Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Friday, August 1, 2008

கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்

காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர்.

"அண்ணே! அண்ணே! ஒரு சின்ன‌ பிர‌ச்சினைனே!!!"

"என்ன‌டா நாயே?"

"அண்ணே! நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே"

"அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌?"

"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே"

"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்"

"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்"

"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"

"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்"

"ஏண்டா! அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா?"

"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"

"அடப்பாவிகளா! அப்ப அவனுங்களத்தானு அப்பணும்"

"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க‌. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு"

"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க" என்று ஒரு பெயரை சொல்கிறார்.

"அண்ணே! அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே?"

"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் " அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.

"அண்ணே!! என்னண்ணே சொன்னீங்க?"

"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது."