Wednesday, August 27, 2008

இன்று (ஆகஸ்ட் 27, 2008) என் செல்லத்தின் பிறந்தநாள்...

இன்று எங்கள் சந்தோசத்தின் மொத்த உருவம் பிறந்த நாள்.. நான் கணவன் என்ற வேலையில் அடிஷனலாக அப்பா என்ற பொறுப்பையும் சுமக்கத் துவங்கிய நாள்..

ஆம்.. எங்கள் வீட்டின் கொண்டாட்டம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

எங்கள் செல்லம் ஆதர்ஷ் இன்றோடு இரண்டு வயதை முடித்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான்.

இதோ அவனது ஆல்பம்....















பின்குறிப்பு: இந்த முறை அவன் பிறந்த நாளுக்கு எங்களின் நான்கு நாட்களை அவனுக்கே அவனுக்காக பரிசளிக்க இருக்கிறோம். அலுவலக வேலை, வீட்டு வேலை, கணினி, இணையம், வலைப்பூ எல்லாவற்றிலிருந்தும் நான்கு நாட்கள் விலகி அவனுடன் கொடைக்கானலில் தங்கியிருக்கலாம் என்று திட்டம். இந்த பதிவுகூட சனிக்கிழமையே பதிவிடப் பட்டு 27ம் தேதி பப்ளிஷ் ஆவதுபோல் செட் செய்யப்பட்டுள்ளது.

அதனால்தான் இந்த வாரம் முழுவதும் என்னை நீங்கள் வலையில் பார்த்திருக்க மாட்டீர்கள். புரிதலுக்கு நன்றி.

Sunday, August 10, 2008

சென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)


நாள்: ஆகஸ்ட் 10, 2008 ஞாயிற்றுக்கிழமை

இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம், மரத்தடி மற்றும் டீக்கடை

நேரில் சிறப்பித்த பதிவர்கள்: அதிஷா, ஜிங்காரோ, பாலபாரதி, லக்கிலுக், டோண்டு ராகவன், வெண்பூ, ரமேஷ் வைத்யா, கடலையூர் செல்வம், முரளி கண்ணன், டாக்டர் புருனோ

போனில் சிறப்பித்தவர்கள்: வால்பையன், பரிசல்காரன்

எதிர்பாராத வருகை: மழை (பதிவர் இல்லை, நிஜ மழைதான்)

நடந்த நிகழ்வுகளும் போடப்பட்ட மொக்கைகளும்:
1. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
2. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
3. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்

4. புதிய பதிவர்கள் அறிமுகம்
5. பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்
6. முரளிகண்ணன் வீட்டில் சொன்ன காரணம் குறித்த விளக்கம்
7. மழைக்கு மரத்தடி ஒதுங்கல்
8. பாலபாரதியின் புத்தகம் குறித்த விவாதம்
9. அதிஷா ஸ்பான்சரில் குல்பி ஐஸ்
10. வலைப்பதிவு மூலம் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்பது பற்றிய லக்கிலுக்கின் பேச்சு
11. தமிழ் வலைப்பதிவுலகின் வரலாறு குறித்து டோண்டு, புருனோ, லக்கிலுக் மற்றும் பாலபாரதியின் உரை
12. டோண்டு ராகவன் ஸ்பான்சரில் டீ மற்றும் பிஸ்கட்
13. விகடனின் புதிய வடிவம் குறித்த வருத்தங்கள்
14. நன்றி நவிலல்

பதிவர் சந்திப்புக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். புகைப்படங்கள் கீழே...









Thursday, August 7, 2008

டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

(சரோஜ் நாராயண்சாமி ஸ்டைலில் படிக்கவும்)

நேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.

டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா? புரியலயே யவு செஞ்சி விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.

அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.

இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க? என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் "வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல?" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.

ஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.

அவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

******

ஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோசிச்சதுல..

Friday, August 1, 2008

கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்

காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர்.

"அண்ணே! அண்ணே! ஒரு சின்ன‌ பிர‌ச்சினைனே!!!"

"என்ன‌டா நாயே?"

"அண்ணே! நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே"

"அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌?"

"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே"

"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்"

"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்"

"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"

"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்"

"ஏண்டா! அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா?"

"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"

"அடப்பாவிகளா! அப்ப அவனுங்களத்தானு அப்பணும்"

"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க‌. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு"

"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க" என்று ஒரு பெயரை சொல்கிறார்.

"அண்ணே! அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே?"

"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் " அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.

"அண்ணே!! என்னண்ணே சொன்னீங்க?"

"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது."