்லிக் குடுக்காம அன்பா சொல்லிக் கொடுப்பேன். ஆமா இன்னும் 3 வருசத்தில நீங்க என்னாவா ஆகப் போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?
வி: (இவரும் அதயே நோண்டுராறே) அது வந்து..நான் சி.எம்.மா இருப்பேன்
அவர்: அது எப்படி நீங்க சொல்றீங்க? உங்க ஜாதகத்தைப் பாத்தீங்களா?
வி: அத எதுக்கு நான் பார்க்கணும்?
அவர்: எல்லாருமே அவங்கவங்க ஜாதகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கனும். ஜோசியம் அப்படின்றது ஒரு கடல் மாதிரி, நான் அதுல உங்கள ஒரு பயணம் அழைச்சிட்ட்டுப் போறேன்.
வி: நீங்க எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறீங்க?
அவர்: உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம், கரையிலயே நின்னுக்கங்க, விருப்பம் இருக்கறவங்க மட்டும் வந்தா போதும். அலோ எங்க போறீங்க?
வி: அது... எல்லார்கிட்டயும் பேசுனதுல எனக்கு வயித்த கலக்குது, நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்.
வேக வேகமாக நடக்கிறார். பக்கத்திலிருந்து ஒரு குரல்
அவர்: வாங்க கேப்டன் வந்து என் பக்கத்தில உக்காரதுக்கு நன்றி
வி: நாந்தான் உங்க பக்கத்திலேயே உக்காரவே இல்லயே
அவர்: ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே ஒரு சின்னப் பையன்ங்க. இப்பிடியே பின்னூட்டம் போட்டு போட்டு பழக்கமாயிடுச்சி. வருத்தப்படாதீங்க
"ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேய்" என்று ஒரு ஐம்பது, அறுபது குரல்கள் கேட்க திடுக்கிடுகிறார்,
வி: என்னங்க இப்படி கத்துறாங்க?
அவர்: அவங்கள்லாம் என்னோட கருத்த வழிமொழியுறாங்களாம், இதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்க.
வி: (எனக்கு இன்னிக்கு சனி உச்சத்துல இருக்குன்னு நெனக்கிறேன்)
பாத்ரூம் அருகில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர்: கவலப்படாதீங்க அய்யா. அந்த ஆளூ இந்த வண்டியிலதான் வராரு. ஏரோப்ளேன் ஸ்டேன்ட்லயே அவனைத் தூக்குறோம்.
மற்றவர்: என்ன சொல்ற குரு, ஏரோப்ளேன் ஸ்டேன்டா?
முதலாமவர்: ஆமாங்கய்யா, பஸ் நிக்கற இடம் பஸ் ஸ்டேன்ட். அதே மாதிரி ஏரோப்ளேன் நிக்கற எடம் ஏரோப்ளேன் ஸ்டேன்ட்தான. அங்கதான் நம்ம பசங்க சுமோவோட நிக்கறாங்க. தூக்கிட்டு தோட்டத்துக்கு கொண்டாந்துறோம்.
"எங்க போனாலும் விட மாட்டேன்றானுங்களே" என்று புலம்பியபடி பயத்துடன் கதவைத் திறக்கிறார் விஜயகாந்த். அது பாத்ரூம் இல்லை, பாராசூட் ரேம்ப்.
"ஆகா, இதுதான்டா இவங்க எல்லார்கிட்ட இருந்து தப்பிக்க நல்ல வழி. கீழப்போயி ஒரு லாரியோ, ஷேர் ஆட்டோவோ புடிச்சி மதுரைக்கு போயிட வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டு ஒரு பாராசூட்டை எடுக்கிறார்.
அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,
"எங்க கூட கூட்டணி வெச்சீங்கன்னா நாம கண்டிப்பா ஜெயிக்கறோம். நீங்கதான் துணை முதலமைச்சர்"
"ஆகா, காலையில இருந்து இப்பதான் ஒரு நல்ல வார்த்தையை காதில் கேக்குறேன்" என்று நினைத்தவாறு திரும்புகிறவர் அதிர்ச்சியில் சிலையாகிறார்.
அங்கே நிற்பது விஜய டி.ராஜேந்தர்..
"நீ வேணான்ற தி.மு.க
உன்ன வேணான்னுது அ.தி.மு.க.
ஆனா உனக்காகவே காத்திருக்குயா ல.தி.மு.க
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
சிம்பு செட் பண்றான்டா ட்ரெண்ட்
எல்லா கம்பெனியிலயும் இருப்பாங்க ஜி.எம்.மு
என் கூட நீ கூட்டணி வெச்சா நாந்தாங்க சி.எம்.மு"
விஜயகாந்த்: என்னா சொன்னீங்க?
டி.ஆர்: 2011ல நாந்தாங்க சி.எம்.மு
விஜயகாந்த்: (அழுகிற குரலில்) இன்னொரு தபா சொல்லுங்க?
டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு
விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.
மதுரை செல்லும் டெக்கான் ஏர்வேஸ் விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். "வெல்கம் சார்" என்ற விமானப் பணிப்பெண்ணிடம் "ஏதாவது அரசியல்வாதிகள் இருக்காங்களா?" என்று செக் செய்து கொள்கிறார். பணிப்பெண் "இருக்காங்க சார், அது மட்டும் இல்ல, இந்த தடவை வலைப்பதிவர் மாநாடு மதுரையில நடக்குதாம். அதனால கொஞ்சம் வலைப்பதிவர்களும் இருக்காங்க" என்கிறார். "அவங்களால நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை" என்று நினைத்துக் கொண்டே சென்று காலியான ஒரு சீட்டில் உட்கார்கிறார் விஜயகாந்த் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியாமல்.
அருகில் இருப்பவர் "வணக்கம் சார்" என்கிறார், பார்த்தால் பண்ருட்டி ராமச்சந்திரன்.
வி: நீங்க எப்படி சார் இங்க?
ப.ரா: நீங்க வரதா சொன்னாங்க, அதுதான் நானும் ஒரு டிக்கெட் போட்டுட்டேன். ஒரு முக்கியமான விசயம். 2011ல் நம்ம ஜெயிச்ச உடனே துணை முதலமைச்சர்னு ஒரு பதவிய ஏற்படுத்தி, அதுல ஒங்க கூடவே இருக்குற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிய போடுங்க, அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்
வி: (மனதுக்குள்) நானே ராமு வசந்தன கழட்டி விட்டுட்டு நெம்பர் 2 இடத்துல சுதீஷ ஒக்கார வெக்க படாத பாடு பட்டுட்டு இருக்கேன். இதுல இவரு வேற (சத்தமாக) இந்த சீட் செரியில்ல, நான் பின்னால உக்காந்துக்கிறேன்..
எழுந்து பின்னால் அமர்கிறார், அருகில் பார்த்தால் சுதீஷ்..
சு: மாமா 2011 நம்ம ஜெயிச்ச உடனே பதவியேற்பு விழாவ எங்க வெச்சுக்கலாம்? மெட்றாஸ் யுனிவர்சிட்டி ஆடிட்டோரியத்திலயா? இல்ல நேரு ஸ்டேடியத்திலயா?
வி: (மனதுக்குள்) இப்பதான் குழந்தை பொறந்து தவழவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள வயசுக்கு வர சடங்குக்கு வளையல் என்ன டிசைன்ல போடறதுன்னு இவனுக்கு கவலை. திட்டவும் முடியாது, உடனே அவங்க அக்காட்ட வத்தி வெச்சுடுவான் (சத்தமாக) எது நல்லா பெருசா இருக்கோ அதிலயே வெச்சுக்கலாம் மாப்ளே.
எழுந்து வேறு ஒரு சீட்டில் அமர்கிறார். அருகில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர் திரும்புகிறார்...ஓ.பி.எஸ். விஜயகாந்த் சுதாரித்து எழுவதற்குள் ஓ.பி.எஸ் விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு தனது துண்டை எடுத்து இருவரின் கையயும் மூடுகிறார்.
வி: சார்... சார்... என்ன பண்றீங்க? ஏன் என்னோட ஒரு விரல மட்டும் புடிச்சி இந்த அழுத்து அழுத்துறீங்க?
ஓ.பி.எஸ்: உஷ்.. கூட்டணி பத்தி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்குறப்ப சத்தம் போடாதீங்க. இதுக்கு ஒத்துக்குறீங்களா இல்லயா?
வி: (மனதுக்குள்) ஒத்துக்கலன்னா விட மாட்டான் போல இருக்கே இந்த ஆளு, கை வேற இந்த வலி வலிக்குதே (சத்தமாக) ஒத்துக்கிறேன் சார், கைய விடுங்க.
கையை விடுகிறார் ஓ.பி.எஸ்.
சிரித்துக்கொண்டே ஓ.பி.எஸ்.: அப்பாடா வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு தொகுதிக்கே ஒத்துகிட்டீங்க. நான் அம்மாட்ட பேசிடறேன், உங்களுக்கு பொட்டி வந்துரும். எந்த தொகுதின்னு முடிவு பண்ணி அம்மா சொல்வாங்க, நீங்க உடனே தமிழகம் முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பிச்சிடுங்க.. அனேகமா உங்களுக்கு பாண்டிச்சேரி தொகுதிய அம்மா கொடுப்பாங்கன்னு நினக்கிறேன்...
விஜயகாந்த் டெரர்ராகி வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் இருப்பவர் புதிய முகமாக ஜெர்மானிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க தைரியமாக பேச ஆரம்பிக்கிறார்.
வி: வணக்கம் சார். அரசியல்வாதிங்கள பாத்தாலே பயமா இருக்கு.
அவர்: கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?
வி: (என்னாது சோ கிட்ட போய் ஆலோசனையா? விளங்குனா மாதிரிதான்) பரவாயில்ல சார், நான் அந்த சீட்ல போய் உக்காந்துக்கிறேன்.
உட்கார்ந்த பின்புதான் கவனிக்கிறார், அருகில் சுப்பிரமணிய சாமி.
சு.சாமி: இங்க பாருங்கோ.. நான் ஜெயலலிதாட்ட பேசிட்டேன், அவா உங்களுக்கு 2 சீட் தர சம்மதிச்சுட்டா. இப்படியே நாம கோயமுத்தூர் போயி அங்க இருந்து கார்ல கொடநாடு போயிறலாம். ஃப்ளைட் மதுரைக்கு போகுதேன்னு கவலப்படாதேள், இந்த ஏர் டெக்கான் பைலட் ஜெட் ஏர்வேஸ்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதோட சி.டி. எங்கிட்ட இருக்கு, அதை சொல்லி அவாள மிரட்டி கோயமுத்தூருக்கு போக சொல்லலாம்.
வி: நான் யோசிச்சி சொல்றேன்
சு.சாமி: இதுக்கு நீங்க ஒத்துக்கலேன்னா, ஒபாமாவ தோக்கடிக்கறது எப்படின்னு உங்க மச்சான் சுதீஷ், பி.ஜே.பி வட்டச் செயலாளர்கிட்ட பேசிட்டு இருந்த சி.டி. இருக்கு, ஆதாரத்தோட வெளிய விட்டுடுவேன், பாத்துகோங்க.
(கொல்றானுங்களே) என்று நினைத்துக் கொண்டு வேறு சீட்டில் அமர்கிறார்.
அருகிலிருப்பவர்: நீங்க என்கிட்டதான் வருவீங்கன்னு தெரியும். மதுரை போனதும் அஞ்சா நெஞ்சன போயி பாத்துடுவோம். அப்படியே கிளம்பி சென்னை வந்தீங்கன்னா, மடிப்பாக்கத்துல ஒங்களுக்கு ஒரு வார்டு கவுன்சிலர் பதவி உறுதி. தேர்தல்ல நான், நம்ம உடன்பிறப்புங்க எல்லாம் உங்களுக்கு வேலை செய்றோம். உண்மைத்தமிழன்ட மட்டும் போயிடாதீங்க, அவரு அம்மா கட்சிக்காரரு..
வி: (என்னது வார்டு கவுன்சிலரா? இதுக்கு அவனுங்களே பரவாயில்லயே) ஆமா யாரு நீங்க?
அருகிலிருப்பவர்: கட்சியல உப்புமா போஸ்ட்ல இருக்குறானே இவன் வந்து கூட்டணி பத்தி பேசுறானேன்னு நினைக்காதிங்க. நான் மடிப்பாக்கத்துலயே ரொம்ப லக்கியான ஆளு..
வி: யேய் அவனா நீயி....
அலறியடித்துக் கொண்டு போய் வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் அ.இ.நா.ம.க கார்த்திக். (ஆஃப் ஆன லேப்டாப்பையே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)
கா: அது.. வந்து... நீங்களும்... நானும்... கூட்டணி வெஷ்ஷா...நாமதான் ஜெயிப்போம்... என்...கட்சிக்காரங்க 190... தொகுதியில நிக்கறதுக்கு....ரெடியா இருக்காங்க...மீதியில ... உங்க ஆளுங்கள....நிறுத்துங்க...
வி: அது என்னா 190 கணக்கு?
கா: அது... வந்து.. கட்ஷியில... இது...வரைக்கும்... 190.... பேர்தான்.... சேர்ந்திருக்காங்க. அதுதான்....
வி: (இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேன்னே தெரியலயே)
ஃப்ளைட் முழுக்கத் தேடி சாந்தமான ஒருவர் அருகில் அமர்கிறார்.
அவர்: நீங்க யாரு?
வி: (லேசான ஏமாற்றத்துடன்) நாந்தான் விஜயகாந்த், நல்லா ஆக்சன் படம்லாம் நடிப்பேன், இப்பதான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். நீங்க?
அவர்: நான் ஒரு வாத்தியார், ரொம்ப நாளா நம்ம பசங்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன். என் கையில பிரம்பு எல்லாம் இல்ல. அடிச்சு சொல்லிக் குடுக்காம அன்பா சொல்லிக் கொடுப்பேன். ஆமா இன்னும் 3 வருசத்தில நீங்க என்னாவா ஆகப் போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?
வி: (இவரும் அதயே நோண்டுராறே) அது வந்து..நான் சி.எம்.மா இருப்பேன்
அவர்: அது எப்படி நீங்க சொல்றீங்க? உங்க ஜாதகத்தைப் பாத்தீங்களா?
வி: அத எதுக்கு நான் பார்க்கணும்?
அவர்: எல்லாருமே அவங்கவங்க ஜாதகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கனும். ஜோசியம் அப்படின்றது ஒரு கடல் மாதிரி, நான் அதுல உங்கள ஒரு பயணம் அழைச்சிட்ட்டுப் போறேன்.
வி: நீங்க எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறீங்க?
அவர்: உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம், கரையிலயே நின்னுக்கங்க, விருப்பம் இருக்கறவங்க மட்டும் வந்தா போதும். அலோ எங்க போறீங்க?
வி: அது... எல்லார்கிட்டயும் பேசுனதுல எனக்கு வயித்த கலக்குது, நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்.
வேக வேகமாக நடக்கிறார். பக்கத்திலிருந்து ஒரு குரல்
அவர்: வாங்க கேப்டன் வந்து என் பக்கத்தில உக்காரதுக்கு நன்றி
வி: நாந்தான் உங்க பக்கத்திலேயே உக்காரவே இல்லயே
அவர்: ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே ஒரு சின்னப் பையன்ங்க. இப்பிடியே பின்னூட்டம் போட்டு போட்டு பழக்கமாயிடுச்சி. வருத்தப்படாதீங்க
"ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேய்" என்று ஒரு ஐம்பது, அறுபது குரல்கள் கேட்க திடுக்கிடுகிறார்,
வி: என்னங்க இப்படி கத்துறாங்க?
அவர்: அவங்கள்லாம் என்னோட கருத்த வழிமொழியுறாங்களாம், இதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்க.
வி: (எனக்கு இன்னிக்கு சனி உச்சத்துல இருக்குன்னு நெனக்கிறேன்)
பாத்ரூம் அருகில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர்: கவலப்படாதீங்க அய்யா. அந்த ஆளூ இந்த வண்டியிலதான் வராரு. ஏரோப்ளேன் ஸ்டேன்ட்லயே அவனைத் தூக்குறோம்.
மற்றவர்: என்ன சொல்ற குரு, ஏரோப்ளேன் ஸ்டேன்டா?
முதலாமவர்: ஆமாங்கய்யா, பஸ் நிக்கற இடம் பஸ் ஸ்டேன்ட். அதே மாதிரி ஏரோப்ளேன் நிக்கற எடம் ஏரோப்ளேன் ஸ்டேன்ட்தான. அங்கதான் நம்ம பசங்க சுமோவோட நிக்கறாங்க. தூக்கிட்டு தோட்டத்துக்கு கொண்டாந்துறோம்.
"எங்க போனாலும் விட மாட்டேன்றானுங்களே" என்று புலம்பியபடி பயத்துடன் கதவைத் திறக்கிறார் விஜயகாந்த். அது பாத்ரூம் இல்லை, பாராசூட் ரேம்ப்.
"ஆகா, இதுதான்டா இவங்க எல்லார்கிட்ட இருந்து தப்பிக்க நல்ல வழி. கீழப்போயி ஒரு லாரியோ, ஷேர் ஆட்டோவோ புடிச்சி மதுரைக்கு போயிட வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டு ஒரு பாராசூட்டை எடுக்கிறார்.
அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,
"எங்க கூட கூட்டணி வெச்சீங்கன்னா நாம கண்டிப்பா ஜெயிக்கறோம். நீங்கதான் துணை முதலமைச்சர்"
"ஆகா, காலையில இருந்து இப்பதான் ஒரு நல்ல வார்த்தையை காதில் கேக்குறேன்" என்று நினைத்தவாறு திரும்புகிறவர் அதிர்ச்சியில் சிலையாகிறார்.
அங்கே நிற்பது விஜய டி.ராஜேந்தர்..
"நீ வேணான்ற தி.மு.க
உன்ன வேணான்னுது அ.தி.மு.க.
ஆனா உனக்காகவே காத்திருக்குயா ல.தி.மு.க
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
சிம்பு செட் பண்றான்டா ட்ரெண்ட்
எல்லா கம்பெனியிலயும் இருப்பாங்க ஜி.எம்.மு
என் கூட நீ கூட்டணி வெச்சா நாந்தாங்க சி.எம்.மு"
விஜயகாந்த்: என்னா சொன்னீங்க?
டி.ஆர்: 2011ல நாந்தாங்க சி.எம்.மு
விஜயகாந்த்: (அழுகிற குரலில்) இன்னொரு தபா சொல்லுங்க?
டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு
விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)