Monday, December 28, 2009

துணுக்ஸ் - 2009/12/28

ஏறத்தாழ ரெண்டு மாசமாச்சி பதிவு போட்டு.. ஆபிஸ்ல ப்ளாக்கர்க்கு ஆப்பு, வார நாட்களில் வீட்டுக்கு திரும்பி வரவே 11 மணி, வார இறுதிகளில் வெளியூர் பயணங்கள் என்று பதிவு போடவே முடியவில்லை. இந்த வாரத்துல ரெண்டு பதிவாவது போடமுடியும்னு நெனக்கிறேன். இப்ப மட்டும் எப்படி உனக்கு நேரம் கிடைச்சதுன்னு கேக்குறவங்களுக்கு, பதில் கடைசியில..

*****

கொங்கு நாட்டு பதிவர்களுக்கு பாராட்டுகள், சிறப்பாக ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செஞ்சு, வெளியூர் பதிவர்களை அதில் கலந்துக்க வெச்சி கலக்கிட்டாங்க, ரொம்ப நாளா சென்னைப் பதிவர்கள் செய்யணும்னு பேசிகிட்டு இருந்த விசயம், அவங்க உயிர் கொடுத்திருக்காங்க.. அவங்களுக்கு ஒரு சல்யூட்..

*****

தெலுங்கானா பிரச்சினையில மத்தியில இருக்குற காங்கிரஸ் அரசோட முடிவெடுக்கிற திறமைய பாத்து எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். முதல்ல தெலுங்கானா கிடையாதுன்னாங்க, கே.சி.ஆர் உண்ணாவிரதம் இருந்தாரு, உடனே சரி குடுத்துடறோம்னாங்க, அடுத்ததா கடலோரா ஆந்திராவும், ராயலசீமாவும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, இப்ப தெலுங்கானா முடிவை மறுபரிசீலனை செய்யுறோம்ன்றாங்க, உடனே தெலுங்கானாவே பத்தி எரியுது..

ஒரு முடிவை எடுக்கும் முன்னால எல்லா விசயங்களையும் யோசிச்சி, என்ன விதமான பின்விளைவுகள் ஏற்படும் இதையெல்லாம் யோசிக்காம, எடுத்த முடிவுல உறுதியா இல்லாம அவனவன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் போற அரசாங்கத்தை எக்ஸ் ரே எடுத்தா இப்படித்தான் இருக்குமோ என்னமோ?? :(((



*****

ஜூனியருக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க கடந்த ஒரு மாசமா அலைஞ்சதுல ஒரு விசயம் நல்லா புரிஞ்சது. ஒரு நல்ல ஸ்கூல்ல எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கணும்னா தரவேண்டிய டொனேஷன், நான் எல்.கே.ஜி ஆரம்பிச்சி எம்.சி.ஏ முடிக்கிறவரைக்கும் ஆன மொத்த செலவை விட அதிகம். அதே போல் அரசு பள்ளிகளோட தரம் எந்த அளவுக்கு இருக்குன்றதும் பெரிய கேள்விக்குறி.

20 வருடங்களுக்கு முன்னால நான் ஆரம்பப் பள்ளிகள் படிச்சிட்டு இருந்தப்ப அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக எண்ணிக்கையில இருந்தது ஆனால் இப்போது தெருவுக்கு தெரு தனியார் பள்ளிக்கூடங்கள். ஊருக்கு ஊர் இன்ஜினியரிங் காலேஜ். ஒவ்வொன்றிலும் கேப்பிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள். இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??

*****

பதிவர்கள் எல்லாரும் வேட்டைக்காரனை அடிச்சி துவைச்சு பிரிச்சி மேஞ்சிட்டாங்க. எல்லாரும் சொல்ற ஒரே விசயம் இந்த படமும் டிபிக்கல் விஜய் ஃபார்முலான்றதுதான். மூணு வருசத்துக்கு முன்னால் போக்கிரி வந்த புதுல விஜய் டிவியில லொள்ளு சபா செஞ்ச காமெடி ஷோல இதே விசயத்தை கண்டபடி கிண்டலடிச்சிருப்பாங்க. இப்பவும் அது அப்படியே பொருந்துதுன்றது விஜய்யைப் பொறுத்தவரை வேட்டைக்காரனை விட பெரிய தோல்வி.

அந்த லொள்ளுசபாவை நீங்களும் பார்த்து ரசியுங்க..

Lollu sabha - Bakery - Part 1
Lollu sabha - Bakery - Part 2
Lollu sabha - Bakery - Part 3

இந்த நிகழ்ச்சி பண்ணினதற்காக பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சி, அவங்களை அடுத்த வாரமே மன்னிப்பு கேக்க வெச்சதெல்லாம் நடந்தது. விஜயும் அவரது ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க காட்டுற முனைப்புல கொஞ்சமாவது கதை தேர்வுல காட்டலாம்.

*****

ரெண்டு மாசமா பதிவே போடாமா இருந்துட்டு இப்ப பதிவு போடுறதுக்கு காரணம் சனிக்கிழமை அன்னிக்கு தங்கமணி ஊருக்கு போய்ட்டாங்கன்றதும், இன்னும் 10 நாள் கழிச்சிதான் திரும்பி வருவாங்கன்றதும்தான் அப்படின்னு நீங்களா முடிவு பண்ணிகிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது..ஹி..ஹி..

16 comments:

Anonymous said...

வெண்பூ,

வெல்கம் பேக்கு.

said...

welcome

said...

இருங்க..இருங்க. வீட்டுல வந்ததும் சொல்லிடறேன்.. நீங்க பதிவெழுதினீங்க்ன்னு..

அண்ணாச்சி ஊட்டுல ஊருக்கு போயிருக்கற கிளப் ஆரம்பிச்சிருககாராம். நீங்களும் அதுல சேர்ந்துக்கங்க..:))

said...

10 நாளுக்கு வாழ்த்துக்கள்.. ஸ்கூல் மேட்டர்..ம்ம்ம்ம்

தெலுங்கானா கலக்கல்

said...

படம் தப்பு! கருத்தும் தப்பு!

முதுகெலும்போ, உறுதியோ இல்லாத ஒன்றை எக்ஸ் ரே எடுத்தால் இப்படியா காட்டும்?

சோனியா பிறந்த நாள் பரிசாக அறிவித்து, வாக்கு வங்கியை அறுவடை செய்யலாம் என்று போட்ட கணக்கு, எப்போதும்போலவே தப்புக் கணக்காகிப் போனது.

பானா சீனா இன்னும் விடுவதாக இல்லை! உள்துறை அமைச்சகத்தையே பிரிக்க வேண்டுமாம்! ஆக்கமாட்டாதவன் இடுப்பில அம்பத்தெட்டு கருக்கறுவான்னு கதை சொல்வாங்களே, அந்த மாதிரி!

said...

எல்.கே.ஜி மேட்டர் - மலையிலிருந்து கீழே இறங்கி வரும் போது, மேலே ஏறுபவர்களை பார்க்கும் போது வரும் எண்ணமே எனக்கு வருகிறது :) ஆல் த பெஸ்ட்.

அரசு உயர் அதிகாரிகளின் குழந்தைகள், அரசியல்வாதிகளின் குழந்தைகள் அனைத்தும் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது அரசு பள்ளி தனியாரை மிஞ்சும். அதுவரை இதற்கு விமோச்சனம் இல்லை.

இந்த உளவுத்துறைன்னு எதோ இருக்காமே.. அவங்க தெலுங்கானா மேட்டர்ல என்ன பண்ணிகிட்டு இருந்தாங்கன்னு தெரியலை. உளவுத்துறை, தேர்தல் கருத்துக்கணிப்புக்கு மட்டும் உபயோகப்படுகிறது

said...

//இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??
//

இதே கேள்விதான் எனக்கும் வந்தது

பதில் இங்கே http://payanangal.blogspot.com/2008/04/blog-post_06.html

said...

கலக்கல் மேட்டர்கள்.!

said...

பேக்கிரி இன்னைக்குதான் பார்க்குறேன். இப்பிடி கலாய்ச்சிருக்காங்க.. செமையா இருந்தது.!

said...

//கிருஷ்ணமூர்த்தி said...

படம் தப்பு! கருத்தும் தப்பு!

முதுகெலும்போ, உறுதியோ இல்லாத ஒன்றை எக்ஸ் ரே எடுத்தால் இப்படியா காட்டும்?//

உண்மை..உண்மை..

//விஜயும் அவரது ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க காட்டுற முனைப்புல கொஞ்சமாவது கதை தேர்வுல காட்டலாம்.//

காட்டலாம் தான்.. ஆனா. மாட்டேன்னு அடம்புடிச்சி நமக்கு தலைவலிய தான் தராங்க..

said...

//இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??//

முதலாளிகளுக்கு அதை பற்றி என்ன தல கவலை!
கல்விதுறை முழுமையாக அரசுமயமாக்கபடாமல் ஏழைகளுக்கு முழு கல்வி போய் சேராது!

said...

//ஜூனியருக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க கடந்த ஒரு மாசமா அலைஞ்சதுல ஒரு விசயம் நல்லா புரிஞ்சது. ஒரு நல்ல ஸ்கூல்ல எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கணும்னா தரவேண்டிய டொனேஷன், நான் எல்.கே.ஜி ஆரம்பிச்சி எம்.சி.ஏ முடிக்கிறவரைக்கும் ஆன மொத்த செலவை விட அதிகம். அதே போல் அரசு பள்ளிகளோட தரம் எந்த அளவுக்கு இருக்குன்றதும் பெரிய கேள்விக்குறி.//

ரொம்பப் பெரிய விஷயத்தை டச் பண்ணியிருக்கீங்க. இதைப் பத்தி ஒரு தனிப் பதிவே போட நான் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அரசுப்பள்ளிகளைப் பார்த்தா ஜனங்களுக்கு நம்பிக்கை வராததுக்கு காரணம் நிறைய இருக்கு.

ஒண்ணு அந்த ஆசிரியர்களின் ஜாப் செக்யூரிட்டி. ஜாப் செக்யூரிட்டி இருந்தா யாருமே பர்பார்ம் பண்ண மாட்டாங்க. ரெண்டாவது அவங்க செலேக்ஷனுக்கு எந்த நார்ம்சும் வைக்கிறதில்லை. லாஜிக்கலா நிறைய டல் ஸ்டூடண்ட்ஸ் இருப்பாங்க. அவங்களோட நம்ம பிள்ளை படிக்கணுமான்கிற பயம் எல்லாப் பெற்றோருக்கும் இருக்கும்.

இந்த பயத்தை அவங்க எக்ச்ப்லாயிட் பண்றாங்க. அவ்ளோதான்.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, எந்த செலெக்ஷன் நார்ம்சும் இல்லாம எல்லாரையும் எடுக்கிற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ரிசல்ட் காட்ட என்ன பாடு படுவாங்கன்னு!

http://kgjawarlal.wordpress.com

said...

நண்பர்களே,

மாத & வருட இறுதி + அப்ரைசல் ஆணிகளை இரண்டு நாட்களாக பிடுங்கிக்கொண்டிருப்பதால், தனித்தனியாக பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

வார இறுதியில் திரும்புகிறேன். படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

said...

என்றைக்கோ போட்ட பதிவுக்கு இன்னைக்கி பின்னூட்டம் போடுறீயே....

என்னா ஸ்பீடுடா அப்துல்லா நீயி.

said...

மதிப்பிற்குரிய வெண்பூ அவர்களுக்கு
உங்கள் மெயில் ஐடி எது என்று எனக்குத் தெரியாது

அது எப்படி என் contacts listல் வந்தது என்றும் தெரியாது.

எல்லோருக்கும் மொத்தமாக அனுப்புகையில் என் cpntactsல் உள்ள எல்லா ஐடிக்கும் தவறுதலாக மெயில் வந்து விட்டது.

இதுவரை நான் இப்படி அனுப்பியதும் கிடையாது.

இனியும் அனுப்பமாட்டேன்.
இந்த ஒரு தடவை எப்படியோ தவறுதலாக வந்து விட்டது.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

இப்போது கூட உங்கள் ஐடி எதுவாக இருக்கும் என்று நான் என் contact listல் தேடிய போது எனக்குத் தெரியவில்லை.

முதல்தடவையாக நான் செய்த தவறு என் contact listல் உள்ள எல்லா ஐடிக்கும் மொத்தமாக மெயில் அனுப்பியதுதான்.

உங்கள் கோபம் புரிகிறது. அதற்கு இவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம் தேவையில்லை. என் மெயிலுக்கே பதில் அனுப்பியிருக்கலாம்.

இருந்தாலும் பரவாயில்லை.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
இப்பொழுதும் தங்கள் மெயில் ஐடி எனக்குத் தெரியாது என்பதால்தான் இந்த பதிவில் கமென்ட்டாக இதைக் கூடுகிறேன்.
நன்றி.

said...

புரிதலுக்கு நன்றி புகழன்... உங்கள் பதிலுக்கு பாராட்டுகள், என் ஐடியில் இருந்து மெயில் அனுப்புகிறேன். புக்மார்க் செய்து கொள்ளவும்.. நன்றி..