tag:blogger.com,1999:blog-88952261447311076212024-03-13T05:00:47.875+05:30வெண்பூகொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-14745564650362095582016-08-09T11:24:00.001+05:302016-08-09T11:24:36.060+05:30கேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்<span style="font-size: large;"><b>Spoiler Alert</b></span><br />இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்காதவர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. வந்திருக்கும் ஆறாவது சீசனின் கடைசி பகுதியில் இருக்கும் கதைச்சுருக்கம் பற்றி பேசுவதால் உங்களுக்கு கதையின் சஸ்பென்ஸ் போய்விடும். ஆறு சீசன்களும் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும்.<br />
<br />
************<br />
<br />
ஆறாவது சீசனோட மிக முக்கியமான ப்ளாட் ட்விஸ்ட் / கதைத்திருப்பம்னு ஜான் ஸ்நோவோட பெற்றோரைப் பத்தி சொல்லப்படுறதை சொல்லலாம்.<br /><br />ப்ரான் ஸ்டார்க் தன்னோட விஷன் மூலமா இறந்தகாலத்துக்கு போயி, தன் அத்தை லியான் ஸ்டார்க் சாகுறதைப் பார்க்குறான்.<br /><br />லியான் ஸ்டார்க், நெட் ஸ்டார்க்கோட சகோதரி. லியானை ராபர்ட் பராத்தியனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க நிச்சயம் பண்ணியிருக்குறப்ப, அப்போதைய இளவரசனான ரிகர் டைகேரியன் அவளை கடத்திட்டு போயிடுறான்.<br />
<br />
அதனால கடுப்பாகுற ராபர்ட் பராத்தியன், ஏற்கனவே கிறுக்கு அரசன் மேல மக்களுக்கு இருக்குற வெறுப்பை உபயோகப்படுத்தி உள்நாட்டு கலகத்தை உருவாக்கி எல்லா டைகேரியன்ஸையும் கொன்னு அரசன் ஆகிடுறான்.<br /><br />அதன் பின், தன் சகோதரிய தேடிப்போற நெட் ஸ்ட்ராக், அவ குழந்தை பெத்து சாகக்கிடக்குறப்ப பாக்குறான். அவ, நெட் காதுல ரகசியமா எதோ சொல்லிட்டு "ராபர்ட் கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்து"ன்னு சொல்லிட்டு செத்துடுறா. அதை தனக்கும் யாரோ ஒரு பொண்ணுக்கும் பிறந்ததுன்னு நெட் சொல்லி ஜான் ஸ்நோவா வளர்த்துட்டு வர்றான்.<br /><br />இதன்படி, ஜான் ஸ்நோ உண்மையில் ஒரு டைகேரியன், அதாவது டேனேரியஸோட அண்ணன் மகன், அவனும் அரியணைக்கு உரிமை உள்ளவன். இதுதான் நமக்கு சொல்லப்படுறது. <br /><br />நிற்க.. ஏன், இதுக்கு மேலயும் நமக்கு சொல்லப்படாத கதை இருக்கக்கூடாது?<br /><br /><br />
<br />
**********<br />
<br />
<span style="font-size: large;">Chances are that, Jon Snow is <b><span class="st"><em>Baratheon </em></span></b>and not <i>Targaryen</i></span><br />
<br />
ஜான் ஸ்நோ எதோ ஒரு பராத்தியன் (முக்கியமா ஸ்டானிஸ்) ஆணுக்கும், லியான் ஸ்டார்க்குக்கும் பிறந்தவனா இருக்க வாய்ப்பிருக்கு.<br /><br />இதற்கான கண்ணிகள் கதை முழுக்கவே இருக்குறதா தோணுது.<br /><br />1. ஜான் ஸ்நோவோட உருவம்<br />முதல் சீசன்ல செர்சி லானிஸ்டரோட மூணு குழந்தைகளும் ராபர்ட் பராத்தியனுக்கு பிறந்தது இல்லைன்னு நெட் ஸ்டார்க் கண்டுபிடிக்குறது அவங்களோட முடி நிறத்தை வெச்சி. பராத்தியன் குடும்பத்தில் எல்லாருக்கும் கருப்பு முடி, லானிஸ்டர்ஸ் எல்லாருக்கும் தங்கநிற முடி. அதனால அந்த குழந்தைகள் செர்சிக்கும், ஜேமிக்கும் பிறந்ததுன்னு முடிவுக்கு வருவாரு. <br /><br />இந்த லாஜிக் படியே பார்த்தா, டாகேரியன் எல்லாருக்கும் தங்கநிற முடி, ஸ்டார்க் குடும்பத்துக்கும் தங்கநிற முடி. இந்த ரெண்டும் க்ராஸ் ஆகுற ஜான் ஸ்நோவுக்கு எப்படி கருப்பு சுருட்டை முடி இருக்க முடியும்?<br /><br />2. ரெட் வுமனின் குழப்பம்<br />ஆரம்பத்தில் இருந்து மந்திரவாதியான ரெட் உமன் சொல்றது நடக்குது. அவளே சொல்ற மாதிரி, ஸ்டானிஸ் பராத்தியன் வின்டர்ஃபெல் போர்ல ஜெயிக்குறதையும், ஐயர்ன் த்ரோன்ல உக்கார்றதையும் பார்க்குறா. ஆனா, அதை சரியா புரிஞ்சிக்கலைன்னு சொல்றா. அவ பார்த்தது நிஜம், ஆனா அவ பார்த்தது ஸ்டானிஸை இல்லை, அவரோட மகன் ஜான் ஸ்நோவையா இருக்கலாம்.<br /><br />3. ஸ்டானிஸ் & ஜான் ஸ்நோ சந்திப்பு<br />ஸ்டானிஸ்க்கு ஜான் ஸ்நோ தன்னுடைய மகன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. ஆனா அவனை பார்த்து பேசுறப்ப, இவன் தனக்கும் லியானுக்கு பிறந்தவளா இருக்கலாம்னு ஸ்டானிஸ் புரிஞ்சிகிட்டு இருக்கலாம். அதன் தொடர்ச்சியாத்தான் அவனை தன் படைக்கு தலைமை தாங்க கூப்பிடுறது, நீ ஸ்நோ இல்ல உன்னை "ஸ்டார்க்"ன்னு அறிவிக்குறேன்னு சொல்றது, சர் டேவோஸ் "ஸ்டானிஸ் உன்கிட்ட எதையோ பார்க்குறாரு"ன்னு ஜான் ஸ்நோகிட்ட சொல்றது எல்லாமேன்னு தோணுது<br />
<br />
<br />
<br />
4. லியானின் ரகசியம்<br />லியான் ஸ்டார்க்குக்கும் டாகேரியனுக்கும் பொறந்ததுதான் அந்த குழந்தைன்றது வெளிப்படையா தெரியுது, அப்ப லியான் மரணப்படுக்கையில நெட் ஸ்டார்க் காதுல சொல்ற ரகசியம் என்ன? அதை யோசிச்சாலே நமக்கு புரியும், அவங்க காட்டுறதுக்கும் மேல கதையில ட்விஸ்ட்கள் இருக்குன்னு <br />
<br />
***********<br />
என்ன நடந்திருக்கக்கூடும்னு யோசிச்சா,<br /><br />ராபர்ட் பராத்தியனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தாலும், லியான் ஸ்டார்க்குக்கு பிடிச்சது ராபர்ட்டோட தம்பி ஸ்டானிஸ் பராத்தியன். அவங்க ரெண்டு பேரும் லவ்ல இருந்திருக்கலாம். இதெல்லாம் நடக்குறப்ப டாகேரியன் அரசாட்சி கீழ பராத்தியன் ஸ்டார்க் எல்லாமே இருந்திருக்காங்க. ஸ்டானிஸ்க்கு உதவுறதுக்காக நல்ல மனசுக்காரனான ரீகர் டைகேரியன் லியானை காப்பாத்தி வெச்சிருக்கலாம். நினைவிருக்கட்டும், டைகேரியனுக்கு எதிரான போர்ல ஸ்டானிஸ் அடிபட்டு சாகக்கிடக்குறப்ப சர் டேவோஸ்தான் அவரை காப்பாத்துறாரு. அதனால ஸ்டானிஸ்னால உடனே லியானை பார்க்க போக முடியலை.<br /><br />அடுத்து, லியான் "ராபர்ட் பராத்தியன்கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்து"ன்னு சொல்றதுக்குக் காரணம், லியான் மேல ராபர்ட்க்கு அளவு கடந்த காதல், அந்த கலகத்தை அவர் ஆரம்பிக்க காரணமே லியானை டாகேரியன் கடத்திட்டு போயிட்டான்றதுனாலதான். அவனுக்கு தன் தம்பி மூலமா லியானுக்கு குழந்தை பிறந்ததுன்னு தெரிஞ்சா அந்த குழந்தைய கொல்ல வாய்ப்பு அதிகம்.<br />
<br />
அநேகமா ஸ்டேனிஸ் சாகுறதுக்கு முன்னால தன்னை கொல்ற ப்ரையன் ஆஃப் டார்த்கிட்ட இந்த உண்மையை சொல்லியிருக்க வாய்ப்பு இருக்கு. ரான்லி பராத்தியனுக்கு உண்மையா இருப்பேன்னு சொன்ன ப்ரையன் இதன் மூலமா மறுபடி ஒரு பராத்தியனை அரியணை ஏற்ற வாய்ப்பிருக்குன்னு ஜான் ஸ்நோவுக்கு உதவக்கூடும் <br />
<br />
**********<br />
<br />
அடுத்து என்ன நடக்கக்கூடும்?<br /><br />மொத்தமே எட்டு சீசன்தான்னு சொல்லியிருக்குறதால, ஏழாவது சீசனோட கடைசியில ஜான் ஸ்நோ ஸ்டானிஸோட மகன்னு கதைய திருப்பலாம், எட்டாவது சீசன்ல பராத்தியன் வாரிசான ஜான் ஸ்நோவும், டகேரியன் வாரிசான டேனரியஸும் சண்டையிடக்கூடும்.<br /><br />********வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-86560181616680188012015-04-18T10:19:00.000+05:302015-04-18T10:19:16.662+05:30இன்டெர்ஸ்டெல்லார் : கதைச்சுருக்கம்*** ஸ்பாய்லர் அலெர்ட்****<br />
<br />
இன்டெர்ஸ்டெல்லார் படத்தைப்பத்தி குருடர்கள்
யானைய தடவிப்பாத்த மாதிரி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா எழுதியிருக்காங்க. நிறைய
விமர்சனங்களில் நிறைய தப்புகள் தெரியுது. அதனால என்னோட புரிதலை பதிகிறேன்.
ஒருதடவைதான் பார்த்திருக்கேன். நல்ல பிரிண்ட் டிவிடி கிடைச்சதும் இன்னும்
சிலமுறை பார்த்துட்டு எதாவது மாற்றம் இருந்தா இந்த பதிவிலேயே
அப்டேட்டுறேன்.<br />
<br />
<br />
உலகம் அழியுது, வேற உலகம் உருவாக்கணும். இதுல முதல்
பிரச்சினை புது உலகை கண்டுபுடிக்குறது. அதுக்கு தடுமாறிட்டு இருக்குறப்ப
திடீர்னு எங்கிருந்தோ ஒரு வோர்ம்ஹோல் கைக்கெட்டுற தூரத்துல சூரிய
மண்டலத்துலயே உருவாகுது (இந்த பிரபஞ்சத்தோட அளவை ஒப்பிட்டா நாலு கோள்கள்
தள்ளி இருக்குற தூரமும் கைக்கெட்டுற தூரம்தான்).<br />
<br />
ப்ளாக்ஹோல் மாதிரி
வோர்ம் ஹோல், தானா உருவாகாது, அதை யாராவது உருவாக்கினாத்தான் உண்டு. அதனால
பூமிக்கு உதவி செய்யுறதுக்காக யாரோ உருவாக்கியிருக்காங்கன்னு தோணுது. இப்ப
உள்ள போக ஏழு தனித்தனி ஸ்பேஸ்க்ராஃப்ட்ல அதுக்குள்ள ஆட்களை அனுப்புறாங்க.
அதுல மூணு பேர்கிட்ட இருந்து மட்டுமே பிங் வருது. அவங்க லொகேஷன் தெரியுது,
ஆனா டேட்டா எல்லாம் எதுவும் வரலை. இப்ப அந்த மூணையும் தேடி மறுபடி போக ஆள்
வேணும். இங்கதான் நம்ம ஹீரோ கூப்பரோட பயணம் வருது.<br />
<br />
ஹீரோவாகப்பட்டவன்
ஒரு காலத்துல ஆஸ்ட்ரோநெட். தல பூமிக்கு மேல ஒரு விண்வெளியில சுத்திட்டு
இருக்குறப்ப ஒரு சின்ன சிக்கல் வருது, அப்ப இவன் கொடுக்குற கட்டளைக்கு மாறா
ஆட்டோபைலட் சிஸ்டம் வேற ஒரு வேலைய செஞ்சி அந்த க்ராஃப்ட் ஆக்சிடென்ட்
ஆகிடுது, தல தப்பிச்சிட்டாலும், "போங்கடா, நீங்களும் உங்க விண்வெளி
ஆராய்ச்சிகளும்"ன்னு கடுப்பாகி குடும்பத்தோட வந்து விவசாயம் பண்ணிட்டு
இருக்காரு. தன் பொண்ணு மேல அதீத பாசம்.<br />
<br />
இப்ப வீட்டுல க்ராவிட்டி
வழியா புழுதியில எழுதப்பட்டுற மோர்ஸ் கோட்ல கிடைக்குற ஒரு லொகேசன் கோ
ஆர்டினேட்ஸை வெச்சி ஒரு பெரிய விண்வெளி ஆய்வகத்துக்கு போறாரு. இது
வெளியுலகத்துக்கு தெரியாம நடந்துட்டு இருக்கு. ஏன்னா உலகமே அழிஞ்சிட்டு
இருக்குறப்ப விண்வெளிக்கு பில்லியன்கணக்கா செலவு செய்யுறது தப்புன்னு
எதிர்ப்பு வந்ததால எல்லா நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சிகளை மூட்டை
கட்டிடுது. இங்க வந்து பார்த்தா டாக்டர் க்ராண்ட் அப்படின்னு ஒரு
வெள்ளைத்தலை விஞ்ஞானியும் அவரோட சூப்பர் ஃபிகரான பொண்ணும் ஒரு பெரிய
விஞ்ஞான கும்பலோட வேலை செஞ்சிடுட்டு இருக்காங்க. ஏழு பேரை
வோர்ம்ஹோல்க்குள்ள அனுப்பினதே இவங்கதான்.<br />
<br />
அந்த மூணு பேரை தேடிப்போற
குழுவுக்கு தலைமை தாங்க சரியான ஆள் இல்லை. இவர் வந்ததும் (வழக்கமான தமிழ்
சினிமா மாதிரி) "உங்களை விட்டா இந்த பூமியை காப்பாத்த யாருமே இல்லை"ன்னு
சீன் போட்டு அவரை அனுப்புறாங்க. வழக்கமான ஹாலிவுட் படமாட்டம் கூட அந்த
சூப்பர் ஃபிகரும், இன்னொரு விஞ்ஞானியும் போறாங்க. நிறைய தமிழ் / ஆங்கில
படம் பார்த்திருந்தா இவங்க மூணு பேர்ல ரெண்டு பேர்தான் கடைசியில உயிரோட
இருப்பாங்க அதுவும் ஹீரோவும் ஹீரோயினியும் நீங்க சரியா கதைய
புடிச்சிருப்பீங்க. <br />
<br />
இவங்க எல்லாரும் ஒரு சின்ன வண்டியில
கிளம்பிப்போயி விண்வெளியில இருக்குற ஒரு வட்டமான பெரிய வண்டியில ஏறி
வார்ம்ஹோலுக்கு போறாங்க. வார்ம்ஹோலுக்கு போகவே ரெண்டு வருசம் ஆகும், அங்க
போறாங்க, அதுக்குள்ளயும் போறாங்க.<br />
<br />
அங்க அற்புதமா ஒரு ப்ளாக்ஹோல்
இருக்கு. ப்ளாக்ஹோல்னா அது எல்லாத்தையும் உறிஞ்சிக்கும், உச்சகட்ட ஈர்ப்பு
விசை இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. ஒளி கூட தப்பிக்க முடியாது. அதோட மையத்தை
சிங்குலாரிட்டின்னு சொல்றாங்க. அந்த சிங்குலாரிட்டியில என்ன இருக்குன்னு
கண்டுபிடிக்குறது நம்ம வெள்ளைத்தலை க்ராண்ட்டோட ரெண்டாவது பிரச்சினை. ஏன்னா
என்னதான் இன்னொரு கிரகத்தை கண்டுபுடிச்சிட்டாலும், பூமியில மிச்சம்மீதி
இருக்குறவங்களை அலேக்கா தூக்கிட்டு போகணும் இல்லையா, அதுக்கு எவ்ளோ சக்தி
வேணும். அதை செய்ய ஒரு ஃபார்முலா வெச்சிருக்காரு, அந்த ஃபார்முலாவை
கம்ப்ளீட் பண்ணா வெள்ளைத்தலையருக்கு ஒரு ப்ளாக்ஹோல்ல சிங்குலாரிட்டியில
என்ன இருக்குன்னு தெரியணும்.<br />
<br />
அதுக்குதான் அவர் பொண்ணையும்
அனுப்பியிருக்காரு, அதன்படி இந்த பயணம் போறவங்க திரும்பி போக எல்லாம்
முடியாது, ஒன்வே தான். இதை நம்ம ஹீரோட்ட இருந்து ஹீரோயினி மறைச்சிட்டாங்க.
இங்க ஒரு லலாலலா சோக சீன் எல்லாம் உண்டு. <br />
<br />
இதுக்கு நடுவுல ஹீரோயினி
வந்ததுக்கு இன்னொரு காரணம், பிங் வந்திருக்குற மூணு பேர்ல ஒருத்தரு கூட
ஹீரோயினிக்கு லவ்வு. அதனால அங்க முதல்ல போகணும்னு சொல்லிகிட்டே இருக்கு.
ஆனா ஹீரோ சண்டை எல்லாம் போட்டு அதெல்லாம் ஆகாதுன்னு சொல்லிடறாரு. இதெல்லாம்
சைடு ட்ராக்.<br />
<br />
முதல் கிரகத்துக்கு போறாங்க. அது அந்த ப்ளாக்ஹோலோட
ரொம்ப பக்கத்துல இருக்கு. அதனால ஈர்ப்பு விசை ரொம்ப அதிகம். அந்த அதீத ஈர்ப்பு விசையால பூமியில ஒருமணிநேரம்ன்றது அங்க கிரகத்துல 7 வருசம். அதனால
போய் பாத்துட்டு உடனே திரும்பிவந்துடணும். அதுக்கே ஏழு வருசம்
போயிருக்கும். ரிஸ்க் எடுத்து போறாங்க. அங்க போனா முதல்ல வந்த விஞ்ஞானி
செத்து போயிட்டாருன்னு தெரியுது, பெரிய அலைகள்ல மாட்டி திரும்புறதுக்கு
கொஞ்சம் அதிக நேரம் ஆகிடுது. வந்து பார்த்தா பூமியில 23 வருசம் ஆகிடுது.
ஹீரோவோட பொண்ணு எல்லாம் பெருசாகிடுது. அதுவும் இப்ப விஞ்ஞானி.<br />
<br />
மூணுல
ஒரு இடம் அவுட்டு. ரெண்டாவது எங்க போறது சண்டை எல்லாம் போட்டுட்டு,
ஹீரோயின் சொன்ன அவர் லவ்வர் எட்மன்ட் கிரகத்து போகாம, இன்னொரு கிரகத்துக்கு
போறாங்க. அங்க நம்ம மேட் டீமன் இருக்காரு. அவரு இந்த கிரகம் சூப்பர் அது
இதுன்னு செம பில்ட் அப் கொடுக்குறாரு. ஆனா உண்மையில அது மனிதர்கள் வாழ
தகுதியில்லாத கிரகம், ஆனாலும் இவரு இப்படி சொல்ல காரணம், அப்பதான் யாராவது
வருவாங்க, அவங்க வர்ற ஸ்பேஸ்க்ராஃப்ட்ல பூமிக்கு தப்பிச்சி போயிடலாம்னு.
அப்படி அவர் தப்பிக்குற முயற்சியில ஹீரோ ஹீரோயின் கூட வந்த இன்னொரு
விஞ்ஞானி செத்துடறாரு. இவங்க வந்த பெரிய வட்ட வண்டியும் டேமேஜ் ஆகிடுது. மேட் டீமனும் புட்டுக்குறாரு.<br />
<br />
இப்ப
வேற வழியே இல்லை, ஹீரோயின் லவ்வர் எட்மன்ட் இருக்குற கிரகத்துக்கு
போகணும். பிரச்சினை அங்க போற அளவுக்கு ஃப்யூயல் இல்லை, பெட்ரோல் தீந்து
ஹைவேல நிக்குற மாதிரி விண்வெளியில ப்ளாக்ஹோல்ட்ட நிக்குறாங்க. இப்பதான்
நம்ம ஹீரோ செம ஐடியா பண்ணுறாரு<br />
<br />
ப்ளாக்ஹோலை சுத்தி அதோட ஈர்ப்பை
வெச்சி வேகமா போயிட்டு திடீர்னு கிக் கொடுத்து அதை விட்டு தப்பிச்சா அந்த
வேகத்துலயே ப்ளாக்ஹோலை விட்டு ரொம்ப தூரம் ரொம்ப வேகமா போயிடமுடியும். (இதை
ஸ்டீஃபன் ஹாகிங் அவரோட டிஸ்கவரி சீரிஸ்ல செமையா விளக்கியிருப்பாரு). இப்ப
இதை செய்யுறப்ப ஹீரோ ஒரு தியாகம் பண்ணுறாரு, ஹீரோயினை மட்டும் அனுப்பிட்டு
இவரு அந்த ப்ளாக்ஹோல் உள்ளாற போயிடுறாரு, அதாவது சிங்குலாரிட்டியில என்ன
இருக்குன்னு பாத்து பூமிக்கு மெஸேஜ் அனுப்பி ரெண்டாவது பிரச்சினைய
தீர்க்குறதுக்கு (இங்க ஒரு லலாலாலா தீம் மீயூசிக் பேக்கிரவூன்ட்ல
போட்டுக்கோங்க).<br />
<br />
அதுக்குள்ளா போனா நம்ம ஆளு ஒரு பெரிய வித்தியாசமான
டெசரக்ட்ன்ற அமைப்புள்ள போயிடுறாரு, கூடவே அவரோட செல்ல ரோபோவும்.
அதுக்குள்ள பல்வேற காலகட்டத்துல முன்ன பின்ன போய் பாக்க முடியும். பாக்க
மட்டும்தான் முடியும், வேற ஒண்ணும் பண்ணமுடியாது. அதுல இவர் பார்க்குறது
இவர் வீட்டோட லைப்ரரி.<br />
<br />
அப்ப எப்படி மெஸேஜ் அனுப்புறது, அங்கதான்
நம்ம ஆளு இன்னொரு ஐடியா பண்ணுறாரு (பெரிய ஐடியாமணியா இருப்பாரு போல). இந்த
மாதிரி ஹையர் டைமன்ஷன்ல (இதுக்கு தமிழ்ல என்ன?) ஊடுறவுற ஒரே விசயம்
க்ராவிட்டி (ஈர்ப்பு விசை). அதன் மூலமா ஆரம்ப காலத்துக்கு போயி புழுதியை
மாத்தி வெச்சி விண்வெளி மையத்தோட லொகேஷனை எழுதிடுறாரு. அதாவது இவரேதான்
இவரை அங்க அனுப்பியிருக்காரு.<br />
<br />
அடுத்ததா பூமியோட இப்போதைய
காலத்துக்கு போயி, அந்த சிங்குலாரிட்டியோட ஃபார்முலாவை ஒரு வாட்ச் உள்ள
மோர்ஸ் கோடா எழுதிடுறாரு. அங்க கடைசியா பார்க்க வர்ற அவர் பொண்ணு அதை
எடுத்து பார்த்து படிச்சி தெளிஞ்சி "நம்ம அப்பா நம்மளை
காப்பாத்திட்டாரு"ன்னு சந்தோச கூச்சல் போடுது. (இன்னொரு லலலா பாட்டு
போட்டிருக்கலாம்)<br />
<br />
இப்ப நம்ம ஆளுக்கு வந்த வேலை முடிஞ்சது. அந்த
டெசரெக்ட் அப்படியே அழியுது. அதுல இருந்து நம்ம ஆளு வெளிய வந்து (வர்றப்ப
ஆரம்ப பயணம் செய்யுற ஹீரோ ஹீரோயினை வேற தரிசிக்குறாரு). அப்படியே வந்து
விண்வெளியில மிதக்குறாரு.<br />
<br />
அப்ப பூமியில இருந்து வந்தவங்க அவரை
கண்டுபுடிச்சி கூட்டிட்டு போறாங்க. எழுந்தாத்தான் தெரியுது நம்ம ஆளுக்கு,
இவர் மெசேஜ் அனுப்பி இவங்க இவரை பிக் அப் பண்ணுறதுக்குள்ள பூமியில 50
வருசம் கடந்துடுச்சின்னு.<br />
<br />
இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி பெரிய
ஒரு விண்வெளி மையத்தை அமைச்சி அதன் மூலமா பூமியில இருக்குறவங்களை அலேக்கா
தூக்கிட்டு வந்துட்டாங்க. அதன் பேரு கூப்பர் ஸ்டேஷன். "ஹை, என் பேரையே
வெச்சிட்டீங்களா?"ன்னு கேக்க, "அது உங்க பேர் இல்லசார், உங்க பொண்ணோட பேரு,
அவங்கதான் இதை உருவாக்கினவங்களே"ன்னு சொல்றாங்க.<br />
<br />
இப்பதான் அந்த
முக்கிய சந்திப்பு நடக்குது. பலவருசம் கழிச்சி தன் அன்பு மகளை திரும்ப
சந்திக்குறாரு. ஆனா இவருக்கு 45 வயசுதான், பூமியில வருசங்கள் கடந்ததால அவர்
பொண்ணு 92 வயசு கிழவியா படுத்த படுக்கையா தன் குடும்பத்தோட இருக்காங்க.
(லலாலா.. லலாலா). <br />
<br />
அவங்களை சந்திச்சி பேசுறப்ப அவங்க விளக்குறாங்க.
இவர் கொடுத்த ஃபார்முலாவை வெச்சி இந்த ஸ்டேஷனை கட்டி பூமியில இருக்குற
உயிரினங்களை காப்பாத்தியாச்சி. இப்பதான் சமீபத்துல ஹீரோயின்கிட்ட இருந்து
மெசேஜ் வந்திருக்கு. எட்மன்ட் கிரகம் நல்லா இருக்காம், அங்க போக
இனிமேத்தான் வேலைகள் செய்யணும்னு. தனக்கு வயசாகிட்டதால தன்னோட கடைசி காலம்
தன் குடும்பத்தோட இருக்குறது நல்லதுன்னு சொல்றாங்க. அதனால ஒரு பாட்டம்
அழுது முடிச்சிட்டு, நம்ம ஹீரோ ஒரு வண்டிய திருடிட்டு ஹீரோயினை பார்க்க
கிளம்பிடுறாரு.<br />
<br />
அந்த வோர்ம்ஹோல், டெசரெக்ட் எல்லாத்தையும் உருவாக்கினது யாருன்னு கேள்வி வரும். அதை செஞ்சவங்க எதிர்காலத்துல இருக்கக்கூடிய முன்னேறிய மனித இனம். இவங்க செஞ்சிருக்குற வேலைகள் மூலமா மனித இனம் வாழ்வாங்கு வாழ்ந்து, டெக்நிகலா முன்னேறி இதை எல்லாம் செஞ்சி, தங்களை தாங்களே காப்பாத்தி இருக்காங்க (தலை சுத்துதுதானே?) <br />
<br />
அங்க ஹீரோயின் க்ரான்ட், தனியா அந்த கிரகத்துல
இருக்காங்க. அவங்களுக்கும் காலம் அதிகமா ஓடலைன்றதால சின்ன வயசாவே இருக்காங்க. பின்ன ஹீரோவோட மகளுக்கு வயசாகலாம், ஹீரோயினுக்கு வயசாகுமோ? (நோலன் ரொம்ப தமிழ்ப்படம் பாக்குறாருன்னு நினைக்குறேன்). அவங்க லவ்வர் செத்து போயிடுறாரு (ஹீரோவுக்கு ரூட் க்ளியர்). மனிதர்கள் பூமியை மாதிரியே
சுவாசிக்க, வாழ ஏற்ற அந்த கிரகத்துல பூமியில இருந்து மனிதர்கள் வரவுக்காக வெயிட்
பண்ணிட்டு இருக்காங்க.<br />
<br />
*சுபம்*வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-49606464663869429002015-03-16T07:26:00.000+05:302015-03-16T07:26:17.372+05:30எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்<br />
<br />
மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.<br />
<br />
*****<br />
<br />
கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.<br />
<br />
அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்<br />
<br />
லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க<br />
<br />
<b>அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"</b><br />
<br />
அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.<br />
<br />
"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்<br />
<br />
****<br />
<div>
<br /></div>
<div>
<div>
ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.</div>
<div>
<br /></div>
<div>
மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த். </div>
<div>
<br /></div>
<div>
அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.</div>
<div>
<br /></div>
<div>
படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை. </div>
</div>
<div>
<br /></div>
<div>
<div>
இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.</div>
<div>
<br /></div>
<div>
"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது. </div>
</div>
<div>
<br /></div>
<div>
************</div>
<div>
<br /></div>
<div>
<div>
<b>ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.</b></div>
<div>
<br /></div>
<div>
படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக இருந்திருக்கும். </div>
<div>
<br /></div>
<div>
சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.</div>
<div>
<br /></div>
<div>
வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.</div>
<div>
<br /></div>
<div>
பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/bXva1IDvSjE/0.jpg" src="http://www.youtube.com/embed/bXva1IDvSjE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<div>
<br /></div>
</div>
<div>
Youtube Link: <a href="https://www.youtube.com/watch?v=bXva1IDvSjE" target="_blank">https://www.youtube.com/watch?v=bXva1IDvSjE</a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-92097772286058823642014-04-03T07:30:00.000+05:302014-04-03T07:30:01.983+05:30மனிதனுக்குள் ஒரு மிருகம் : The Purge (2013)ஒரு வருசம் முழுக்க உங்களை மாடு மாதிரி வேலை வாங்கிட்டு அப்ரைசல் நடக்கும்போது "நீங்க இன்னும் நல்லா வேலை செய்யணும்"னு சொல்லி ப்ரோமோசன் குடுக்காத மேனேஜர் உங்களுக்கு இருந்திருக்காரா?<br /><br />வீட்டுல ஒரு நல்லகாரியம் நடக்கும்போது எப்போதோ நடந்த பகையை அல்லது நீங்க நல்லா வாழ்றீங்கன்ற வெறுப்புல இல்லாத பொல்லாதை சொல்லி அந்த விழா மனநிலையவே கெடுக்குற ஒரு உறவினர் இருந்திருக்காரா?<br /><br />தினம் தினம் தன் வீட்டு குப்பைகளை உங்க வீட்டு முன்னால கொட்டுற பக்கத்து வீட்டுக்காரர்? கொடுத்த பணத்துக்கு மீதி தராம, கேட்டா உங்களையே திட்டுற கண்டக்டர்? நாலு பேர் முன்னால உங்களை அசிங்கப்படுத்தின யாரோ ஒரு எக்ஸ் ஒய் இசட்?<br /><br />இந்த மாதிரி ஆட்களைப் பாக்கும்போது உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா இவனுங்களை எல்லாம் கொலையே பண்ணிடுவேன்னு தோணுமில்லையா? உண்மையாவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வீங்க, நிஜமாவே கொலை செய்வீங்களா?<br /><br />சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களும் நானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வோம்னு யாருக்கும் தெரியாது. நமக்குள்ள இருக்குற மிருகத்தோட உண்மையான முகம் அப்பதான் தெரிய வரும். அந்த மிருகத்தோட வக்கிரம் நமக்கு இப்ப தெரியுமான்றதே சந்தேகம்தான்<br /><br />"அடுத்த 12 மணிநேரத்துக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே. உன்மேல எந்த வழக்கும் போடப்படாது. போலீஸ், மருத்துவ உதவிகள் எதுவுமே அந்த 12 மணிநேரத்துக்கு வராது"ன்ற மாதிரியான ஒரு உத்தரவாதம் கிடைச்சா நம் ஆழ்மனசுல இருக்குற வக்கிரம் எல்லாத்தையும் நிறைவேத்திக்குவோம் இல்லையா?<br /><br />அதுதான் 2013ல வந்த "The Purge" படத்தோட கதை<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://upload.wikimedia.org/wikipedia/en/3/36/The_Purge_poster.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://upload.wikimedia.org/wikipedia/en/3/36/The_Purge_poster.jpg" height="320" width="202" /></a></div>
<br />
<br />
<br />
<br />*****<br /><br />வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கைன்னு அமெரிக்கா மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்குது. இதை சரி செய்ய அமெரிக்காவின் புதிய நிறுவனர்கள் (New Founding Fathers) ஒரு புதிய ஐடியாவை செயல்படுத்துறாங்க.<br />
<br />
அதன்படி, வருசத்துல ஒருநாள் மாலை 7 மணிமுதல் அடுத்த நாள் காலை 7 மணி வரைக்கும் "பர்ஜ்" அப்படின்ற ஒரு நிகழ்வுக்காகன்னு ஒதுக்குறாங்க. இந்த 12 மணிநேரத்துல எந்த சட்டமும் கிடையாது. பெரிய அழிவை ஏற்படுத்துற பயங்கர ஆயுதங்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை தாக்க மட்டும் தடை. மற்றபடி துப்பாக்கி, கத்தி இதை வெச்சி யாரையும் கொல்லலாம், காயப்படுத்தலாம், கற்பழிக்கலாம், எதுவுமே தப்பில்லை.<br /><br />இதன் மூலமா மக்கள் தங்கள் ஆழ்மன வக்கிரங்களை இறக்கி வெச்சிட்டு மற்ற 364 நாட்களிலும் வேலைகளில் கவனம் செலுத்துறதால வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கை எல்லாம் குறைஞ்சி, நாடே சுபிட்சமாகிடுது.<br /><br />பெரும்பாலும் இதனால பாதிக்கப்படுறது அதிக வசதியில்லாத ஏழை எளிய மக்கள்ன்றதால "இது அப்படிப்பட்டவங்களை ஒழித்துக் கட்டுறதுக்காகவே நடத்தப்படுற விசயம்"னு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் வருடா வருடம் இது நடத்தப்படுது. நேரடி ஒளி/ஒலிபரப்பும் செய்யப்படுது<br /><br />****<br />
<br />
<br />அப்படிப்பட்ட ஒரு பர்ஜ் இரவில் படத்தின் ஹீரோ ஜேம்ஸ், தன் மனைவி, மகன், மகளுடன் தன் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.<br /><br />ஜேம்ஸ், வீட்டிற்கான செக்யூரிட்டி சிஸ்டம்களை விற்கும் சேல்ஸ்மேன். பர்ஜ் இரவில் இருந்து உயிர் தப்பிக்க பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் செக்யூரிட்டி சிஸ்டம்களை பொருத்துவதால சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆனவன்.<br /><br />பர்ஜ் இரவிற்காக உட்சபட்ச பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, தன் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு இருக்கிறான், அப்போது வெளியே மற்றவர்களிடம் சிக்கி அடிபட்டு உயிர்தப்பிக்க ஓடி வரும் ஒருவனை ஜேம்ஸின் மகன் கதவைத் திறந்து வீட்டிற்குள் அனுமதிக்கிறான். கதவு மறுபடி மூடப்பட்டாலும், அந்த மனிதனை தேடி வரும் ஆயுதம் தாங்கிய குழு, அவனை ஒப்படைக்கா விட்டால் வீட்டில் எப்படியாவது நுழைந்து அந்த மூன்றாம் மனிதனையும், ஜேம்ஸ் குடும்பத்தாரையும் கொல்வோம் என்று கொக்கரிக்க, ஜேம்ஸ் அதை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />*****<br /><br />வெறும் 3 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்படா விட்டாலும், இந்த படம் சுமார் 90 மில்லியன் டாலர் அளவுக்கு வசூல் செய்திருப்பதே இதை மக்கள் விரும்பியதற்கு சாட்சி.<br /><br />அதனாலேயே இதன் அடுத்த பாகம் ஜூலை 2014ல் வெளிவர இருக்கிறது.<br /><br />ஆக்சன் / த்ரில்லர் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.<br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/The_Purge" target="_blank">http://en.wikipedia.org/wiki/The_Purge</a>வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-84151544523245046312013-08-09T07:02:00.000+05:302013-08-09T07:02:28.553+05:30அணில் ரசிகர்களின் இன்றைய பொழுது<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMxSuxaSnYWr3tWg4GzSYPuK4PQRc82ElosRxGFOf5clGKfKf1VuIf9V9El-na0M2oSdqMmKFoKTT1RMmMr1mf8zzjDmQeZhh8uD89THgFRXvBcBNnazB8kfZUl7Npzc_XkTLTN3LII5N_/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMxSuxaSnYWr3tWg4GzSYPuK4PQRc82ElosRxGFOf5clGKfKf1VuIf9V9El-na0M2oSdqMmKFoKTT1RMmMr1mf8zzjDmQeZhh8uD89THgFRXvBcBNnazB8kfZUl7Npzc_XkTLTN3LII5N_/s320/1.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht8YXC9dLOyifHcEW0zWMW0E2PGVrR-2BzJqxSN_IezJ35zwRQiLmz-M5jLEIyMtKGSeNbGEd3W52kYqHTzEbi5k8UeAqBwQjKENbtfHxzNAVyNNq9SdE5CGfIf5zfdLrM4_n5ZTggU9YS/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht8YXC9dLOyifHcEW0zWMW0E2PGVrR-2BzJqxSN_IezJ35zwRQiLmz-M5jLEIyMtKGSeNbGEd3W52kYqHTzEbi5k8UeAqBwQjKENbtfHxzNAVyNNq9SdE5CGfIf5zfdLrM4_n5ZTggU9YS/s320/2.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6QqMctNrRCOZuEBpXA162kK5huLNQh_Wh65A0LpgPpoSQbO8SSGH3cDrOo5F7qDm7OJmM2bfQ5bXsquIZrgV31Hu4JOhFP8bPDqN56px89PpcG3wfflc1e0ngLEHqD1GsXx_bVd-BN3Rv/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="252" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6QqMctNrRCOZuEBpXA162kK5huLNQh_Wh65A0LpgPpoSQbO8SSGH3cDrOo5F7qDm7OJmM2bfQ5bXsquIZrgV31Hu4JOhFP8bPDqN56px89PpcG3wfflc1e0ngLEHqD1GsXx_bVd-BN3Rv/s320/3.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEije1c44mhYNVXZiR-5ZsYtEvekQZSaxxB_IYRQ5cDqnG6P0B3bb-HIU7xId_LTZ_AvW68rw0R_XzamgpEHN96XmHegRRxu_ypsHgw_nPCM2opFVs_nc4cV9M3EMJMBOC8DEaPvGlvh9r_C/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEije1c44mhYNVXZiR-5ZsYtEvekQZSaxxB_IYRQ5cDqnG6P0B3bb-HIU7xId_LTZ_AvW68rw0R_XzamgpEHN96XmHegRRxu_ypsHgw_nPCM2opFVs_nc4cV9M3EMJMBOC8DEaPvGlvh9r_C/s320/4.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_IeABLNioNf4haZI7VlX2QbdZlnje8cQkoC5A6kE9FSCKXkEsSTFLM6QPAyqLx_iOqu6KXrEzEVbB9lhVGGSDX2uDoo2ijDeGlY4TDxaWHQhuduqfdp_WNDSOGBurvoS5lyRzALwpWy_e/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_IeABLNioNf4haZI7VlX2QbdZlnje8cQkoC5A6kE9FSCKXkEsSTFLM6QPAyqLx_iOqu6KXrEzEVbB9lhVGGSDX2uDoo2ijDeGlY4TDxaWHQhuduqfdp_WNDSOGBurvoS5lyRzALwpWy_e/s320/5.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWj4ospiFbJ-izBN0LpxqF97WtHdI6OgeWdkO3zra6-h0h59TUPeSAgzQ7TQzjRppGyfiC54nJa1fAAjTVRCD5ahJWC2Q0q71WRxO7GiKK23AuIifVrsOnCO5rJxXt51WBXAwFUZIDoqMc/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWj4ospiFbJ-izBN0LpxqF97WtHdI6OgeWdkO3zra6-h0h59TUPeSAgzQ7TQzjRppGyfiC54nJa1fAAjTVRCD5ahJWC2Q0q71WRxO7GiKK23AuIifVrsOnCO5rJxXt51WBXAwFUZIDoqMc/s320/6.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3ab3SUHrjNIaBa2h_cmlOxx9QEzGl4wjJuBwF4hFdzOlR0JoxqqGLNzhzY_9NpoYve2TCroa13_bPwPGN1PB1jkDK3xs4KhV3GbgsXIeK9Q2gdRa2Bkymn1-wSKl36ltepbZdlaBrGIQ-/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3ab3SUHrjNIaBa2h_cmlOxx9QEzGl4wjJuBwF4hFdzOlR0JoxqqGLNzhzY_9NpoYve2TCroa13_bPwPGN1PB1jkDK3xs4KhV3GbgsXIeK9Q2gdRa2Bkymn1-wSKl36ltepbZdlaBrGIQ-/s320/7.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQlzDNwHUXGObdgVqlW-bWVKkBU_ksg2G3BeXMXjpFjU61pcODPUOj9Syn023pE8RkrgDKnK700TmdVI84TE_YKxc0WTawWerCaWF0DwVeOeZPmRYevd9UophjKP3Jn2TehG8xv4EI9gX3/s1600/8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQlzDNwHUXGObdgVqlW-bWVKkBU_ksg2G3BeXMXjpFjU61pcODPUOj9Syn023pE8RkrgDKnK700TmdVI84TE_YKxc0WTawWerCaWF0DwVeOeZPmRYevd9UophjKP3Jn2TehG8xv4EI9gX3/s320/8.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXq84E-i5jGfK5zuTDFRJify2SGsnWHhzGAl49GdPSVvrlbCC4E5wMQ0U4nNjAoYqVC-nqGVSPdvCxEGNhAjk0f6jDM3qeZ752WmYjpvC0KXRZc1kKCZfKgPb7Fyk-DQ4cguVXqxCMSrbw/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXq84E-i5jGfK5zuTDFRJify2SGsnWHhzGAl49GdPSVvrlbCC4E5wMQ0U4nNjAoYqVC-nqGVSPdvCxEGNhAjk0f6jDM3qeZ752WmYjpvC0KXRZc1kKCZfKgPb7Fyk-DQ4cguVXqxCMSrbw/s320/9.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBIx4SZbAZyWTa_PeccdXy4SggEqK01wCWfWBvt7jjH_n1P9v0XV5nx2RQLBfAjRr6oIjJvbiyu8Nv1pkQzoDGRWdAIl1c0DebtZLRpgXVcI6qLoMAhLwDredQG0xe_lm3dVnkzNi4gGtF/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBIx4SZbAZyWTa_PeccdXy4SggEqK01wCWfWBvt7jjH_n1P9v0XV5nx2RQLBfAjRr6oIjJvbiyu8Nv1pkQzoDGRWdAIl1c0DebtZLRpgXVcI6qLoMAhLwDredQG0xe_lm3dVnkzNi4gGtF/s320/10.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm9qjCJ7V674xLWYOU3_EQb6y3G9hv5IFnt_eQLSqLZmecoqTDuv3rXeysuAkLWKsTbvU-SHqWiqKfKdxINqaJRbq19ob_yZvC6LBD6Lx05kBamkzfLWuE_AwW0SD2iKO9rGhlMA0KfZHG/s1600/11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm9qjCJ7V674xLWYOU3_EQb6y3G9hv5IFnt_eQLSqLZmecoqTDuv3rXeysuAkLWKsTbvU-SHqWiqKfKdxINqaJRbq19ob_yZvC6LBD6Lx05kBamkzfLWuE_AwW0SD2iKO9rGhlMA0KfZHG/s320/11.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_LzllNn_RKP48k8WcwYsNogKR7Ioodtnpetmw0oB-I6Pk6i7KfD0QWmwlpTwdVXMxcRXme7iE9B0z4nWS_vCPPTfi6Xw_94P3Nw5fOCgKliy-Xs5udCocGtCwQHsjSkvksV1XD1QvKY2j/s1600/12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_LzllNn_RKP48k8WcwYsNogKR7Ioodtnpetmw0oB-I6Pk6i7KfD0QWmwlpTwdVXMxcRXme7iE9B0z4nWS_vCPPTfi6Xw_94P3Nw5fOCgKliy-Xs5udCocGtCwQHsjSkvksV1XD1QvKY2j/s320/12.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVRNUEmXwSm5HXsWw9l_olkZMJxOTmP86fhYfHcsl6V0F1fKR8EKrssY_Lnp302TzCX3f7pSqCI_ojMNRPTHHeKEXsC2X2nGXW31fi1Wp_7flWwGbDcZ1ZXwrxAAYGTJfc9ofHjF5N-Diy/s1600/13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVRNUEmXwSm5HXsWw9l_olkZMJxOTmP86fhYfHcsl6V0F1fKR8EKrssY_Lnp302TzCX3f7pSqCI_ojMNRPTHHeKEXsC2X2nGXW31fi1Wp_7flWwGbDcZ1ZXwrxAAYGTJfc9ofHjF5N-Diy/s320/13.jpg" width="320" /></a></div>
<br />வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-24285089359512819972013-04-23T05:57:00.001+05:302013-04-23T05:57:34.605+05:30மது என்றொரு அரக்கன்டெல்லியில் ஐந்து வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய இரண்டாவது ஆளை பிடித்து விட்டார்களாம். "தண்ணியடித்து போதையில் இருந்தோம், வெளியே சென்று யாராவது பெண்ணை அழைத்து வரலாம் என்று போனோம், அந்த குழந்தைதான் இருந்தது, சாக்லேட் கொடுத்து அழைத்து வந்தோம்" என்று விவரித்து இருக்கிறது அந்த மிருகம்.<br /><br />முடிந்தவரை வன்முறைக்கு உட்படுத்தியபின் கயிறைப் போட்டு இறுக்கி, அந்த குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். அந்த குழந்தை பிழைத்துவிட்டதை அதிர்ஷ்டம் என்பதா அல்லது இனி உயிர்பிழைத்தபின் ஒவ்வொரு விநாடியும் உடலளவிலும் மனதளவிலும் வேதனையை சுமக்கப்போவதை நினைத்து துரதிர்ஷடம் என்பதா என்று தெரியவில்லை.<br /><br />கடந்த மாதம் அமெரிக்காவையே உலுக்கிய மற்றொரு வழக்கு. அமெரிக்க டீனேஜர்கள் என்றாலே எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள், எல்லாரும் எல்லாருடனும் உடலுறவு வைத்துக்கொண்டு ஜாலியாக இருப்பவர்கள் என்ற வெளியாட்களாகிய நமக்கு சூடு போட நடந்த நிகழ்வு.<br /><br />ப்ராம் என்ற பெயரில் வயசுப்பசங்களும் வயசுப்பெண்களும் கூடிக்குடித்து கும்மாளம் அடிக்கும் இன்னொரு நிகழ்வாக முடிந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி அது. வழக்கம் போல எல்லாரும் குடித்து சிலர் மட்டையானதும், சில ஆண்நண்பர்களுடன் ஒரு பெண் காரில் ஏறி இருக்கிறார். அந்த பெண்ணும் முழு போதையில் இருந்ததால் அன்றிரவு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மறுநாள் காலை ஒரு ஆண்நண்பனின் வீட்டு வரவேற்பறையில் ஒட்டுத்துணியில்லாமல் எழுந்திருக்கிறார். என்ன நடந்தது என்பதே புரியாமல் வீட்டுக்கும் போய் விட்டார்.<br /><br />அடுத்த சில நாட்களில் அந்த ஆண் நண்பர்கள் இருவர் அந்த பெண்ணின் உடலில் தவறான இடங்களில் கைகளையும் விரல்களையும் வைத்து எடுத்து ஃபோட்டோவை பெருமையாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இதைப் பார்த்த உங்களை, என்னைப் போன்ற பதிவர் ஒருவர் (தமிழ் பதிவர் அல்ல, அமெரிக்க ஆங்கில பதிவர்தான்) இதைப் பற்றி எழுதி, நம் ஊர் சிறுவர்கள் எவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று தன் ஆதங்கத்தை கொட்டுகிறார். அமைதியான ஊராக, வெளியுலகம் அதிகம் தெரிந்துகொள்ளாத அந்த ஊர் அடுத்த சில நாட்களிலேயே ஊடகங்களின் புண்ணியத்தால் பிரபலம் ஆகிவிட்டது. கசாப் வழக்கைப் போல அந்த வழக்குக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்து எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.<br /><br />சம்பந்தப்பட்ட இரு ஆண்களுக்கும் இரண்டு வருடம் தண்டனை, ஒருவருக்கு 16 வயது, இன்னொருவருக்கு 17 வயது. வயது குறைவாக இருப்பதால் 21ம் வயது வரை அவர்களை உள்ளே வைக்க சட்டப்படி வழிமுறை உள்ளது. சம்பந்தப்பட்ட அந்த இருவர், அந்த பெண் தவிர அதில் சம்பந்தப்பட்ட அத்தனை நண்பர்களும் கோர்ட்டிக்கு இழுக்கப்பட்டு சாட்சிக்கூண்டில் ஏற்றப்பட்டு....... இதுகுறித்து பேட்டியளித்த காவல்துறை தலைவர் "குழந்தைகளுக்கு ஒன்றை
மட்டும் சொல்லிக் கொள்கிறேன், பாலியல் அத்துமீறல் என்பது எந்த
நிலையிலும் எந்த போதையில் இருந்தாலும் நிச்சயம் தண்டனைக்குரிய
குற்றமே" என்று சொல்கிறார்<br /><br />அமெரிக்காவைப் பொறுத்தவரை குடிப்பது என்பது அவர்களின் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. குடும்பத்துடன் உட்கார்ந்து குடிப்பது எல்லாம் சகஜமான ஒன்று. அவர்கள் ஊரிலேயே இது பெரிய பிரச்சினை. <br />
<br />
பாண்டிச்சேரி குறித்து எழுதும்போது பிரபஞ்சன் "அங்கு குடித்துவிட்டு சாக்கடையில் வீழ்ந்து கிடப்பவர்களை பார்க்கவே முடியாது, அப்படி விழுந்து கிடப்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள்தான்" என்பதாக சொல்லியிருப்பார். குடிக்க ஆரம்பித்தால், அந்த கொண்டாட்ட மனநிலையை எப்படி அனுபவிப்பது, மட்டையாவதை தவிர்க்க எந்த அளவுடன் நிறுத்தவேண்டும் என்ற எந்த எழவும் நம் ஆட்களுக்கு தெரியாது.<br /><br />சந்தேகம் இருந்தால் உங்கள் கம்பெனியின் ஆண்டுவிழா நடந்தால் கடைசி வரை இருந்து பாருங்கள். மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஆள் கூட 'நாலு ரவுண்டு முடிச்சி அஞ்சாவது ழவுன்டு மாப்ள'யில் மேடையில் பாடி / ஆடிக்கொண்டிருக்கும் செலிப்ரிட்டிக்கு லந்து கொடுத்துக் கொண்டிருப்பார். அவர் குடித்த பானத்தின் விலை அவரது இரண்டுமணி வேலைநேர கூலியாக இருக்கும், அதை அவரால் தனியாக வீட்டில் வாங்கி குடிக்க முடியாதா? அங்கே அவரது மரியாதை சக ஊழியர்கள் முன்னால் காற்றில் பறப்பதை அறியாதவரா அவர்.. எல்லாம் தெரியும், ஆனால் மதுவை பார்த்துவிட்டால் "பசி வந்திட பறக்கும் பத்து" மட்டுமல்லாது மீதி எல்லாமே நம் ஆட்களுக்கு பறந்து / மறந்து விடும்.<br />
<br />முதலில் சொன்ன இரண்டு கொடும்நிகழ்வுகளும் கடலில் அள்ளிய துளி போலத்தான். மதுவினால் இன்னும் எத்தனை எத்தனை கொடும்நிகழ்வுகள் ஒன்றுமறியாத எத்தனை எத்தனையோ பேரை, முக்கியமாக குழந்தைகளையும் பெண்களையும் காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது.<br /><br />இந்த இடத்தில் சூப்பர்ஸ்டார் ஒரு பொதுநிகழ்ச்சியில் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. ஒருவனை ஒரு அறைக்குள் அடைத்து அவன் முன் மூன்று ஆப்ஷன்களை கொடுத்தார்களாம். அந்த அறையில் அவனைத் தவிர ஒரு அழகான பெண், ஒரு சிறு குழந்தை, ஒரு பாட்டில் மதுவை வைத்துவிட்டு, "ஒண்ணு நீ அந்த பொண்ணை கற்பழிக்கணும், இல்லைன்னா அந்த குழந்தையை கொல்லணும், அதுவும் இல்லைன்னா அந்த மதுவை குடிக்கணும்" என்று. அவன் கற்பழிப்பு, குழந்தைக் கொலைக்கு பதில் மதுவே பரவாயில்லை என்று அதை எடுத்து குடித்தானாம். போதை தலைக்கேறி அந்த பெண்ணின் மீது காமம் கொண்டு அவளை கற்பழித்தானாம், நடுவில் தொந்தரவாக இருந்த குழந்தையையும் கொன்றானாம். மதுவின் தீமையை இதைவிட நன்றாக சொல்லமுடியாது என்றே தோன்றுகிறது.<br /><br />இந்த பின்புலத்தில்தான் மற்றொரு செய்தியையும் படிக்க நேர்ந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை இருபதாயிரம் கோடியாம். வரும் ஆண்டிற்கு இருபத்தையாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறார்களாம்.<br />
<br />
இதைக் கேள்விப்படும்போது பதிவுலகில் அடிக்கடி சொல்லப்படும் வரிதான் நினைவுக்கு வருகிறது "நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்"வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-27485872524541113982013-04-08T08:00:00.001+05:302013-04-08T08:00:00.547+05:30அரங்கேற்றம் (அதீதம் சிறுகதை 2)”மெயின்ரோடுல ஆறு கிமீ போயிடுங்க தம்பி. பெரிய ஆலமரம் தாண்டி ஒரு மண்ணு ரோடு இடதுகை பக்கமா பிரியும், அதுல ரெண்டு கிமீ போனிங்கன்னா உங்க வலது பக்கமா கிழக்கு பாத்த மாதிரி பெரிய கேட்டு இருக்கும். அந்த வீடுதான். தம்பி, நான் வேணும்னா கூட வர்றேனே” என்று தயங்கி தயங்கி சொன்னார் டிரைவர் ஆறுமுகம்.
<br />
<br />
“இல்லை அண்ணே, நானே போயிட்டு வந்துடறேன். நீங்க எறங்கிக்கோங்க. சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றேன் சற்றே உயர்த்திய குரலில்
<br />
<br />
கீழே இறங்கியவர், “பெரிய அம்மாவுக்கு நான் நிச்சயமா சொல்ல மாட்டேன் தம்பி, ஆனா அவங்களுக்கு தெரியாம போயிடும்னு நினைக்குறீங்களா?” என்று கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தார் ஆறுமுகம்.
<br />
<br />
ஒரு முழுநிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன். ஸ்டியரிங்கை பற்றிய கைகள் என்னையறியாமல் ஸ்டியரிங்கை இறுக்க ஆரம்பித்தன. பெருமூச்சை விட்டபின் வண்டியை நகர்த்தினேன்.
<br />
<br />
<i>அப்பா....
<br />
<br />உலகின் பாதிக்கு பாதி ஆண்களைப் போலவே எனக்கும் என் அப்பாதான் ஆதர்சம். என் முதல் தோழன். அவருடன் நான் விவாதிக்காத விசயமே இல்லை.... அந்த ஒன்றைத் தவிர.
<br />
<br />பரம்பரை சொத்தாக வந்த ஆயிரத்து சொச்ச ஏக்கர்கள். காவிரி பாசனத்தில் நெல், தோப்புகள் என்று கணக்கில்லாத பணத்துடன் பிறந்து வளர்ந்தவர். தாத்தாவின் அறிவுரைப் படி சென்னையில் வக்கீலுக்கு படித்து முடித்தபின் கிராமத்திற்கே திரும்பி பண்ணை நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தவர். எனக்கு நினைவு தெரிந்து யாரும் அவர் பெயரைச் சொல்லிக்கூட அழைத்ததில்லை, “பெரியவர்” என்ற ஒரு சொல் சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திலும் அப்பா ஒருவரையே குறித்தது ஆச்சர்யம்தான். </i>
<br />
<br />
ஆலமரம் சற்று தொலைவில் தெரிந்தது.
<br />
<br />
<i>அம்மாவின் அதிகார குரல் மனதிற்குள் கேட்டது ”என்மேல உனக்கு மரியாதை இருக்குறது உண்மைன்னா எக்காரணம் கொண்டும் அந்த பக்கம் போகக்கூடாது”</i>
<br />
<br />
வேகம் குறைத்து இடதுபுறம் காரைத் திருப்பினேன். ரியர் வ்யூ மிரரில் என் கார் கிளப்பிய புழுதி தெரிந்தது.
<br />
<br />
<i>எனக்கு 7ம் வகுப்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோதுதான் முதல் முதலாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு உக்கிரமான சண்டையைப் பார்த்தேன். வெளியே வைக்கோல் போர்கள் நடுவே ஐஸ்பாய் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோதே அம்மாவின் ஆக்ரோஷமான குரல் கேட்டது. அப்படியே நின்றேன். ஒன்றும் புரியவில்லை. உள்ளே தயங்கி தயங்கி நுழைந்தேன். ஒரு விநாடி எல்லோரும் அப்படியே எதுவும் பேசாமல் நின்றார்கள். அம்மா கண்ணைக் காட்ட சுந்தர் மாமாதான் வந்து “வாடா, வெளிய போயிட்டு வரலாம்” என்று என்னை இழுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.
<br />
<br />அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டபோது வீட்டின் சூழல் மாறி இருந்ததை உணர முடிந்தது. அதற்குப் பிறகு அம்மாவும் அப்பாவும் எப்போதும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக்கொண்டதில்லை. ஆனால் இருவரின் என் மீதான அன்பும் கண்டிப்பும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தது.</i>
<br />
<br />
ஆறுமுகம் சொன்ன பெரிய மர நிறத்திலான கேட் வந்தது. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எதுவும் இல்லாமல் கல் நட்டு கம்பியினால் வேலி அமைத்திருந்திருந்தார்கள். பார்த்ததும் அந்த வீடுதான் என்று புரிந்தது.
<br />
<br />
<i>“அருண், வீடுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? சுத்தியும் ஒரு அம்பது அடிக்காவது தோட்டம், அதுல தென்னை மரம், மாமரம், கொய்ய மரம் எல்லாம் இருக்கணும். கேட்ல இருந்து வீட்டுக்கு போற வழி ரெண்டு பக்கமும் பூச்செடிங்க நம்ம இடுப்பு உயரத்துக்கு வளந்திருக்கணும், அந்த வழியோட ஒரு பக்கம் புல்லுக்கு நடுவுல ஊஞ்சல், இன்னொரு பக்கம் பசங்க விளையாட ஒரு ஏரியா இருக்கணும்”</i>
<br />
<br />
எல்லாமே இருந்தன. அப்பாவின் வீடு.....
<br />
<br />
<i>அந்த சம்பவம் நடந்து, ஒரு வருடம் கழித்து அடுத்த விடுமுறையில் ஊருக்கு வந்தபோதுதான் அரசல் புரசலாக தெரியவந்தது. முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் அப்பா பக்கத்து ஊரில் ஒரு சின்ன வீட்டை கூட்டிக் கொண்டு வந்து வைத்திருப்பதாகவும் அங்கே அவருக்கு ஒரு பெண்குழந்தை கூட இருப்பதாகவும் உறுதியாக தெரிய உடைந்து போனேன்.
<br />
<br />அம்மா அப்பாவுடன் கல்லூரியில் படித்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த அக்மார்க் தமிழ் பிராமணக் குடும்பப் பெண்ணுக்கு சுத்த கிராமத்தானாகவே தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளும் அப்பாவை பிடித்ததற்கு காரணம் இன்று வரை எனக்கு புரிந்ததில்லை. அம்மாவின் குடும்பமும் சென்னையில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள் என்பதால் இருபக்கமும் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் திருமணம் முடிந்திருக்கிறது. அப்பா பண்ணையை பார்த்துக் கொள்ள, அம்மா மேல்படிப்பை தொடர்ந்து படித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆகிற அளவுக்கு உயர்ந்த இடைவெளியில் நான் பிறந்து பள்ளிக்கு போக ஆரம்பித்திருந்தேன். அன்னியோனியமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யம் சரி செய்ய முடியாத அளவுக்கு உடைந்தது இந்த ஒரு பிரச்சினையினால்தான்.
<br />
<br />அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதற்குக் காரணம் நான்தானோ என்று. சுந்தர் மாமா கூட ஒரு முறை அதையேத்தான் சொன்னார். சுந்தர் மாமா என் அம்மாவின் தம்பி. எனக்கு அடுத்து என் அப்பா அம்மா இருவருக்குமே செல்லப் பிள்ளை அவர்.</i>
<br />
<br />
வண்டியை வெளியேயே நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நாய் எதுவும் இருக்காது என்பது தெரியும், கால்கள் பின்ன மெதுவாக நடந்து போர்டிகோவை அடைந்தேன். ரத்தச் சிவப்பில் ஒரு ஆக்செண்ட் நின்றிருந்தது. போர்ட்டிகோவும் காரும் வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாவற்றிலும் ஒரு சிறு லேயர் தூசி இருந்தது. இரண்டு வாரங்கள் முன்பு வரை சுத்தமாக வைக்கப்பட்டிருந்து அதன் பின் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை உணர முடிந்தது.
<br />
<br />
<i>இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தக்காளிப்பழ சாறு ஃபேக்டரிக்கு ஆர்டர் எடுக்க கொழும்பு போயிருந்தபோதுதான் ஃபோன் வந்தது. சுந்தர் மாமாதான் பேசினார். வழக்கம் போல உணர்ச்சி இல்லாத குரலில் “அருண்... அப்பா நம்மை விட்டுட்டு போயிட்டாருடா” என்றார். விசயம் புரிந்து நான் நிலைக்கு வர சில விநாடிகள் ஆனது. நடுங்கும் குரலில் “மாமா...” என்றேன். “உணர்ச்சிவசப்படாத, உடனே அடுத்த ஃப்ளைட் புடிச்சி திருச்சிக்கு வந்துரு, ஏர்போர்ட்டுக்கு கார் வந்துடும்” வைத்துவிட்டார். அப்பா இல்லாத உலகத்தை நான் அதுவரை யோசித்ததே இல்லை என்பது எனக்குப் புரிந்து நான் மீண்டும் இயல்புக்கு வர காரியம் எல்லாம் முடிந்துகூட இரண்டு நாட்கள் ஆனது.</i>
<br />
<br />
”டிங் டாங்”
<br />
<br />
உள்ளே சில விநாடிகள் கழித்து யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்த, கலங்கிய கண்களுடன் இருந்த அந்த அம்மாளின் முகம் என்னைப் பார்த்த உடனேயே ஆச்சர்யத்தில் மலர்ந்தது. அவசர அவசரமாக கதவைத் திறந்தவர் “உள்ள வாங்க தம்பி, நான் உங்களை எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.
<br />
<br />
“என்னை உங்களுக்கு?”
<br />
<br />
“தெரியும் தம்பி, பெரியவர் உங்க கல்யாண கேசட், ஆல்பம் எல்லாம் கொண்டு வந்து காட்டியிருக்கார்”
<br />
<br />
தயக்கத்துடன் உள்ளே வந்து அமர்ந்தேன். ஒரு விசாலமான ஹால் அதன் இருபுறமும் விருந்தினர் அறைகள், ஹாலின் நடுவில் ஊஞ்சல், ஹாலைத் தாண்டினால் சூரிய வெளிச்சத்துடன் முற்றம் தெரிந்தது. முற்றத்தின் ஒரு புறம் ஸ்டோர் ரூமுடன் கூடிய சமையல் அறையும் இன்னொரு புறம் இரு படுக்கை அறைகளும் முற்றத்தை தாண்டினால் கிணறு, குளியல் அறைகளும் இருக்கும் என்று உணர முடிந்தது, அப்பா...
<br />
<br />
<i>“டேய் உங்க அப்பா இந்த வீடு கட்டுறப்ப என்ன சொன்னாரு தெரியுமா, நடுவுல முற்றம் வைக்கணுமாம், வீட்டுக்கு பின்னால கிணறு வரணுமாம், அப்படியே பட்டிக்காடு” என்று வாய் கொள்ளா சிரிப்புடன் அம்மா அடித்த கிண்டலும் அதற்கு அப்பா புன்னகையுடன் பார்த்த பார்வையும் நினைவுக்கு வந்தது.</i>
<br />
<br />
“செய்தி வந்தது, ஆனா வர முடியலை, காரணம் உங்களுக்கே தெரியும்” என்றார் அவர். அவரை சித்தி என்று அழைப்பதா வேணாமா என்று குழப்பத்துடன் அமைதியாக இருந்தேன்.
<br />
<br />
“குட்டி, ஒரு காஃபி போட்டு கொண்டுவா. தம்பி வந்திருக்கு பாரு.. உங்க அம்மாவுக்கு எங்க நாங்க சொத்துல உரிமை கொண்டாடிட்டு வந்துடுவோமோன்னு பயம் போல. பெரியவரோட முகத்தை கடைசியா ஒரு தடவை பாக்கக்கூட முடியாம போச்சி” என்றார் விரக்தியாக.
<br />
<br />
<i>“நான் போய் அந்த வீட்டுக்கு போயி ஒரு நடைபார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்” தலையை சீவிக் கொண்டிருந்த கவிதா அப்படியே திரும்பி என்னைப் பார்த்தாள். ”எங்களை மாதிரியேதான் அவங்களையும் அப்பாதான் பதினைஞ்சு வருசமா காப்பாத்திட்டு வந்திருக்காரு, இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு எதாவது உதவி வேணும்னா செஞ்சிட்டு வரலாம்னு பாக்குறேன்” என்றேன்.
<br />
<br />“அருண், அத்தைக்கு சொல்லப்போறியா?”
<br />
<br />“இல்லைடா, அம்மா நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க. ஏற்கனவே அவங்களுக்காக அப்பா கோடியா கோடியா செலவு பண்ணி இருக்காருன்னு சொல்லி திட்டிட்டு இருக்காங்க”
<br />
<br />“நானும் வரவா?”
<br />
<br />“வேணாம்டா, அங்க என்ன கண்டிசன்னு தெரியலை. ஒருவேளை அம்மா நினைக்குற மாதிரி அவங்க சொத்துக்கு அடி போடுறவங்களா இருந்தா பிரச்சினையாக வாய்ப்பு அதிகம். நீ வராம இருக்குறதுதான் நல்லது”</i>
<br />
<br />
ஒரு பெண் காஃபி கொண்டு வந்தாள், “இவதான் என்னோட பொண்ணு, குட்டின்னு கூப்பிடுவோம்” நிமிர்ந்து பார்த்தேன், என் தங்கை.. என்னை விட பத்து வயதாவது குறைவாக இருக்கும் என்று தோன்றியது. லட்சணமான முகம். பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அப்பாவின் சாயல் அவள் முகத்தில் தெரிகிறதா என்று பார்த்தேன், தன் அம்மாவை அச்சு அசலாய் உரித்து வைத்துப் பிறந்திருந்தாள். கண்களில் லேசான சிவப்பு, அவளும் அழுதிருப்பாள் போல. காஃபியை வாங்கினேன். திரும்பி சமையல் அறைக்கு போனாள்.
<br />
<br />
”நீங்க.. நீங்க எப்படி அப்பாவுக்கு...” பேச முடியாமல் திணறினேன்.
<br />
<br />
“என்னோட சின்ன வயசுல என் வாழ்க்கை இப்படி எல்லாம் ஆகும்னு நினைச்சதே இல்லை. என் அம்மா அவ்வளவு நல்லா பரதம் ஆடுவாங்க. அவங்க கொஞ்ச கொஞ்சமா எனக்கு கத்துக் கொடுக்க என் பதினைஞ்சாவது வயசுல நாட்டிய அரங்கேற்றம் பண்ண எல்லா ஏற்பாடுகளும் பண்ணினாங்க. அரங்கேற்றத்துக்கு ஒரு மாசம் இருக்குறப்ப நடந்த ஒரு ஆக்சிடெண்ட்டுல ரெண்டு பேரும் போய் சேந்துட்டாங்க. அந்த ஆண்டவனுக்கு என் மேல கருணை இல்லை போல, என்னை மட்டும் இந்த உலகத்துல விட்டுட்டு போயிட்டான்”
<br />
<br />
காஃபியை வாயில் வைத்தேன். ஒரே சிப்பில் உணர்ந்தேன். ‘அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு மூணில் ஒரு பங்கு ஏற்காடு காஃபிக் கொட்டையில டிகாக்சன், நல்லா கலக்கிட்டு காய்ச்சின கெட்டியான எருமைப்பால் டம்ளர் நிறையும் அளவிற்கு ஊத்தி, ஸ்பூனில் மெல்லிசாய் ஒரு கலக்கு’ அப்பாவின் காஃபி.
<br />
<br />
“காஃபிக்கொட்டை ஏற்காட்டுல இருந்தது வந்தது” என்றார் என் மன ஓட்டத்தைப் படித்தவராய். ஒருநாளும் அப்பாவிற்கு எங்கள் வீட்டின் காஃபி பிடித்ததே இல்லை “எதுக்கு இவ்ளோ நுரை?” என்றோ “டிகாக்சன் கம்மியா போட்டுட்ட” என்றோ “சுகர் இவ்ளோவா அள்ளிப் போடுவீங்க” என்றோ “பசும்பால் காஃபி திக்காவே இருக்குறதில்லை” என்றோ எதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்.
<br />
<br />
அவர் விட்ட இடத்திலிருந்து கதையை தொடர்ந்தார். ”அப்பாவும் அம்மாவும் போனதும் என் சித்தப்பா வீட்டுக்கு போனேன். பணத்தைத் தவிர வேற எதுவும் தெரியாத அந்த ஆளு என்னை ஒரு பண்ணையாருட்ட அனுப்பிட்டான். ஆயிரம் பேர் முன்னால நடக்க வேண்டிய என் அரங்கேற்றம் என்னை விட முப்பது வயசு மூத்த அந்த பண்ணையாரு கூட அவரோட தனியறையில நடந்தது” என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருக்க அவர் தட்டையாக உணர்ச்சியில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.
<br />
<br />
”அப்புறம் மதுரை பக்கத்து ஆளுங்கள்ல நானும் பத்தோட பதினொண்ணா ஆகிட்டேன். கத்து வெச்சிருந்த நாட்டியத்தின் காரணமா அந்த கூட்டத்துலயும் தனிச்சி தெரிய ஆரம்பிச்சேன். என்னோட நாட்டியத்தைப் பாக்குறதுக்காக நூறு மைல் தள்ளி இருந்தெல்லாம் மைனருங்க வருவாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆனா வெளிய மத்தவங்க எங்களைப் பாக்குறப் பார்வையிலயே கூசிப்போவேன். ஒரு காலத்துல தேவதாசிகள் கோவில்ல இறைவனுக்கு நெருக்கமானவங்களா பாக்கப்பட்டாங்கன்னு படிச்சப்ப சிரிப்புதான் வந்தது” வார்த்தைகளில் விரக்தி வழிந்தோடியதாகக் தோன்றியது எனக்கு.
<br />
<br />
திடீரென்று அவர் குரலில் ஒரு புன்னகை அல்லது வெட்கத்தை உணர முடிந்தது “அப்படி ஒரு நாட்டியம் ஆடுறப்பதான் உங்க அப்பாவைப் பார்த்தேன்”.
<br />
<br />
சில நிமிடம் அமைதியாக இருந்தார். நானும் அவரின் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். குட்டி சமையலறையில் இருந்து நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.
<br />
<br />
“அப்புறம் பெரியவர் அடிக்கடி என்னைப் பாக்க வர ஆரம்பிச்சாரு. சில தடவை ரெண்டு மூணுநாள் கூட தங்குவாரு. அவருக்கு ஏன் என்னைப் புடிச்சது, என்னை அடிக்கடி பார்க்க வர்ற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை எதையும் நான் அவர்கிட்ட கேட்டதில்லை. ஆனா ஒண்ணு சொல்ல முடியும், பொம்பளை சுகத்துக்காக எல்லா இடத்துக்கும் அலையுற மைனர் இல்லை அவர்”
<br />
<br />
“அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி இவ பொறந்தா. அதுக்கப்புறம் மத்தவங்க என்னை ஒதுக்குனப்பவும் பெரியவரோட அன்புல எந்த மாற்றமும் இருந்ததில்லை. இவளுக்கு ரெண்டு வயசா இருந்தப்பதான் என்கூடவே வந்துட முடியுமான்னு கேட்டாரு. சரின்னு வந்துட்டோம்” மூச்சை முழுவதும் இழுத்து பெருமூச்சாய் வெளியில் விட்டார்.
<br />
<br />
”இந்த பதினைஞ்சு வருசத்துல அவரைத் தவிர வேற யாரும் என்னை நெருங்கக்கூட முடிஞ்சதில்லை. அவரோட வெளிய கோவில் குளம்னு போனதில்லையே தவிர வருசம் ரெண்டு தடவை ஒரு ஒரு வாரம் எங்கயாவது வெளியூருக்கு எங்களைக் கூட்டிட்டுப் போவாரு, எங்களுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துகிட்டாரு”
<br />
<br />
என்ன செய்யப்போகிறேன் நான். முற்றிலும் அப்பாவை மட்டுமே அண்டியிருந்த இவர்களுக்கு அடுத்த போக்கிடம் ஏது? அதுவும் வயதுக்கு வந்த பெண்ணுடன்.
<br />
<br />
”பெரியவர் இல்லாம போறது அப்படிங்குற விசயத்தை ஒரு நிமிசம் கூட நான் யோசிச்சே பார்த்ததில்லைன்னு நினைச்சா எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு” என்றார் வேதனையுடன். என் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவர் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பது புரிந்தது.
<br />
<br />
“ஆனா பெரியவர் இறந்துட்டாருன்னு தெரிஞ்சதுமே ஆளாளுக்கு தூது அனுப்ப ஆரம்பிச்சிட்டானுங்க, அதிலயும் இவ கண்ணுக்கு லட்சணமா இருக்காளே” என் நெஞ்சில் இடி இறங்கியது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன்.
<br />
<br />
“அதிலும் அந்த ரைஸ்மில் மாணிக்கம் அஞ்சு லட்ச ரூபாயோட ஆள் அனுப்பிட்டான், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கன்னு”. இதயம் பிசைய கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.
<br />
<br />
அவர் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தேன். அவர் தொடர்ந்து சொன்னார்.
<br />
<br />
“பணத்தைத் தூக்கி வந்தவன் மூஞ்சியிலயே விசிறியடிச்சிட்டு சொன்னேன், ’பெரியவரோட உப்பை பதினஞ்சி வருசம் சாப்பிட்டு இருக்கோம். என் பொண்ணோட அரங்கேற்றம் அவர் பையன் கூடத்தான் நடக்கும்’னு”
<br />
<br />
*******
<br />
<br />
நன்றி: <a href="http://pazasu.atheetham.com/mar1/shirukathai.htm">அதீதம் இதழ் 4 (2011 மார்ச் 1 - 15)</a>வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-90027992616976828362012-10-08T07:33:00.000+05:302012-10-08T07:33:57.985+05:30ஹிஸ் நேம் ஈஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்இந்தியர்களுக்கு நவம்பர் மத்தியில் தீபாவளி என்றால் உலகெங்கும் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு நவம்பர் இரண்டாம் தேதியே தீபாவளி அட்வான்ஸாக வந்துவிடுகிறது.<br />
<br />
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, பின் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின் மீண்டும் துவங்கப்பட்டு நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாண்டின் அடுத்த படமான “ஸ்கைஃபால்”ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.<br />
<br />
பாண்ட் மீது நடக்கும் கொலைமுயற்சி, அவர் இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் மீண்டு வருவது என்று கதையின் ப்ரீல்யூடை ட்ரெய்லரில் காட்டி எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணியை பாண்ட் (டேனியல் க்ரைக்) அழைத்து வருவது போல் காட்டியது இந்த படத்திற்கான அட்டகாசமான விளம்பரம்.<br />
<br />
இதன் அடுத்த கட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாடகி Adele பாடியுள்ள Skyfall தீம் பாடல் வெளிவந்துள்ளது. வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களின் டைட்டில் பாடல்களை நினைவுபடுத்தும் அதேநேரம் நம் காதுகளுடன் மனதையும் குளிர்விக்கும் குரலில் அசத்தியிருக்கியிறார். யூ ட்யூபில் அதன் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/7HKoqNJtMTQ?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
*******வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-57733248159841051742012-10-05T05:34:00.000+05:302012-10-05T05:34:35.664+05:30ராம்னி Vs ஒபாமா : அருமையான நேருக்கு நேர்அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்க இருப்பதை இந்நேரம் அறிந்திருப்பீர்கள். கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வந்த பிரச்சாரம் கடந்த மாதத்தில் நடந்த கட்சிகளின் மாநாடுகள் மூலம் சூடு பிடித்தது.<br />
<br />
நம் ஊரைப் போல, கட்சியோட தலைவர்தான் நிரந்தரமா முதலமைச்சர் வேட்பாளர், எத்தனை தடவை என்றாலும் அவர்தான் முதலமைச்சர் / பிரதமர். அவரோட நெருங்கிய சொந்தக்காரர்தான் அடுத்த இடம் என்பதெல்லாம் இங்கே செல்லுபடி ஆவதில்லை. இரண்டே கட்சிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் அரசியல் களத்தில் இரு கட்சிகளில் இருந்தும் முதல் படியாக கட்சியின் வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நடக்கிறது.<br />
<br />
டெமாக்ரட்ஸ் கட்சிக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஏற்கனவே அதிபராக இருக்கும் ஒபாமா சுலபமாக கட்சியின் வேட்பாளர் ஆகிவிட்டார். இங்கே ஒருவர் இருமுறைதான் அதிபர் ஆக முடியும் என்பது கூடுதல் தகவல்.
ரிபப்ளிகன் கட்சியில் கடும் போட்டி. போட்டி போட்ட ஏழெட்டு பேரில் மாஸ்ஸூட்டஸ் கவர்னராக பணியாற்றிய மிட் ராம்னி முண்ணனிக்கு வந்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கடந்த மாத மாநாட்டில் அறிவிக்கப்பட்டு விட்டார்.<br />
<br />
என்னதான் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருந்தாலும், பொருளாதாரம் அடி வாங்கி இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ராம்னியை விட ஒபாமா பல புள்ளிகள் முண்ணனியிலேயே இருந்தார்.
டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஒபாமாவை ஆதரித்து அவரது மனைவி மிஷேல் பேசிய பேச்சும், முன்னாள் டெமாக்ட்ரடிக் அதிபர் பில் கிளிண்டனின் பேச்சும் அவருக்கு ஒரு சிறப்பான இடத்தை இந்த போட்டியில் பெற்றுத்தந்தது என்று உறுதியாக கூற முடியும்.<br />
<br />
<b>அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம்:</b><br />
இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் ”பிரசிடென்சியல் டிபேட்” நடந்தது. நம் ஊரில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு விசயம். அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவரும் ஒரு பெரிய அரங்கில் மக்கள் முன்னிலையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தும் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு என்பதால் சுமார் அறுபது லட்சம் பேர் நேரடியாக பார்க்க வாய்ப்பு இருந்தது.<br />
<br />
ஏற்கனவே நான்கு ஆண்டுகள் ஓரளவு சுமாராக ஆட்சி செய்தது, ராம்னி தனது பிரச்சாரத்தின் இடையில் தன் ஆதரவாளர்களுடன் பேசுகையில் அரசு உதவி பெறுபவர்களை மோசமாக பேசியதன் வீடியோ வெளியானது, பெரு நிறுவனங்களுக்கு ராம்னி ஆதரவானவர் என்ற பொது கருத்து, ஒபாமாகேர் எனப்படும் அனைத்து மக்களுக்கான மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் கொண்டு வந்தது என்று அனைத்தும் ஒபாமாவிற்கு ஆதரவாகவே இருந்தன. வாத பிரதிவாதத்தில் சிறந்தவராக அறியப்பட்ட ஒபாமா சுலபமாக ராம்னியை நசுக்கி விடுவார், ஒபாமாவின் வெற்றி 100% இந்த விவாதத்தில் உறுதிப்படுத்தப்படும் என்பதே பரவலான பேச்சாக இருந்தது.<br />
<br />
<b>நடந்தது என்ன?</b>
டென்வர் பல்கலைக்கழக அரங்கில் விவாதம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் மட்டுமே நேரடியாக அரங்கில் அமர்ந்து பார்க்க முடியும். பத்திரிக்கையாளர் ஒருவர், இந்த விவாதத்தை வழிநடத்தினார். விவாதத்தில் பங்குபெறும் இரு வேட்பாளார்கள் மற்றும் நடத்துனர் தவிர அரங்கில் இருக்கும் யாரும், இந்த 90 நிமிட விவாதத்தின் போது எதுவும் பேசவோ, கைதட்டவோ கூடாது என்று கடுமையான விதிமுறைகள்.
<br />
<br />
விவாதத்தை 6 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கி, ஒவ்வொரு ஆளும் பேச ஆளுக்கு இரண்டு நிமிடம், அதன் பின் ஒருவர் சொல்வதை மற்றவர் மறுத்து / விளக்கி கேள்விகள் கேட்பது என்று அருமையான வழிமுறைகளுடன் விவாதம் ஆரம்பித்தது.<br />
<br />
பெரும்பாலோனோர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, ஒபாமா இந்த விவாதத்தில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பினார். எந்த விசயத்தையும் தெளிவாக சுருக்கமாக எண்ணிக்கைகள் அடிப்படையில் சொல்ல அவரால முடியவே இல்லை.
மாறாக, ராம்னி ஒவ்வொரு தலைப்பிலும் பாயிண்ட் பை பாயிண்டாக கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்ய தவறினார்கள், அதை எப்படி சரி செய்வது, அதற்கு தன்னிடம் இருக்கும் திட்டங்கள் என்ன, ஒபாமா சொல்லும் திட்டங்களில் பிரச்சினைகள் என்ன என்று தெள்ளத் தெளிவாக எந்த தயக்கமும் இல்லாமல் (சரியோ தவறோ) நெம்பர்களை குறிப்பிட்டு விளாசி விட்டார்.<br />
<br />
ஒட்டுமொத்தமாக விவாதம் முடிந்த போது, ராம்னியை விட ஒபாமா ஐந்து நிமிடங்கள் அதிகமாக பேசியிருந்தாலும் விவாதத்தின் வெற்றியாளர் சந்தேகமே இன்றி ராம்னிதான். மிகச் சிறந்த முறையில் அவர் தயாராகி வந்திருந்ததையும், ஒபாமா ஏனோதானோ என்று தயாராகி இருந்ததையும் நன்றாக உணர முடிந்தது.<br />
<br />
இந்த விவாத வெற்றியின் மூலமாக மட்டுமே ராம்னி வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்பதையும் ராம்னியும் உணர்ந்தே இருப்பார். ஆனால் நேருக்கு நேர் நிற்கும்போது, தன் போட்டியாளரை விட தான் சிறந்த லீடர் என்பதை நிச்சயம் இந்த விவாதத்தில் உணர்த்தியிருக்கிறார்.<br />
<br />
இன்னும் இரு விவாதங்கள் இருக்கின்றன. ஒருவேளை ஒபாமா விழித்துக்கொள்ளாமல் இதே போன்று ஏனோதானோ என்று அடுத்த இரு விவாதங்களையும் எதிர்கொள்வாரேயானால் ராம்னி சுலபமாக வெள்ளை மாளிகையில் குடியேறி விட முடியும். அதிலும் இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிராக கடும் விளைவுகள் ஏற்பட்டு வரும் வேளையில் அடுத்த விவாதம் “வெளியுறவு கொள்கைகள்” குறித்து என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் நான்கு ஆண்டுகள் அமெரிக்காவையே திறமையாக ஆண்ட ஒபாமா அப்படி ஒன்றும் சுலபமாக இதை விட்டுவிடுவார் என்று தோன்றவில்லை.<br />
<br />
மொத்தத்தில், இந்த முதல் விவாதத்தின் மூலம் ஒபாமா மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சுகமான பயணத்தில் ஒரு எதிர்பாராத “ஸ்பீட் ப்ரேக்கரை” ராம்னி போட்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.<br />
<br />
<i>பி.கு: முழு விவாதமும் யூ ட்யூபில் இருக்கிறது. அதன் லிங்க் இங்கே.</i><br />
<a href="http://www.youtube.com/politics?feature=etp-pv-ype-3bff3fd3f0" target="_blank">http://www.youtube.com/politics?feature=etp-pv-ype-3bff3fd3f0</a>வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-22183303392141776382012-03-01T08:26:00.001+05:302012-03-01T08:28:26.563+05:302012ல் நான் எதிர்பார்க்கும் ஆங்கில படங்கள்ஆங்கில திரைப்படங்களை ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்து பார்க்கிற பழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் ஏற்கனவே நான் பார்த்ததில் என்னைக் கவர்ந்த, வெற்றியடைஞ்ச திரைப்படங்களோட அடுத்த பாகங்கள் வர்றப்ப என்னோட எதிர்பார்ப்பு அதிகமாகுறது ஆச்சர்யம் இல்ல. அந்த மாதிரி இந்த வருசம் நான் ஆவலோட எதிர்பார்க்குற சில படங்கள் இங்கே. இது உங்களோட லிஸ்டோட ஒத்துப்போனா நீங்களும் என் இனம்தான் :)<br /><br /><span style="font-weight:bold;">ஸ்பைடர் மேன் 4 (The Amazing Spider-Man)<br /></span>ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்களைப் பத்தி சொல்லவே வேணாம். குழந்தைகளைக் கவர்ந்த காமிக்ஸ் ஹீரோவா இருந்தாலும் எல்லா வயதினரையும் ஸ்பைடர்மேன் சீரிஸோட முதல் மூணு பாகங்கள் கவர்ந்தது. ஹீரோ டோபே & ஹீரோயின் கிறிஸ்டன் டன்ஸ்ட் (ம்ம்ம்) ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி அட்டகாசமா இருந்ததும் இந்த பாகங்களின் வெற்றிக்கு காரணம். இந்த நாலாவது பாகத்துல இந்த சீரிஸை ரீபூட் அடிக்குறாங்க, அதாவது மறுபடியும் ஆரம்பத்துலேர்ந்து ஸ்பைடர் மேன் ஏன் அப்படி ஆகுறான்றதுல இருந்து ஆரம்பிக்கப்போறாங்க. முற்றிலும் புது நடிகர், நடிகைகள். உண்மையை சொல்லணும்னா இந்த பாகத்தோட ட்ரெய்லர் எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்தது. இருந்தாலும் இந்த படத்தை நான் எதிர்பார்த்துட்டுதான் இருக்கேன்<br /><br />The Amazing Spider-Man<br />Release Date : July 3, 2012<br />Released in - 3D and IMAX 3D<br /><a href="http://en.wikipedia.org/wiki/The_Amazing_Spider-Man_%282012_film%29">http://en.wikipedia.org/wiki/The_Amazing_Spider-Man_%282012_film%29</a><br /><br /><span style="font-weight:bold;">பேட்மேன் : தி டார்க் நைட் ரைஸைஸ் (Batman - The Dark Knight Rises)</span><br />இதுவும் இன்னொரு சூப்பர் ஹீரோ படம்தான். இன்செப்ஷன் படம் மூலமா பெரும்பாலான தமிழக ரசிகர்களிடம் பிரபலமான டைரக்டர் கிறிஸ்டோஃபர் நோலனோட அடுத்த படம் + ஏற்கனவே பெரிய அளவில் வெற்றி பெற்ற இரு பாகங்களின் அடுத்த & கடைசி பாகம்ன்றதா ஒட்டுமொத்தமாவே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கு. இரண்டாவது பாகத்தோட முடிவில் மக்களோட நம்பிக்கையை சிதைக்காம இருக்கணும்ன்றதுக்காக கெட்ட பேரோட காணாம போற பேட்மேன் (அ) டார்க் நைட் மீண்டும் வெளியில் வந்து வில்லன்களை அழிக்குற கதை.<br /><br />இதுவரைக்கும் இல்லாத வகையில் படத்தின் பெரும்பகுதி, ஏறத்தாழ 55 நிமிட அளவுக்கு, நேரடியா ஐமேக்ஸ் கேமிராவிலயே படமாக்கியிருக்காங்க. மிஷன் இம்பாஸிபிள் படத்துக்கு போனப்ப இந்த படத்தோட முதல் 6 நிமிசத்தை காட்டுனாங்க. ஆகாயத்துல ஒரு விமானத்துல இருந்து இன்னொரு விமானத்துக்கு ஆட்கள் கயிறு மூலமா ஏறங்குற ஆக்சன் சீக்வன்ஸ். படம் பாத்துட்டு இருக்குற நம்ம உக்காந்திருக்குற சேர் ஆகாயத்துல பறந்த மாதிரி உணர்வு. அதுக்கப்புறம் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிடுச்சி.<br /><br />The Dark Knight Rises<br />Release Date : July 20, 2012<br />Released in - Regular & IMAX screens<br /><a href="http://en.wikipedia.org/wiki/The_Dark_Knight_Rises">http://en.wikipedia.org/wiki/The_Dark_Knight_Rises</a><br /><br /><span style="font-weight:bold;">அமெரிக்கன் ரீயூனியன்</span><br />அமெரிக்கன் பை படங்களை புடிக்கலைன்னு யாரும் சொல்லவே முடியாது. டீன் காமெடின்னு வகைப்படுத்தப்படுற படங்கள்ல டாப் ஸ்பாட் இந்த சீரிஸ்க்கு சந்தேகமில்லாம குடுக்கலாம். முதல் மூணு பார்ட்டுக்கு அப்புறம் வந்த நாலு பார்ட்டும் டைரக்ட் டூ டிவிடி. அதனால இந்த சீரிஸ்ல பெரிய திரைக்கு வர்ற நாலாவது பார்ட் அப்படிங்குறதும், முதல் மூணு பார்ட்ல இருந்த அதே நடிகர், நடிகைகள் மறுபடியும் இதுலயும் நடிக்குறதும் ஹைலைட்ஸ்.<br /><br />காலேஜ் படிக்குற பசங்க பொண்ணுங்களை கரெக்ட் பண்ணவும் செக்ஸ்க்காகவும் அலையுறதையும், அது சம்பந்தப்பட்ட செலிப்ரேஷன்ஸ், பார்ட்டின்னு நாம பொறாமைப்படுற அளவுக்கு அமெரிக்க டீனேஜ் பசங்களோட வாழ்க்கையை காட்டுன படங்கள் இவை. இந்த பாகத்துல அதே க்ரூப் மறுபடியும் காலேஜ் ரீயூனியனுக்காக ஒண்ணு சேர்றதை கதையாக்கி இருக்காங்க போல. பாக்கலாம், எப்படி இருக்குன்னு..<br /><br />American Reunion<br />Release Date : April 6, 2012<br /><a href="http://en.wikipedia.org/wiki/American_Reunion">http://en.wikipedia.org/wiki/American_Reunion</a><br /><br /><span style="font-weight:bold;">ஸ்கைஃபால் (ஜேம்ஸ் பான்ட் 23)<br /></span>இந்த வருசம் நான் எதிர்பார்க்குற மிகப்பெரிய படம் இது. ஜேம்ஸ் பான்ட்டோட தீவிர ரசிகர்களுக்கு போன வருசம் பெரிய அதிர்ச்சி, அடுத்த படம் ட்ராப் ஆனது. அதுக்கப்புறம் நான் இது பத்தி ஃபாலோ பண்ணவே இல்ல. ரெண்டு நாள் முன்னால இந்த பதிவு எழுதலாம்னு தோணினப்ப "என்னத்த எழுதுறது, இந்த வருசத்தோட மிகப்பெரிய ஏமாற்றம் பான்ட் படம் இல்லாதது"ன்னு பஞ்ச் வெச்சி முடிக்கலாம்னு தோணினது. சரின்னு இது பத்தி எதுக்கும் தேடலாமேன்னு தேடினப்பதான் தெரிஞ்சது போன நவம்பர்லயே அடுத்த படம் அறிவிச்சிட்டாங்கன்னு.<br /><br />நாலு வருசம் முன்னால டேனியல் க்ரைக் நடிச்சி வந்த படம் இந்த சீரிஸோட ரீபூட். முதல்ல படம் சுத்தமா புடிக்கவே இல்லை, ஆனா கதை புரிஞ்சிகிட்டு சப் டைட்டிலோட படம் பார்த்தப்ப என்னை ரொம்ப கவர்ந்தது. இதுவரைக்கும் நான் அதிக முறை பார்த்த படம்னு கேஸினோ ராயலை சொல்லலாம். எத்தனை தடவை பார்த்தாலும் போர் அடிக்குறதில்லை. அடுத்ததா வந்த க்வாண்டம் ஆஃப் சோலஸ் ஓகேன்ற டைப்தான். இருந்தாலும் இந்த வருசம் என் எதிர்பார்ப்பு லிஸ்ட்ல இந்த படத்துக்குதான் முதலிடம்னு சந்தேகமே இல்லாம சொல்ல முடியும்.<br /><br />Skyfall<br />Release Date : October 26, 2012<br />Released in - Regular & IMAX screens (IMAX தியேட்டர்களில் ரிலீஸ் ஆகப்போகும் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம்)<br /><a href="http://en.wikipedia.org/wiki/Skyfall">http://en.wikipedia.org/wiki/Skyfall</a>வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-63253227254103868842012-02-01T21:17:00.001+05:302012-02-01T21:19:40.203+05:30சட்டசபை, கிரிக்கெட் : இன்றைய ட்விட்ஸ்ஜெயுடன் மக்கள் பிரச்சினை குறித்து விகாந்த் ஆக்ரோஷம்.. வட போச்சே, ஸ்டாலின்<br /><br />தேமுதிக காவலர்களால் வெளியேற்றம், திமுக வெளிநடப்பு... நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான்<br /><br />அன்னிக்கு சண்டை நடந்தப்ப ஜீப்புக்குள அன்ட்ராயரோட ஒண்டிட்டு இருந்தான்: உ.அ.தா கவுண்டர் ஜெய்கணேஷ் பற்றி #சட்டசபை திமுக<br /><br />தென்காசியில சரத்ட்ட சொல்லி ராதிகாவை ஜெயிக்க வெச்சி சட்டசபைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாமோ? : ஜெ<br /><br />ஜெ: இதுக்கு மேலயும் என்னால பொறுமையா இருக்க முடியாது, ஒரே வழி, உடனே செ.ஜார்ஜ் கோட்டையில ஒரு டாஸ்மாக் ஆரம்பிங்க :))<br /><br />கரு: ஏன் தம்பி நெப்போலியனை கட்சிய விட்டு தூக்க சொல்ற? ஸ்டா: நேத்து ஒருத்தர் ஆக்ரோஷமா பேச அவருதான் காரணமாமே<br /><br />இரண்டு முக்கிய செய்திகள்: 1. எலைட் ஒயின்ஷாப் ஆரம்பிப்பதை அரசு நிறுத்திவைத்தது. 2. சட்டசபையில் விகாந்த் ஆக்ரோஷம்<br /><br />அதிமுக சர்வாதிகாரமாக செயல்படுகிறது: கரு... நாமதான் செயல்படுறதே இல்லையே, அப்புறம் என்ன கவலை? :)<br /><br />ஸ்டா:இன்னிக்கு நாமளும் ஆக்ரோஷமா பேசணும்.. <br />துரைமுரு:முதல்ல பேசுங்க. அப்புறம் ஆக்ரோஷமெல்லாம்<br /><br />புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்... விகாந்த் பற்றி ஸ்டாலின்<br /><br />அசந்து போகும் அளவிற்கு அறிவிப்புகள்:ஜெ... நாம ஆடிப்போற அளவுக்கு கேஸ் போடுறதை சொல்றாங்களோ: ஸ்டாலின்<br /><br />அழகிரி கடவுளாக சித்தரித்து திமுக போஸ்டர்: கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி, நான் சொல்லலைப்பா, பெரியார் சொன்னது:)<br /><br />பாத்துடலாம் நீயா நானான்னு: அவரைப் பார்த்து இவர்: ஸ்டாலின் (மகன்), விகாந்த் (மகன்)<br /><br />"There is a tomorrow: Dhoni"... சனிபகவான்ட்ட பிள்ளையார் சொன்ன மாதிரி சொல்றாம்பாரு.. கொய்யால.. :)<br /><br />முதல்ல ஆஸி டீம் மட்டும்தான்மா அடிச்சாங்க, அப்புறம் ஃபோனைப் போட்டு ஸ்ரீலங்காவை "வாடா மச்சான்"ன்னு கூப்பிட்டாங்க : தோனி<br /><br />***********<br /><br />To follow @iVenpuவெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8310416920242883272011-12-26T08:19:00.009+05:302011-12-26T08:19:00.569+05:30ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு?<br /><br />சென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.<br /><br />ஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.<br /><br />”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.<br /><br />படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.<br /><br />அதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.<br /><br />வேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.<br /><br />அமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது<br /><br />*********<br /><br />இந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்காம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.<br /><br />டிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.<br /><br />அதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.<br /><br />படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.<br /><br />மசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-75056547969321018072011-10-21T08:29:00.003+05:302011-10-21T08:29:46.589+05:30துணுக்ஸ் - 2011/10/21ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.<br /><br />ஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன?<br /><br />கார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.<br /><br />*******<br /><br />”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.<br /><br />நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.<br /><br />எல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்?” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.<br /><br />நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது<br /><br />அமெரிக்கா சார்.. அமெரிக்கா...<br /><br />******<br /><br />டென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.<br /><br />ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.<br /><br />ஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க? இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன? :)வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-32680474950673693592011-10-20T09:32:00.002+05:302011-10-20T09:34:38.190+05:30நண்பன் (சிறுகதை)"மச்சான், ஒரு குட் நியூஸ்டா" என்ற குமாரின் குரலில் வழக்கத்துக்கு மாறான ஒரு உற்சாகம் தெரிந்தது.<br /><br />"என்னடா.. ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இருக்கு"<br /><br />"இல்ல மகேஷ்... ஒரு பட்சி மாட்டிருக்குடா" என்றவனின் குரலில் லேசான வெட்கம்.<br /><br />"என்னது.. லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?"<br /><br />"டேய்.. நான் சொன்னது வேற.. மேட்டருக்கு ஒரு பட்சி மாட்டிருக்குடா"<br /><br />"தெளிவா சொல்லுடா, ஒண்ணும் புரியலை"<br /><br />"நீதான் திட்டுவியே, நான் நெட்ல எப்ப பாத்தாலும் சேட்ல இருக்குறேன்னு, இப்ப அதுமூலமா ஒரு கான்டாக்ட் கிடைச்சிருக்குடா.. இன்னிக்கு அவங்க வீட்டுக்கு போறேன்"<br /><br />"சரி"<br /><br />"என்ன சரி.. நான் சொல்றது இன்னமும் புரியலையா.. ஒரு பொண்ணோட கான்டாக்ட் கிடைச்சிருக்கு.. சேட்ல இருந்து அப்படியே டெவலப் ஆகி போன் எல்லாம் பண்ணி பேசி, இன்னிக்கு மத்தியானம் நான் அவ வீட்டுக்கு போகப்போறேன்டா.. எல்லாம் மேற்படி விசயத்துக்குதான்"<br /><br />"அடப்பாவி.. உனக்குள்ள இவ்ளோ பெரிய திறமையா.. கலக்கு" என்ற மகேஷின் குரலில் சந்தோசமா வருத்தமா என்று தெரியாத ஒரு கலவையான உணர்வு.<br /><br />"சரி.. இந்த விசயம் உனக்கு மட்டும்தான் சொல்லியிருக்கேன், பாத்து வேற எவனுக்கும் பரப்பி விட்டுடாத"<br /><br />"ச்சீ.. சொல்ல மாட்டேன்.. ஆமா பொண்ணு எப்படி, மேட்டர் மட்டுமா, இல்ல லவ், கல்யாணம் எல்லாமுமா"<br /><br />"ஹி..ஹி.. கல்யாணமா.. அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவடா"<br /><br />"அடப்பாவி, அப்புறம் அவ புருசன் சந்தேகப்பட மாட்டானாடா?"<br /><br />"அவனுக்கு அவன் ஆபிஸை கட்டிட்டு அழவே நேரம் பத்தலை. மனுசன் ஊர் ஊரா சுத்துற வேலை வேற போல, இவளை அவன் சரியா கவனிச்சிகிட்டா அவ ஏன் என்னை கூப்பிடப்போறா"<br /><br />"ம்ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும். அப்புறம் ட்ரீட் எப்ப"<br /><br />"இன்னிக்கு மத்தியானம் போயிட்டு வர்றேன், ராத்திரியே நாம மீட் பண்ணலாமாடா?"<br /><br />"நீ வேறடா.. ஆபிஸ்ல வேலை கொல்லுறானுங்க.. போன வாரமே அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மூணு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போனதுல வேலை சேந்து போச்சிடா, வர்ற சனிக்கிழமை கூட வேலை செய்யணும். என் பொண்டாட்டி தாளிச்சி எடுக்குறா.. ச்சே.. விடு ரெண்டு வாரம் கழிச்சி பாக்கலாம்டா"<br /><br />"ஓகே.. நீ வேலைய பாரு மகேஷ்.. உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் சாயங்காலம் கூப்பிடுறேன்.."<br /><br />குமாரின் லைனை கட் செய்துவிட்டு ஒரு சின்ன புன்னகையுடன், மீண்டும் கம்ப்யூட்டரில் இருந்த அன்றைய பென்டிங் வேலைகளை பார்க்க ஆரம்பித்த மகேஷ் இரண்டு நிமிடங்கள் கழித்து ஃபோனை எடுத்து "ஹனி" என்று இருந்த பெயரை செலக்ட் செய்து பச்சை பட்டனை அழுத்தினான். மறுமுனையில் "தூது வருமா தூது வருமா" என்ற பாடலுடன் ரிங் போய் எடுத்தவுடன்<br /><br />"ஹேய் ஹனி"<br /><br />"ஹேய் என்னப்பா, வேலை நேரத்துல என் ஞாபகம் எல்லாம் கூட வருதா உனக்கு" என்றாள் அவன் தர்மபத்தினி..<br /><br />"ஒண்ணுமில்லடா, தலை கொஞ்சம் வலிக்குது, இன்னிக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன், இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுல இருப்பேன்" என்றான்.<br /><br />********வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8626661259100114382011-10-18T10:15:00.001+05:302011-10-18T10:15:36.329+05:30தேவன் (அதீதம் சிறுகதை 1)நண்பர்களே,<br /><br />அதீதம் இதழில் வெளிவந்த என் சிறுகதைகளை என் பதிவில் தொகுக்கும் முயற்சியாக ஒவ்வொன்றாக என் பதிவில் வெளியிடுகிறேன்.<br /><br />இந்த பதிவில் அதீதம் முதல் இதழில் (ஜனவரி 15 - 31, 2011) வெளிவந்த “தேவன்” சிறுகதை.<br /><br />நன்றி<br /><br />********<br /><br />தேவன் - வெண்பூ வெங்கட்<br />-------------------------<br /><br />"உம்பேர் என்ன?" உடுத்திக்கொண்டிருந்தவளிடம் கேட்டேன்.<br /><br />"விமலா" என்றவளின் பெயர் வேறு என்னவோ என்று அவளின் புன்னகை சொன்னது.<br /><br />"எவ்ளோ?" கேட்டேன், கனத்த பர்ஸை கையில் எடுத்தவாறே..<br /><br />"முத்து சார் சொல்லியிருப்பாரே, ரெண்டாயிரம் ரூபா" என்றாள் செயற்கை சிரிப்புடன்.<br /><br />பணத்தை எடுத்து நீட்டினேன், ஐநூறு ரூபாய் நோட்டுகள் பத்தாவது இருக்கும் என்று அறிந்தவள், ஆச்சர்யமும் ஆயாசமுமாய் என்னைப் பார்த்தாள்.<br /><br />"இன்னொரு தடவை வேணுமா?" என்றாள்."இல்லை, நீ கிளம்பு.." என்றேன், அவள் கண்களைப் பார்த்தவாறு. முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவள் கிளம்பிச் சென்றவுடன், எழுந்து சென்று கதவை தாளிட்டுவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தேன். 'உன்னை பழிவாங்கிட்டேன்டி' என்று சத்தமாய் கத்தவேண்டும் போல் இருந்தது எனக்கு. இரண்டு மணிநேரத்திற்கு முன் அவள் வாங்கி வந்திருந்த பிரியாணி பாதி சாப்பிடப்படாமல் டேபிள் மேல் இருந்தது. சாப்பிடத் தோன்றாமலும், தூக்கி எறியத் தோன்றாமலும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'எப்படி சாவது?' இதுதான் என் முன்னால் இருந்த மிகப்பெரிய கேள்வி.<br /> <br /><br />தூக்குப் போடலாம், விஷம் சாப்பிடலாம் இது இரண்டும்தான் பெரிய அளவில் முயற்சிக்கப்படுகின்றன. வேற எதாவது வித்தியாசமாய்? என் உடல்கூட அவள் கையில் கிடைக்கக்கூடாது. ரயில் முன் பாயலாமா? வேறு என்ன செய்யலாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல வெளியே பலர் பார்க்க செய்வதா? என்ன கொடுமை இது? ஏன் இவ்வளவு குழப்பம்.!<br /><br />"மரணதேவா! என்ன சொல்ற நீ.?" என்று கத்தினேன்.<br /><br />கண்ணை மூட எத்தனிக்கும்போது, கதவு தட்டப்பட்டது.<br /><br />திறந்தேன். ஒரு சிறுவன், பத்து வயது இருக்கலாம், முகம் கொள்ளா சிரிப்புடன் நின்றிருந்தான்.<br /><br />"யார் வேணும்?" என்றேன்<br /><br />"நீங்கதான்"<br /><br />"ரூம் மாறி வந்திருப்ப, யார் நீ?"<br /><br />"நான்தான் மரணதேவன், கூப்பிட்டீங்களே?" என்றான்.<br /><br />"ச்சீ.. ப்போ, வெளையாடாத" என்று கதவை சாத்திவிட்டு வந்து கட்டிலில் சாய்ந்தேன். கொஞ்சம் சத்தமாகத்தான் கத்திவிட்டேன் போல. வெளியில் இருக்கும் அந்த பையனுக்கு கேட்டிருக்கிறது. நாளை காவல்துறையிடமும், ஊடகங்களிடமும் "அவர் அப்படி சத்தம் போட்டவே எனக்கு மைல்டா டவுட் ஆச்சி சார்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியை மனதிற்குள் ஓட்டிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்.<br /><br />மீண்டும் கதவு தட்டப்பட்டது. அவனேதான். எழக்கூட தோன்றாமல் அப்படியே சாய்ந்து படுத்தவாறே கண்களை மூடிக்கொண்டு அந்த சத்தத்தை உதாசீனப்படுத்த முயன்றேன். கதவு தட்டும் சத்தம் அதிகமாகிக் கொண்டே போனது, கதவு உடைந்து விடுவதைப் போன்று அதிர ஆரம்பித்தது.<br /><br />சென்று கதவை திறந்தேன். அதே சிறுவன், அதே சிரிப்புடன். கொஞ்சம் கூட அந்த சிறுவனின் செய்கை எனக்கு எரிச்சல் ஊட்டாதது ஆச்சர்யமாக இருந்தது. அந்த கட்டங்களை எல்லாம் தாண்டி விட்டேனோ?<br /><br />"லூசாடா நீ, ஏன் கதவை ஒடைக்கிற?" என்று மெதுவான குரலில் கேட்டேன். <br /><br />"நீங்கதானே என்னை கூப்பிட்டிங்க, இப்ப வந்திருக்கேன், கதவை மூடிகிட்டா எப்படி?" என்றான்.<br /><br />குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுற்றுப்புறத்தில் ஏதோ வித்தியாசமாக தோன்ற சுற்றிப் பார்த்தேன். அறை இருந்த விடுதியின் ஐந்தாவது மாடியில் நடந்து (அ) நின்று கொண்டிருந்த யாரும் என் அறையைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவன் கதவைத் தட்டிய சத்தத்திற்கு இந்நேரம் விடுதி உரிமையாளரே வந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் கவனிக்கவில்லையே.. ஏன்?<br /><br />"அவங்களுக்கு எல்லாம் நான் தெரிய மாட்டேன், நான் பேசுறதும், கதவு தட்டுறதும் உங்களுக்கு மட்டும்தான் கேக்கும். ஏன்னா நீங்கதானே என்னைக் கூப்பிட்டிங்க" என்றான் என் மனதைப் படித்தவனாக.<br /><br />அதிர்ச்சியில் படாரென்று கதவை மூடி தாழிட்டு அந்த கதவின் மீதே சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் எனக்கே கேட்டது. ஒரே விநாடியில் மீண்டும் வியர்த்து வியர்வை என் வெற்றுடம்பில் பாம்பாய் ஊறியது. சுவாசம் பெருமூச்சாய் இயங்கிக் கொண்டிருந்தது.<br /><br />என்ன நடக்கிறது இங்கே? அவன் சொல்வது உண்மையா, இல்லை என்னை குழப்ப யாரோ திட்டமிட்டு வேலை செய்கிறார்களா? ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது? கேள்விகள், கேள்விகள், கேள்விகள்..<br /><br />மீண்டும் கதவு தட்டப்பட்டது. ஆனால் இம்முறை சத்தம் அறையின் உள்ளிருந்து கேட்டது. பயத்துடன் திரும்பினேன். குளியலறைக் கதவில் இருந்து சத்தம் வந்தது. நகர மறுத்த கால்களை மிக பிரயத்தனப்பட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடுங்கும் கரங்களால் குளியலறையைத் திறந்தேன். அவனேதான் நின்றிருந்தான்.<br /><br />"எப்படி சாகுறதுன்னு குழப்பமா, வா, நான் உன்னை கட்டி புடிச்சிக்குறேன், நீ செத்துடுவ" என்று கைகளை நீட்டினான்.<br /><br />அடுத்த வினாடி, என் மூளை சட சடவென கட்டளைகள் பிறப்பிக்க திரும்பி அறைக்கதவுக்கு ஓடினேன். தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்து வெளியே பாய்ந்தவன், அப்படியே உறைந்து நின்றேன். அறைக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறே அவன்தான்.<br /><br />ஓட ஆரம்பித்தேன். அதோ எதிரில் அறைகளுக்கு முன்னால் இருந்த மாடி வராண்டா திரும்பும் இடத்தில் அவன். சட்டென்று முடிவெடுத்து இடதுபுறம் திரும்பி படிக்கட்டுகளை நோக்கி தாவினேன். கீழ் செல்லும் படிக்கட்டில் அவன் நின்று கைகளை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். மேலேறும் படிகளில் ஓட ஆரம்பித்தேன். ஆறாவது மாடி தாண்டி ஏழாவது மாடிக்கு செல்லும் படிகளில், படிக்கட்டுகள் 180 டிகிரி திரும்பும் இடத்தில் அவன்.<br /><br />இம்முறை அவன் ஓரமாக நின்றிருக்க கிடைத்த சந்தில் புகுந்து மேலே ஓட ஆரம்பித்தேன். ஏழு மாடிகளைத் தாண்டி மேலே மொட்டை மாடிக்கு வந்தேன். இதற்கு மேலும் அறைகளைக் கட்டுகிறார்கள் போலும். செங்கற்கள், சரளை, மணல், கம்பிகள் என்று மாடி முழுதும் இறைந்து கிடந்தன. என் உடலில் வியர்வை ஆறாய் ஊற்றிக் கொண்டிருந்தது. என் தாடையில் இருந்து நான்கைந்து சொட்டுகள் கீழே மணலில் விழுந்தன. பின்னால் தொண்டையை கனைக்கும் குரல் கேட்டது.<br /><br />திரும்பிப் பார்க்க திராணியற்று ஓட ஆரம்பித்தேன். எங்கே செல்வது, எதாவது வழி கிடைக்காதா என்று இடமும் வலமும் தேடியவாறு ஓடிக்கொண்டிருந்தேன். காலில் எதுவோ தட்ட, தடுமாறி விழுந்தவன் சுதாரிப்பதற்குள் வந்த வேகத்தில் தேய்த்துக் கொண்டு மாடியின் விளிம்பிற்கு வெளியே உருண்டேன்.<br /><br />எழுபத்தைந்து அடிக்கு கீழே சாலையில் நின்றுகொண்டிருந்த பச்சை நிற நீளமான காரின் மையப்பகுதியை குறிவைத்து புவிஈர்ப்பு என்னை இழுத்துக் கொண்டிருந்தது. சிரிக்க ஆரம்பித்தேன் "டேய், உன்கிட்ட இருந்து தப்பிச்சிட்டேன்டா" என்று சொல்ல நினைத்தேன். தூரம் குறைய குறைய முகத்தில் அடித்த காற்றின் வேகத்தால் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது. அந்த நிலையிலும் அந்த காரின் மேல் எதுவோ இருப்பதுபோல் தோன்ற உற்றுப் பார்த்தேன். அவன்தான்.. முகம் நிறைய புன்னகையுடன் கைகளை விரித்துக் கொண்டு மேல்நோக்கி பார்த்தவாறு என்னை ஆரத்தழுவ காத்திருந்தான்.<br /><br />****<br /><br />நன்றி: <a href="http://pazasu.atheetham.com/Jan2/venkat.htm">அதீதம் இதழ்</a>வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-21439814220328487522011-01-10T08:07:00.001+05:302011-01-10T08:07:25.593+05:30திருவிழாவில் தொலைந்து போன கதைகாட்சி 1:<br />”ஹலோ பாஸ், சொல்லுங்க”<br /><br />“எப்ப வர்றீங்க நீங்க? சொல்லுங்க மீட் பண்ணலாம்”<br /><br />காட்சி 2:<br />”சகா, ஒரு விசயம் பேசணும்”<br /><br />“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”<br /><br />காட்சி 3:<br />”ஹலோ, பிசியா?”<br /><br />“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க?”<br /><br />******<br /><br />இதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.<br /><br />ஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.<br /><br />பதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)<br /><br />சென்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)<br /><br />உள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.<br /><br />உள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம். <br /><br />ஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.<br /><br />கடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.<br /><br />காலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.<br /><br />உயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது?). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.<br /><br />நண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.<br /><br />அடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.<br /><br />கிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு என்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட முனைந்தேன்.<br /><br />கிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார். <br /><br />பத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)<br /><br />வெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.<br /><br />ஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.<br /><br />கட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வென்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.<br /><br />விடியல் ஸ்டால் கண்ணில் பட்டது. சென்ற முறை வாங்கிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நன்றாக இருந்ததால் இம்முறையும் எதாவது தேறுமா என்று பார்க்க அருகில் சென்றேன். ஆளுயரத்திற்கு பெரிய சைஸ் புத்தகங்களை அடுக்கி புரட்சி செய்திருந்தனர். வீட்டில் தலையணைகள் தேவை இல்லாததால் எதுவும் வாங்கவில்லை. <br /><br />வெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.<br /><br />அவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.<br /><br />சில ஆச்சர்யங்களும், ஏமாற்றங்களும்:<br />1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்டன், அகத்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். தமிழ் எழுத்தாளனை மதிக்காத தமிழ் சமூகம் என்பது புரிந்தது.<br />2. பெரும்பாலான கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.<br />3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்<br />4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.<br />5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலரே சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.<br /><br />நான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)<br /><br />இந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-38916108452905648242010-07-21T11:31:00.001+05:302010-07-21T11:32:59.817+05:30ப்ராஜக்ட் மேனேஜரை குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்1. காலையில இருந்து சும்மாவே இருக்கோம், இன்னிக்கு அஞ்சு மணிக்கு கிளம்பிடலாம்னு நினைக்குறப்ப 4:58க்கு வந்து ஒரு நாள் முழுக்க செய்யுற வேலையை குடுப்பாங்களே, அப்ப<br /><br />2. அப்படி கடைசி நேரத்துல குடுக்குற வேலைய முடிக்க நேரமாயிடுச்சின்னா "வீட்டுக்கு போக கம்பெனியோட கார் புக் பண்ணிக்கலாமா?"ன்னு கேட்டா, சரின்னும் சொல்லாம வேணாம்னும் சொல்லாம ஒரு பார்வை பாப்பானுங்களே, அப்ப<br /><br />3. வேலைய முடிச்சவுடனே அதை சரி பாக்காம அதை அப்படியே க்ளையன்ட்டுக்கு அனுப்பிட்டு அவன் திட்டுறான்னு நம்மள காச்சுவாங்களே, அப்ப<br /><br />4. நல்லதா எவ்வளவு வேலை செஞ்சாலும் கண்டுக்கவே செய்யாம, எதாவது சின்ன தப்பு செஞ்சாலும் மொத்த டீமும் இருக்குறப்ப பப்ளிக்கா திட்டுவாங்களே, அப்ப<br /><br />5. ஜீன்ஸ் பேன்ட்டும், தோல் செருப்பும் போட்டுட்டு வந்துட்டு, நம்மகிட்ட "வொய் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ட்ரெஸ் கோட்"ன்னு கேப்பானுங்களே, அப்ப<br /><br />6. ரொம்ப நாள் கழிச்சி நம்ம க்ளோஸ் ஃப்ரண்ட் ஃபோன் பண்ணி பேசிட்டு இருக்குறப்ப, "ஹேய், இங்க வா, நீ கம்ப்ளீட் பண்ணுன வேலையில ஒரு டவுட்" அப்படின்னு கத்துவானுங்களே,அப்ப<br /><br />7. டெய்லி 11 மணிக்குதானு வருவாங்கன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்சம் லேட்டா 10 மணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு மட்டும் 9 மணிக்கே வந்துட்டு "வொய் ஆர் யூ கம்மிங் லேட் எவ்ரி டே?"ன்னு கேப்பானுங்களே, அப்ப<br /><br />8. லஞ்ச் முடிச்சப்புறம் மொத்த டீமையும் கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்புட்டு "கம்பெனியோட எதிர்காலத் திட்டம்"னு புரியாத பாஷையில ஒண்ணே முக்கா மணி நேரம் ப்ளேடு போடுவாங்களே, அப்ப<br /><br />9. ரெண்டு வருசம் பிரச்சினை இல்லாம வேல செஞ்சிட்டு, கரெக்டா நாம லோன் எடுத்து காரோ, வீடோ வாங்கின அடுத்த நாளே கூப்பிட்டு, "கிளையன்ட் ப்ராஜக்ட் டீம் சைசை குறைக்கச் சொல்லிட்டான். உங்கள இந்த மாசத்தோட ப்ராஜக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணுறேன்"ன்னு சொல்லி வயத்துல புளிய கரைப்பாங்களே, அப்ப<br /><br />10. ஆறு மாசம் இரவு பகலா உழைச்சிட்டு, அப்ரைசல் டிஸ்கஷனுக்கு போனா நாம பண்ணுன எல்லா தப்பையும் (மட்டும்) பேசிட்டு "நீ இன்னும் இம்ப்ரூவ் பண்ணணும், உனக்கு ரேட்டிங் 3க்கு மேல குடுக்க முடியாது, உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு"ன்னு சிரிச்சிட்டே சொல்லுவானுங்க பாரு, அப்ப வர்ற கோவத்துக்கு...வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-58512323122227160732010-07-12T08:57:00.000+05:302010-07-12T08:58:10.040+05:30கார்க்கி வழங்கும் "ஃபோனை போட்டு, கேளு பாட்டு"தமிழ் பதிவுலகின் சமீபத்திய வளர்ச்சியைத் தன் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், பதிவர் ஒருவரை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சிக்கு "யூத்தான பதிவர் தேவை" என்ற விளம்பரம் பார்த்து சென்றவர்களில் <strong>கார்க்கி </strong>தேர்வு செய்யப்படுகிறார். முதல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாதததால் கோபத்துடன் அங்கிருந்து செல்கின்றனர் <strong>யூத் கேபிளும், நைஜீரியா ராகவனும்</strong>.<br /><br />இதோ நிகழ்ச்சி ஆரம்பம்:<br /><br />கார்க்கி: இது உங்க...ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் "ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு" நிகழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உடனே உங்க ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ டபுள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க, எங்கிட்ட பேசுங்க, உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க<br /><br /><em>ட்ரிங்.. ட்ரிங்</em><br /><br />ஹலோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க யாரு?<br /><br />நானு விருகம்பாக்கத்துல இருந்து <strong>குர்சிம்</strong> பேசுறேங்க..<br /><br />சொல்லுங்க குர்சிம், நீங்க என்ன பண்ணுறீங்க?<br /><br />என்னத்த பண்ணுறது, ஒண்ணும் பண்ணாம சும்மாத்தான் இருக்கேன்.<br /><br />ஏங்க இவ்ளோ சலிச்சிக்கிறீங்க? நல்ல விசயமே எதுவும் இல்லையா என்ன?<br /><br />குடும்பத்தோட செலவு பண்ண நிறைய டைம் கிடைக்குது, நானும் சந்தோசமா இருக்கேன், என் ஃபேமிலியும் சந்தோசமாத்தான் இருக்கு<br /><br />நல்ல விசயம்.. சரி சொல்லுங்க, உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?<br /><br /><em>"நான் செத்துப் பொழச்சவன்டா, எமனைப் பாத்து சிரிச்சவன்டா"</em><br /><br />என்னது நீங்க சிரிக்கிறீங்களா? எத்தனை பேர் வயிறெரியப் போறாங்களோ!! அதெல்லாம் பழைய பாட்டு, இப்ப போட முடியாது.. அடுத்த காலரை பாப்போம்.<br /><br /><em>ட்ரிங்.. ட்ரிங்..</em><br /><br />ஹலோ, யார் பேசுறீங்க?<br /><br />நானு கோயமுத்தூர்ல இருந்து <strong>தென்கரை சூலன்</strong> பேசுறேங்க..<br /><br />சொல்லுங்க சூலன், ஆயிரத்தில் ஒருவனைத் தவிர வேற எந்த படத்துல இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க, போடுறோம்.<br /><br />எனக்கு சிம்லா ஸ்பெஷல்ல இருந்து<br /><br />ஆப்பிள் வேணுமா?<br /><br />யோவ் முழுசா கேளுய்யா, <em>"உனக்கென்ன மேலே நின்றாய், ஓ நந்தலாலா"</em> பாட்டு போடுங்க..<br /><br />உங்களுக்கு ஏன் அந்த பாட்டு புடிக்கும் சூலன்?<br /><br />அதுல ரெண்டு வரி வரும் பாருங்க..<br /><br /><em>யார் யாரோ நண்பன் என்று, ஏமாந்த நெஞ்சம் உண்டு<br />பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று</em><br /><br />அப்படின்னு, அதுக்காகத்தான்<br /><br />இருங்க.. தேடிப்பாக்குறேன், அட அந்த பாட்டும் இல்லைங்க.. இருங்க அடுத்த காலரை பாப்போம். <br /> <br />ஹலோ இது டுபாக்கூர் டிவிங்களா?<br /> <br />இல்லைங்க, எஃப் எம்...<br /> <br />அப்படிங்களா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல, கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.<br /><br />நீங்க எங்க இருந்து பேசுறீங்க?<br /> <br />நான் <strong>கீழ்பாக்கத்துல</strong> ஆஸ்பிட்டல்ல இருந்து பேசுறேன்.<br /> <br />(கார்க்கி மனதுக்குள்): அடப்பாவிங்களா, இதை எல்லாம் கண்பார்வையிலயே வெச்சுக்கமாட்டாங்களா, குறைஞ்சது ஃபோனையாவது கைக்கு எட்டாம வெக்க மாட்டாங்களா? (<em>சத்தமாக</em>) நீங்க ஃபோனை பக்கத்துல யாராவது அட்டென்ட்டர் இல்ல டாக்டர் இருந்தா குடுங்க..<br /> <br />நாம அடுத்த காலரை பாக்கலாம்.<br /><br />ஒரு நிமிசம் இருங்க, எனக்கு ஒரு கால் வருது.. <br /> <br /><em>செல்ஃபோனில்</em> "ஹா.. சொல்லு செல்லம்.. சாயங்காலம் மீட் பண்ணலாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்"<br /> <br />பேசி முடித்து மீண்டும் நிகழ்ச்சியில்,<br /> <br />சொல்லுங்க.. நீங்க யார் பேசுறீங்க?<br /> <br />நான் <strong>குப்துல்லா</strong> பேசுறேன்<br /><br />சந்தோஷங்க! என்ன பாட்டு வேணும் உங்களுக்கு?<br /><br />பாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.<br /><br />என்ன வசவுங்க.. ச்சீ.. வசனங்க??<br /> <br /><em>இறைவா! என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்</em><br /> <br />ம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..<br /> <br />எல்லாம் ஆம்பளைங்களா கூப்பிடுறாங்கப்பா.. இதோ ஒரு பெண்ணோட குரல்<br /> <br />சொல்லுங்க மேடம், உங்க பேர் என்ன?<br /> <br />நான் மதுரையில இருந்து பேசுறேங்க, பேரு மஞ்சுளாங்க..<br /><br />நல்ல மங்களகரமான பேருங்க.. சொல்லுங்க என்ன பாட்டு வேணும்?<br /> <br />எனக்கு "புதுமைப்பெண்" படத்துல இருந்து "<em>ஒரு தென்றல் புயலாகி வருதே</em>" பாட்டு போடுங்க<br /><br />(சிறிது நேரத் தேடலுக்குப் பின்) அடடா அந்த பாட்டு இல்லைங்க, நன்றிங்க.. அடுத்த நேயரைப் பாக்குறேன்.<br /> <br />(கரடு முரடான ஒரு குரல்) டேய் ஒரு பெண் நேயர் கேக்குறப் பாட்டைப் போடாத பார்ப்பனப் பொறுக்கி தடியா?<br /> <br />ஹலோ என்னங்க, இப்படி பேசுறீங்க, நீங்க யாரு?<br /> <br />நான் <strong>தெனவு</strong> பேசுறேன்..<br /><br />என்னது தெனவா? யேய்... நீதான கொஞ்ச நேரத்துக்கு முன்னால கீழ்பாக்கத்துல இருந்து பேசுன, இப்ப எதுக்கு வேற வாய்ஸில பேசுற..<br /><br />அதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க வந்து ரகளை பண்ணுவோம்.<br /><br />திடீரென அடுத்த குரல்... <strong>ச்சீ த்தூ</strong>.. ஆணாத்திக்க சமூகத்தின் நீட்சிதான் இந்த நிகழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாடலைக் கூட ஒலிபரப்பாத நீங்கள் எல்லாம் நாய்களை விட கீழானவர்கள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..<br /><br />ஏங்க, எதுக்கு இப்ப நாய்னெல்லாம் சொல்றீங்க, இந்த ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல?<br /><br />க்ழ்லாஜ்டஜ்ட்ஃப அஜ்க்ல்த்ஃபாட் அட்ஃப்க்ஹடிஹ்<br /><br />ஹலோ, ரீசீவரை தொடச்சிட்டு பேசுங்க, நீங்க துப்புன எச்சி ரிசீவர்ல ரொம்பி எனக்கு ஒண்ணுமே சரியா கேக்குல,<br /><br />நாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்<br /><br />இன்னிக்குதான்யா நீ கரெக்டா பேசியிருக்க..<br /><br />(<strong>குரல் மாறுகிறது</strong>) விடுங்க அங்கிள், நீங்க என்ன சொன்னாலும் சில பன்னிங்களுக்கு புரியாது<br /><br />இதுக்கு அந்த ஆளே பரவாயில்ல, நாய்ன்னு மட்டும் சொன்னாரு, நீ என்னமோ பன்னின்ற, இன்னிக்கு என்ன எல்லாரும் கண்ணாடி முன்னால நின்னு பேசிட்டு இருக்கீங்களா?<br /> <br />இன்னிக்கு எனக்கு டைம் சரியில்ல.. அடுத்த காலரை பாப்போம்..<br /> <br />ஹலோ.. பேர சொல்லுங்க சார்..<br /><br />டேய்.. நாதாரி..&*&^%$. <br /><br />சார்.டீசண்ட்டா பேசுங்க.<br /><br />எங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா?<br /><br />சாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க.<br /><br />நீ முதல்ல பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி<br /><br />பேர் சொல்லுங்க சார்<br /><br />நான் <strong>நெருப்பு நீலமேகம்</strong> பேசறேன்டா.<br /><br />யாரு? வடிவேலு தீப்பொறி திருமுகமா வர்ற படத்துல சிங்கமுத்து வருவாரே, அந்த கேரக்டரா சார்?<br /><br />உங்க ஸ்டூடியோவுக்கே வர்றேன்டா..<br /><br />என்ன பாட்டு சார் வேணும்?<br /><br />பாட்டா? உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.<br /> <br />(கார்க்கி சலிப்புடன் மனதிற்குள்) இன்னிக்கு எவன் முகத்துல விழிச்சேன்னு தெரியலையே.. அட சட்.. அந்த புது கண்ணாடிய பெட்டுக்கு நேரா மாட்டாதன்னு சொன்னேன், கேட்டாங்களா..<br /> <br />ஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிறது.<br /><br />சொல்லுங்க சார் உங்க பேர்?<br /><br />நான் <strong>பெங்களூர் பவா</strong> பேசுறேன்.<br /><br />என்ன வேணும் சார்?<br /><br />நியாயம் வேணும். ஆதாரம் வேணும்.<br /><br />சார். அதெல்லாம் கிடைக்காது, என்ன பாட்டு வேணும்னு மட்டும் சொல்லுங்க..<br /><br />போடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்தன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற..<br /><br /><em>நிகழ்ச்சி இயக்குனர் அவசர அவசரமாக உள்ளே வருகிறார். கையில் ஒரு நீளமான துணி..</em><br /> <br />என்னது இது? அடுத்த காலர் எங்க?<br /> <br />இதாண்டா அடுத்த காலர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.<br /> <br />கார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிறது.. தெரியாமல் கை பட்டு அடுத்த முனையில் இருப்பவர் பேச ஆரம்பிக்கிறார்.<br /> <br />ஹலோ, நான் <strong>காதி</strong> பேசுறேங்க<br /> <br />(கார்க்கி மனதுக்குள்) நல்ல வேளை பேதின்னு சொல்லாம போனாரு..<br /> <br />சொல்லுங்க காதி, என்ன பாட்டு வேணும்?<br /> <br />பாட்டெல்லாம் வேணாங்க, ஒரு பேட்டி மட்டும்...<br /> <br />"<strong>மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்தா</strong>" என்ற அலறலுடன் பீதியாகி கார்க்கி, டைரக்டர் எல்லாம் பின்னங்கால் புடனியில் அடிக்க ஓடுகிறார்கள்.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com51tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-90526875809047919592010-06-22T08:57:00.001+05:302010-06-22T08:58:06.696+05:30பதிவுலக பெண்ணுரிமைக் காவலன் ஆவது எப்படி?1. முதலில் பதிவுலகில் இருக்கும் பெண் பதிவர்கள் அனைவரைப் பற்றிய டேட்டாபேஸ் இருப்பது முக்கியம்<br /><br />2. புதிதாக எந்த பெண் பதிவர் எழுத வந்தாலும் அவரையும் டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ளவும்<br /><br />3. அனைத்து பெண் பதிவர்களையும் ஃபாலோ செய்யவும். அவர்கள் உங்களை ஃபாலோ செய்யவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்<br /><br />4. பெண் பதிவர்களின் பதிவுகள் ரீடரில் தெரிந்த உடனே ஓடிப் போய் முதல் பின்னூட்டம் போட வேண்டும். "அருமை", "பாராட்டுகள்", "உங்கள் எழுத்துக்கு ராயல் சல்யூட்", "எப்படி இப்படி எல்லாம்? :)))" போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்களே போதுமானது<br /><em>4.1 நீங்கள் பதிவை படிக்க வேண்டியது அவசியம் இல்லை, முதல் பின்னூட்டம் ரெக்கார்ட் ஆவதுதான் முக்கியம்<br />4.2 நீங்கள் தற்போதுதான் காவலராக முயற்சி செய்பவராக இருப்பின், முதல் பின்னூட்டம் போடுவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் சீனியர் காவலர்கள் / ஏட்டைய்யாக்களை தாண்டி முதலிடத்தை பிடிக்க போராட வேண்டி இருக்கும்</em><br /><br />5. பாஸிட்டிவ் ஓட்டு போடவும்<br /><em>5.1 ஒருவேளை அந்த பதிவர் தமிழ்மணத்திலோ, தமிழிஷ்ஷிலோ இன்னும் இணைக்கவில்லை என்றால் நீங்களே இணைத்து ஓட்டு போட வேண்டி இருக்கலாம்.</em><br /><br />6. உங்கள் ஜிடாக், யாஹீ மெசன்ஜர், ட்விட்டர், பஸ், ரயில், மாட்டுவண்டி, மூணு சக்கர சைக்கிள் எல்லா இடத்திலும் அந்த பதிவிற்கு லிங்க் குடுக்கவும்<br /><br />7. எப்பாடு பட்டாவது பெண் பதிவர்களின் இமெயில் முகவரியை கண்டுபிடிக்கவும்.<br /><em>7.1 அவர்களுக்கு "ஹாய், எப்படி இருக்கீங்க?" என்று மெயில் அனுப்பலாம்<br />7.2 அவர்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்பலாம்.<br />7.3 அவர்களிடமிருந்து ரிப்ளை வரவில்லை என்றாலோ, அவர்கள் திட்டி ரிப்ளை செய்தாலோ மனம் தளரமால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும். விக்ரமாதித்தன், கஜினி முகமது கதைகளைப் படிப்பது இதற்கு உதவலாம்.</em><br /><br />8. யாராவது, எதாவது, யாரைப் பற்றியாவது சொன்னாலும் "பாருங்க, அவன் உங்களத்தான் கேவலமா பேசுறான்" என்று பெண் பதிவர்களிடம் வத்தி வைக்கலாம். 7.3ஐ மீண்டும் படித்துக் கொள்ளவும்.<br /><br />9. நீங்க இதை எல்லாம் பண்ணுவது அந்த பெண் பதிவர்களுக்கு அசூசையை ஏற்படுத்தி அவர்களின் நண்பர்கள் உங்களை பிடித்து காச்சு காச்சு என்று காச்சலாம். அமைதியாக கேட்டுக் கொண்டு மீண்டும் மேற்கண்ட அனைத்தையும் தொடரவும். வன்முறை உதவாது என்று காந்தி மகான் சொன்னதை இதற்கு பயன்படுத்துவது சாலச் சிறந்தது.<br /> <br /><strong>பினா குனா (அட, பின்குறிப்புங்க)</strong><br />1. மேலே உள்ள சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரேனும் தனக்கென்று எடுத்துக் கொள்வாராயின் அவரே முழுக் குற்றவாளி, <br />2. இவற்றை எல்லாம் முயன்று அதன் விளைவாக வெற்றியோ, தோல்வியோ, தர்ம அடியோ எது நடந்தாலும் கம்பேனி பொறுப்பேற்காது<br />3. இந்த பதிவைப் படித்ததும், if you feel uncomfortable... கைய குடுங்க சார்.. நீங்க ஏற்கனவே தமிழ்ப் பதிவுலகின் பெண்ணுரிமைக் காவலராய்ட்டீங்க.. வாழ்த்துகள்.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com89tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-37597755682574355552010-06-21T08:18:00.001+05:302010-06-21T08:20:12.873+05:30நண்பன் (சிறுகதை)தூரத்தில் தெரிந்த கடலின் அலைகளைவிட அதிகமாக அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராயண், நண்பர்களுக்கும் அலுவலகத்திலும் மாடர்னாய் நரேன். அமர்ந்திருந்தது ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் அந்த பெரிய ஹோட்டலின் மொட்டை மாடி பார். உடன் என் நண்பன் ஈஸ்வர்.<br /><br />"என்னடா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே?"<br /><br />"இல்ல ஈஸ்வர், கம்பெனியில சேந்து போன ஜனவரியோட மூணு வருசம் முடிஞ்சிடுச்சி. இன்னமும் எந்த மாற்றமும் இல்லை. அதே டெஷிக்நேஷன், அதே சம்பளம், அதே வேலை.. ரொம்ப கடுப்பா இருக்குடா"<br /><br />"ஏன் சலிச்சிக்கிற நரேன்? இப்ப நீ சீனியர் கன்சல்டன்ட்டா இருக்க, ஆனா வேலை பாக்குற ரோல் என்னவோ ப்ராஜக்ட் மேனேஜர்தான். ஏறத்தாழ ஒன்றரை வருசமா இந்த 15 பேர் டீமை கட்டி மேச்சிட்டு இருக்குற. பெரிசா பிரச்சினைகளும் ஒண்ணும் வரலை, அதனால இந்த முறை உனக்கு கண்டிப்பா ப்ரோமோஷன் கிடைச்சிடும் கவலைப்படாத"<br /><br />ஈஸ்வருக்கு எல்லா விசயமும் தெரிவதற்குக் காரணம் அவன் என் நெருங்கிய நண்பன் என்பது மட்டுமல்ல, அவனும் என் கம்பெனியிலேயே வேலை செய்பவன். இரண்டு வருடங்களுக்கு முன் என் ரெஃபரல் மூலம் என் கம்பெனியில் சேர்ந்தவன், ஏற்கனவே ஒரு டியர் ஒன் கம்பெனியில் வேலை செய்தவன் ஆகையால் சுலபமாக மேனேஜர் டெசிக்நேஷனிலேயே சேர்ந்தவன். சேர்ந்த ஒரே வருடத்தில் ப்ரோமொஷனுடன் அசோசியட் டைரக்ட்ராகி 120 மெம்பர் அக்கவுன்ட்டை வழிநடத்திக் கொண்டிருப்பவன்.<br /><br />"நீ என் அக்கவுன்ட்ல இருந்தா பிரச்சினையே இல்ல, பிஸினஸ் யூனிட் ஒண்ணாவே இருந்தாலும் நீ வேற அக்கவுன்ட்ல இருக்குற, அது மட்டுமில்லாம நாம ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ்னு ஊருக்கே தெரியும். அதனால என்னால உனக்கு பரிஞ்சு பேசவும் முடியாது, ஸாரிடா நரேன்"<br /><br />"ச்சீ.. இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு? எனக்கு கவலை என்னான்னா நம்ம பி.யூ.வோட சைசே ரொம்ப சின்னது. இதுல சீனியர் கன்சல்டன்ட்ல இருந்து மேனேஜர் ப்ரொமொஷன் அதிகபட்சம் ஒருத்தருக்குதான் கிடைக்கும். அதுதான் கவலையா இருக்கு"<br /><br />"நல்லதே நடக்கும்னு நினை. ஏன் எதுனா பிரச்சினை இருக்கும்னு நினைக்கிறயா?"<br /><br />"ஒரே விசயம்தான் அரிச்சிட்டு இருக்கு. போன அக்டோபர் டூ டிசம்பர் க்வார்டர்ல நான் குடுத்த ரெவின்யூ ஃபோர்காஸ்ட்டை அச்சீவ் பண்ண முடியலை. ரெண்டு டெவலப்பர்ஸ் கல்யாணம்னு மூணு மூணு வாரம் லீவு போட்டுட்டாங்க. அதுல ரெண்டு வாரம் கோஇன்சைட் ஆனதுனால நான்பில்லபிள் ரிசோர்ஸசை வெச்சிம் பில்லிங்கை சரி பண்ண முடியலை. எப்படியோ அப்ப பேசி சமாளிச்சிட்டேன். இப்ப ப்ரோமொஷன் ரேட்டிஃபிகேஷன்ல இதைப் பேசுனா பிரச்சினையாகுமேன்னு பாக்குறேன்"<br /><br />"அட விடுறா.. பி.யூ லெவல் மேனேஜர் ப்ரோமொஷன் ரேட்டிஃபிகேஷன் மீட்டிங்ல நானும்தான் இருப்பேன். பாக்கலாம் உங்க ஆளு உன்னை எப்படி டிஃபன்ட் பண்ணுறாருன்னு, சரி கிளம்புறேன்டா நானு"<br /><br />"ஓகே.. பை"<br /><br />********<br /><br />ஒரு மாதத்தை மன அழுத்தத்துடனே ஓட்டிய பின், அன்று மாலை என் அக்கவுன்ட் ஓனர் சுந்தர் என்னை அழைத்தார். உள்ளுக்குள் ஏதோ குறுகுறுவென ஏறத்தாழ அவரது கேபினுக்கு ஓடினேன்.<br /><br />சம்பிரதாயமான ப்ராஜக்ட் அப்டேட்ஸ், நல விசாரிப்புகள் முடிந்ததும் அவரே மேட்டருக்கு வந்தார்.<br /><br />"நரேன், நீ இந்த கம்பெனியில சேந்து மூணு வருசமாச்சி. ஏறத்தாழ கடந்த ரெண்டு வருசமா இந்த ப்ராஜக்ட்டை அழகா ஹேண்டில் பண்ணிட்டு இருக்க"<br /><br />"தேங்க் யூ சுந்தர்"<br /><br />"நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். நான் இந்த அக்கவுன்ட்டுக்கு சார்ஜ் எடுத்துட்ட கடந்த ஒரு வருசத்துல எனக்கு அதிகமா பிரச்சினையே குடுக்காம, ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் எவர் க்ரீனா இருக்குற ஒரே ப்ராஜக்ட் உன்னோடது"<br /><br />நிமிர்ந்து பெருமையாக உட்கார்ந்தேன்.<br /><br />"ஐ நோ.. நீ உன்னோட ப்ரோமொஷனை எதிர்பார்த்துட்டு இருக்குற. என்னைக் கேட்டா, ஐ வுட் ஸே யூ டிஸர்வ் தட்"<br /><br />சில விநாடிகள் என் கண்களையே தீர்க்கமாக பார்த்தார் சுந்தர்.<br /><br />"பட், ஐ'ம் ஸாரி நரேன்.. இந்த முறை என்னால உனக்கு ப்ரோமோஷன் வாங்கித்தர முடியலை"<br /><br />காலுக்கு கீழே பூமி நழுவியது. கண்களில் எதாவது நீர் திரையிடுவது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தலையை கீழே கவிழ்த்தேன்.<br /><br />"ஐ நோ ஹவ் இட் ஃபீல்ஸ்.. நான் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். இந்த முறை ப்ரோமோஷன் ப்ராசஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். நம்ம பிஸினஸ் யூனிட்ல இருந்து ஒரே ஒருத்தரைத்தான் மேனேஜரா ப்ரோமோஷன் பண்ணமுடியும்னு சொல்லிட்டாங்க. இருந்தது நாலு கன்டெஸ்டென்ட்ஸ். லாஸ்ட் ரெண்டு வரைக்கும் நீ ரேஸில் இருந்த, பட்.."<br /><br />தலையைக் குனிந்தவாறே கையை உயர்த்தி அவர் பேசுவதை இடைமறித்தேன்.<br /><br />"இந்த அக்கவுன்ட்டுக்கு மூணு வருசம் உழைச்சதுக்கு எனக்கு இவ்வளவுதான் மரியாதை இல்லையா? ஒருவேளை ஈஸ்வரோட அக்கவுன்ட்ல இருந்திருந்தா இந்நேரம் எனக்கு கண்டிப்பா ப்ரோமோஷன் கிடைச்சிருக்கும் இல்லையா சார்?" அந்த சார் என்பதில் இருந்த கேலி அவருக்கும் புரிந்திருக்கும்.<br /><br />சிறிது நேரம் அவர் எதுவும் பேசாமல் போக, தலையை உயர்த்தி அவரைப் பார்த்தேன். எந்த உணர்ச்சியும் காட்டாத வழக்கமான போக்கர் ஃபேஸுடன் என்னையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தார்.<br /><br />"என்ன அமைதியாகிட்டீங்க சுந்தர்? உங்ககிட்ட இதுக்கு பதில் கிடையாதுன்னு தெரியும். நான் சீட்டுக்கு போறேன்" என்று வெறுப்பாக பேசிவிட்டு எழுந்து திரும்பி கதவில் கை வைத்தேன்.<br /><br />அவர் இப்போது பதில் பேசினார் "நான் இப்ப என்ன சொன்னாலும் உனக்கு மனசு ஆறாதுன்னு எனக்கு தெரியும். ஆனா ஈஸ்வரோட அக்கவுன்ட்னு சொன்னது என்னை ஹர்ட் பண்ணினதால நான் இதை சொல்றேன். நான் இப்போ சொல்லப் போறது கான்ஃபிடன்ஷியல் விசயம், ஆனாலும் சொல்லுறதுக்குக் காரணம் உன் திறமை மேல எனக்கு இருக்குற மரியாதைதான்"<br /><br />கதவில் இருந்து கை எடுக்காமல் அப்படியே நின்றேன்.<br /><br />"லாஸ்ட் டூல இருந்து நீ வெளியப் போனதுக்குக் காரணம் போன வருசம் கடைசி க்வார்ட்டர்ல நீ ரெவின்யூ டார்க்கெட்டை அச்சீவ் பண்ண முடியாம போனதுதான். உன்னோட ரெவ்ன்யூ ஃபோர்காஸ்ட் வெர்சஸ் டார்கெட் அச்சீவ்டு க்ராஃபை காட்டி, உன்னை விட தன்னோட டீம்ல இருக்குற ஷர்மிளாதான் பெஸ்டுன்னு ப்ரூஃப் பண்ணி, ஷர்மிளாவுக்கு இந்த ப்ரோமோஷனை வாங்கிக் குடுத்ததே ஈஸ்வர்தான்"வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-49007746916050784872010-03-31T09:01:00.000+05:302010-03-31T09:01:25.208+05:30சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்மதிப்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,<br /><br />சென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விசயமும் தமிழ் வலையுலக எதிர்காலத்திற்கு நல்லதாகப் படவில்லை. புதிதாக பார்ப்பவர்கள் / வருபவர்கள் "இவ்வளவு அரசியலா இங்கே?" என்று நினைத்து விலகக்கூடிய அளவுக்கு பிரச்சினைகள் பேசப்படுகின்றன, எதிர்வினையாற்றப்படுகின்றன, பதிலளிக்கப்படுகின்றன. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை என்றே புரியவில்லை. பிரச்சினைக்குக் காரணம் தெரிந்தவர்கள் கறுப்பும் வெள்ளையுமாக பதிவிடவும் முன்வரவில்லை.<br /><br />தற்போதைய பிரச்சினைகள் குறித்த என் பார்வையே இந்த பதிவு. அதே நேரம் விவரம் அறிந்த பல பதிவர்களின் மனதிலும் இதே எண்ண ஓட்டங்கள் இருக்கும் என்பதையும் அறிந்தே இருப்பதால் இந்த பதிவு எழுதுவது அவசியமாகிறது.<br /><br /><strong>பின்புலம்:</strong><br />வலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், "கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.<br /><br />சமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் "என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.<br /><br />இது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.<br /><br />தற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.<br /><br /><strong>சில கேள்விகளும், என் கருத்துகளும்:</strong><br />இப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.<br /><br />1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன?<br />2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன?<br />3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்?<br />4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை? அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை?<br /><br />இந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. <strong>முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது</strong> என்று நான் உறுதியாக நம்புகிறேன்.<br /><br />எப்படி?<br /><br />1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் "சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும். <br /><br />2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.<br /><br />3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.<br /><br />எப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.<br /><br />இந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.<br /><br />உண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார்? நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.<br /><br />ஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் "இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?<br /><br /><strong>ஆதாரங்கள்:</strong><br />சரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.<br /><br /><a href="http://www.blogger.com/profile/14741839060304529003">தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்</a><br /><br />அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா?<br /><br /><strong>நான் ஏன் இதை எழுதுகிறேன்?</strong><br />அமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.<br /><br />பைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அதற்கு உதாரணம்.<br /><br />அடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் மற்ற இளைய, புதிய பதிவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்று எழுந்த பயம்.<br /><br />பெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.<br /><br />எல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.<br /><br /><strong>எழுதுவதற்கான தகுதி:</strong><br />இவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்பார்களேயானால், "தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.<br /><br />கடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com86tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-60845933091994938282010-02-22T07:42:00.000+05:302010-02-22T07:42:20.321+05:30கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.<br /><br />முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.<br /><br />சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..<br /><br /><br />அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.<br /><br />விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..<br /><br />***<br /><br />சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்லபுரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்லபுரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?<br /><br />***<br /><br />மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?<br /><br />ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(<br /><br />இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி. <br /><br />டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.<br /><br />அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.<br /><br />ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆ<strong>சிறியர்கள்</strong> விடப்போவதில்லை.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-5859968200872815882009-12-28T08:33:00.001+05:302009-12-28T08:35:32.806+05:30துணுக்ஸ் - 2009/12/28ஏறத்தாழ ரெண்டு மாசமாச்சி பதிவு போட்டு.. ஆபிஸ்ல ப்ளாக்கர்க்கு ஆப்பு, வார நாட்களில் வீட்டுக்கு திரும்பி வரவே 11 மணி, வார இறுதிகளில் வெளியூர் பயணங்கள் என்று பதிவு போடவே முடியவில்லை. இந்த வாரத்துல ரெண்டு பதிவாவது போடமுடியும்னு நெனக்கிறேன். இப்ப மட்டும் எப்படி உனக்கு நேரம் கிடைச்சதுன்னு கேக்குறவங்களுக்கு, பதில் கடைசியில..<br /><br />*****<br /><br />கொங்கு நாட்டு பதிவர்களுக்கு பாராட்டுகள், சிறப்பாக ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செஞ்சு, வெளியூர் பதிவர்களை அதில் கலந்துக்க வெச்சி கலக்கிட்டாங்க, ரொம்ப நாளா சென்னைப் பதிவர்கள் செய்யணும்னு பேசிகிட்டு இருந்த விசயம், அவங்க உயிர் கொடுத்திருக்காங்க.. அவங்களுக்கு ஒரு சல்யூட்..<br /><br />*****<br /><br />தெலுங்கானா பிரச்சினையில மத்தியில இருக்குற காங்கிரஸ் அரசோட முடிவெடுக்கிற திறமைய பாத்து எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். முதல்ல தெலுங்கானா கிடையாதுன்னாங்க, கே.சி.ஆர் உண்ணாவிரதம் இருந்தாரு, உடனே சரி குடுத்துடறோம்னாங்க, அடுத்ததா கடலோரா ஆந்திராவும், ராயலசீமாவும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, இப்ப தெலுங்கானா முடிவை மறுபரிசீலனை செய்யுறோம்ன்றாங்க, உடனே தெலுங்கானாவே பத்தி எரியுது.. <br /><br />ஒரு முடிவை எடுக்கும் முன்னால எல்லா விசயங்களையும் யோசிச்சி, என்ன விதமான பின்விளைவுகள் ஏற்படும் இதையெல்லாம் யோசிக்காம, எடுத்த முடிவுல உறுதியா இல்லாம அவனவன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் போற அரசாங்கத்தை எக்ஸ் ரே எடுத்தா இப்படித்தான் இருக்குமோ என்னமோ?? :(((<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgApXdRu2wiS-9aAR9GsUztjK5LFrEppvRcLBvnZrSdr_EqbDG8YMJ7BgZArdCgSWjpPx344HFMU-TEByuCy4KWcdbsrD5mnVnTsiInfZELQ3gcttoqbuw4JvdY1IYk9LU_XMBX3IGU-bdv/s1600-h/skeleton.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 161px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgApXdRu2wiS-9aAR9GsUztjK5LFrEppvRcLBvnZrSdr_EqbDG8YMJ7BgZArdCgSWjpPx344HFMU-TEByuCy4KWcdbsrD5mnVnTsiInfZELQ3gcttoqbuw4JvdY1IYk9LU_XMBX3IGU-bdv/s320/skeleton.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5419791133660453010" /></a><br /><br />*****<br /><br />ஜூனியருக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க கடந்த ஒரு மாசமா அலைஞ்சதுல ஒரு விசயம் நல்லா புரிஞ்சது. ஒரு நல்ல ஸ்கூல்ல எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கணும்னா தரவேண்டிய டொனேஷன், நான் எல்.கே.ஜி ஆரம்பிச்சி எம்.சி.ஏ முடிக்கிறவரைக்கும் ஆன மொத்த செலவை விட அதிகம். அதே போல் அரசு பள்ளிகளோட தரம் எந்த அளவுக்கு இருக்குன்றதும் பெரிய கேள்விக்குறி.<br /><br />20 வருடங்களுக்கு முன்னால நான் ஆரம்பப் பள்ளிகள் படிச்சிட்டு இருந்தப்ப அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக எண்ணிக்கையில இருந்தது ஆனால் இப்போது தெருவுக்கு தெரு தனியார் பள்ளிக்கூடங்கள். ஊருக்கு ஊர் இன்ஜினியரிங் காலேஜ். ஒவ்வொன்றிலும் கேப்பிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள். இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??<br /><br />*****<br /><br />பதிவர்கள் எல்லாரும் வேட்டைக்காரனை அடிச்சி துவைச்சு பிரிச்சி மேஞ்சிட்டாங்க. எல்லாரும் சொல்ற ஒரே விசயம் இந்த படமும் டிபிக்கல் விஜய் ஃபார்முலான்றதுதான். மூணு வருசத்துக்கு முன்னால் போக்கிரி வந்த புதுல விஜய் டிவியில லொள்ளு சபா செஞ்ச காமெடி ஷோல இதே விசயத்தை கண்டபடி கிண்டலடிச்சிருப்பாங்க. இப்பவும் அது அப்படியே பொருந்துதுன்றது விஜய்யைப் பொறுத்தவரை வேட்டைக்காரனை விட பெரிய தோல்வி.<br /><br />அந்த லொள்ளுசபாவை நீங்களும் பார்த்து ரசியுங்க..<br /><br /><a href="http://www.youtube.com/watch?v=h8bOpkqJAPA">Lollu sabha - Bakery - Part 1</a><br /><a href="http://www.youtube.com/watch?v=_pNK9jT2NWc">Lollu sabha - Bakery - Part 2</a><br /><a href="http://www.youtube.com/watch?v=EpuriUKOHaY">Lollu sabha - Bakery - Part 3</a><br /><br />இந்த நிகழ்ச்சி பண்ணினதற்காக பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சி, அவங்களை அடுத்த வாரமே மன்னிப்பு கேக்க வெச்சதெல்லாம் நடந்தது. விஜயும் அவரது ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க காட்டுற முனைப்புல கொஞ்சமாவது கதை தேர்வுல காட்டலாம்.<br /><br />*****<br /><br />ரெண்டு மாசமா பதிவே போடாமா இருந்துட்டு இப்ப பதிவு போடுறதுக்கு காரணம் சனிக்கிழமை அன்னிக்கு தங்கமணி ஊருக்கு போய்ட்டாங்கன்றதும், இன்னும் 10 நாள் கழிச்சிதான் திரும்பி வருவாங்கன்றதும்தான் அப்படின்னு நீங்களா முடிவு பண்ணிகிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது..ஹி..ஹி..வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-22633581407822054662009-10-29T08:04:00.001+05:302009-10-29T08:04:58.246+05:30உங்களுக்கு துப்பறியும் கதைகள் பிடிக்குமா?இந்த இடுகையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் தலைப்பில் இருக்கும் கேள்விக்கான பதில் "ஆமாம்" என்பதாகவே 99 சதவீதம் இருக்கும். "இல்லை" என்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். :)<br /><br />ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.<br /><br />விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.<br /><br />இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில். <br /><br />ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.<br /><br />ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.<br /><br />இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".<br /><br />ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.<br /><br />இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.<br /><br />இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.<br /><br />லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.<br /><br />இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.<br /><br />கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.<br /><br />துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAL4wTHvpOXBnX1tK_oQj7rpxe7JpT4A40gRWV_KLRk2Fer6sBUMb4gklmGLSO8qjtfBmwvXWhF1mJqJIC7x4QRMrL7t15KhxNO9G1PnxBD5Co13bm1nu3IaEZP-SwxNzfk5RDoABkv1Lu/s1600-h/HomesBookInTamil.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAL4wTHvpOXBnX1tK_oQj7rpxe7JpT4A40gRWV_KLRk2Fer6sBUMb4gklmGLSO8qjtfBmwvXWhF1mJqJIC7x4QRMrL7t15KhxNO9G1PnxBD5Co13bm1nu3IaEZP-SwxNzfk5RDoABkv1Lu/s200/HomesBookInTamil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396441950872999890" /></a><br />பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்<br />புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!<br />புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!<br />எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்<br />தமிழில்: பத்ரி சேஷாத்ரி<br /><br /><a href="http://nhm.in/shop/978-81-8493-142-6.html">மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்</a>.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8438488169113671592009-10-26T08:27:00.001+05:302009-10-26T08:29:04.996+05:30ஒரு சட்டப்பூர்வமான கொடிய தண்டனைஒரு குற்றவாளிக்கு தரப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை எது? இந்த கேள்விக்கு எல்லா நாடுகளிலும் ஒரே பதில் "மரண தண்டனை" என்பதே. சில நாடுகளில் தூக்கு, சில நாடுகளில் மின்சார இருக்கை, சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனையை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதில் மாற்றம் இருந்தாலும் மரணதண்டனைக்கு மிஞ்சிய தண்டனை இல்லை என்றுதான் எல்லா நாட்டு சட்டங்களும் சொல்கின்றன.<br /><br />அந்த குறிப்பிட்ட நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது விஷ ஊசியின் மூலம், காரணம் மற்ற முறைகளை விட விஷ ஊசி முறையில்தான் சாவதற்கான உடல் வேதனை குறைவு என்பது அவர்கள் வாதம். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1984ல் ஒரு 14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. நமது நாடு போல் தீர்ப்பு வந்தது 10 வருடம் கழித்தல்ல, ஒரு வருடத்திற்குள்ளாகவே. ஆனால் அதை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்: மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நம் நாட்டைப் போலவே அங்கும் விவாதம், தண்டனை நிறைவேற்ற போதுமான பணம் ஒதுக்காதது போன்ற காரணங்களினால் ஏற்கனவே மரண தண்டனை பெற்று விஷ ஊசிக்கு காத்திருப்பவர்கள் வரிசையில் அவனும் சேர்க்கப்படுகிறான்.<br /><br />பாதுகாப்பான சிறையில் பரோலில் வெளிவர முடியாத கைதியாக சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் காவல் அதிகாரி வந்து "அடுத்த வாரம் உனக்கு தண்டனை நிறைவேற்றப்படும்" என்று சொல்வார் என்ற நிலை. இப்படி அவன் காத்திருந்தது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 25 வருடங்கள். எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மரணதண்டனையை விட கொடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.<br /><br />முடிவாக, செப்டம்பர் 15, 2009ல் அவனது தண்டனையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்கிறார்கள் சிறைத்துறையினர். விடுதலையை விட அதிக மகிழ்ச்சியை அவன் அடைந்திருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் விதி வேறு வடிவத்தில் விளையாடும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.<br /><br />மதியம் இரண்டு மணிக்கு அவன் மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருபதிற்கும் அதிகமான மனிதர்கள் (அ) சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறான். மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, நேரடியாக விஷ ஊசிமட்டுமே. ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் வலி, வேதனை இல்லாமல் உயிர் பிரிவது வாடிக்கை.<br /><br />இதற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஊசி மற்றும் விஷத்திற்கான ரசாயனங்களுடன் அறைக்குள் செல்கின்றனர். எல்லாம் தயார் என்ற நிலையில்தான் எதிர்பாராத, இதுவரை வரலாற்றில் நிகழாத அந்த விஷயம் நடக்கிறது. விஷ ஊசியைப் போடுவதற்கான இரத்தக் குழாயை அந்த மருத்துவப் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காலில் அல்லது தொடையில் ஊசி போடப்படும். என்ன காரணமோ அவனது உடலில் எந்த பகுதியிலும் இரத்தக்குழாய்களை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.<br /><br />இப்படி அவர்கள் அவன் உடல் முழுவதும் இரத்தக் குழாய்களை தேடிக்கொண்டிருந்தது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல, முழுதாக இரண்டு மணிநேரம். இரண்டு மணிநேரம் கழித்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட முடியவில்லை என்று கூறி அவன் சிறைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.<br /><br />அவன் செய்த ஒரு கொலைக்கு இன்றோ நாளையோ என்ற நிலையில் இருபத்தைந்து வருடங்கள் சிறையில் வைத்திருந்து, மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று இரண்டு மணிநேரம் வைத்திருந்து, அவனை சிறைக்குத் திருப்பி அனுப்பி மறுபடியும் இன்றோ நாளையோ என்ற நிலையில் வைத்திருக்கும் அந்த நாடு, உலகுக்கே நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா. இந்த நரக வேதனைக்கு அவன் பிடிபட்ட அன்றே என்கவுன்ட்டரில் கொன்றிருந்தாலும் பரவாயில்லை என்பதே உண்மை.<br /><br />சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.<br /><br />1. இந்த ஒரு குற்றவாளியைப் போன்றே அமெரிக்கச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் விஷ ஊசிக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் அவர்களை இப்படி வைத்திருக்கப்போகிறார்கள்?<br />2. நமது நாடு போல அரசியல் காரணங்கள் இல்லாமல் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றால் உடனடியாக நிதி ஒதுக்கி அவர்களின் தண்டனையை நிறைவேற்றலாமே, தண்டனையை நிறைவேற்றும் முறையில் கூட வலியும் வேதனையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், டெத் ரோ (Death Row) எனப்படும் மரண வரிசையில் காத்திருப்பவர்களின் மனதளவில் ஏற்படும் வலியையும் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?<br />3. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரே நாட்டின் குடிமக்களிடையே ஏன் இந்த வேறுபாடு?<br /><br />சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. இது குறித்த முழு விவரமும் <a href="http://www.huffingtonpost.com/2009/09/16/romell-broom-execution-re_n_288256.html">இங்கே</a>.வெண்பூhttp://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com14