<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621</id><updated>2012-02-01T21:19:40.187+05:30</updated><category term='துணுக்ஸ்'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='அமெரிக்கா'/><category term='நினைவுகள்'/><category term='பதிவர்வட்டம்'/><category term='tamil cinema'/><category term='சுழல்கதைகள்'/><category term='விமர்சனம்'/><category term='கொலைவெறி கவிதை'/><category term='சொற்சித்திர‌ம்'/><category term='சற்றே பெரிய்ய்ய'/><category term='புத்தகத்திருவிழா'/><category term='அக்டோபர்'/><category term='பிறந்தநாள்'/><category term='சுஜாதா'/><category term='அறிவிப்பு'/><category term='கிரிக்கெட்'/><category term='மொக்கை'/><category term='சமூகம்'/><category term='பதிவர் சங்கம்'/><category term='நிகழ்வுகள்'/><category term='நையாண்டி'/><category term='ந‌கைச்சுவை'/><category term='ப‌த்துப‌திவு'/><category term='புனைக்கதை'/><category term='ஷெர்லக் ஹோம்ஸ்'/><category term='பதிவர்'/><category term='அனுபவம்'/><category term='தற்போதைய நிகழ்வுகள்'/><category term='அறிமுகம்'/><category term='பகடி'/><category term='உரையாடல்'/><category term='செய்தி'/><category term='அதிஷா'/><category term='டான் பிரவுன்'/><category term='காலஓட்டம்'/><category term='போட்டி'/><category term='புனைவு'/><category term='சென்னை'/><category term='சின்னக்கதைகள்'/><category term='25ம் பதிவு'/><category term='ம‌ர‌ண‌மொக்கை'/><category term='அனுப‌வ‌ம்'/><category term='அறிவியல்'/><category term='தொடர்விளையாட்டு'/><category term='ப‌திவ‌ர்வ‌ட்ட‌ம்'/><category term='அதீதம்'/><category term='கவுஜ‌'/><category term='பின்நவீனத்துவம்'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='நகைச்சுவை'/><category term='விபத்து'/><category term='ட்விட்'/><category term='விகடன்'/><category term='வலைச்சரம்'/><category term='லாஸ்ட் சிம்பல்'/><category term='cinema'/><category term='நாட்டு நடப்பு'/><category term='நிகழ்வு'/><category term='அறிவியல் புனைக்கதை'/><category term='சினிமா'/><category term='ச‌ட்டச‌பை'/><category term='விம‌ர்ச‌ன‌ம்'/><category term='திரைப்படம்'/><category term='விடுமுறைக்கடிதம்'/><title type='text'>வெண்பூ</title><subtitle type='html'>கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் அனுபவம்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6325322725410386884</id><published>2012-02-01T21:17:00.001+05:30</published><updated>2012-02-01T21:19:40.203+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விம‌ர்ச‌ன‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ட்விட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌ட்டச‌பை'/><title type='text'>ச‌ட்ட‌ச‌பை, கிரிக்கெட் : இன்றைய‌ ட்விட்ஸ்</title><content type='html'>ஜெயுடன் மக்கள் பிரச்சினை குறித்து விகாந்த் ஆக்ரோஷம்.. வட போச்சே, ஸ்டாலின்&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக காவலர்களால் வெளியேற்றம், திமுக வெளிநடப்பு... நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான்&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு ச‌ண்டை ந‌ட‌ந்த‌ப்ப‌ ஜீப்புக்குள‌ அன்ட்ராய‌ரோட‌ ஒண்டிட்டு இருந்தான்: உ.அ.தா க‌வுண்ட‌ர் ஜெய்க‌ணேஷ் ப‌ற்றி #ச‌ட்ட‌ச‌பை திமுக‌&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசியில‌ ச‌ர‌த்ட்ட‌ சொல்லி ராதிகாவை ஜெயிக்க‌ வெச்சி ச‌ட்ட‌ச‌பைக்கு கூட்டிட்டு வ‌ந்திருக்க‌லாமோ? : ஜெ&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ: இதுக்கு மேல‌யும் என்னால‌ பொறுமையா இருக்க‌ முடியாது, ஒரே வ‌ழி, உட‌னே செ.ஜார்ஜ் கோட்டையில‌ ஒரு டாஸ்மாக் ஆர‌ம்பிங்க‌ :))&lt;br /&gt;&lt;br /&gt;க‌ரு: ஏன் த‌ம்பி நெப்போலிய‌னை க‌ட்சிய‌ விட்டு தூக்க‌ சொல்ற‌? ஸ்டா: நேத்து ஒருத்த‌ர் ஆக்ரோஷ‌மா பேச‌ அவ‌ருதான் கார‌ண‌மாமே&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு முக்கிய‌ செய்திக‌ள்: 1. எலைட் ஒயின்ஷாப் ஆர‌ம்பிப்ப‌தை அர‌சு நிறுத்திவைத்த‌து. 2. ச‌ட்ட‌ச‌பையில் விகாந்த் ஆக்ரோஷ‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக‌ ச‌ர்வாதிகார‌மாக‌ செய‌ல்ப‌டுகிற‌து: க‌ரு... நாம‌தான் செய‌ல்ப‌டுற‌தே இல்லையே, அப்புற‌ம் என்ன‌ க‌வ‌லை? :)&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டா:இன்னிக்கு நாமளும் ஆக்ரோஷமா பேசணும்.. &lt;br /&gt;துரைமுரு:முதல்ல பேசுங்க. அப்புறம் ஆக்ரோஷமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;புள்ளபூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்... விகாந்த் பற்றி ஸ்டாலின்&lt;br /&gt;&lt;br /&gt;அச‌ந்து போகும் அள‌விற்கு அறிவிப்புக‌ள்:ஜெ... நாம‌ ஆடிப்போற‌ அள‌வுக்கு கேஸ் போடுற‌தை சொல்றாங்க‌ளோ: ஸ்டாலின்&lt;br /&gt;&lt;br /&gt;அழ‌கிரி க‌ட‌வுளாக‌ சித்த‌ரித்து திமுக‌ போஸ்ட‌ர்: க‌ட‌வுளை ந‌ம்புப‌வ‌ன் காட்டுமிராண்டி, நான் சொல்ல‌லைப்பா, பெரியார் சொன்ன‌து:)&lt;br /&gt;&lt;br /&gt;பாத்துட‌லாம் நீயா நானான்னு: அவ‌ரைப் பார்த்து இவ‌ர்: ஸ்டாலின் (மக‌ன்), விகாந்த் (ம‌க‌ன்)&lt;br /&gt;&lt;br /&gt;"There is a tomorrow: Dhoni"... ச‌னிப‌க‌வான்ட்ட‌ பிள்ளையார் சொன்ன‌ மாதிரி சொல்றாம்பாரு.. கொய்யால‌.. :)&lt;br /&gt;&lt;br /&gt;முத‌ல்ல‌ ஆஸி டீம் ம‌ட்டும்தான்மா அடிச்சாங்க‌, அப்புற‌ம் ஃபோனைப் போட்டு ஸ்ரீல‌ங்காவை "வாடா ம‌ச்சான்"ன்னு கூப்பிட்டாங்க‌ : தோனி&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;&lt;br /&gt;To follow @iVenpu&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-6325322725410386884?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/6325322725410386884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=6325322725410386884' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6325322725410386884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6325322725410386884'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2012/02/blog-post.html' title='ச‌ட்ட‌ச‌பை, கிரிக்கெட் : இன்றைய‌ ட்விட்ஸ்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-831041692024288327</id><published>2011-12-26T08:19:00.009+05:30</published><updated>2011-12-26T08:19:00.569+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்ஸ்'/><title type='text'>ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்</title><content type='html'>படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு?&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது  என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்காம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-831041692024288327?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/831041692024288327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=831041692024288327' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/831041692024288327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/831041692024288327'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2011/12/blog-post.html' title='ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-7505654796932101807</id><published>2011-10-21T08:29:00.003+05:30</published><updated>2011-10-21T08:29:46.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>துணுக்ஸ் - 2011/10/21</title><content type='html'>ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்?” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா சார்.. அமெரிக்கா...&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;டென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க? இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன? :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-7505654796932101807?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/7505654796932101807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=7505654796932101807' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/7505654796932101807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/7505654796932101807'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2011/10/20111021.html' title='துணுக்ஸ் - 2011/10/21'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-3268047495067369359</id><published>2011-10-20T09:32:00.002+05:30</published><updated>2011-10-20T09:34:38.190+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நண்பன் (சிறுகதை)</title><content type='html'>"ம‌ச்சான், ஒரு குட் நியூஸ்டா" என்ற‌ குமாரின் குர‌லில் வ‌ழ‌க்க‌த்துக்கு மாறான‌ ஒரு உற்சாக‌ம் தெரிந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌டா.. ரொம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்குற‌ மாதிரி இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌ ம‌கேஷ்... ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா" என்ற‌வ‌னின் குர‌லில் லேசான‌ வெட்க‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌து.. ல‌வ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. நான் சொன்ன‌து வேற‌.. மேட்ட‌ருக்கு ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா"&lt;br /&gt;&lt;br /&gt;"தெளிவா சொல்லுடா, ஒண்ணும் புரிய‌லை"&lt;br /&gt;&lt;br /&gt;"நீதான் திட்டுவியே, நான் நெட்ல‌ எப்ப‌ பாத்தாலும் சேட்ல‌ இருக்குறேன்னு, இப்ப‌ அதுமூல‌மா ஒரு கான்டாக்ட் கிடைச்சிருக்குடா.. இன்னிக்கு அவ‌ங்க‌ வீட்டுக்கு போறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ ச‌ரி.. நான் சொல்ற‌து இன்ன‌மும் புரிய‌லையா.. ஒரு பொண்ணோட‌ கான்டாக்ட் கிடைச்சிருக்கு.. சேட்ல‌ இருந்து அப்ப‌டியே டெவ‌ல‌ப் ஆகி போன் எல்லாம் ப‌ண்ணி பேசி, இன்னிக்கு ம‌த்தியான‌ம் நான் அவ‌ வீட்டுக்கு போக‌ப்போறேன்டா.. எல்லாம் மேற்ப‌டி விச‌ய‌த்துக்குதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட‌ப்பாவி.. உன‌க்குள்ள‌ இவ்ளோ பெரிய‌ திற‌மையா.. க‌ல‌க்கு" என்ற‌ ம‌கேஷின் குர‌லில் ச‌ந்தோச‌மா வ‌ருத்த‌மா என்று தெரியாத‌ ஒரு க‌ல‌வையான‌ உண‌ர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;"ச‌ரி.. இந்த‌ விச‌ய‌ம் உன‌க்கு ம‌ட்டும்தான் சொல்லியிருக்கேன், பாத்து வேற‌ எவ‌னுக்கும் ப‌ர‌ப்பி விட்டுடாத‌"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சீ.. சொல்ல‌ மாட்டேன்.. ஆமா பொண்ணு எப்ப‌டி, மேட்ட‌ர் ம‌ட்டுமா, இல்ல‌ ல‌வ், க‌ல்யாண‌ம் எல்லாமுமா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹி..ஹி.. க‌ல்யாண‌மா.. அவ‌ ஏற்க‌ன‌வே க‌ல்யாண‌ம் ஆன‌வ‌டா"&lt;br /&gt;&lt;br /&gt;"அட‌ப்பாவி, அப்புற‌ம் அவ‌ புருச‌ன் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ மாட்டானாடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ‌னுக்கு அவ‌ன் ஆபிஸை க‌ட்டிட்டு அழ‌வே நேர‌ம் ப‌த்த‌லை. ம‌னுச‌ன் ஊர் ஊரா சுத்துற‌ வேலை வேற‌ போல‌, இவ‌ளை அவ‌ன் ச‌ரியா க‌வ‌னிச்சிகிட்டா அவ‌ ஏன் என்னை கூப்பிட‌ப்போறா"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம்.. ந‌ட‌க்க‌ட்டும் நட‌க்க‌ட்டும். அப்புற‌ம் ட்ரீட் எப்ப‌"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கு ம‌த்தியான‌ம் போயிட்டு வ‌ர்றேன், ராத்திரியே நாம‌ மீட் ப‌ண்ண‌லாமாடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வேற‌டா.. ஆபிஸ்ல‌ வேலை கொல்லுறானுங்க‌.. போன‌ வார‌மே அம்மாவுக்கு உட‌ம்பு ச‌ரியில்லைன்னு மூணு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போன‌துல‌ வேலை சேந்து போச்சிடா, வ‌ர்ற‌ ச‌னிக்கிழ‌மை கூட‌ வேலை செய்ய‌ணும். என் பொண்டாட்டி தாளிச்சி எடுக்குறா.. ச்சே.. விடு ரெண்டு வார‌ம் க‌ழிச்சி பாக்க‌லாம்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே.. நீ வேலைய‌ பாரு ம‌கேஷ்..  உன்னை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் சாய‌ங்கால‌ம் கூப்பிடுறேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;குமாரின் லைனை க‌ட் செய்துவிட்டு ஒரு சின்ன‌ புன்ன‌கையுட‌ன், மீண்டும் க‌ம்ப்யூட்ட‌ரில் இருந்த‌ அன்றைய‌ பென்டிங் வேலைக‌ளை பார்க்க‌ ஆர‌ம்பித்த ம‌கேஷ் இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் க‌ழித்து ஃபோனை எடுத்து "ஹ‌னி" என்று இருந்த‌ பெய‌ரை செல‌க்ட் செய்து ப‌ச்சை ப‌ட்ட‌னை அழுத்தினான். ம‌றுமுனையில் "தூது வ‌ருமா தூது வ‌ருமா" என்ற‌ பாட‌லுட‌ன் ரிங் போய் எடுத்த‌வுட‌ன்&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் ஹ‌னி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய் என்ன‌ப்பா, வேலை நேர‌த்துல‌ என் ஞாப‌க‌ம் எல்லாம் கூட‌ வ‌ருதா உன‌க்கு" என்றாள் அவ‌ன் த‌ர்ம‌ப‌த்தினி..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்ல‌டா, த‌லை கொஞ்ச‌ம் வ‌லிக்குது, இன்னிக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வ‌ர்றேன், இன்னும் அரைம‌ணி நேர‌த்துல‌ வீட்டுல‌ இருப்பேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-3268047495067369359?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/3268047495067369359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=3268047495067369359' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3268047495067369359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3268047495067369359'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2011/10/blog-post.html' title='நண்பன் (சிறுகதை)'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-862666125910011438</id><published>2011-10-18T10:15:00.001+05:30</published><updated>2011-10-18T10:15:36.329+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதீதம்'/><title type='text'>தேவன் (அதீதம் சிறுகதை 1)</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;அதீதம் இதழில் வெளிவந்த என் சிறுகதைகளை என் பதிவில் தொகுக்கும் முயற்சியாக ஒவ்வொன்றாக என் பதிவில் வெளியிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவில் அதீதம் முதல் இதழில் (ஜனவரி 15 - 31, 2011) வெளிவந்த “தேவன்” சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;தேவன் - வெண்பூ வெங்கட்&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"உம்பேர் என்ன‌?" உடுத்திக்கொண்டிருந்த‌வளிட‌ம் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"விம‌லா" என்ற‌வ‌ளின் பெய‌ர் வேறு என்ன‌வோ என்று அவ‌ளின் புன்ன‌கை சொன்ன‌து.&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ளோ?" கேட்டேன், க‌ன‌த்த‌ ப‌ர்ஸை கையில் எடுத்த‌வாறே..&lt;br /&gt;&lt;br /&gt;"முத்து சார் சொல்லியிருப்பாரே, ரெண்டாயிர‌ம் ரூபா" என்றாள் செய‌ற்கை சிரிப்புட‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ண‌த்தை எடுத்து நீட்டினேன், ஐநூறு ரூபாய் நோட்டுக‌ள் ப‌த்தாவ‌து இருக்கும் என்று அறிந்த‌வ‌ள், ஆச்ச‌ர்ய‌மும் ஆயாச‌முமாய் என்னைப் பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னொரு த‌ட‌வை வேணுமா?" என்றாள்."இல்லை, நீ கிள‌ம்பு.." என்றேன், அவ‌ள் க‌ண்க‌ளைப் பார்த்த‌வாறு. முக‌ம் நிறைந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் அவள் கிள‌ம்பிச் சென்ற‌வுட‌ன், எழுந்து சென்று க‌த‌வை தாளிட்டுவிட்டு வ‌ந்து ப‌டுக்கையில் சாய்ந்தேன். 'உன்னை ப‌ழிவாங்கிட்டேன்டி' என்று ச‌த்த‌மாய் க‌த்த‌வேண்டும் போல் இருந்த‌து எனக்கு. இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு முன் அவ‌ள் வாங்கி வ‌ந்திருந்த‌ பிரியாணி பாதி சாப்பிட‌ப்ப‌டாம‌ல் டேபிள் மேல் இருந்த‌து. சாப்பிட‌த் தோன்றாம‌லும், தூக்கி எறிய‌த் தோன்றாம‌லும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'எப்ப‌டி சாவ‌து?' இதுதான் என் முன்னால் இருந்த‌ மிக‌ப்பெரிய‌ கேள்வி.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தூக்குப் போட‌லாம், விஷ‌ம் சாப்பிட‌லாம் இது இர‌ண்டும்தான் பெரிய‌ அள‌வில் முய‌ற்சிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வேற‌ எதாவ‌து வித்தியாச‌மாய்? என் உட‌ல்கூட‌ அவ‌ள் கையில் கிடைக்க‌க்கூடாது. ர‌யில் முன் பாய‌லாமா? வேறு என்ன செய்ய‌லாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல‌ வெளியே ப‌ல‌ர் பார்க்க‌ செய்வ‌தா? என்ன‌ கொடுமை இது? ஏன் இவ்வ‌ள‌வு குழ‌ப்பம்.!&lt;br /&gt;&lt;br /&gt;"ம‌ரண‌தேவா! என்ன‌ சொல்ற‌ நீ.?" என்று க‌த்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ண்ணை மூட‌ எத்த‌னிக்கும்போது, க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;திற‌ந்தேன். ஒரு சிறுவ‌ன், ப‌த்து வ‌ய‌து இருக்க‌லாம், முக‌ம் கொள்ளா சிரிப்புட‌ன் நின்றிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யார் வேணும்?" என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க‌தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரூம் மாறி வ‌ந்திருப்ப‌, யார் நீ?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான்தான் ம‌ர‌ண‌தேவ‌ன், கூப்பிட்டீங்க‌ளே?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சீ.. ப்போ, வெளையாடாத‌" என்று க‌த‌வை சாத்திவிட்டு வ‌ந்து க‌ட்டிலில் சாய்ந்தேன். கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌த்தான் க‌த்திவிட்டேன் போல‌. வெளியில் இருக்கும் அந்த‌ பைய‌னுக்கு கேட்டிருக்கிற‌து. நாளை காவ‌ல்துறையிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் "அவ‌ர் அப்ப‌டி ச‌த்த‌ம் போட்ட‌வே என‌க்கு மைல்டா ட‌வுட் ஆச்சி சார்" என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியை ம‌ன‌திற்குள் ஓட்டிப் பார்த்து புன்ன‌கைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. அவ‌னேதான். எழ‌க்கூட‌ தோன்றாம‌ல் அப்ப‌டியே சாய்ந்து ப‌டுத்த‌வாறே க‌ண்க‌ளை மூடிக்கொண்டு அந்த‌ ச‌த்த‌த்தை உதாசீன‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றேன். க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் அதிக‌மாகிக் கொண்டே போன‌து, க‌த‌வு உடைந்து விடுவ‌தைப் போன்று அதிர‌ ஆர‌ம்பித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;சென்று க‌த‌வை திற‌ந்தேன். அதே சிறுவ‌ன், அதே சிரிப்புட‌ன். கொஞ்ச‌ம் கூட‌ அந்த‌ சிறுவ‌னின் செய்கை என‌க்கு எரிச்ச‌ல் ஊட்டாத‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அந்த‌ க‌ட்ட‌ங்க‌ளை எல்லாம் தாண்டி விட்டேனோ?&lt;br /&gt;&lt;br /&gt;"லூசாடா நீ, ஏன் க‌த‌வை ஒடைக்கிற‌?" என்று மெதுவான‌ குர‌லில் கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க‌தானே என்னை கூப்பிட்டிங்க‌, இப்ப‌ வ‌ந்திருக்கேன், க‌த‌வை மூடிகிட்டா எப்ப‌டி?" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுற்றுப்புற‌த்தில் ஏதோ வித்தியாச‌மாக‌ தோன்ற‌ சுற்றிப் பார்த்தேன். அறை இருந்த‌ விடுதியின் ஐந்தாவ‌து மாடியில் ந‌ட‌ந்து (அ) நின்று கொண்டிருந்த‌ யாரும் என் அறையைப் பார்த்துக் கொண்டிருக்க‌வில்லை. அவ‌ன் க‌த‌வைத் த‌ட்டிய‌ ச‌த்த‌த்திற்கு இந்நேர‌ம் விடுதி உரிமையாள‌ரே வ‌ந்திருக்க‌ வேண்டும். ஆனால் யாரும் க‌வ‌னிக்க‌வில்லையே.. ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;"அவ‌ங்க‌ளுக்கு எல்லாம் நான் தெரிய‌ மாட்டேன், நான் பேசுற‌தும், க‌த‌வு த‌ட்டுற‌தும் உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் கேக்கும். ஏன்னா நீங்க‌தானே என்னைக் கூப்பிட்டிங்க‌" என்றான் என் ம‌ன‌தைப் ப‌டித்த‌வ‌னாக‌.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சியில் ப‌டாரென்று க‌தவை மூடி தாழிட்டு அந்த‌ க‌த‌வின் மீதே சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என் இத‌ய‌ம் அடித்துக் கொள்ளும் ச‌த்த‌ம் என‌க்கே கேட்ட‌து. ஒரே விநாடியில் மீண்டும் விய‌ர்த்து வியர்வை என் வெற்றுட‌ம்பில் பாம்பாய் ஊறிய‌து. சுவாச‌ம் பெருமூச்சாய் இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌ ந‌ட‌க்கிற‌து இங்கே? அவ‌ன் சொல்வ‌து உண்மையா, இல்லை என்னை குழ‌ப்ப‌ யாரோ திட்ட‌மிட்டு வேலை செய்கிறார்க‌ளா? ஏன் என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கிற‌து? கேள்விக‌ள், கேள்விக‌ள், கேள்விக‌ள்..&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இம்முறை ச‌த்த‌ம் அறையின் உள்ளிருந்து கேட்ட‌து. ப‌ய‌த்துட‌ன் திரும்பினேன். குளிய‌ல‌றைக் க‌த‌வில் இருந்து ச‌த்த‌ம் வ‌ந்த‌து. ந‌க‌ர‌ ம‌றுத்த‌ கால்களை மிக‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒவ்வொரு அடியாக‌ எடுத்து வைத்து ந‌டுங்கும் க‌ர‌ங்க‌ளால் குளிய‌ல‌றையைத் திற‌ந்தேன். அவ‌னேதான் நின்றிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்ப‌டி சாகுற‌துன்னு குழ‌ப்பமா, வா, நான் உன்னை க‌ட்டி புடிச்சிக்குறேன், நீ செத்துடுவ‌" என்று கைக‌ளை நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த‌ வினாடி, என் மூளை ச‌ட‌ ச‌ட‌வென‌ க‌ட்ட‌ளைக‌ள் பிற‌ப்பிக்க‌ திரும்பி அறைக்க‌த‌வுக்கு ஓடினேன். தாழ்ப்பாளை நீக்கி க‌த‌வைத் திற‌ந்து வெளியே பாய்ந்த‌வ‌ன், அப்படியே உறைந்து நின்றேன். அறைக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறே அவ‌ன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட‌ ஆர‌ம்பித்தேன். அதோ எதிரில் அறைக‌ளுக்கு முன்னால் இருந்த‌ மாடி வ‌ராண்டா திரும்பும் இட‌த்தில் அவ‌ன். ச‌ட்டென்று முடிவெடுத்து இட‌துபுற‌ம் திரும்பி ப‌டிக்க‌ட்டுக‌ளை நோக்கி தாவினேன். கீழ் செல்லும் ப‌டிக்க‌ட்டில் அவ‌ன் நின்று கைக‌ளை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். மேலேறும் ப‌டிக‌ளில் ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஆறாவ‌து மாடி தாண்டி ஏழாவ‌து மாடிக்கு செல்லும் ப‌டிக‌ளில், ப‌டிக்க‌ட்டுக‌ள் 180 டிகிரி திரும்பும் இட‌த்தில் அவ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை அவ‌ன் ஓர‌மாக‌ நின்றிருக்க‌ கிடைத்த‌ ச‌ந்தில் புகுந்து மேலே ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஏழு மாடிக‌ளைத் தாண்டி மேலே மொட்டை மாடிக்கு வ‌ந்தேன். இத‌ற்கு மேலும் அறைக‌ளைக் க‌ட்டுகிறார்க‌ள் போலும். செங்க‌ற்க‌ள், ச‌ர‌ளை, ம‌ண‌ல், க‌ம்பிக‌ள் என்று மாடி முழுதும் இறைந்து கிட‌ந்த‌ன‌. என் உட‌லில் விய‌ர்வை ஆறாய் ஊற்றிக் கொண்டிருந்த‌து. என் தாடையில் இருந்து நான்கைந்து சொட்டுக‌ள் கீழே ம‌ண‌லில் விழுந்த‌ன‌. பின்னால் தொண்டையை க‌னைக்கும் குர‌ல் கேட்ட‌து.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்க்க‌ திராணிய‌ற்று ஓட‌ ஆர‌ம்பித்தேன். எங்கே செல்வ‌து, எதாவ‌து வ‌ழி கிடைக்காதா என்று இட‌மும் வ‌ல‌மும் தேடிய‌வாறு ஓடிக்கொண்டிருந்தேன். காலில் எதுவோ த‌ட்ட‌, த‌டுமாறி விழுந்த‌வ‌ன் சுதாரிப்ப‌த‌ற்குள் வ‌ந்த‌ வேக‌த்தில் தேய்த்துக் கொண்டு மாடியின் விளிம்பிற்கு வெளியே உருண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுப‌த்தைந்து அடிக்கு கீழே சாலையில் நின்றுகொண்டிருந்த‌ ப‌ச்சை நிற‌ நீள‌மான காரின் மைய‌ப்ப‌குதியை குறிவைத்து புவிஈர்ப்பு என்னை இழுத்துக் கொண்டிருந்த‌து. சிரிக்க‌ ஆர‌ம்பித்தேன் "டேய், உன்கிட்ட‌ இருந்து த‌ப்பிச்சிட்டேன்டா" என்று சொல்ல‌ நினைத்தேன். தூர‌ம் குறைய‌ குறைய‌ முக‌த்தில் அடித்த‌ காற்றின் வேக‌த்தால் க‌ண்க‌ளில் நீர் நிறைய‌ ஆர‌ம்பித்த‌து. அந்த‌ நிலையிலும் அந்த‌ காரின் மேல் எதுவோ இருப்ப‌துபோல் தோன்ற‌ உற்றுப் பார்த்தேன். அவன்தான்.. முக‌ம் நிறைய‌ புன்ன‌கையுட‌ன் கைக‌ளை விரித்துக் கொண்டு மேல்நோக்கி பார்த்த‌வாறு என்னை ஆர‌த்த‌ழுவ‌ காத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://pazasu.atheetham.com/Jan2/venkat.htm"&gt;அதீதம் இதழ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-862666125910011438?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/862666125910011438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=862666125910011438' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/862666125910011438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/862666125910011438'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2011/10/1.html' title='தேவன் (அதீதம் சிறுகதை 1)'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6442211489230254187</id><published>2011-04-07T09:51:00.004+05:30</published><updated>2011-04-09T12:58:04.392+05:30</updated><title type='text'>இது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :(</title><content type='html'>இந்த‌ ப‌திவின் த‌லைப்பு நிச்ச‌ய‌மாய் உங்க‌ளை க‌வ‌ர்ந்து இழுப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டுமே வைக்க‌ப்ப‌ட்ட‌ தலைப்பு அல்ல‌. அதே போல் இந்த‌ முக‌மூடிக‌ள் பெய‌ர்க‌ளில் எழுதுவ‌து நான் அல்ல‌ என்று அறிவிக்க‌ எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவும் அல்ல‌ இது.&lt;br /&gt;&lt;br /&gt;  சில‌ நாட்க‌ளாக‌ ஏன் சில‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ப‌திவுல‌கில் மறைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு விச‌ய‌ம் குறித்து பேச‌ ம‌ட்டுமே இந்த‌ ப‌திவு.&lt;br /&gt;&lt;br /&gt;  இதை வேறொரு முக‌மூடி அணிந்து அனானி பெய‌ரில் எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு என்றும் இருந்த‌தில்லை. என்னை ந‌ன்க‌றிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும், ச‌ரியென்றால் உட‌ன‌டியாக‌ வெளிப்ப‌டையாக‌ பாராட்ட‌வும், த‌வ‌றென்றால் முக‌த்திற்கு நேராக‌ சொல்ல‌வும் கூடிய‌ ஆண்மை என‌க்கு உண்டு. அத‌னாலாயே இந்த‌ ப‌திவை என் ப‌திவிலேயே எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நான் ப‌திவெழுத‌ ஆர‌ம்பித்து இந்த‌ ப‌திவுல‌கில் என் அலைவ‌ரிசையுட‌ன் ஒத்துப்போன‌ சில‌ருட‌ன் நான் நெருக்க‌மாக‌ ப‌ழக‌ ஆர‌ம்பித்தேன். ப‌ரிச‌ல், அப்துல்லா, கார்க்கி, கேபிள், ஆதி (அப்போது தாமிரா) போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இய‌ல்பாக‌வே நெருங்க முடிந்த‌து. இந்த‌ குழுவுட‌ன் எந்த‌ பிர‌ச்சினைக‌ள் குறித்தும் வெளிப்ப‌டையாக‌ பேசிக் கொள்ள‌, உத‌விக‌ள் கேட்டுப் பெற‌ முடிந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;  அந்த‌ சூழ்நிலையில் எங்க‌ளுக்கு அறிமுக‌ம் ஆன‌வ‌ர்தான் அந்த‌ குறிப்பிட்ட‌ ப‌திவ‌ர். "எதாச்சும் செய்ய‌ணும் பாஸ்" என்று இற‌ங்கிய‌வ‌ர் என்னுட‌ன் நெருக்க‌மாக‌ ப‌ழ‌க‌ ஆர‌ம்பித்த‌ அவ‌ரின் ட‌வுன் டூ எர்த் ம‌ன‌ப்பான்மை பிடிந்திருந்த‌து. அவ‌ரின் பின்புல‌ம் குறித்து தெரிய‌வ‌ந்த‌போது "அட‌ இவ‌ரெல்லாம் ந‌ம்ம‌ கூட‌ எல்லாம் எப்ப‌டி ப‌ழ‌குறாரே?" என்று ஆச்ச‌ர்ய‌ம் அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  ஐ ஐ எம் அக‌ம‌தாபாத்தில் எம் பி ஏ.. ஒரு பெரிய‌ அமெரிக்க‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட்..&lt;br /&gt;&lt;br /&gt;  இர‌ண்டுமே என் க‌ன‌வு என‌லாம். ஒரு சாதார‌ண‌ குடும்ப‌த்தில் பிற‌ந்து டிப்ள‌மோ ப‌டித்து சிறிய‌ வேலைக்கு போய் மேல்ப‌டிப்பையே க‌ர‌ஸ்ஸில் செய்த‌ என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ஐ ஐ எம் என்ப‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ க‌ன‌வு என்ப‌து உங்க‌ளுக்கு புரியும். இப்போதும் எதாவ‌து ஒரு சிறிய‌ இடைவெளி (+ ப‌ண‌ம் ) கிடைத்தால் அங்கே எக்சிக்யூடிவ் ப்ரோக்ராம் ப‌டிக்க‌ வேண்டும் என்ப‌து என் ஆசை. அதேபோல் ஒரு எம் என் சியில் வைஸ் பிர‌சிட‌ன்ட் என்ப‌தும் என் கேரிய‌ர் க‌ன‌வு.&lt;br /&gt;இர‌ண்டையும் ஒருங்கே சாதித்த‌ ஒருவ‌ரை நான் அண்ணாந்து பார்த்து பிர‌மித்த‌தில் விய‌ப்பேதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பீரிய‌ட்...&lt;br /&gt; &lt;br /&gt;  அவ‌ரைப் பார்த்து பிர‌மித்த‌ இன்னொரு விச‌ய‌ம் அவ‌ர‌து உத‌வி செய்யும் ம‌ன‌ம்.&lt;br /&gt; &lt;br /&gt;1. சென்னையைச் சேர்ந்த‌ ப‌திவ‌ர் மிக‌ அதிக‌ ப‌ண‌த்தேவையில் இருந்த‌ போது அவ‌ருக்காக‌ இவ‌ர் சில‌ ல‌ட்ச‌ங்க‌ளில் கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார் (அத‌ற்கு நானும் ஒரு சிறு அள‌வு ப‌ண‌ம் கொடுத்திருக்கிறேன்). அந்த‌ ப‌திவ‌ர் பிர‌ச்சினையில் இருந்து மீண்டு வ‌ர‌ இவ‌ர‌து ப‌ண‌ உத‌வி முக்கிய‌மான‌தாக‌ இருந்த‌தாக‌ இவ‌ரே என்னிட‌ம் சொல்லியிருக்கிறார்&lt;br /&gt; &lt;br /&gt;2. ஒரு வெளிநாட்டு ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ ப‌ண‌ம் திர‌ட்டிய‌தில் இவ‌ர‌து ப‌ங்கு முக்கிய‌மான‌து. மிக‌ப்பெரிய‌ ப‌ண‌த்தை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்று கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுக்க‌லாம் என்ற‌ ஐடியா நிறைய‌ பேரை ப‌ங்கெடுக்க‌ வைத்த‌து க‌ண்கூடு. இவ‌ரே சில‌ரிட‌ம் ப‌ண‌ம் திர‌ட்டி அனுப்பிய‌தும் தெரிந்த‌தே.&lt;br /&gt; &lt;br /&gt;3. ம‌ற்றொரு சென்னை ப‌திவ‌ரின் குழ‌ந்தை உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ போது, இவ‌ர் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்துவிட்டு வ‌ந்த‌தாக‌ என்னிட‌ம் சொல்லியிருக்கிறார். என்னால் நினைத்துக்கூட‌ பார்க்க‌ முடியாத‌ உத‌வி இது.&lt;br /&gt; &lt;br /&gt;4. ஒரு சென்னை ப‌திவ‌ரின் த‌ந்தையார் இற‌ந்த‌ போதும், இதே போல் த‌ன‌து டெபிட் கார்டை கொடுத்த‌தாக‌ சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீரிய‌ட்...&lt;br /&gt;&lt;br /&gt;  சென்ற‌ வ‌ருட‌ம் ஒரு பெண்ப‌திவருட‌ன் அவ‌ருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌க்க‌ச‌ப்பு நிக‌ழ்வுக‌ள் ப‌திவுல‌கில் யாரும் ம‌றுக்க‌வோ ம‌றைக்க‌வோ முடியாத‌ விச‌ய‌ம். அந்த‌ நிக‌ழ்வில் நிச்ச‌ய‌ம் ந‌ண்ப‌ர்க‌ளாக‌ நாங்க‌ள் அவ‌ர் பின் நின்றிருக்கிறோம். அவ‌ருக்கு ஆத‌ரவாக‌ எங்கும் நான் பேச‌வில்லை என்ப‌தைப் போல‌வே அவ‌ரை எதிர்த்தும் எங்கும் பேசிய‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  அவ‌ர் மீது என‌க்கிருந்த‌ பிர‌மிப்பு + ம‌ரியாதையே அத‌ற்கு கார‌ண‌ம்&lt;br /&gt; &lt;br /&gt;*****************&lt;br /&gt; &lt;br /&gt;  க‌ட‌ந்த‌ செப்ட‌ம்ப‌ரில் ஒருநாள் அவ‌ர் என்னிட‌ம் வ‌ந்தார். "எங்க‌ கார் க‌ம்பெனியே ஒரு கார் ரென்ட‌ல் க‌ம்பெனி ஆர‌ம்பிக்குது. நான் அங்க‌யே பெரிய‌ வேலையில‌ இருக்குற‌தால‌ என்னால‌ ஈஸியா ஃப்ரான்ச்சைஸ் வாங்க‌ முடிஞ்ச‌து. நீங்க‌ளும் கொஞ்ச‌ம் இன்வெஸ்ட் ப‌ண்ணுங்க‌" என்றார். இவ‌ர் மீதிருந்த‌ ந‌ம்பிக்கையில் என் ம‌னைவியின் பெய‌ரிலிருந்த‌ சில‌ முத‌லீடுக‌ளை எடுத்து இவ‌ரிட‌ம் கொடுத்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;  அதற்கான‌ அக்ரீமென்ட் கொடுத்தார். ப‌டித்துக்கூட‌ பார்க்காம‌ல் கையெழுத்திட்டு அனுப்பினேன். பின்ன‌ர் அத‌ன் காப்பி மெயிலில் வ‌ந்த‌போதுதான் விப‌ரீத‌ம் புரிந்த‌து. அந்த‌ அக்ரீமென்ட் முழுக்க‌ முழுக்க‌ அவ‌ர‌து க‌ம்பெனிக்கு சாத‌கமாக‌வே என் த‌ர‌ப்பில் மிக‌ மிக‌ ப‌ல‌வீன‌மாக‌ இருந்த‌து. அதிர்ச்சியில் கேட்ட‌வுட‌ன் "அது வென்டாருங்க‌ளுக்கான‌து, உங்க‌ளுக்கு த‌ப்பா அனுப்பிட்டேன்" என்று ம‌றுப‌டியும் வேறொரு அக்ரீமென்ட்டை கொடுத்தார். அதை ப‌டித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட்டு அனுப்பினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;  அத‌ன் பின்ன‌ர்தான் என‌க்கு ச‌னி ஆர‌ம்பித்த‌து. ஒவ்வொரு மாத‌மும் என‌க்கு ஸ்டேட்மென்ட்டும் ப‌ண‌மும் முத‌ல் இர‌ண்டு வார‌ங்க‌ளில் வ‌ரும் என்று கூறிய‌வ‌ர், இழுத்த‌டிக்க‌ ஆர‌ம்பித்தார். ஒவ்வொரு மாத‌மும் முந்தைய‌ மாத‌ ஸ்டேட்மென்ட் வ‌ருவ‌தே க‌டைசி வார‌த்தில்தான் என்றான‌து.&lt;br /&gt; &lt;br /&gt;  இத‌ற்கிடையில் அவ‌ரைப் ப‌ற்றின‌ ம‌ற்ற‌ உண்மைக‌ள் தெரிய‌ வ‌ந்த‌ன‌. இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய‌து&lt;br /&gt; &lt;br /&gt;1. அவ‌ர் ஐ ஐ எம் ல் ப‌டித்த‌வ‌ர் அல்ல‌. த‌மிழ்நாட்டில் எதோ ஒரு அஆஇஈ க‌ல்லூரியில் எதோ ஒரு டிகிரி ப‌டித்த‌வ‌ர்(இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)&lt;br /&gt;2. அவ‌ர் சொன்ன‌ கார் நிறுவ‌ன‌த்தில் வைஸ் பிர‌சிட‌ன்ட் அல்ல‌. எதோ ஒரு கார் வாட‌கை நிறுவ‌ன‌த்தில் மேலாள‌ர் ம‌ட்டுமே (இதுவும் உண்மையா என்று தெரிய‌வில்லை)&lt;br /&gt;3. ப‌திவ‌ர் ம‌ருத்துவ‌ உத‌விக்காக‌ இவ‌ரால் திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ பண‌ம் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ அனுப்ப‌ப்ப‌ட‌வே இல்லை&lt;br /&gt;4. ப‌திவ‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ சூழ‌லில் அவ‌ர்க‌ளிட‌ம் டெபிட் கார்டு கொடுத்த‌தாக‌ இவ‌ர் சொன்ன‌து பொய். இவ‌ர் மேலோட்ட‌மாக‌ கேட்க‌ அவ‌ர்க‌ள் வேண்டாம் என்று ம‌றுத்திருக்கிறார்க‌ள்.&lt;br /&gt; &lt;br /&gt;  அவ‌ர் எங்கு ப‌டித்தால் என்ன‌, எங்கு வேலை செய்தால் உன‌க்கென்ன‌ என்று எதிர்கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ ப‌த்தி. அவ‌ர் யார் என்ன‌ என்று எதைப்ப‌ற்றியும் என‌க்கு க‌வ‌லை இல்லை. எங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திலேயே மிக‌ உய‌ர்ந்த‌ பொறுப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள், வெற்றிக்கான‌ வாச‌லைத் தேடி போராடிக் கொண்டிருக்கிற‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். ஆனால் ந‌ட்பின் அடிப்ப‌டை ந‌ம்பிக்கை. அது பொய் சொல்வ‌தால் வ‌ர‌ப்போவ‌தில்லை. இந்த‌ ப‌திவு அவ‌ரை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ அல்ல‌, அவ‌ர் சொன்ன‌ பொய்க‌ளால் அம்ம‌ண‌ப்ப‌ட்டு நிற்கும் அவ‌ர் மீதான‌ என் ந‌ட்பிற்கு ஒரு கோவ‌ண‌ம் க‌ட்டும் முய‌ற்சி அவ்வ‌ள‌வே.&lt;br /&gt; &lt;br /&gt;  ப‌திவ‌ரின் ம‌ருத்துவ‌ செல‌விற்காக‌ திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ம் குறித்து ஏற்க‌ன‌வே ஜோச‌ப் விள‌க்கி விட்டார். அவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அனுப்பிய‌த‌ற்குக் கார‌ண‌மே உண்மைக‌ள் சுடும் என்ற‌ அனானி அவ‌ருக்கு அனுப்பிய‌ மெயில்தான். யார் அந்த‌ உண்மைக‌ள் சுடும் என்று தெரிய‌வில்லை, ஆனால் அந்த‌ அனானி "ப‌ண‌ம் ஏன் அனுப்பாம‌ வெச்சிட்டு இருக்கீங்க‌" என்ற‌ ரீதியில் அவ‌ருக்கு மெயில் அனுப்பிய‌தும்தான் இவ‌ர் அதை அனுப்ப‌ முய‌ற்சி எடுத்தார் என்ப‌தே உண்மை.&lt;br /&gt; &lt;br /&gt;  இந்த‌ பிர‌ச்சினை ஓடிக்கொண்டிருந்த‌போது, என‌க்கு இவ‌ரைப் ப‌ற்றிய‌ உண்மைக‌ள் தெரியாது. நான் இவ‌ரிட‌ம் "நீங்க‌தான் ஏற்க‌ன‌வே ஸ்டேட்மென்ட் ப‌ண‌ம் எல்லாம் அனுப்பிட்டீங்க‌ளே?" என்று கேட்க‌ "இல்ல‌ ஜோச‌ப்தான் ப‌ண‌ம் என்கிட்ட‌யே இருக்க‌ட்டும், அப்புற‌ம் அனுப்புங்க‌ன்னு சொன்னாரு" என்றார். ஆனால் பின்னால் பிர‌ச்சினை பெரிதாகி ஜோச‌ப் விள‌க்க‌ம் கொடுத்த‌து இவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌த‌ற்கு எதிராக‌ இருந்த‌துதான் இவ‌ர்மீது என‌க்கு விழுந்த‌ முக்கிய‌ ச‌ந்தேக‌ப்புள்ளி.&lt;br /&gt; &lt;br /&gt;  இது குறித்து பேசிக் கொண்டிருந்த‌ போது ஒரு முறை "என்னோட‌ ப்ளாக் பேரை வெச்சி என்னோட‌ உண்மையான‌ பேரு ந‌ர‌சிம்ம‌ன்னு எல்லாரு நினைச்சிட்டு இருக்காங்க‌, என் பேர் அதில்லை, வேற‌" என்றார். அதிர்ந்தேன். மூன்று வ‌ருட‌ம் நெருங்கிய‌ ந‌ட்புட‌ன் இருக்கும் ஒருவ‌னிட‌ம், பிர‌ச்சினைக‌ளின் போது த‌ன் பின் நிற்கும் ஒருவ‌னிட‌ம், ம‌ற்ற‌வ‌ருக்கு உத‌வ‌ ப‌ண‌ம் வாங்கும் ஒருவ‌னிட‌ம், த‌ன் புதிய‌ பிசின‌ஸில் முத‌லீடு செய்யும் அள‌வுக்கு ந‌ம்பிக்கை இருக்கும் ஒருவ‌னிட‌ம் எப்ப‌டி த‌ன் பெய‌ரைக்கூட‌ சொல்லாம‌ல் ம‌றைக்க‌ முடியும்? எந்த‌ அள‌வு அழுத்த‌ம் வேண்டும்?&lt;br /&gt; &lt;br /&gt;**********&lt;br /&gt; &lt;br /&gt;  இது எல்லாம் தெரிந்த‌ பின், நான் அவ‌ரிட‌ம் பிசின‌ஸில் இருந்து வெளிவ‌ந்துவிடுவ‌தாக‌ சொல்ல‌, ஒப்புக் கொண்டார். நிச்சய‌ம் என்னைப் பொறுத்த‌வ‌ரை அது ஒரு ந‌ல்ல‌ முத‌லீடே, மிக‌ச் சிற‌ந்த‌ ரிட‌ன்ஸ் கொடுத்த‌து. ஆனால் என்னை ந‌ம்பி த‌ன் பெய‌ரைக் கூட‌ சொல்லாத‌, த‌ன் பெய‌ரை பெரிதாக்கிக் காட்ட வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் ஒருவ‌ரால் என‌க்கு கோடி ரூபாய் வ‌ருமென்றாலும் என‌க்கு அது தேவை இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;  ஒரு வார‌ம் டைம் கேட்டு, இப்போது மூன்று வார‌ங்க‌ள் க‌ழித்து என‌க்கு ப‌ண‌ம் கிடைத்துவிட்ட‌து. இனி இவ‌ர் தொட‌ர்பான‌ ம‌ன‌ உளைச்ச‌ல் குறையுமென்றாலும், ந‌ண்ப‌ர்க‌ளை தேர்வு செய்வ‌தில் நான் ம‌ற்றொரு முறை தோற்று விட்ட‌தின் வ‌லி நான் சாகும் வ‌ரை இருக்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த‌ ப‌திவு வெளிவ‌ந்த‌தும் என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் என்ன‌ சொல்வார் என்ப‌தும் என‌க்கு தெரியும். அவ‌ரிட‌ம் அதைக் கேட்ப‌வ‌ர்க‌ள் என‌க்கு தொலைபேச‌வும், அட்ச‌ர‌ம் பிச‌காம‌ல் வ‌ரிக்கு வ‌ரி அவ‌ர் என்ன‌ சொன்னார் என்ப‌தை நான் சொல்கிறேன். என்னைப் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் சொல்ல‌ப்போகும் பொய்க‌ள் குறித்து என‌க்கு கிஞ்சிந்தும் க‌வ‌லை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  இத‌ற்கெல்லாம் அவ‌ர் சொல்ல‌க்கூடிய‌ எந்த‌ விள‌க்க‌மும் என‌க்குத் தேவை இல்லை. இங்கே நான் சொன்ன‌வை அவ‌ர் என்னிட‌ம் சொன்ன‌ பொய்க‌ளில் ஒரு சிறு துளி அள‌வே. இன்னும் நான் எழுதாம‌ல் விட்ட‌ ம‌லைய‌ள‌வு பொய்க‌ளை அவ‌ர் என்னிட‌ம் கூறியிருக்கிறார் (அடிக்க‌டி அவ‌ர் சொல்லும் "ம‌றைமலை ந‌க‌ர் ஃபேக்ட‌ரியில‌ இருக்கேன்" என்ப‌து. ரென்ட‌ல் க‌ம்பெனி மேனேஜ‌ருக்கு கார் உற்ப‌த்தி செய்யும் ஃபேக்ட‌ரியில் என்ன‌ வேலை என்ப‌து என் சிற்ற‌றிவுக்கு எட்ட‌வில்லை). என்னைப் போல‌வே அவ‌ருட‌ன் நெருங்கி இருந்த‌ ப‌ல‌ரும் அவ‌ரால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு உள்ளாகி உள்ள‌ன‌ர் என்ப‌து தெரிய‌ வ‌ருகிற‌து. அத‌னால், நான் சொல்ல‌ வ‌ரும் முன்னெச்ச‌ரிக்கை ஒன்றே ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;  ப‌திவுல‌கில் யார் ஒருவ‌ர் சொல்வ‌தை வைத்தும், அவ‌ர்க‌ளைப் பற்றிய‌ பிம்ப‌த்தை க‌ட்ட‌மைத்துக் கொள்ள‌வேண்டாம். குறைந்த‌து அப்ப‌டி க‌ட்டமைக்க‌ப்ப‌டும் பிம்ப‌த்தை ந‌ம்பி ப‌ண‌மாவ‌து கொடுக்காம‌ல் இருப்ப‌து ந‌ல‌ம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-6442211489230254187?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/6442211489230254187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=6442211489230254187' title='73 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6442211489230254187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6442211489230254187'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2011/04/blog-post.html' title='இது ப்ளாக்கிலீக்ஸ் / உண்மைக‌ள் சுடும் ப‌திவு அல்ல‌ :('/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>73</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-2143981422032848752</id><published>2011-01-10T08:07:00.001+05:30</published><updated>2011-01-10T08:07:25.593+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><title type='text'>திருவிழாவில் தொலைந்து போன கதை</title><content type='html'>காட்சி 1:&lt;br /&gt;”ஹலோ பாஸ், சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“எப்ப வர்றீங்க நீங்க? சொல்லுங்க மீட் பண்ணலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி 2:&lt;br /&gt;”சகா, ஒரு விசயம் பேசணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி 3:&lt;br /&gt;”ஹலோ, பிசியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது?). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு என்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட முனைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார். &lt;br /&gt;&lt;br /&gt;பத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வென்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிய‌ல் ஸ்டால் க‌ண்ணில் ப‌ட்ட‌து. சென்ற‌ முறை வாங்கிய‌ "ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்" ந‌ன்றாக‌ இருந்த‌தால் இம்முறையும் எதாவ‌து தேறுமா என்று பார்க்க‌ அருகில் சென்றேன். ஆளுய‌ர‌த்திற்கு பெரிய‌ சைஸ் புத்த‌க‌ங்களை அடுக்கி புர‌ட்சி செய்திருந்த‌ன‌ர். வீட்டில் த‌லைய‌ணைக‌ள் தேவை இல்லாத‌தால் எதுவும் வாங்க‌வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆச்சர்யங்களும், ஏமாற்றங்களும்:&lt;br /&gt;1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்ட‌ன், அக‌த்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். த‌மிழ் எழுத்தாள‌னை ம‌திக்காத‌ த‌மிழ் ச‌மூக‌ம் என்ப‌து புரிந்த‌து.&lt;br /&gt;2. பெரும்பாலான‌ கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.&lt;br /&gt;3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்&lt;br /&gt;4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.&lt;br /&gt;5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலரே சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-2143981422032848752?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/2143981422032848752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=2143981422032848752' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/2143981422032848752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/2143981422032848752'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2011/01/blog-post.html' title='திருவிழாவில் தொலைந்து போன கதை'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-3891610845290564824</id><published>2010-07-21T11:31:00.001+05:30</published><updated>2010-07-21T11:32:59.817+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப‌த்துப‌திவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ந‌கைச்சுவை'/><title type='text'>ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து த‌ருண‌ங்க‌ள்</title><content type='html'>1. காலையில‌ இருந்து சும்மாவே இருக்கோம், இன்னிக்கு அஞ்சு ம‌ணிக்கு கிள‌ம்பிட‌லாம்னு நினைக்குற‌ப்ப‌ 4:58க்கு வ‌ந்து ஒரு நாள் முழுக்க‌ செய்யுற‌ வேலையை குடுப்பாங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;2. அப்ப‌டி க‌டைசி நேர‌த்துல‌ குடுக்குற‌ வேலைய‌ முடிக்க‌ நேர‌மாயிடுச்சின்னா "வீட்டுக்கு போக‌ க‌ம்பெனியோட‌ கார் புக் ப‌ண்ணிக்க‌லாமா?"ன்னு கேட்டா, ச‌ரின்னும் சொல்லாம‌ வேணாம்னும் சொல்லாம‌ ஒரு பார்வை பாப்பானுங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;3. வேலைய‌ முடிச்ச‌வுட‌னே அதை ச‌ரி பாக்காம‌ அதை அப்ப‌டியே க்ளைய‌ன்ட்டுக்கு அனுப்பிட்டு அவ‌ன் திட்டுறான்னு ந‌ம்ம‌ள‌ காச்சுவாங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;4. ந‌ல்ல‌தா எவ்வ‌ள‌வு வேலை செஞ்சாலும் க‌ண்டுக்க‌வே செய்யாம‌, எதாவ‌து சின்ன‌ த‌ப்பு செஞ்சாலும் மொத்த‌ டீமும் இருக்குற‌ப்ப‌ ப‌ப்ளிக்கா திட்டுவாங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;5. ஜீன்ஸ் பேன்ட்டும், தோல் செருப்பும் போட்டுட்டு வ‌ந்துட்டு, ந‌ம்ம‌கிட்ட‌ "வொய் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ட்ரெஸ் கோட்"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;6. ரொம்ப‌ நாள் க‌ழிச்சி ந‌ம்ம‌ க்ளோஸ் ஃப்ர‌ண்ட் ஃபோன் ப‌ண்ணி பேசிட்டு இருக்குற‌ப்ப‌, "ஹேய், இங்க‌ வா, நீ க‌ம்ப்ளீட் ப‌ண்ணுன‌ வேலையில‌ ஒரு ட‌வுட்" அப்ப‌டின்னு க‌த்துவானுங்க‌ளே,அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;7. டெய்லி 11 ம‌ணிக்குதானு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்ச‌ம் லேட்டா 10 ம‌ணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு ம‌ட்டும் 9 ம‌ணிக்கே வ‌ந்துட்டு "வொய் ஆர் யூ க‌ம்மிங் லேட் எவ்ரி டே?"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;8. ல‌ஞ்ச் முடிச்ச‌ப்புற‌ம் மொத்த‌ டீமையும் கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு கூப்புட்டு "க‌ம்பெனியோட‌ எதிர்கால‌த் திட்ட‌ம்"னு புரியாத‌ பாஷையில‌ ஒண்ணே முக்கா ம‌ணி நேர‌ம் ப்ளேடு போடுவாங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;9. ரெண்டு வ‌ருச‌ம் பிர‌ச்சினை இல்லாம‌ வேல‌ செஞ்சிட்டு, க‌ரெக்டா நாம‌ லோன் எடுத்து காரோ, வீடோ வாங்கின‌ அடுத்த‌ நாளே கூப்பிட்டு, "கிளைய‌ன்ட் ப்ராஜ‌க்ட் டீம் சைசை குறைக்க‌ச் சொல்லிட்டான். உங்கள‌ இந்த‌ மாச‌த்தோட‌ ப்ராஜ‌க்ட்ல‌ இருந்து ரிலீஸ் ப‌ண்ணுறேன்"ன்னு சொல்லி வ‌ய‌த்துல‌ புளிய‌ க‌ரைப்பாங்க‌ளே, அப்ப‌&lt;br /&gt;&lt;br /&gt;10. ஆறு மாச‌ம் இர‌வு ப‌க‌லா உழைச்சிட்டு, அப்ரைச‌ல் டிஸ்க‌ஷ‌னுக்கு போனா நாம ப‌ண்ணுன‌ எல்லா த‌ப்பையும் (ம‌ட்டும்) பேசிட்டு "நீ இன்னும் இம்ப்ரூவ் ப‌ண்ண‌ணும், உன‌க்கு ரேட்டிங் 3க்கு மேல‌ குடுக்க‌ முடியாது, உன‌க்கு என்ன‌ உத‌வி வேணும்னாலும் கேளு"ன்னு சிரிச்சிட்டே சொல்லுவானுங்க‌ பாரு, அப்ப‌ வ‌ர்ற‌ கோவ‌த்துக்கு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-3891610845290564824?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/3891610845290564824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=3891610845290564824' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3891610845290564824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3891610845290564824'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2010/07/blog-post_21.html' title='ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து த‌ருண‌ங்க‌ள்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-5851232312222716073</id><published>2010-07-12T08:57:00.000+05:30</published><updated>2010-07-12T08:58:10.040+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுப‌வ‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொற்சித்திர‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ந‌கைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கார்க்கி வ‌ழ‌ங்கும் "ஃபோனை போட்டு, கேளு பாட்டு"</title><content type='html'>த‌மிழ் ப‌திவுல‌கின் ச‌மீப‌த்திய‌ வ‌ள‌ர்ச்சியைத் த‌ன் விள‌ம்ப‌ர‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், ப‌திவ‌ர் ஒருவ‌ரை வைத்து நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிக‌ழ்ச்சிக்கு "யூத்தான‌ ப‌திவ‌ர் தேவை" என்ற‌ விள‌ம்ப‌ர‌ம் பார்த்து சென்ற‌வ‌ர்க‌ளில் &lt;strong&gt;கார்க்கி &lt;/strong&gt;தேர்வு செய்ய‌ப்ப‌டுகிறார். முத‌ல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாத‌த‌தால் கோப‌த்துட‌ன் அங்கிருந்து செல்கின்ற‌ன‌ர் &lt;strong&gt;யூத் கேபிளும், நைஜீரியா ராக‌வ‌னும்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ நிக‌ழ்ச்சி ஆர‌ம்ப‌ம்:&lt;br /&gt;&lt;br /&gt;கார்க்கி: இது உங்க...ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் "ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு" நிக‌ழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உட‌னே உங்க‌ ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ ட‌புள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க‌, எங்கிட்ட‌ பேசுங்க‌, உங்க‌ளுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க‌&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ட்ரிங்.. ட்ரிங்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹ‌லோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க‌ யாரு?&lt;br /&gt;&lt;br /&gt;நானு விருக‌ம்பாக்க‌த்துல‌ இருந்து &lt;strong&gt;குர்சிம்&lt;/strong&gt; பேசுறேங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க‌ குர்சிம், நீங்க‌ என்ன‌ ப‌ண்ணுறீங்க‌?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌த்த‌ ப‌ண்ணுற‌து, ஒண்ணும் ப‌ண்ணாம‌ சும்மாத்தான் இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏங்க‌ இவ்ளோ ச‌லிச்சிக்கிறீங்க‌? ந‌ல்ல‌ விச‌ய‌மே எதுவும் இல்லையா என்ன‌?&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப‌த்தோட‌ செல‌வு ப‌ண்ண‌ நிறைய‌ டைம் கிடைக்குது, நானும் ச‌ந்தோச‌மா இருக்கேன், என் ஃபேமிலியும் ச‌ந்தோச‌மாத்தான் இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ச‌ரி சொல்லுங்க‌, உங்களுக்கு என்ன‌ பாட்டு வேணும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"நான் செத்துப் பொழ‌ச்ச‌வ‌ன்டா, எம‌னைப் பாத்து சிரிச்ச‌வ‌ன்டா"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌து நீங்க‌ சிரிக்கிறீங்க‌ளா? எத்த‌னை பேர் வ‌யிறெரிய‌ப் போறாங்களோ!! அதெல்லாம் ப‌ழைய‌ பாட்டு, இப்ப‌ போட‌ முடியாது.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ட்ரிங்.. ட்ரிங்..&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹ‌லோ, யார் பேசுறீங்க‌?&lt;br /&gt;&lt;br /&gt;நானு கோய‌முத்தூர்ல‌ இருந்து &lt;strong&gt;தென்க‌ரை சூல‌ன்&lt;/strong&gt; பேசுறேங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க‌ சூல‌ன், ஆயிர‌த்தில் ஒருவ‌னைத் த‌விர‌ வேற‌ எந்த‌ ப‌ட‌த்துல‌ இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க‌, போடுறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என‌க்கு சிம்லா ஸ்பெஷ‌ல்ல‌ இருந்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிள் வேணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;யோவ் முழுசா கேளுய்யா, &lt;em&gt;"உன‌க்கென்ன‌ மேலே நின்றாய், ஓ ந‌ந்த‌லாலா"&lt;/em&gt; பாட்டு போடுங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;உங்க‌ளுக்கு ஏன் அந்த‌ பாட்டு புடிக்கும் சூல‌ன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதுல‌ ரெண்டு வ‌ரி வ‌ரும் பாருங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;யார் யாரோ ந‌ண்ப‌ன் என்று, ஏமாந்த‌ நெஞ்ச‌ம் உண்டு&lt;br /&gt;பால் போல‌ க‌ள்ளும் உண்டு, நிற‌த்தாலே ரெண்டும் ஒன்று&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டின்னு, அதுக்காக‌த்தான்&lt;br /&gt;&lt;br /&gt;இருங்க‌.. தேடிப்பாக்குறேன், அட‌ அந்த‌ பாட்டும் இல்லைங்க‌.. இருங்க‌ அடுத்த‌ கால‌ரை பாப்போம். &lt;br /&gt; &lt;br /&gt;ஹ‌லோ இது டுபாக்கூர் டிவிங்க‌ளா?&lt;br /&gt; &lt;br /&gt;இல்லைங்க‌, எஃப் எம்...&lt;br /&gt; &lt;br /&gt;அப்ப‌டிங்க‌ளா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல‌, கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாத்தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க‌ எங்க‌ இருந்து பேசுறீங்க‌?&lt;br /&gt; &lt;br /&gt;நான் &lt;strong&gt;கீழ்பாக்க‌த்துல‌&lt;/strong&gt; ஆஸ்பிட்ட‌ல்ல‌ இருந்து பேசுறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;(கார்க்கி ம‌ன‌துக்குள்): அட‌ப்பாவிங்க‌ளா, இதை எல்லாம் க‌ண்பார்வையில‌யே வெச்சுக்க‌மாட்டாங்களா, குறைஞ்ச‌து ஃபோனையாவ‌து கைக்கு எட்டாம‌ வெக்க‌ மாட்டாங்க‌ளா? (&lt;em&gt;ச‌த்த‌மாக‌&lt;/em&gt;) நீங்க‌ ஃபோனை ப‌க்க‌த்துல‌ யாராவ‌து அட்டென்ட்ட‌ர் இல்ல‌ டாக்ட‌ர் இருந்தா குடுங்க‌..&lt;br /&gt; &lt;br /&gt;நாம‌ அடுத்த‌ கால‌ரை பாக்க‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிச‌ம் இருங்க‌, என‌க்கு ஒரு கால் வ‌ருது.. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;செல்ஃபோனில்&lt;/em&gt; "ஹா.. சொல்லு செல்ல‌ம்.. சாய‌ங்கால‌ம் மீட் ப‌ண்ண‌லாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்"&lt;br /&gt; &lt;br /&gt;பேசி முடித்து மீண்டும் நிக‌ழ்ச்சியில்,&lt;br /&gt; &lt;br /&gt;சொல்லுங்க‌.. நீங்க‌ யார் பேசுறீங்க‌?&lt;br /&gt; &lt;br /&gt;நான் &lt;strong&gt;குப்துல்லா&lt;/strong&gt; பேசுறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷங்க! என்ன பாட்டு வேணும் உங்களுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வசவுங்க‌.. ச்சீ.. வ‌ச‌னங்க??&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;இறைவா! என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்&lt;/em&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌..&lt;br /&gt; &lt;br /&gt;எல்லாம் ஆம்ப‌ளைங்க‌ளா கூப்பிடுறாங்க‌ப்பா.. இதோ ஒரு பெண்ணோட‌ குர‌ல்&lt;br /&gt; &lt;br /&gt;சொல்லுங்க‌ மேட‌ம், உங்க‌ பேர் என்ன‌?&lt;br /&gt; &lt;br /&gt;நான் ம‌துரையில‌ இருந்து பேசுறேங்க‌, பேரு ம‌ஞ்சுளாங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ல்ல‌ ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ பேருங்க‌.. சொல்லுங்க‌ என்ன‌ பாட்டு வேணும்?&lt;br /&gt; &lt;br /&gt;என‌க்கு "புதுமைப்பெண்" ப‌ட‌த்துல‌ இருந்து "&lt;em&gt;ஒரு தென்ற‌ல் புய‌லாகி வ‌ருதே&lt;/em&gt;" பாட்டு போடுங்க‌&lt;br /&gt;&lt;br /&gt;(சிறிது நேர‌த் தேட‌லுக்குப் பின்) அட‌டா அந்த‌ பாட்டு இல்லைங்க‌, ந‌ன்றிங்க‌.. அடுத்த‌ நேய‌ரைப் பாக்குறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;(க‌ர‌டு முர‌டான‌ ஒரு குர‌ல்) டேய் ஒரு பெண் நேய‌ர் கேக்குற‌ப் பாட்டைப் போடாத‌ பார்ப்ப‌ன‌ப் பொறுக்கி த‌டியா?&lt;br /&gt; &lt;br /&gt;ஹ‌லோ என்ன‌ங்க‌, இப்ப‌டி பேசுறீங்க‌, நீங்க‌ யாரு?&lt;br /&gt; &lt;br /&gt;நான் &lt;strong&gt;தென‌வு&lt;/strong&gt; பேசுறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன‌து தென‌வா? யேய்... நீதான‌ கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னால‌ கீழ்பாக்க‌த்துல‌ இருந்து பேசுன‌, இப்ப‌ எதுக்கு வேற‌ வாய்ஸில‌ பேசுற‌..&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க‌ வ‌ந்து ர‌க‌ளை ப‌ண்ணுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென‌ அடுத்த‌ குர‌ல்... &lt;strong&gt;ச்சீ த்தூ&lt;/strong&gt;.. ஆணாத்திக்க‌ சமூக‌த்தின் நீட்சிதான் இந்த‌ நிக‌ழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாட‌லைக் கூட‌ ஒலிப‌ர‌ப்பாத‌ நீங்க‌ள் எல்லாம் நாய்க‌ளை விட‌ கீழான‌வ‌ர்க‌ள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..&lt;br /&gt;&lt;br /&gt;ஏங்க‌, எதுக்கு இப்ப‌ நாய்னெல்லாம் சொல்றீங்க‌, இந்த‌ ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல‌?&lt;br /&gt;&lt;br /&gt;க்ழ்லாஜ்ட‌ஜ்ட்ஃப‌ அஜ்க்ல்த்ஃபாட் அட்ஃப்க்ஹ‌டிஹ்&lt;br /&gt;&lt;br /&gt;ஹ‌லோ, ரீசீவ‌ரை தொட‌ச்சிட்டு பேசுங்க‌, நீங்க‌ துப்புன‌ எச்சி ரிசீவ‌ர்ல‌ ரொம்பி என‌க்கு ஒண்ணுமே ச‌ரியா கேக்குல‌,&lt;br /&gt;&lt;br /&gt;நாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்குதான்யா நீ க‌ரெக்டா பேசியிருக்க..&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;strong&gt;குர‌ல் மாறுகிற‌து&lt;/strong&gt;) விடுங்க‌ அங்கிள், நீங்க‌ என்ன‌ சொன்னாலும் சில‌ ப‌ன்னிங்க‌ளுக்கு புரியாது&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு அந்த‌ ஆளே ப‌ர‌வாயில்ல‌, நாய்ன்னு ம‌ட்டும் சொன்னாரு, நீ என்ன‌மோ ப‌ன்னின்ற‌, இன்னிக்கு என்ன‌ எல்லாரும் க‌ண்ணாடி முன்னால‌ நின்னு பேசிட்டு இருக்கீங்க‌ளா?&lt;br /&gt; &lt;br /&gt;இன்னிக்கு என‌க்கு டைம் ச‌ரியில்ல‌.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்..&lt;br /&gt; &lt;br /&gt;ஹலோ.. பேர சொல்லுங்க சார்..&lt;br /&gt;&lt;br /&gt;டேய்.. நாதாரி..&amp;*&amp;^%$. &lt;br /&gt;&lt;br /&gt;சார்.டீசண்ட்டா பேசுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;நீ முதல்ல‌ பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி&lt;br /&gt;&lt;br /&gt;பேர் சொல்லுங்க சார்&lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;strong&gt;நெருப்பு நீல‌மேக‌ம்&lt;/strong&gt; பேசறேன்டா.&lt;br /&gt;&lt;br /&gt;யாரு? வ‌டிவேலு தீப்பொறி திருமுக‌மா வ‌ர்ற‌ ப‌ட‌த்துல‌ சிங்க‌முத்து வ‌ருவாரே, அந்த‌ கேர‌க்ட‌ரா சார்?&lt;br /&gt;&lt;br /&gt;உங்க ஸ்டூடியோவுக்கே வர்றேன்டா..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாட்டு சார் வேணும்?&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டா? உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.&lt;br /&gt; &lt;br /&gt;(கார்க்கி ச‌லிப்புட‌ன் ம‌ன‌திற்குள்) இன்னிக்கு எவ‌ன் முக‌த்துல‌ விழிச்சேன்னு தெரிய‌லையே.. அட‌ ச‌ட்.. அந்த‌ புது க‌ண்ணாடிய‌ பெட்டுக்கு நேரா மாட்டாத‌ன்னு சொன்னேன், கேட்டாங்க‌ளா..&lt;br /&gt; &lt;br /&gt;ஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்க சார் உங்க பேர்?&lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;strong&gt;பெங்க‌ளூர் ப‌வா&lt;/strong&gt; பேசுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வேணும் சார்?&lt;br /&gt;&lt;br /&gt;நியாயம் வேணும். ஆதாரம் வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சார். அதெல்லாம் கிடைக்காது, என்ன‌ பாட்டு வேணும்னு ம‌ட்டும் சொல்லுங்க‌..&lt;br /&gt;&lt;br /&gt;போடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்த‌ன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற‌..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நிக‌ழ்ச்சி இய‌க்குன‌ர் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ உள்ளே வ‌ருகிறார். கையில் ஒரு நீள‌மான‌ துணி..&lt;/em&gt;&lt;br /&gt; &lt;br /&gt;என்னது இது? அடுத்த காலர் எங்க‌?&lt;br /&gt; &lt;br /&gt;இதாண்டா அடுத்த‌ கால‌ர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை  காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.&lt;br /&gt; &lt;br /&gt;கார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிற‌து.. தெரியாம‌ல் கை ப‌ட்டு அடுத்த‌ முனையில் இருப்ப‌வ‌ர் பேச‌ ஆர‌ம்பிக்கிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஹ‌லோ, நான் &lt;strong&gt;காதி&lt;/strong&gt; பேசுறேங்க‌&lt;br /&gt; &lt;br /&gt;(கார்க்கி ம‌ன‌துக்குள்) ந‌ல்ல‌ வேளை பேதின்னு சொல்லாம‌ போனாரு..&lt;br /&gt; &lt;br /&gt;சொல்லுங்க‌ காதி, என்ன‌ பாட்டு வேணும்?&lt;br /&gt; &lt;br /&gt;பாட்டெல்லாம் வேணாங்க‌, ஒரு பேட்டி ம‌ட்டும்...&lt;br /&gt; &lt;br /&gt;"&lt;strong&gt;ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்திலேர்ந்தா&lt;/strong&gt;" என்ற‌ அல‌ற‌லுட‌ன் பீதியாகி கார்க்கி, டைர‌க்ட‌ர் எல்லாம் பின்ன‌ங்கால் புட‌னியில் அடிக்க‌ ஓடுகிறார்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-5851232312222716073?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/5851232312222716073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=5851232312222716073' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/5851232312222716073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/5851232312222716073'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2010/07/blog-post.html' title='கார்க்கி வ‌ழ‌ங்கும் &quot;ஃபோனை போட்டு, கேளு பாட்டு&quot;'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-9052687580904791959</id><published>2010-06-22T08:57:00.001+05:30</published><updated>2010-06-22T08:58:06.696+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப‌திவ‌ர்வ‌ட்ட‌ம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ந‌கைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ம‌ர‌ண‌மொக்கை'/><title type='text'>ப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி?</title><content type='html'>1. முத‌லில் ப‌திவுல‌கில் இருக்கும் பெண் ப‌திவ‌ர்க‌ள் அனைவ‌ரைப் ப‌ற்றிய‌ டேட்டாபேஸ் இருப்ப‌து முக்கிய‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;2. புதிதாக‌ எந்த‌ பெண் ப‌திவ‌ர் எழுத‌ வ‌ந்தாலும் அவ‌ரையும் டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ள‌வும்&lt;br /&gt;&lt;br /&gt;3. அனைத்து பெண் ப‌திவ‌ர்க‌ளையும் ஃபாலோ செய்ய‌வும். அவ‌ர்க‌ள் உங்க‌ளை ஃபாலோ செய்ய‌வில்லை என்றாலும் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;4. பெண் ப‌திவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ள் ரீட‌ரில் தெரிந்த‌ உட‌னே ஓடிப் போய் முத‌ல் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும். "அருமை", "பாராட்டுக‌ள்", "உங்க‌ள் எழுத்துக்கு ராய‌ல் ச‌ல்யூட்", "எப்ப‌டி இப்ப‌டி எல்லாம்? :)))" போன்ற‌ டெம்ப்ளேட் பின்னூட்ட‌ங்க‌ளே போதுமான‌து&lt;br /&gt;&lt;em&gt;4.1 நீங்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லை, முத‌ல் பின்னூட்ட‌ம் ரெக்கார்ட் ஆவ‌துதான் முக்கிய‌ம்&lt;br /&gt;4.2 நீங்க‌ள் த‌ற்போதுதான் காவ‌ல‌ராக‌ முய‌ற்சி செய்ப‌வ‌ராக‌ இருப்பின், முத‌ல் பின்னூட்ட‌ம் போடுவ‌து கொஞ்ச‌ம் க‌டின‌மாக‌ இருக்க‌லாம்.  ஏற்க‌ன‌வே பொறுப்பில் இருக்கும் சீனிய‌ர் காவ‌ல‌ர்க‌ள் / ஏட்டைய்யாக்க‌ளை தாண்டி முத‌லிட‌த்தை பிடிக்க‌ போராட‌ வேண்டி இருக்கும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. பாஸிட்டிவ் ஓட்டு போட‌வும்&lt;br /&gt;&lt;em&gt;5.1 ஒருவேளை அந்த‌ ப‌திவ‌ர் த‌மிழ்ம‌ண‌த்திலோ, த‌மிழிஷ்ஷிலோ இன்னும் இணைக்க‌வில்லை என்றால் நீங்க‌ளே இணைத்து ஓட்டு போட‌ வேண்டி இருக்க‌லாம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. உங்க‌ள் ஜிடாக், யாஹீ மெச‌ன்ஜ‌ர், ட்விட்ட‌ர், ப‌ஸ், ர‌யில், மாட்டுவ‌ண்டி, மூணு ச‌க்க‌ர‌ சைக்கிள் எல்லா இட‌த்திலும் அந்த‌ ப‌திவிற்கு லிங்க் குடுக்க‌வும்&lt;br /&gt;&lt;br /&gt;7. எப்பாடு ப‌ட்டாவ‌து பெண் ப‌திவ‌ர்க‌ளின் இமெயில் முக‌வ‌ரியை க‌ண்டுபிடிக்க‌வும்.&lt;br /&gt;&lt;em&gt;7.1 அவ‌ர்க‌ளுக்கு "ஹாய், எப்ப‌டி இருக்கீங்க‌?" என்று மெயில் அனுப்ப‌லாம்&lt;br /&gt;7.2 அவ‌ர்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்ப‌லாம்.&lt;br /&gt;7.3 அவ‌ர்க‌ளிட‌மிருந்து ரிப்ளை வ‌ர‌வில்லை என்றாலோ, அவ‌ர்க‌ள் திட்டி ரிப்ளை செய்தாலோ ம‌ன‌ம் த‌ள‌ர‌மால் மீண்டும் மீண்டும் முய‌ற்சிக்க‌வும். விக்ர‌மாதித்த‌ன், க‌ஜினி முக‌ம‌து க‌தைக‌ளைப் ப‌டிப்ப‌து இத‌ற்கு உத‌வ‌லாம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. யாராவ‌து, எதாவ‌து, யாரைப் பற்றியாவ‌து சொன்னாலும் "பாருங்க‌, அவ‌ன் உங்க‌ள‌த்தான் கேவ‌லமா பேசுறான்" என்று பெண் ப‌திவ‌ர்க‌ளிட‌ம் வ‌த்தி வைக்க‌லாம். 7.3ஐ மீண்டும் ப‌டித்துக் கொள்ள‌வும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. நீங்க‌ இதை எல்லாம் ப‌ண்ணுவ‌து அந்த‌ பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு அசூசையை ஏற்ப‌டுத்தி அவ‌ர்க‌ளின் நண்ப‌ர்க‌ள் உங்க‌ளை பிடித்து காச்சு காச்சு என்று காச்ச‌லாம். அமைதியாக‌ கேட்டுக் கொண்டு மீண்டும் மேற்க‌ண்ட‌ அனைத்தையும் தொட‌ர‌வும். வ‌ன்முறை உத‌வாது என்று காந்தி ம‌கான் சொன்ன‌தை இத‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து சால‌ச் சிற‌ந்த‌து.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;பினா குனா (அட‌, பின்குறிப்புங்க‌)&lt;/strong&gt;&lt;br /&gt;1. மேலே உள்ள சம்பவங்கள், பாத்திரங்கள்  அனைத்தும் கற்பனையே. யாரேனும் தனக்கென்று எடுத்துக் கொள்வாராயின் அவரே முழுக் குற்றவாளி, &lt;br /&gt;2. இவ‌ற்றை எல்லாம் முய‌ன்று அத‌ன் விளைவாக‌ வெற்றியோ, தோல்வியோ, த‌ர்ம‌ அடியோ எது ந‌ட‌ந்தாலும் க‌ம்பேனி பொறுப்பேற்காது&lt;br /&gt;3. இந்த‌ ப‌திவைப் ப‌டித்த‌தும், if you feel uncomfortable... கைய‌ குடுங்க‌ சார்.. நீங்க‌ ஏற்க‌ன‌வே த‌மிழ்ப் ப‌திவுல‌கின் பெண்ணுரிமைக் காவ‌ல‌ராய்ட்டீங்க‌.. வாழ்த்துக‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-9052687580904791959?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/9052687580904791959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=9052687580904791959' title='89 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/9052687580904791959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/9052687580904791959'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2010/06/blog-post_22.html' title='ப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி?'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>89</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-3759775568257435555</id><published>2010-06-21T08:18:00.001+05:30</published><updated>2010-06-21T08:20:12.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ந‌ண்ப‌ன் (சிறுக‌தை)</title><content type='html'>தூர‌த்தில் தெரிந்த‌ க‌ட‌லின் அலைக‌ளைவிட‌ அதிக‌மாக‌ அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராய‌ண், ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அலுவ‌ல‌க‌த்திலும் மாட‌ர்னாய் ந‌ரேன். அம‌ர்ந்திருந்த‌து ராதாகிருஷ்ண‌ன் சாலையில் இருக்கும் அந்த‌ பெரிய‌ ஹோட்ட‌லின் மொட்டை மாடி பார். உட‌ன் என் ந‌ண்ப‌ன் ஈஸ்வ‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌டா ரொம்ப‌ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல‌ ஈஸ்வ‌ர், க‌ம்பெனியில‌ சேந்து போன‌ ஜ‌ன‌வ‌ரியோட‌ மூணு வ‌ருச‌ம் முடிஞ்சிடுச்சி. இன்ன‌மும் எந்த‌ மாற்ற‌மும் இல்லை. அதே டெஷிக்நேஷ‌ன், அதே ச‌ம்ப‌ள‌ம், அதே வேலை.. ரொம்ப‌ க‌டுப்பா இருக்குடா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ச‌லிச்சிக்கிற‌ ந‌ரேன்? இப்ப‌ நீ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்டா இருக்க‌, ஆனா வேலை பாக்குற‌ ரோல் என்ன‌வோ ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்தான். ஏற‌த்தாழ‌ ஒன்ற‌ரை வ‌ருச‌மா இந்த‌ 15 பேர் டீமை க‌ட்டி மேச்சிட்டு இருக்குற‌. பெரிசா பிர‌ச்சினைக‌ளும் ஒண்ணும் வ‌ர‌லை, அத‌னால‌ இந்த‌ முறை உன‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிடும் க‌வ‌லைப்ப‌டாத‌"&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸ்வ‌ருக்கு எல்லா விச‌ய‌மும் தெரிவ‌த‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்பது ம‌ட்டும‌ல்ல‌, அவ‌னும் என் க‌ம்பெனியிலேயே வேலை செய்ப‌வ‌ன். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் என் ரெஃப‌ர‌ல் மூல‌ம் என் க‌ம்பெனியில் சேர்ந்த‌வ‌ன், ஏற்க‌ன‌வே ஒரு டிய‌ர் ஒன் க‌ம்பெனியில் வேலை செய்த‌வ‌ன் ஆகையால் சுல‌ப‌மாக‌ மேனேஜ‌ர் டெசிக்நேஷ‌னிலேயே சேர்ந்த‌வ‌ன். சேர்ந்த‌ ஒரே வ‌ருட‌த்தில் ப்ரோமொஷ‌னுட‌ன் அசோசிய‌ட் டைர‌க்ட்ராகி 120 மெம்ப‌ர் அக்க‌வுன்ட்டை வ‌ழிந‌ட‌த்திக் கொண்டிருப்ப‌வ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என் அக்க‌வுன்ட்ல‌ இருந்தா பிர‌ச்சினையே இல்ல‌, பிஸின‌ஸ் யூனிட் ஒண்ணாவே இருந்தாலும் நீ வேற‌ அக்க‌வுன்ட்ல‌ இருக்குற‌, அது ம‌ட்டுமில்லாம நாம‌ ரெண்டு பேரும் ஃப்ர‌ண்ட்ஸ்னு ஊருக்கே தெரியும். அத‌னால‌ என்னால‌ உன‌க்கு ப‌ரிஞ்சு பேச‌வும் முடியாது, ஸாரிடா ந‌ரேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சீ.. இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு? என‌க்கு க‌வ‌லை என்னான்னா ந‌ம்ம‌ பி.யூ.வோட‌ சைசே ரொம்ப‌ சின்ன‌து. இதுல‌ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்ல‌ இருந்து மேனேஜ‌ர் ப்ரொமொஷ‌ன் அதிக‌ப‌ட்ச‌ம் ஒருத்த‌ருக்குதான் கிடைக்கும். அதுதான் க‌வ‌லையா இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்னு நினை. ஏன் எதுனா பிர‌ச்சினை இருக்கும்னு நினைக்கிற‌யா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரே விச‌ய‌ம்தான் அரிச்சிட்டு இருக்கு. போன‌ அக்டோப‌ர் டூ டிச‌ம்ப‌ர் க்வார்ட‌ர்ல‌ நான் குடுத்த‌ ரெவின்யூ ஃபோர்காஸ்ட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடிய‌லை. ரெண்டு டெவ‌ல‌ப்ப‌ர்ஸ் க‌ல்யாண‌ம்னு மூணு மூணு வார‌ம் லீவு போட்டுட்டாங்க‌. அதுல‌ ரெண்டு வார‌ம் கோஇன்சைட் ஆன‌துனால‌ நான்பில்ல‌பிள் ரிசோர்ஸ‌சை வெச்சிம் பில்லிங்கை ச‌ரி ப‌ண்ண‌ முடிய‌லை. எப்ப‌டியோ அப்ப‌ பேசி ச‌மாளிச்சிட்டேன். இப்ப‌ ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன்ல‌ இதைப் பேசுனா பிர‌ச்சினையாகுமேன்னு பாக்குறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட‌ விடுறா.. பி.யூ லெவ‌ல் மேனேஜ‌ர் ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன் மீட்டிங்ல‌ நானும்தான் இருப்பேன். பாக்க‌லாம் உங்க‌ ஆளு உன்னை எப்ப‌டி டிஃப‌ன்ட் ப‌ண்ணுறாருன்னு, ச‌ரி கிள‌ம்புறேன்டா நானு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓகே.. பை"&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத‌த்தை ம‌ன‌ அழுத்தத்‌துட‌னே ஓட்டிய‌ பின், அன்று மாலை என் அக்க‌வுன்ட் ஓன‌ர் சுந்த‌ர் என்னை அழைத்தார். உள்ளுக்குள் ஏதோ குறுகுறுவென‌ ஏற‌த்தாழ‌ அவ‌ர‌து கேபினுக்கு ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ம்பிர‌தாய‌மான‌ ப்ராஜ‌க்ட் அப்டேட்ஸ், ந‌ல‌ விசாரிப்புக‌ள் முடிந்த‌தும் அவ‌ரே மேட்ட‌ருக்கு வ‌ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ந‌ரேன், நீ இந்த‌ க‌ம்பெனியில‌ சேந்து மூணு வ‌ருச‌மாச்சி. ஏற‌த்தாழ‌ க‌ட‌ந்த‌ ரெண்டு வ‌ருச‌மா இந்த‌ ப்ராஜ‌க்ட்டை அழ‌கா ஹேண்டில் ப‌ண்ணிட்டு இருக்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க் யூ சுந்த‌ர்"&lt;br /&gt;&lt;br /&gt;"நான்தான் உன‌க்கு தேங்க்ஸ் சொல்ல‌ணும். நான் இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு சார்ஜ் எடுத்துட்ட‌ க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ என‌க்கு அதிக‌மா பிர‌ச்சினையே குடுக்காம, ஸ்டேட்ட‌ஸ் ரிப்போர்ட் எவ‌ர் க்ரீனா இருக்குற‌ ஒரே ப்ராஜ‌க்ட் உன்னோட‌து"&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்து பெருமையாக‌ உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ நோ.. நீ உன்னோட‌ ப்ரோமொஷ‌னை எதிர்பார்த்துட்டு இருக்குற‌. என்னைக் கேட்டா, ஐ வுட் ஸே யூ டிஸ‌ர்வ் த‌ட்"&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ விநாடிக‌ள் என் க‌ண்க‌ளையே தீர்க்க‌மாக‌ பார்த்தார் சுந்த‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ப‌ட், ஐ'ம் ஸாரி ந‌ரேன்.. இந்த‌ முறை என்னால‌ உன‌க்கு ப்ரோமோஷ‌ன் வாங்கித்த‌ர‌ முடிய‌லை"&lt;br /&gt;&lt;br /&gt;காலுக்கு கீழே பூமி ந‌ழுவிய‌து. க‌ண்க‌ளில் எதாவ‌து நீர் திரையிடுவ‌து தெரிந்து விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ த‌லையை கீழே க‌விழ்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ நோ ஹ‌வ் இட் ஃபீல்ஸ்.. நான் எவ்வ‌ள‌வோ முய‌ற்சி ப‌ண்ணுனேன். இந்த‌ முறை ப்ரோமோஷ‌ன் ப்ராச‌ஸ் ரொம்ப‌ ஸ்ட்ரிக்ட். ந‌ம்ம‌ பிஸின‌ஸ் யூனிட்ல‌ இருந்து ஒரே ஒருத்த‌ரைத்தான் மேனேஜ‌ரா ப்ரோமோஷ‌ன் ப‌ண்ண‌முடியும்னு சொல்லிட்டாங்க‌. இருந்த‌து நாலு க‌ன்டெஸ்டென்ட்ஸ். லாஸ்ட் ரெண்டு வ‌ரைக்கும் நீ ரேஸில் இருந்த‌, ப‌ட்.."&lt;br /&gt;&lt;br /&gt;த‌லையைக் குனிந்த‌வாறே கையை உய‌ர்த்தி அவ‌ர் பேசுவ‌தை இடைம‌றித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு மூணு வ‌ருச‌ம் உழைச்ச‌துக்கு என‌க்கு இவ்வ‌ள‌வுதான் ம‌ரியாதை இல்லையா? ஒருவேளை ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்ல‌ இருந்திருந்தா இந்நேர‌ம் என‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிருக்கும் இல்லையா சார்?" அந்த‌ சார் என்ப‌தில் இருந்த‌ கேலி அவ‌ருக்கும் புரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேர‌ம் அவ‌ர் எதுவும் பேசாம‌ல் போக‌, த‌லையை உய‌ர்த்தி அவ‌ரைப் பார்த்தேன். எந்த‌ உண‌ர்ச்சியும் காட்டாத‌ வ‌ழ‌க்க‌மான‌ போக்க‌ர் ஃபேஸுட‌ன் என்னையே தீர்க்க‌மாக‌ பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன‌ அமைதியாகிட்டீங்க‌ சுந்த‌ர்? உங்க‌கிட்ட‌ இதுக்கு ப‌தில் கிடையாதுன்னு தெரியும். நான் சீட்டுக்கு போறேன்" என்று வெறுப்பாக‌ பேசிவிட்டு எழுந்து திரும்பி க‌த‌வில் கை வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ‌ர் இப்போது ப‌தில் பேசினார் "நான் இப்ப‌ என்ன‌ சொன்னாலும் உன‌க்கு ம‌ன‌சு ஆறாதுன்னு என‌க்கு தெரியும். ஆனா ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்னு சொன்ன‌து என்னை ஹ‌ர்ட் ப‌ண்ணின‌தால‌ நான் இதை சொல்றேன். நான் இப்போ சொல்ல‌ப் போற‌து கான்ஃபிட‌ன்ஷிய‌ல் விச‌ய‌ம், ஆனாலும் சொல்லுற‌துக்குக் கார‌ண‌ம் உன் திற‌மை மேல‌ என‌க்கு இருக்குற‌ ம‌ரியாதைதான்"&lt;br /&gt;&lt;br /&gt;க‌த‌வில் இருந்து கை எடுக்காம‌ல் அப்ப‌டியே நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"லாஸ்ட் டூல‌ இருந்து நீ வெளிய‌ப் போன‌துக்குக் கார‌ண‌ம் போன‌ வ‌ருச‌ம் க‌டைசி க்வார்ட்ட‌ர்ல‌ நீ ரெவின்யூ டார்க்கெட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடியாம‌ போன‌துதான். உன்னோட‌ ரெவ்ன்யூ ஃபோர்காஸ்ட் வெர்ச‌ஸ் டார்கெட் அச்சீவ்டு க்ராஃபை காட்டி, உன்னை விட‌ த‌ன்னோட‌ டீம்ல‌ இருக்குற‌ ஷ‌ர்மிளாதான் பெஸ்டுன்னு ப்ரூஃப் ப‌ண்ணி, ஷ‌ர்மிளாவுக்கு இந்த‌ ப்ரோமோஷ‌னை வாங்கிக் குடுத்த‌தே ஈஸ்வ‌ர்தான்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-3759775568257435555?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/3759775568257435555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=3759775568257435555' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3759775568257435555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3759775568257435555'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2010/06/blog-post.html' title='ந‌ண்ப‌ன் (சிறுக‌தை)'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4900774691605078487</id><published>2010-03-31T09:01:00.000+05:30</published><updated>2010-03-31T09:01:25.208+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்</title><content type='html'>மதிப்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் "இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே?" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் பார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்புலம்:&lt;/strong&gt;&lt;br /&gt;வலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், "கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய கேபிள் சங்கர் &amp; பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் "என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில கேள்விகளும், என் கருத்துகளும்:&lt;/strong&gt;&lt;br /&gt;இப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி.  இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன?&lt;br /&gt;2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன?&lt;br /&gt;3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்?&lt;br /&gt;4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை? அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. &lt;strong&gt;முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது&lt;/strong&gt; என்று நான் உறுதியாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் "சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும். &lt;br /&gt;&lt;br /&gt;2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார்? நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் "இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆதார‌ங்க‌ள்:&lt;/strong&gt;&lt;br /&gt;சரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/14741839060304529003"&gt;தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் ஏன் இதை எழுதுகிறேன்?&lt;/strong&gt;&lt;br /&gt;அமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுதுவதற்கான தகுதி:&lt;/strong&gt;&lt;br /&gt;இவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்பார்களேயானால், "தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-4900774691605078487?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/4900774691605078487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=4900774691605078487' title='87 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4900774691605078487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4900774691605078487'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2010/03/blog-post.html' title='சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>87</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6084593309199493828</id><published>2010-02-22T07:42:00.000+05:30</published><updated>2010-02-22T07:42:20.321+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்ஸ்'/><title type='text'>கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்</title><content type='html'>கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் &amp; டீம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி. &lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆ&lt;strong&gt;சிறியர்கள்&lt;/strong&gt; விடப்போவதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-6084593309199493828?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/6084593309199493828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=6084593309199493828' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6084593309199493828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6084593309199493828'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2010/02/blog-post.html' title='கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-585996820087281588</id><published>2009-12-28T08:33:00.001+05:30</published><updated>2009-12-28T08:35:32.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>துணுக்ஸ் - 2009/12/28</title><content type='html'>ஏறத்தாழ ரெண்டு மாசமாச்சி பதிவு போட்டு.. ஆபிஸ்ல ப்ளாக்கர்க்கு ஆப்பு, வார நாட்களில் வீட்டுக்கு திரும்பி வரவே 11 மணி, வார இறுதிகளில் வெளியூர் பயணங்கள் என்று பதிவு போடவே முடியவில்லை. இந்த வாரத்துல ரெண்டு பதிவாவது போடமுடியும்னு நெனக்கிறேன்.  இப்ப மட்டும் எப்படி உனக்கு நேரம் கிடைச்சதுன்னு கேக்குறவங்களுக்கு, பதில் கடைசியில..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;கொங்கு நாட்டு பதிவர்களுக்கு பாராட்டுகள், சிறப்பாக ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செஞ்சு, வெளியூர் பதிவர்களை அதில் கலந்துக்க வெச்சி கலக்கிட்டாங்க, ரொம்ப நாளா சென்னைப் பதிவர்கள் செய்யணும்னு பேசிகிட்டு இருந்த விசயம், அவங்க உயிர் கொடுத்திருக்காங்க.. அவங்களுக்கு ஒரு சல்யூட்..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா பிரச்சினையில மத்தியில இருக்குற காங்கிரஸ் அரசோட முடிவெடுக்கிற திறமைய பாத்து எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். முதல்ல தெலுங்கானா கிடையாதுன்னாங்க, கே.சி.ஆர் உண்ணாவிரதம் இருந்தாரு, உடனே சரி குடுத்துடறோம்னாங்க, அடுத்ததா கடலோரா ஆந்திராவும், ராயலசீமாவும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, இப்ப தெலுங்கானா முடிவை மறுபரிசீலனை செய்யுறோம்ன்றாங்க, உடனே தெலுங்கானாவே பத்தி எரியுது.. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முடிவை எடுக்கும் முன்னால எல்லா விசயங்களையும் யோசிச்சி, என்ன விதமான பின்விளைவுகள் ஏற்படும் இதையெல்லாம் யோசிக்காம, எடுத்த முடிவுல உறுதியா இல்லாம  அவனவன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் போற அரசாங்கத்தை எக்ஸ் ரே எடுத்தா இப்படித்தான் இருக்குமோ என்னமோ?? :(((&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3pqc-DcpdvI/Szb3Uh6kmJI/AAAAAAAABMo/i5ezHU_FZWY/s1600-h/skeleton.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 161px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_3pqc-DcpdvI/Szb3Uh6kmJI/AAAAAAAABMo/i5ezHU_FZWY/s320/skeleton.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5419791133660453010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியருக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க கடந்த ஒரு மாசமா அலைஞ்சதுல ஒரு விசயம் நல்லா புரிஞ்சது. ஒரு நல்ல ஸ்கூல்ல எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கணும்னா தரவேண்டிய டொனேஷன், நான் எல்.கே.ஜி ஆரம்பிச்சி எம்.சி.ஏ முடிக்கிறவரைக்கும் ஆன மொத்த செலவை விட அதிகம். அதே போல் அரசு பள்ளிகளோட தரம் எந்த அளவுக்கு இருக்குன்றதும் பெரிய கேள்விக்குறி.&lt;br /&gt;&lt;br /&gt;20 வருடங்களுக்கு முன்னால நான் ஆரம்பப் பள்ளிகள் படிச்சிட்டு இருந்தப்ப அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக எண்ணிக்கையில இருந்தது ஆனால் இப்போது தெருவுக்கு தெரு தனியார் பள்ளிக்கூடங்கள். ஊருக்கு ஊர் இன்ஜினியரிங் காலேஜ். ஒவ்வொன்றிலும் கேப்பிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள். இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்கள் எல்லாரும் வேட்டைக்காரனை அடிச்சி துவைச்சு பிரிச்சி மேஞ்சிட்டாங்க. எல்லாரும் சொல்ற ஒரே விசயம் இந்த படமும் டிபிக்கல் விஜய் ஃபார்முலான்றதுதான். மூணு வருசத்துக்கு முன்னால் போக்கிரி வந்த புதுல விஜய் டிவியில லொள்ளு சபா செஞ்ச காமெடி ஷோல இதே விசயத்தை கண்டபடி கிண்டலடிச்சிருப்பாங்க. இப்பவும் அது அப்படியே பொருந்துதுன்றது விஜய்யைப் பொறுத்தவரை வேட்டைக்காரனை விட பெரிய தோல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த லொள்ளுசபாவை நீங்களும் பார்த்து ரசியுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=h8bOpkqJAPA"&gt;Lollu sabha - Bakery - Part 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=_pNK9jT2NWc"&gt;Lollu sabha - Bakery - Part 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=EpuriUKOHaY"&gt;Lollu sabha - Bakery - Part 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சி பண்ணினதற்காக பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சி, அவங்களை அடுத்த வாரமே மன்னிப்பு கேக்க வெச்சதெல்லாம் நடந்தது. விஜயும் அவரது ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க காட்டுற முனைப்புல கொஞ்சமாவது கதை தேர்வுல காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு மாசமா பதிவே போடாமா இருந்துட்டு இப்ப பதிவு போடுறதுக்கு காரணம் சனிக்கிழமை அன்னிக்கு தங்கமணி ஊருக்கு போய்ட்டாங்கன்றதும், இன்னும் 10 நாள் கழிச்சிதான் திரும்பி வருவாங்கன்றதும்தான் அப்படின்னு நீங்களா முடிவு பண்ணிகிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது..ஹி..ஹி..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-585996820087281588?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/585996820087281588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=585996820087281588' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/585996820087281588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/585996820087281588'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/12/20091228.html' title='துணுக்ஸ் - 2009/12/28'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3pqc-DcpdvI/Szb3Uh6kmJI/AAAAAAAABMo/i5ezHU_FZWY/s72-c/skeleton.gif' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-2263358140782205466</id><published>2009-10-29T08:04:00.001+05:30</published><updated>2009-10-29T08:04:58.246+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஷெர்லக் ஹோம்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>உங்களுக்கு துப்பறியும் கதைகள் பிடிக்குமா?</title><content type='html'>இந்த இடுகையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் தலைப்பில் இருக்கும் கேள்விக்கான பதில் "ஆமாம்" என்பதாகவே 99 சதவீதம் இருக்கும். "இல்லை" என்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். :)&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".&lt;br /&gt;&lt;br /&gt;ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான‌ தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SuQDXNzNF9I/AAAAAAAABBk/yVdqXihOd0o/s1600-h/HomesBookInTamil.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SuQDXNzNF9I/AAAAAAAABBk/yVdqXihOd0o/s200/HomesBookInTamil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396441950872999890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்&lt;br /&gt;புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!&lt;br /&gt;புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!&lt;br /&gt;எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்&lt;br /&gt;தமிழில்: பத்ரி சேஷாத்ரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-142-6.html"&gt;மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-2263358140782205466?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/2263358140782205466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=2263358140782205466' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/2263358140782205466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/2263358140782205466'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/10/blog-post_29.html' title='உங்களுக்கு துப்பறியும் கதைகள் பிடிக்குமா?'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SuQDXNzNF9I/AAAAAAAABBk/yVdqXihOd0o/s72-c/HomesBookInTamil.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-843848816911367159</id><published>2009-10-26T08:27:00.001+05:30</published><updated>2009-10-26T08:29:04.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஒரு சட்டப்பூர்வமான கொடிய தண்டனை</title><content type='html'>ஒரு குற்றவாளிக்கு தரப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை எது? இந்த கேள்விக்கு எல்லா நாடுகளிலும் ஒரே பதில் "மரண தண்டனை" என்பதே. சில நாடுகளில் தூக்கு, சில நாடுகளில் மின்சார இருக்கை, சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனையை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதில் மாற்றம் இருந்தாலும் மரணதண்டனைக்கு மிஞ்சிய தண்டனை இல்லை என்றுதான் எல்லா நாட்டு சட்டங்களும் சொல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த குறிப்பிட்ட நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது விஷ ஊசியின் மூலம், காரணம் மற்ற முறைகளை விட விஷ ஊசி முறையில்தான் சாவதற்கான உடல் வேதனை குறைவு என்பது அவர்கள் வாதம். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1984ல் ஒரு 14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. நமது நாடு போல் தீர்ப்பு வந்தது 10 வருடம் கழித்தல்ல, ஒரு வருடத்திற்குள்ளாகவே. ஆனால் அதை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்: மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நம் நாட்டைப் போலவே அங்கும் விவாதம், தண்டனை நிறைவேற்ற போதுமான பணம் ஒதுக்காதது போன்ற காரணங்களினால் ஏற்கனவே மரண தண்டனை பெற்று விஷ ஊசிக்கு காத்திருப்பவர்கள் வரிசையில் அவனும் சேர்க்கப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பான சிறையில் பரோலில் வெளிவர முடியாத கைதியாக சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் காவல் அதிகாரி வந்து "அடுத்த வாரம் உனக்கு தண்டனை நிறைவேற்றப்படும்" என்று சொல்வார் என்ற நிலை. இப்படி அவன் காத்திருந்தது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 25 வருடங்கள். எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மரணதண்டனையை விட கொடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக, செப்டம்பர் 15, 2009ல் அவனது தண்டனையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்கிறார்கள் சிறைத்துறையினர். விடுதலையை விட அதிக மகிழ்ச்சியை அவன் அடைந்திருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் விதி வேறு வடிவத்தில் விளையாடும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் இரண்டு மணிக்கு அவன் மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருபதிற்கும் அதிகமான மனிதர்கள் (அ) சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறான். மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, நேரடியாக விஷ ஊசிமட்டுமே. ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் வலி, வேதனை இல்லாமல் உயிர் பிரிவது வாடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஊசி மற்றும் விஷத்திற்கான ரசாயனங்களுடன் அறைக்குள் செல்கின்றனர். எல்லாம் தயார் என்ற நிலையில்தான் எதிர்பாராத, இதுவரை வரலாற்றில் நிகழாத அந்த விஷயம் நடக்கிறது. விஷ ஊசியைப் போடுவதற்கான இரத்தக் குழாயை அந்த மருத்துவப் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காலில் அல்லது தொடையில் ஊசி போடப்படும். என்ன காரணமோ அவனது உடலில் எந்த பகுதியிலும் இரத்தக்குழாய்களை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அவர்கள் அவன் உடல் முழுவதும் இரத்தக் குழாய்களை தேடிக்கொண்டிருந்தது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல, முழுதாக இரண்டு மணிநேரம். இரண்டு மணிநேரம் கழித்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட முடியவில்லை என்று கூறி அவன் சிறைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் செய்த ஒரு கொலைக்கு இன்றோ நாளையோ என்ற நிலையில் இருபத்தைந்து வருடங்கள் சிறையில் வைத்திருந்து, மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று இரண்டு மணிநேரம் வைத்திருந்து, அவனை சிறைக்குத் திருப்பி அனுப்பி மறுபடியும் இன்றோ நாளையோ என்ற நிலையில் வைத்திருக்கும் அந்த நாடு, உலகுக்கே நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா. இந்த நரக வேதனைக்கு அவன் பிடிபட்ட அன்றே என்கவுன்ட்டரில் கொன்றிருந்தாலும் பரவாயில்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்த ஒரு குற்றவாளியைப் போன்றே அமெரிக்கச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் விஷ ஊசிக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் அவர்களை இப்படி வைத்திருக்கப்போகிறார்கள்?&lt;br /&gt;2. நமது நாடு போல அரசியல் காரணங்கள் இல்லாமல் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றால் உடனடியாக நிதி ஒதுக்கி அவர்களின் தண்டனையை நிறைவேற்றலாமே, தண்டனையை நிறைவேற்றும் முறையில் கூட வலியும் வேதனையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், டெத் ரோ (Death Row) எனப்படும் மரண வரிசையில் காத்திருப்பவர்களின் மனதளவில் ஏற்படும் வலியையும் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?&lt;br /&gt;3. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரே நாட்டின் குடிமக்களிடையே ஏன் இந்த வேறுபாடு?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. இது குறித்த முழு விவரமும் &lt;a href="http://www.huffingtonpost.com/2009/09/16/romell-broom-execution-re_n_288256.html"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-843848816911367159?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/843848816911367159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=843848816911367159' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/843848816911367159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/843848816911367159'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/10/blog-post_26.html' title='ஒரு சட்டப்பூர்வமான கொடிய தண்டனை'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-1791423292741386015</id><published>2009-10-19T07:57:00.001+05:30</published><updated>2009-10-19T07:57:14.284+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்</title><content type='html'>&lt;strong&gt;புத்தகம் 1: எரியும் பனிக்காடு:&lt;/strong&gt;&lt;br /&gt;நாம் தினமும் குடிக்கும் தேநீரின் பின்னால் இருக்கும் கறுப்பு சரித்திரத்தை சொல்லும் ரெட் டீ (Red Tea) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த புத்தகம். ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் இரா.முருகவேள் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 1920களில் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைக்க இந்திய ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய வெள்ளையர்கள் + இந்தியர்களின் வாழ்க்கையை சொல்லும் இரத்தம் தோய்ந்த வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் நடக்கும் கதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம். அந்த பகுதி மக்கள் அந்த காலகட்டத்தில் பேசிய மொழியை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் முருகவேள் பாராட்டப்பட வேண்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் வரிசையில் முதல் சில இடங்களில் இருக்கும் புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகம் குறித்து &lt;a href="http://www.sramakrishnan.com/deep_story.asp?id=159&amp;page=2"&gt;எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரைப்படம் 1: Hangover:&lt;/strong&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் பார்த்து ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று. படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட லாஸ் வேகாஸ் நகருக்கு செல்பவர்கள், தாங்கள் தங்கும் ஹோட்டலின் மொட்டைமாடியில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிக்கிறார்கள். காலையில் தங்கள் அறையில் விழித்து எழுந்தால் முதல் நாள் நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்ற நிலையில், அறையில் பாத்ரூமில் ஒரு புலி உறும, கப்போர்டில் குழந்தை அழ, இவர்கள் கார் என்று ஒரு போலீஸ் காரை கொண்டு வந்து ஹோட்டல் சிப்பந்தி நிறுத்த என்று குழப்பத்தின் மேல் குழப்பமாக ஆரம்பித்து அனைத்தும் சுபமாக முடிவதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்திய &lt;a href="http://cablesankar.blogspot.com/2009/08/hangover.html"&gt;கேபிள் சங்கரின் விமர்சனம் இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் 2: Pirate Latitudes:&lt;/strong&gt;&lt;br /&gt;ஜுராஸிக் பார்க் எழுதிய மைக்கேல் கிரிக்டன் போன வருடம் இறந்த பிறகு அவரது கணிணியை நோண்டிக் கொண்டிருந்த அவரது உதவியாளர் கண்டுபிடித்த இதுவரை வெளிவராத இரண்டு நாவல்களில் ஒன்று "பைரேட் லாட்டிட்யூட்ஸ்". கிரிக்டனால் முழுவதுமாக‌ எழுதி முடிக்கப்பட்டிருந்த இந்த நாவல் நவம்பர் இறுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கிடைத்துள்ள இன்னொரு முடிக்கப்படாத நாவலை எழுதி முடிக்க எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம் பதிப்பாளர். ஒரு அப்ளிகேஷன் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரைப்படம் 2: 2012:&lt;/strong&gt;&lt;br /&gt;உலகின் மிகப்பெரிய அழிவு எது நடந்தாலும் அல்லது நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை படமாக்குவது ஹாலிவுட் இயக்குனர்களுக்குக் கை வந்த கலை. டைட்டானிக், 9/11, உலகப்போர்கள் என்ற பெரிய அழிவுகளை வெற்றிப்படங்களாக்கியவர்கள் அவர்கள்.  இன்டிபென்டன்ஸ் டே, காட்ஸில்லா, டே ஆஃப்டர் டுமாரோ ஃபேன்டஸி படங்களின் இயக்குனர் ரோலன்ட் எம்மரிக் இயக்கி நவம்பர் 13ல் வெளிவர இருக்கும் 2012 படம், 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டுகிறது. சும்மாவா பின்ன, 260 மில்லியன் டாலர் பட்ஜெட்டாச்சே (சுமாராக 1300 கோடி ரூபாய்). ஏறத்தாழ தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ஐந்து வருட பட்ஜெட்டை விட இந்த ஒரு படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;தத்துவம்:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சன்ஸ் ஆஃப் ஃபார்சூன் (Sons Of Fortune) கதையில் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) கொடுத்திருக்கும் ஆலிவர் ஹோம்ஸ்(Oliver Wendell Homes)ன் ஒரு தத்துவம் இன்றைய பதிவுலகத்திற்கு பொருத்தமாக தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;'Beat a man with the strength of your argument, not the strength of your arm'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-1791423292741386015?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/1791423292741386015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=1791423292741386015' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1791423292741386015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1791423292741386015'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/10/blog-post_19.html' title='இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-9144882892338460303</id><published>2009-10-08T09:43:00.001+05:30</published><updated>2009-10-08T09:43:57.115+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்</title><content type='html'>ஆகஸ்ட் நடுவுல இருந்து செப்டம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஒரு மாசமாவே நான் வலையுலகில் அதிகம் செயல்படவில்லை. ஏற்கனவே சொன்ன மாதிரி அலுவலகத்தில் வலைப்பூக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டதால் என்னால் வலையுலகில் பதிவுகளை முழுவதுமாக படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை. அது மட்டுமின்றி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஒரு வாரம் எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்திருந்ததும் காரணம். ஒரு வார விடுமுறைக்கு முன்னால் முடிக்கவேண்டிய பணிகளும், விடுப்பு முடிந்து வந்ததும் சேர்ந்து போன ஆணிகளை பிடுங்கிய வகையிலும் ஏறத்தாழ ஒரு மாதமே ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் இதே நேரத்தில் நாங்கள் ஐந்து நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தோம். அந்த பயணம் அருமையாக இருந்ததால் இந்த வருடம் அதே போல் ஊட்டி செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். சென்ற வருடம் போலவே, கணிணி, இணையம், அலுவலக வேலைகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு வாரம் மொத்தமாக லீவ்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ கொடைக்கானலைப் போல் ஊட்டி வசீகரிக்கவில்லை. முதல் காரணம் ஊரே முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டிருப்பதுதான். எங்கெங்கு திரும்பினாலும் கடைகள், கடைகள், கடைகள். மக்கள் நடமாட்டமும் மிக அதிகம். சீசனே இல்லாத இந்த சமயத்திலே இப்படி என்றால் சீசன் சமயத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையன் கண்டுபிடித்து ஆரம்பித்த ஒரு இயற்கையான மலைப்பிரதேசத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் சீரழித்து இருக்கிறோம். மிகச்சிறந்த உதாரணம் ஏரி. கூவத்தின் மறுபதிப்புதான் அந்த மலைவாசஸ்தலத்தின் ஏரி. மலைரயில் ஊட்டியைத் தொடும்போதே தெரியும் கழிவுநீர்க் கால்வாயும், நம் நாசியை நிறைக்கும் கெட்ட வாடையும் இந்த முறை எங்கள் தேர்வு தவறு என்று சத்தியம் செய்து சொன்னதாகவே தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்ற மலைரயில் பயணமும் அவ்வளவு இனிதாக இல்லை. கால் வைக்கவே இடம் இல்லாத அளவுக்கு சின்ன இடத்தில் ஐந்து மணிநேரப் பயணம் கொஞ்சம் கடுப்படித்தது. டார்ஜிலுங் மலை ரயில் குறித்து படித்தபோது இதை விட சிறிய ட்ராக்கில் ஓடினாலும் முதல் வகுப்பு என்று தனியாக ஒன்று உண்டு என்பது தெரிந்தது. அதுபோல் எதாவது மாற்றம் செய்தால் சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் தாண்டி பயணத்தில் கண்ட‌ சில நல்ல விசயங்கள்:&lt;br /&gt;1. சாப்பாடு பிரச்சினையே இல்லை. நாங்கள் சேரிங்கிராஸ் அருகே தங்கியிருந்த ப்ரீதி பேலஸ் ஹோட்டலின் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் அருமை. அதிலும் அங்கே சாப்பிட்ட ஆனியன் ஊத்தப்பம்.....ம்ம்ம்ம்ம்ம்ம். மறக்காமல் முயற்சிக்கவும். அது மட்டும் இல்லாமல் பல தரமான உணவகங்களைக் காணமுடிந்தது. ஒரு சுற்றுலா பிரதேசத்தில் உணவுப் பிரச்சினை இல்லாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.&lt;br /&gt;2. ஊட்டியின் க்ளைமேட். அற்புதம், வேறென்ன சொல்ல‌??&lt;br /&gt;3. கொடநாடு வ்யூபாய்ண்ட்: கொஞ்சம் தூரம்தான் என்றாலும் (ஊட்டியில் இருந்து 50 கி.மீ. கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ). மிஸ் பண்ணக்கூடாத இடம். மற்ற வ்யூபாய்ண்ட்கள் போலில்லாமல் தூரத்தில் தெரியும் பரந்து விரிந்த சத்தியமங்கலம் காடுகளும், ஒரு கோடு போல் தெரியும் பவானி ஆறும், தூரத்தே தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கமும் முற்றிலும் வித்தியாசமான அனுபவம். கொடநாடு எஸ்டேட்டின் விஸ்தீரணத்தையும் வழியில் பார்க்கமுடிவது ஒரு ப்ளஸ். :)&lt;br /&gt;4. திரும்பும் நாளன்று எதேச்சையாக கோத்தகிரியில் ஏற்பட்ட பதிவர் லதானந்த் அவர்களுடனான சந்திப்பு ஒரு கூடுதல் ஆச்சர்யம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-9144882892338460303?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/9144882892338460303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=9144882892338460303' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/9144882892338460303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/9144882892338460303'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/10/blog-post_08.html' title='இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4181783091643235491</id><published>2009-10-05T08:00:00.002+05:30</published><updated>2009-10-05T08:04:50.666+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டான் பிரவுன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லாஸ்ட் சிம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்</title><content type='html'>டான் பிரவுன் (DAN BROWN)... பெயரைச் சொன்னவுடனே நம் நினைவுக்கு வரும் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் &amp; டீமன்ஸ் நாவல்கள். அதைத்தவிர‌ அவர் இன்னும் இரண்டு நாவல்கள் (டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட்) எழுதியிருந்தாலும் அவரை உலகப்புகழ்ப் பெற வைத்தது டாவின்சி கோட் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;டாவின்சி கோட் வெளிவந்து ஏறத்தாழ ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் அவரது அடுத்த நாவல் இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. சுமார் ஐந்து வருடங்கள் டான் பிரவுன் ஆராய்ச்சி செய்து "தி சாலமன் கீ" என்ற பெயரில் எழுத ஆரம்பித்த இந்த நாவல் "தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol)" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டான் பிரவுனின் எழுத்துகளின் பலமே வரலாறின் மறைக்கப்பட்ட பக்கங்க‌ளை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலம் வெளிக்கொண்டு வருவதுதான். ஏஞ்சல்ஸ் &amp; டீமன்ஸில் நாம் அதிகம் அறிந்திராத சர்ச் வெர்சஸ் சயின்ஸ் (Church Vs Science) பற்றியும், டாவின்சி கோடில் ஏசுநாதர் திருமாணமானவர் என்பது பற்றியும் எழுதியிருந்ததும் அந்த நாவல்கள் பெருமளவு பேசப்படக் காரணமாக அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;லாஸ்ட் சிம்பல் கதையிலும் ஹீரோ முதல் சொன்ன இரண்டு கதைகளில் வந்த ராபர்ட் லாங்டன் (Robert Longdon). ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் ப்ரொஃபசராக இருக்கும் புகழ் பெற்ற சிம்பாலஜிஸ்ட். தன் பணக்கார நண்பரான பீட்டர் சாலமன் அழைப்பின் பேரில் வாஷிங்டனில் ஒரு உரை நிகழ்த்தச் செல்லும் லாங்டன் அங்கு சென்றபின் அந்த அழைப்பே ஒரு பொய் என்பதை அறிகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ரீமேசன்ஸ் (Freemasons) என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரது நண்பரை கடத்தியிருக்கும் வில்லன், ஃப்ரீமேசன்ஸ் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வரும் ரகசியத்தை கண்டுபிடிக்க லாங்டன் உதவி செய்தால் அவரை விடுவிப்பதாகச் சொல்கிறான். இதற்கிடையே அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறிக்கொண்டு சி.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரி ஒருவரும் லாங்டனை நெருக்க, அவர்களிடமிருந்து தப்பிக்க, சி.ஐ.ஏ.வின் துரத்தல்களுக்கு நடுவே பீட்டர் சாலமனின் தங்கையுடன் வாஷிங்டன் நகரில் தப்பி ஓடும் லாங்டன் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாரா, அவரது நண்பர் மீட்கப்பட்டாரா, வில்லன் என்ன ஆனான், அது என்ன ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் என்பதை சொல்லும் கதைதான் "லாஸ்ட் சிம்பல்".&lt;br /&gt;&lt;br /&gt;கதைச்சுருக்கம் அருமையாகத் தெரிந்தாலும், கதை கொஞ்சமல்ல நிறையவே இழுவை. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் கதையில் (முக்கியமாக கதை முழுவதும் 12 மணிநேரத்திற்குள் நடக்கிறது) டான் பிரவுன் முடிந்தவரை சொதப்பியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராபர்ட் லாங்டனின் மற்ற நாவல்களைப்போல அழுத்தமான காரணம் இந்த கதையில் இல்லை. ஏஞ்சல்ஸ் &amp; டீமன் கதையில் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க உலகின் அனைத்து கார்டினல்களும் வாடிகனில் கூடியிருக்க அந்த இடத்தில் அணுகுண்டிற்கு இணையான அழிவை ஏற்படுத்தும் குண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அது வெடித்தால் கிறித்துவ மதத்திற்கே அது ஒரு பேரிழப்பாக இருக்கும். அதை லாங்டன் முறியடிக்க ஒவ்வொரு சர்ச்சாக அவர் செல்லும்போது நமக்கும் அந்த பரபரப்பு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் டாவின்சி கோட் நாவலிலும் ப்ரையாரி ஆஃப் சயின் குழுவால் பாதுகாக்கப்படும் "ஏசு திருமணமானவர்" என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்தால் கிறித்துவ மத நம்பிக்கை அசைக்கப்படும். அந்த சூழ்நிலையில் நடக்கும் கதையும் நம்மை பரபரக்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோன்ற எந்த அழுத்தமான காரணமும் இதில் இல்லை. சி.ஐ.ஏ. வருவதற்கு அவர்கள் கூறும் காரணமே கதை 80% போனபின்தான் சொல்லப்படுகிறது. அதுவரை "எதுக்குதான் அவனுங்க வந்திருக்காங்க? சொல்லித் தொலையுமைய்யா" என்று சலிப்புதான் தோன்றுகிறது. அதன்பின் அவர்கள் சொல்லும் காரணமும் சப்பையாக இருப்பது ஏமாற்றத்தின் உச்சகட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட பெரிய ஏமாற்றம், கதையின் முடிவு நடைபெறும் இடத்தை "விண்ணை முட்டும் பிரமிட்" என்று கதையின் ஆரம்பத்தில் லாங்டன் தேட ஆரம்பிக்கும்போதே நம்மால் யூகிக்க முடிவதுதான். ஓரளவு வாஷிங்டன் டிசி நகரத்தைப் பற்றி தெரிந்தாலே "பெரிய பிரமிட், விண்ணை முட்டும் கல்" என்ற விளக்கங்களுக்கு பொருந்தும் கட்டிடத்தை உங்களால் யூகிக்க முடிவதும், கதையின் முடிவில் அதே இடத்தில் ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் இருப்பதையும் படித்தால் "வாஷிங்டனைப் பாக்காத எனக்கே தெரியுது, எல்லாம் தெரிஞ்ச லாங்டனுக்கு இதைக் கண்டுபிடிக்க 500 பக்கமா?" என்ற சலிப்பே ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட, ஃப்ரீமேசன்ஸ் ரகசியமாக பாதுகாத்து வரும் அற்புதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்ற அவநம்பிக்கையுடனேயே கடைசி அத்தியாயம் வரை லாங்டன் செல்ல்லும்போது அவருடன் செல்லும் நம்மை ஈர்க்காமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படமாக வந்தாலும் இந்த கதை வெற்றிபெறப்போவது இல்லை. காரணம் கதையும் நடக்கும் இடமான வாஷிங்டன் டிசியும், வெற்றிப்படமான நேஷனல் டிரசர் முதல் பாகத்தின் ரீமேக் போல் இருக்கும்.மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை ஆறு வருடங்கள் கழித்து டான் பிரவுன் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார் என்றே சொல்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;இது டான் பிரவுனின் ஐந்தாவது புத்தகம். காலவரிசையில் மட்டுமல்ல, தரவரிசையிலும் கூட‌.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-4181783091643235491?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/4181783091643235491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=4181783091643235491' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4181783091643235491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4181783091643235491'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/10/blog-post.html' title='மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-446075322051975610</id><published>2009-09-21T13:40:00.002+05:30</published><updated>2009-09-21T13:40:24.783+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....</title><content type='html'>"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை.‍ எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும். &lt;br /&gt;சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...&lt;br /&gt;நான்: ஆமா.. ஏன் கேக்குற?&lt;br /&gt;தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?&lt;br /&gt;நான்: ஙே...&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-446075322051975610?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/446075322051975610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=446075322051975610' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/446075322051975610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/446075322051975610'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/09/blog-post.html' title='உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-3463722153983638844</id><published>2009-08-10T08:10:00.002+05:30</published><updated>2009-08-10T08:12:03.844+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துணுக்ஸ்'/><title type='text'>என்னவோ போங்க சார்!!!</title><content type='html'>ஏறத்தாழ ரெண்டு மாசமாகுது பதிவு போட்டு. ஜூலை மாசம் முழுசும் ஒரு பதிவு கூட போட முடியலை. முக்கியமான காரணம் ஆபிஸ்ல ப்ளாக்ஸை(Blogs) ப்ளாக்(block) பண்ணிட்டாங்க. ஹி..ஹி.. ரொம்ப ஓவராத்தான் ப்ளாக் படிச்சிருக்கேன் போல, கடுப்பாகிட்டாங்க. அதனால என்னோட ப்ளாக்கையே என்னால படிக்கமுடியல. &lt;br /&gt;&lt;br /&gt;இருக்குற ஒரே வழி ரீடர்தான், அதிலயும் பதிவுகளை படிக்க மட்டும்தான் முடியும், பின்னூட்ட முடியாது. கஷ்டம்தான், வீட்டுல என்னோட பர்சனல் லேப்டாப்பும் என் பையன் கைவண்ணத்துல புட்டுகிச்சி, அதனாலதான் கொஞ்சம் லாங் கேப், அப்பப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம் மாசம் ஒரு பதிவாவது போட முடியுதான்னு. "போட்டுட்டாலும்...." அப்படின்றீங்களா?? என்னவோ போங்க சார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் முரளிகண்ணனை ரொம்ப நாளா காணோம், கண்டுபிடிச்சி குடுக்குறவங்களுக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். :)&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல கொஞ்சம் அதிகமாவே மீள்பதிவுகள் போடுற நண்பர் கார்க்கிக்கு பப்ளிக்கா ஒரு குட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நான் ரொம்ப ரசிச்ச பதிவு நையாண்டி நைனாவோட &lt;a href="http://naiyaandinaina.blogspot.com/2009/07/blog-post_31.html"&gt;எதிர் கவுஜகள்&lt;/a&gt;. தபூ சங்கர் பாணி நான்கு வரி காதல் கவிதைகளை கிண்டல் அடிச்சி இவர் போடுற பதிவுகள் முற்றிலும் புதிய வகை எதிர்க்கவுஜகள். படிச்சவுடனே வாய்விட்டு சிரிக்க வைக்குது. பாராட்டுகள் அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் நண்பர் &lt;a href="http://www.narsim.in/"&gt;நர்சிம்&lt;/a&gt;. திரட்டிகளில் இருந்து விலகுன பின்னால இவரோட படைப்புகள்ல ஒரு வேகம், வித்தியாசத்தைக் காட்டுற முனைப்பு எல்லாம் தெரியுது. நடந்த பிரச்சினைகளை ஏணிப்படியா உபயோகிச்சிகிட்ட அவரோட திறமைக்கு ஒரு சல்யூட். அதனால அவரை இனிமே திரட்டிகள் உள்ளாறயே விட வேணாம்னு சொல்றியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஓசை செல்லா புதுசா &lt;a href="http://home.blogchai.com/"&gt;ப்ளாக்சாய்&lt;/a&gt; அப்படின்னு ஒரு தளம் ஆரம்பிச்சிருக்காரு. முதல் பார்வையில ஒரு வித்தியாசமான ப்ளாக் அக்ரிகேட்டர் மாதிரி தெரியுது. அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக அவர் அனுப்பிய மெயிலில் தவறுதலாக எல்லா மெயில் ஐடிகளையும் டூ அட்ரஸிலேயே போட்டுவிட அதற்கு எல்லோரும் "ரிப்ளை டூ ஆல்" போட, அந்த அட்ரஸ்களை எடுத்து சிலர் அட்வர்டைஸ்மென்ட் அனுப்ப என்று ஒரே களேபரம். நான் போய் "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே "நீ என்ன பெரிய பில்கேட்ஸா?" என்ற ரீதியில் வந்த பதில்களில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பதிலை அனுப்பிய புத்திசாலிகள் மன்னிக்கவும் அதிபுத்திசாலிகள் இருக்கும் இடத்தில் என்னை போன்ற கோயிந்துகளும் இருப்பார்கள் என்பது புரியாமல் "உன் டவுசரை அமுக்குவேன்" என்ற ரீதியிலான மின்னஞ்சல்கள் அனுப்பினால் நான் பயந்துவிட மாட்டேனா? அது கூடவா சார் உங்களுக்குத் தெரியாது? என்னவோ போங்க சார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் போட்டியில் &lt;a href="http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html"&gt;வென்ற அனைவருக்கும்&lt;/a&gt; வாழ்த்துகள். வெற்றி பெற்ற இருபது கதைகளையும் படிச்சிட்டேன், அதனால தைரியமா வாழ்த்துவேன். :)&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தது போலவே முடிவில் சில ஆச்சர்யங்கள். கண்டிப்பாக பரிசு பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில கதைகள் பரிசு பெறாமல் போனது குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. நண்பர் ஜமால் அழகாக சொல்லியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;br /&gt;நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது. &lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை பரிசு பெற்ற கதைகளில் பொதுவான அம்சமாக எனக்குத் தென்படுவது "கட்டுடைப்பு". சரியா சுந்தர்ஜி &amp; பைத்தியக்காரன்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா உன் கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? முதல்லயே நடுவர்கள் யாருன்னு தெரிஞ்சிருந்தாலாவது அவங்களை பாத்து "நானெல்லாம் இங்க சிறுகதை எழுத்தாளார்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா, என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்கய்யா"ன்னு கெஞ்சி கூத்தாடி ஜீப்ல ஏறியிருக்கலாம், கடைசி வரைக்கும் நடுவர்கள் யார்ன்றத சொல்லாமயே வெச்சிட்டாங்க நம்ம ஆளுங்க, என்னவோ போங்க சார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா இது நீ வழக்கமா எழுதுற "துணுக்ஸ்"தானே, தலைப்பை மாத்தி வெச்சு ஏமாத்துறியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-3463722153983638844?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/3463722153983638844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=3463722153983638844' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3463722153983638844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3463722153983638844'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/08/blog-post.html' title='என்னவோ போங்க சார்!!!'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6041735807210002210</id><published>2009-06-22T10:14:00.001+05:30</published><updated>2009-06-22T10:14:43.766+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரையாடல்'/><title type='text'>கனவின் நிறம்</title><content type='html'>"ரொம்ப சந்தோசம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு உன் சந்தோசம்தான்டா முக்கியம். ஊரு என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த பொண்ணுதான் உனக்கு நல்ல துணையா இருப்பான்னு நெனச்சா நான் ஏன் தடை சொல்லப்போறேன். எனக்கு என்ன.. இன்னும் ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ, அதுக்கப்புறம் உன்னைப் பாத்துக்கப்போறது அவதானே"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சீ... கம்முனு இரு.. எதெதோ பேசிகிட்டு"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், எனக்கு ஒரு ஆசைடா, சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லும்மா.."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னோட கல்யாணம் முடிச்சதும் நம்ம வீட்டை கொஞ்சம் மராமத்து பண்ணிடலாம்டா. ஓடெல்லாம் ரொம்ப பழசாயிடுச்சி, எல்லாத்தையும் எடுத்துட்டு புதுசா போட்டுடலாம்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா.. அம்மா.. மேஸ்திரி அண்ணன்ட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஓட்டை எடுத்துட்டு தார்சு போட்டுடலாம்மா. நீயி கவலையே படாத. அப்புறம், வர்ற வழியில சங்கர் மாமாவைப் பாத்தேன். ஐப்பசி மாசம் காசிக்குப் பதினஞ்சு நாள் டூர் போட்டிருக்காராம். நீயும் சொல்லிட்டே இருக்குறியே. இந்த முறை போயிட்டு வந்துடு. சரிம்மா, நான் போயி அவ அப்பாட்ட பேசிட்டு வந்துடறேன்‌"&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்புடுறதுக்கு வீட்டுக்கு வந்துடுறா, உனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்பு செஞ்சி வெக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;************&lt;br /&gt;&lt;br /&gt;"உண்மையச் சொல்லணும்னா நீங்க இவ்வளவு ஈஸியா சம்மதிப்பீங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நெனக்கலை மாமா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மாப்பிள்ள, அந்தஸ்தை காரணம் காட்டி வேணாம்னு சொல்லிடுவேனோன்னு நெனச்சீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;""&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த சொத்தெல்லாம் நானே சொந்தமா சம்பாசித்ததில்ல, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்து இது. சொல்லப்போனா நானெல்லாம் இதுக்கு ஒரு வாட்ச்மேன் மாதிரிதான். அதை என்னிக்குமே நானோ என் குடும்பமோ மறக்குறதே இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆச்சர்யமா இருக்கு மாமா"&lt;br /&gt;&lt;br /&gt;"அது புரிஞ்சதுனாலதான் சின்ன வயசுலயே உங்க அப்பா மாதிரி நல்ல மனுசங்க ஃப்ரெண்ட்ஸா கிடைச்சாங்க. உங்களப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் முழுசா தெரிஞ்சதுனால உங்களவிட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கமாட்டான்னு நம்புனதுனாலதான் இந்த கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப நன்றி மாமா"&lt;br /&gt;&lt;br /&gt;"பையனும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டான். பொண்ணுக்கு வரப்போறவன் என்கிட்ட இருக்குற காசுக்காக வர்றவனா இருந்துட்டா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும் மாப்பிள்ள. என்னால அதைத் தாங்க முடியாது. அவளை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களாலதான் அவளை காலம் முழுக்க நல்லா வெச்சிருக்க முடியும்னு நம்புறேன் நானு"&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா மாமா.. கவலையே படாதீங்க.. உங்க பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம நான் பாத்துக்குறேன். போதுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த நம்பிக்கை உங்கள விட எனக்கு அதிகம் மாப்பிள்ள.. அவ மேலதான் இருக்கா, போய் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் உங்க அம்மாவும் எங்க அப்பாவும் குழந்தை பத்தி ஒண்ணுமே சொல்லைலியா? சொல்லியிருப்பாங்களே, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல ஒரு பேரன் வேணும்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒனக்கெல்லாம் நக்கலா இருக்கு, ஏன் கேட்டா என்ன தப்பு? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குது, இப்பவே ஆரம்பிச்சா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசத்துலயே அவங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ குடுத்துடலாம்ல‌"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் ச்சீ, கைய எடு... கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சிதான் குழந்தையெல்லாம். முதல்ல நாம நம்ம வாழ்க்கையை வாழலாம்டா, காஷ்மீர்ல ஹனிமூன், சொந்தகாரங்க வீட்டுக்கெல்லாம் ஒரு வீடு விடாம விருந்து, நல்ல பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உன் தோள்ல சாஞ்சிட்டே தாஜ்மஹால் தரிசனம், கோவா பீச் ஹாலிடேஸ், அந்தமான் செல்லுலார் ஜெயிலுக்குள்ள உன்னை வெச்சி ஒரு ஃபோட்டோ, லட்சத்தீவுல ஸ்கூபா டைவிங்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய்.. ஹேய்... இரு இரு.. நீ இன்னமும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுல்ல, ஒரு சாதாரண சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்காரனோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி ஆசைப்படும்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கென்னா? எங்க அப்பாவோட பாதி சொத்து எனக்குத்தான. குடுக்க மாட்டேன்னு சொன்னா எங்க அண்ணன் மேல கேஸ் போட்டுடலாம் கவலைப்படாத"&lt;br /&gt;&lt;br /&gt;"அடிப்பாவி... உன்னையும் உங்க அண்ணன் நம்புறானே, அவனைச் சொல்லணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா..ஹா.. சும்மாச் சொன்னேன். எனக்குன்னு கேட்டா மொத்த சொத்தையும் கூட அண்ணனும் அண்ணியும் குடுத்துடுவாங்க. நான் இதுக்கு முன்னால எடுத்த எல்லா ஜென்மத்துலயும் புண்ணியம் பண்ணிகிட்டே இருந்திருக்கணும்டா.. இப்படி ஒரு அப்பா, அண்ணன், அண்ணி, எல்லாத்தையும் விட என்னா நல்லா புரிஞ்சுகிட்ட உன்கூடயே கல்யாணம்....."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹேய்.. என்னாது இது? எதுக்கு அழுவுற? திடீர்னு உனக்குள்ள இருக்குற பட்டிக்காடு இப்படி வெளிய வந்துடுச்சி..."&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சீய்.. போடா...."&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா... மாப்பிள்ள தம்பிக்கு ஃபோன்.. அவங்க அம்மா பேசுறாங்க‌"&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;"உன் வெக்கேஷனைக் கட் பண்ணி அவசரமா கூப்டதுக்கு ஸாரிப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லைங்க சார்.. நானே வெக்கேஷனைக் கட் பண்ணுற ப்ளான்லதான் இருந்தேன். கல்யாணத்துக்கு நல்ல நாள் ரெண்டு மாசம் கழிச்சிதான் கிடைச்சிருக்கு. அதனால அப்ப வெக்கேஷன் எடுத்துக்கலாம்னு இருந்தேன். நீங்க கூப்பிடலைன்னாலும் மே இருவத்தஞ்சாம் தேதி நானே வந்திருப்பேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"குட்..குட்.. நான் உன்னைக் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விசயத்துக்காக. இந்த மாசம் முழுக்கவே நமக்கு ரொம்ப வேலை அதிகம். எல்லா வி.வி.ஐ.பி.ங்களும் தீவிரமான பிரச்சாரத்துல இருக்காங்க. சமாளிச்சடலாம்னுதான் நெனச்சி உனக்கு லீவு குடுத்தேன். பட் ரெண்டு ஹையர் ஆபிஸர்ஸ் ஆஸ்பிடல்ல படுத்துட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு. அதனாலதான் உன்னைக் கூப்பிட வேண்டியதா போச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.. ஓகே."&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டாவது, நீ டிபார்ட்மென்ட்ல சேந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சுட்டு வர்றேன். உன்னோட நேர்மை, வேலை மேல உனக்கு இருக்குற டெடிகேஷன், புது விசயங்களைக் கத்துக்குற ஆர்வம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு அப்புறம் இந்த போஸ்டுக்கு வர்ற தகுதி இருக்குற ஆட்களா நான் நினைக்குற ஒரு சிலர்ல நீயும் ஒருத்தன். இந்த மாதிரி டஃப் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணினாத்தான் உனக்கும் பின்னால உதவியா இருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ரொம்ப நன்றி சார். இப்ப என்னோட அஸைன்மென்ட் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"வர்ற செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு வி.வி.ஐ.பி.யோட பாதுகாப்பை நீ கவனிக்க வேண்டி இருக்கும். ப்ளான்படி அவரு செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஏர்போர்ட்டுக்கு வர்றாரு. அங்க இருந்து நம்ம டீம் சார்ஜ் எடுத்துக்குது. ஏர்போர்ட்ல இருந்து அன்னிக்கு ராத்திரி அவர் கூட்டம் முடிக்கிற வரைக்கும் நீதான் இன்சார்ஜ்"&lt;br /&gt;&lt;br /&gt;"கவலையேப்படாதீங்க சார். அவர் சென்னைல வந்து இறங்குனதுல இருந்து மறுபடியும் ஃப்ளைட் ஏறுற வரைக்கும் அவரைவிட்டு நகர மாட்டேன். சென்னைய பொறுத்தவரைக்கும் நாந்தான் அவரோட நிழல்னு வெச்சிக்குங்களேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ..ஹ..ஹ..ஹ.."&lt;br /&gt;&lt;br /&gt;"நைட் பொதுக்கூட்டம் எங்க சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ரீபெரும்புதூர்"&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-6041735807210002210?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/6041735807210002210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=6041735807210002210' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6041735807210002210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6041735807210002210'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/06/blog-post_22.html' title='கனவின் நிறம்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-2041124772528519198</id><published>2009-06-17T14:19:00.005+05:30</published><updated>2009-06-21T09:36:02.355+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைச்சரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இந்த வாரம் வலைச்சரத்தில்</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;சீனா அய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாரம் நான் வலைச்சர ஆசிரியராக இருக்கிறேன். என் வலைச்சரப் பதிவுகளை படிக்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக்கவும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_15.html"&gt;1. வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_16.html"&gt;2. விகட(ன்)கதை சொல்லிகள்!!!&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_17.html"&gt;3. வெண்பூவிற்கு வயது ஒன்று&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_18.html"&gt;4. கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_20.html"&gt;5. என்னை அசத்திய கவிஞர்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_21.html"&gt;6. சினிமா வலைஞர்கள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-2041124772528519198?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/2041124772528519198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=2041124772528519198' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/2041124772528519198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/2041124772528519198'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/06/blog-post_17.html' title='இந்த வாரம் வலைச்சரத்தில்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-7486935774090721688</id><published>2009-06-08T09:31:00.001+05:30</published><updated>2009-06-08T09:33:11.297+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>துரோகம்</title><content type='html'>வினய் நிலை கொள்ளாமல் தவித்தான். தரையில் இருந்து 350 கி.மீ உயரத்தில் சலிக்காமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிதக்கும் விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.எஸ்) தற்போதைய தலைமை விஞ்ஞானி அவ‌ன்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பத்தேழாவது முறையாக அந்த வீடியோவை பார்த்தான். இரண்டு மாதங்களுக்கு முன் எக்ஸ்பெடிஷன் 23ல் கொண்டு வரப்பட்டு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட அந்த அதி நவீன கேமிரா அப்பழுக்கின்றி வினயின் வீட்டு வாசலைப் படம் பிடித்திருந்தது. வினய்க்கு சந்தேகமே இல்லை, அது தன் மனைவி ஸ்வேதா என்பதில், ஆனால் அவளுடன் இருக்கும் அந்த அவன்? கடந்த ஒரு வாரமாக சரியாக மாலை ஆறு மணிக்கு வினயின் வீட்டிற்கு வரும் அவன் எட்டு மணிக்குத்தான் வெளியேறுகிறான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியேறும்போது வாசலில் வைத்து இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி... சட்... வீடியோவை அணைத்தான் வினய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வருட காதலிலும் மூன்று வருட திருமண வாழ்விலும் தேனாய் இனித்த அதே முத்தம், இப்போது எட்டிக்காயாய்க் கசக்கிறது. ஏன்? ஐ.எஸ்.எஸ்.ஸில் முப்பது மாத அசைன்மென்ட் வந்தபோது அவளைப் பிரியக்கூடாது என்பதற்காகவே அதை மறுத்தவன் வினய். ஆனால் இதை விடச் சிறந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிடைக்காது என்பதையும், பிரிந்திருந்தால் அன்பு அதிகம் ஆகுமே தவிர குறையாது என்றும் கூறி வினயைச் சம்மதிக்க வைத்தவள் அவளேதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏன் இப்போது இப்படி? தனக்காக உயிரையும் தருவாள் என்று நம்பியது பொய்யா? நாசாவில் வேலை கிடைத்து கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்த போது தன்னுடன் இருப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வந்தது பொய்யா?  ஒரு வருட பிரிவில் காதல் கசந்து விட்டதா? அல்லது காதலைக் காமம் வென்று விட்டதா? கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. வினய் குழம்பினான். ஆனால் கண்முன்னால் சாட்சி வீடியோவாய் ஓடும்போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் பெற்றோர் யாரென்றே தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்து, உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி, அந்த வைராக்கியத்தில் வெறியாய்ப் படித்து கோல்டு மெடல் வாங்கி, அமெரிக்கா வந்து நல்ல வேலையில் சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று இலக்கில்லாமல் இருந்தவனுக்கு வந்து சேர்ந்த முதல் உறவு ஸ்வேதாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளைத்தவிர வேறு உலகம் இல்லை என்று நினைத்தவனுக்குக் கடந்த வாரம் அந்த இடி இறங்கியது. புதிய கேமிராவை சோதனை செய்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக அதைத் தன் வீட்டை நோக்கித் திருப்பினான். அப்போதுதான் அவனைப் பார்த்தான். அதன் பின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குக் கண்காணிக்க, ஒரு நாள் விடாமல் அவன் வருவதும், 8 மணிக்கு திரும்பிச் செல்வதும், வாழ்வின் மிகக் கொடுமையான காலகட்டமாக  இந்த ஒரு வாரம் மாறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இனி என்ன? எனக்கிருக்கும் ஒரே உறவும் என்னை ஏமாற்றுகிறாளா? இனி அவளுடன் எப்படி வாழ முடியும்? நான் திரும்பிச் சென்றதும் எப்படி அவளிடம் இதைக் கேட்க முடியும்? அவன் நான் இருக்கும்போது வரப்போவது இல்லை, அவளிடன் அதைப்பற்றிக் கேட்கும் தைரியமும் எனக்கு இல்லை. வாழ்நாள் முழுவதும் போலி வாழ்க்கை வாழப்போகிறேனா? ஒவ்வொரு முறை இனி அவளை முத்தமிடும்போதும் இந்தக் காட்சி வந்து மனதில் அறையாதா. இனிமேல் யாருக்காக‌ இந்த‌ வேலை, ப‌ண‌ம் எல்லாம்?'&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை, இனிமேல் நான் உயிர் வாழ்வ‌தில் அர்த்த‌மே இல்லை. இனி தின‌ம் தின‌ம் ஒவ்வொரு வினாடியும் செத்துச் செத்துப் பிழைப்ப‌தை விட‌ ஒரேடியாய் இற‌ப்ப‌தே மேல். என் உயிர‌ற்ற‌ உட‌ல் கூட‌ அந்த‌த் துரோகிக்குக் கிடைக்க‌க் கூடாது'&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு செய்த‌வ‌னாய் ஐ.எஸ்.எஸ்.இன் பின் புற‌ டாக்கிங் (Docking) ஏரியாவிற்கு சென்றான்.&lt;br /&gt;இப்போதைக்கு பூமியிலிருந்து எந்த விண்கலமும் வரவில்லை என்பதால் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. கழிவுகளை வெளியேற்றும் இடத்திற்கு அருகில் வந்து நின்றான். அடுத்த இரண்டு நிமிடங்களில் கழிவுகளை வெளித்தள்ள ப்ரோக்ராம் செட் செய்துவிட்டு கழிவுகளை வைக்கும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். இன்னும் இரண்டு நிமிடத்தில் ஐ.எஸ்.எஸ்.இல் இருந்து தூக்கி எறியப்படுவான். விண்வெளி நடைக்கான உடை, ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் வெளியேறிய உடனே அவன் உயிர் அவனை விட்டு பிரியப் போகும் வினாடிக்காகக் கண்களில் நீருடன் காத்திருக்க ஆரம்பித்தான் வினய்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே விநாடி, 350 கி.மீ. கீழே, ஸ்வேதா அவனுக்கான இமெயில் மெசேஜை டைப் செய்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் அன்பு புருஷா.. ரெண்டு வாரமா கொஞ்சம் பிஸி, இந்த ரெண்டு வாரமா உனக்கு மெயில்கூட‌ பண்ணாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குது. உங்க ஆளுங்ககிட்ட சொல்லி வாரம் ஒரு அஞ்சு நிமிசக் காலுக்கு பர்மிசன் வாங்கக் கூடாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு டென்வர்ல வேலை கிடைச்சிடுச்சி, போன வாரமே வந்து சேர்ந்துட்டேன். இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் இங்கதான் இருக்கப் போறேன். அப்புறம் இன்னொரு விசயம், மனசைத் தேத்திக்கோ. உன் மச்சினிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி. இப்ப அவ கலிஃபோர்னியால நம்ம வீட்டுலதான் இருக்குறா. அவளோட உட்பியும் பக்கத்துலதான் வேலை செய்யுறாரு. தினமும் சாயங்காலம் ஆபிஸ் முடிஞ்சதும் வந்துடறாரு. ரெண்டு பேரும் ஒரே அட்டகாசம்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்களைப் பாத்தா அப்படியே எனக்கு நம்ம காதல் காலம்தான் நெனப்புக்கு வருது.  உனக்கு ஞாபகம் இருக்கா, நாம முதல் முதல்ல டூர் போனப்ப...."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-7486935774090721688?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/7486935774090721688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=7486935774090721688' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/7486935774090721688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/7486935774090721688'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/06/blog-post_08.html' title='துரோகம்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6089827776989382890</id><published>2009-06-01T08:39:00.001+05:30</published><updated>2009-06-01T08:41:30.540+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைக்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும் (சிறுகதை)</title><content type='html'>முன்குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.&lt;br /&gt; &lt;br /&gt;இனி கதை...&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt; &lt;br /&gt;கி.பி. 1885&lt;br /&gt; &lt;br /&gt;சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"&lt;br /&gt; &lt;br /&gt;"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"&lt;br /&gt; &lt;br /&gt;"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்" &lt;br /&gt;&lt;br /&gt;"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"&lt;br /&gt; &lt;br /&gt;பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.&lt;br /&gt; &lt;br /&gt;"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"&lt;br /&gt; &lt;br /&gt;"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"&lt;br /&gt; &lt;br /&gt;"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"&lt;br /&gt; &lt;br /&gt;திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.&lt;br /&gt; &lt;br /&gt;"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம். &lt;br /&gt; &lt;br /&gt;"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.&lt;br /&gt; &lt;br /&gt;****&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"&lt;br /&gt; &lt;br /&gt;"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."&lt;br /&gt; &lt;br /&gt;"என்ன பிரச்சினை?"&lt;br /&gt; &lt;br /&gt;பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"&lt;br /&gt; &lt;br /&gt;"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"&lt;br /&gt; &lt;br /&gt;***** &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1972ன் இறுதியில்..&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.&lt;br /&gt; &lt;br /&gt;"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"&lt;br /&gt; &lt;br /&gt;"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும். &lt;br /&gt; &lt;br /&gt;இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."&lt;br /&gt; &lt;br /&gt;"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"&lt;br /&gt; &lt;br /&gt;விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"&lt;br /&gt; &lt;br /&gt;"என்ன சொல்றீங்க?"&lt;br /&gt; &lt;br /&gt;"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க‌. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவ‌து ஒரு பிர‌ச்சினை. அது எல்லாத்தையும் இப்ப‌ உருவாக்கி இருக்கிற‌ இந்த‌ ஒன்பதாவ‌து கருவுல‌ ச‌ரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன‌ அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு" &lt;br /&gt; &lt;br /&gt;"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"&lt;br /&gt; &lt;br /&gt;"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபல‌ம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"&lt;br /&gt; &lt;br /&gt;பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,&lt;br /&gt; &lt;br /&gt;"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."&lt;br /&gt; &lt;br /&gt;'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.&lt;br /&gt; &lt;br /&gt;"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."&lt;br /&gt; &lt;br /&gt;"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..&lt;br /&gt; &lt;br /&gt;****&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.&lt;br /&gt; &lt;br /&gt;அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.&lt;br /&gt; &lt;br /&gt;ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-6089827776989382890?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/6089827776989382890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=6089827776989382890' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6089827776989382890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6089827776989382890'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/06/blog-post.html' title='ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும் (சிறுகதை)'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-1379166045297203265</id><published>2009-03-25T15:24:00.000+05:30</published><updated>2009-03-25T15:25:39.143+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>துணுக்ஸ் - 2009/03/25</title><content type='html'>எப்படியோ 33 வருசத்துக்கு அப்புறமா நம்ம துளசி டீச்சர் ஊர்ல ஒரு டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சி. எதிர்பார்த்த முடிவுதான்னாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால இருந்தே எப்படியாவது இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 535 ரன்னுக்கு மேல அடிக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன், அது நடக்காம போயிடுச்சி. அது என்ன 535? கடைசியா சொல்றேன் :)))&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடரையும் ஜெயிச்சா 40 வருசத்துக்கு அப்புறமா நம்ம ஜெயிக்குற தொடரா இருக்கும். செய்வாங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;விகடன்ல இந்த வாரம் ரெண்டு விசயம் ஆச்சர்யப்படுத்துனது. ஒண்ணு கிருஷ்ணா டாவின்சி எழுதுன "அச்சக்காடு" சிறுகதை. அற்புதமான களம், அருமையான நடை, மிஸ் பண்ணாதீங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது "ஹாய் மதன்"ல ஒருத்தர் கேட்ட "காந்திஜி தாஜ் மஹாலை பாத்திருக்காரா?"ன்ற கேள்வி. ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இந்தியான்னு சொன்னவுடனே இந்தியர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வர்ற ரெண்டு விசயம் காந்திஜியும், தாஜ் மஹாலும்தான். மதனும் அதே பிரமிப்பை தன் பதில்ல காட்டியிருந்தாரு. ரொம்ப வித்தியாசமான கேள்வி இது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நல்ல விசயம் இருந்தா ஒரு உறுத்துற விசயமும் இருக்கணும்ல. அது என்ன இப்பவெல்லாம் விகடன் சினிமா மார்க் 43ஐ தாண்டுறதே இல்லை. சிவா மனசுல சக்திக்கு 42, நான் கடவுளுக்கு 43, காஞ்சிவரத்துக்கு 43.. ஒண்ணுமே புரியல, விகடன் மார்க் குடுக்குறத மறுபரிசீலனை பண்ணுறது நல்லதுன்னு நெனக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க‌, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவுல கிரிக்கெட் வேற. அதுக்கு பாதுகாப்பு தர முடியலன்னு மத்திய அரசு உண்மையை சொன்னா, உடனே "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசம் இல்லையா?"ன்னு பொசக்கெட்டத்தனமா ஒரு கேள்வி கேக்குறாங்க. விட்டா தேர்தலை தள்ளி வைக்க சொல்லுவாங்க போல. ஏன்யா, நாட்டோட அடுத்த பிரதமர் யார்னு முடிவு பண்ணுறத விட, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நமக்காக திட்டங்களைத் தீட்டப்போற அமைச்சர்கள் யாருன்னு தெரிஞ்சுக்குறத விட, நமக்காக நாடாளுமன்றத்துல பேசப்போற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குறத விட விளையாட்டு முக்கியமா போச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தன நாளா விளையாட்டுலதான் அரசியல் பண்ணிகிட்டு இருந்தீங்க, இப்ப அரசியல்ல விளையாட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுல நடக்குதாம். எல்லா கிரிக்கெட் வீரர்கள், டீமை ஏலம் எடுத்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பி சி சி ஐ நிர்வாகிகள் எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தென்னாப்பிரிக்காவுலதான் இருப்பாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னா 535?&lt;br /&gt;&lt;br /&gt;161 + 121 + 99 + 154 = 535&lt;br /&gt;&lt;br /&gt;வேற ஒண்ணுமில்லை, இதுக்கு முன்னால 2002 டிசம்பர் மாசம் நியூஸிலாந்துல நம்ம ஆளுங்க ரெண்டு டெஸ்ட் விளையாண்டு ரெண்டுலயும் தோத்தாங்க. அந்த ரெண்டு மேட்சுல நாலு இன்னிங்க்ஸ்லயும் இந்திய அணி அடிச்ச மொத்த ஸ்கோர்தான் இது.. :))))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-1379166045297203265?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/1379166045297203265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=1379166045297203265' title='69 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1379166045297203265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1379166045297203265'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/03/20090325.html' title='துணுக்ஸ் - 2009/03/25'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>69</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-1874927216242489689</id><published>2009-02-16T08:37:00.001+05:30</published><updated>2009-02-16T08:39:00.399+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விபத்து'/><title type='text'>நினைவுகளை மீட்டெடுத்த‌ விப‌த்து</title><content type='html'>விபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் &lt;a href="http://1.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHDozVf1I/AAAAAAAAA8Q/BXgiBkJr6pk/s1600-h/Photo1.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHDozVf1I/AAAAAAAAA8Q/BXgiBkJr6pk/s200/Photo1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302925951558319954" /&gt;&lt;/a&gt;நான் நானாக இருந்த / இருக்கவிட்ட‌ சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;புவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம். &lt;a href="http://2.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHDgl6kyI/AAAAAAAAA8Y/O2U_fYBo3qo/s1600-h/Photo2.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHDgl6kyI/AAAAAAAAA8Y/O2U_fYBo3qo/s200/Photo2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302925949354545954" /&gt;&lt;/a&gt;உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகம் முழுதும் கிடைக்கும் ப‌ஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம்,&lt;a href="http://1.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHD4fIYvI/AAAAAAAAA8g/SW0IR0JL9fg/s1600-h/Photo3.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 134px;" src="http://1.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHD4fIYvI/AAAAAAAAA8g/SW0IR0JL9fg/s200/Photo3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302925955768541938" /&gt;&lt;/a&gt; நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான‌ அடையாளம் குளிர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க,&lt;a href="http://3.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHEPY92rI/AAAAAAAAA8o/JDfn0aAERzY/s1600-h/Photo4.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHEPY92rI/AAAAAAAAA8o/JDfn0aAERzY/s200/Photo4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302925961916701362" /&gt;&lt;/a&gt; அவர் சிரித்துக் கொண்டே, "ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா" என்று கேட்க, "ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்" என்றேன். "அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம் &lt;a href="http://4.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHEYtZn6I/AAAAAAAAA8w/wC-ha943UTU/s1600-h/Photo5.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHEYtZn6I/AAAAAAAAA8w/wC-ha943UTU/s200/Photo5.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302925964418326434" /&gt;&lt;/a&gt;என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்‍ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஐ மிஸ் யூ பஃபல்லோ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-1874927216242489689?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/1874927216242489689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=1874927216242489689' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1874927216242489689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1874927216242489689'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/02/blog-post_16.html' title='நினைவுகளை மீட்டெடுத்த‌ விப‌த்து'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SZfHDozVf1I/AAAAAAAAA8Q/BXgiBkJr6pk/s72-c/Photo1.JPG' height='72' width='72'/><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-737048305321569012</id><published>2009-02-12T14:32:00.001+05:30</published><updated>2009-02-12T14:33:10.187+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>தங்கமான வண்டியும் தங்கமணியும்</title><content type='html'>&lt;strong&gt;"வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற‌?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"மாத்திடுங்க"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும்.  அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன‌ என‌க்கா கேக்குறேன்?"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்"&lt;br /&gt;&lt;br /&gt;"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா"&lt;br /&gt;&lt;br /&gt;"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது.."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க.  நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?"&lt;br /&gt;&lt;br /&gt;""&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"மொத்தம் எவ்ளோ வரும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;"#$%#%#$%#$%&amp;$%&amp;"&lt;br /&gt;&lt;br /&gt;"*(&amp;*(&amp;^%&amp;^%%^%$$&amp;$^$"&lt;br /&gt;&lt;br /&gt;"^%(**()&amp;()&amp;()*"&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-737048305321569012?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/737048305321569012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=737048305321569012' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/737048305321569012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/737048305321569012'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/02/blog-post_12.html' title='தங்கமான வண்டியும் தங்கமணியும்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4398442358856473603</id><published>2009-02-09T08:55:00.003+05:30</published><updated>2009-02-09T10:55:47.768+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>உங்களுக்கு "எழுத்தாளர் சுஜாதா"வைப் பிடிக்காதா?</title><content type='html'>சுஜாதா... இவரை வெறுமனே எழுத்தாளர் என்று குறிப்பிட்டதற்காக என்னை திட்டி ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருப்பீர்கள் (அ) போடத் தயாராக இருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாறை பேசும் யாருமே திட்டியாவது கலைஞரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் சொல்வது சுஜாதாவுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ் எழுத்துலகம் குறித்து யாராவது பேசினால் அது இவரைக் குறித்து பேசாமல் முற்றுபெறாது..&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அதுக்கு என்னடா நாயே? என்று கவுண்டமணி ஸ்டைலில் கேட்பவர்களுக்கு, "கொஞ்சம் பொறுங்க சாமி"&lt;br /&gt;&lt;br /&gt;நான் சுஜாதாவின் கதைகளை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை, என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றதும் பெற்றதும் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது வார இதழ்களில் வரும் அவரது சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவரது "ஏன்? எதற்கு? எப்படி?" தொடரின் புத்தகத்தை படித்தபின் பல்வேறு துறைகள் மீதான அவரது அறிவும், ஈடுபாடும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர் என்பதை நான் படிக்கும் எழுத்தாளர்களும், சந்திக்கும் நண்பர்களும் அடிக்கடி சொன்னாலும் நான் அவரது அறிவியல் கதைகளை படித்ததே இல்லை என்பதே உண்மை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பிரிவான அறிவியல் புனைகதைகளில் அவர் மன்னர் என்பது தெரிந்திருந்தாலும் நான் அவரது புத்தகங்களை படிக்க எந்த முயற்சியும் எடுக்காதது எனக்கே இன்று வரை ஆச்சர்யம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை சென்னை புத்தக சந்தைக்கு செல்வது என்று முடிவு செய்தவுடனே நான் எடுத்துக்கொண்ட சபதம் இந்த முறை அவரது புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று வழிகாட்டி உதவிய லக்கிலுக்கிற்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் படித்து முடித்த "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" பற்றி மற்றொரு சமயம் பதிவிடுகிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்தது அவரது "கறுப்புக் குதிரை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றி..&lt;br /&gt;&lt;br /&gt;விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுஜாதாவின் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ம் ஆண்டு வாக்கில் ஆனந்த விகடனில் வெளிவந்த "புதிய தூண்டில் கதைகள்" என்ற தொடரின் புத்தக வடிவம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைத் தொடர்கள் நம் எல்லாருக்குமே பரிச்சயமானதுதான். ஒரே எழுத்தாளரால் வாரம் ஒரு சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்), கார்க்கியின் புட்டிக்கதைகள் என்று நாம் எல்லோருமே விரும்பி படித்து வரும் (அ) வந்த தொடர்கள் கணக்கிலடங்கா..&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் இந்தத் தொடர் எப்படி இதிலிருந்து எல்லாம் வேறுபட்டது? நிஜமாகவே அந்த மனிதரை எல்லோரும் புகழும் அளவுக்கு அவரிடம் சரக்கிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான விடை இந்த புத்தகத்தை படிப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பில் இருக்கும் 12 கதைகளும், நம்புங்கள், 12 வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. எந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை அல்லது துளிகூட எழுத்தாளனின் சாயல் தெரியவே இல்லை. "கறுப்புக் குதிரை" கிரிக்கெட் சூதாட்டம் என்றால் அதற்கு அடுத்த கதையான "எல்லாமே இப்பொழுதே" முழுக்க முழுக்க மனித இனத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கடுத்த "கி.பி.2887ல் சில விலாசங்கள்" கட்டுப்பாடுகள் நிறைந்த எதிர்காலத்தில் சட்டத்தை மீறி ஒரு பெண்ணைத் தேடிச்செல்லும் ஒருவனைப் பற்றி. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஒரு சிறுகதையை படித்து முடித்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) எழுத்தாளர் என்பதற்கு சரியான உதாரணம் இந்தத் தொகுப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சுஜாதா ரசிகர் என்றால் இந்தக் புத்தகத்தைப் படியுங்கள். அவர் மீதான உங்கள் அபிமானம் இன்னும் அதிகமாகும். ஒருவேளை நான் தலைப்பில் சொல்லியிருப்பதுபோல், நீங்கள் இணையத்தில் எழுதும் ஒரு சிலரை போல், "அவனெல்லாம் ஒரு எழுத்தாளர்னு கொண்டாடுறானுங்க‌" என்று நினைப்பவராக இருந்தால், நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். உங்கள் நினைப்பு தவறு என்பது உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம்: கறுப்புக் குதிரை&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் பதிப்பகம்)&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவு: சிறுகதைத் தொகுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;விலை: ரூ.50/ (நிஜமாத்தான்.. ஒரு கதையின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவு)&lt;br /&gt;&lt;br /&gt;இது மலிவு விலை பதிப்பல்ல. தரமான தாளிலேயே அச்சிட்டு குறைந்த விலைக்கு கொடுத்த பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-4398442358856473603?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/4398442358856473603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=4398442358856473603' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4398442358856473603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4398442358856473603'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2009/02/blog-post.html' title='உங்களுக்கு &quot;எழுத்தாளர் சுஜாதா&quot;வைப் பிடிக்காதா?'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-1193034129322214731</id><published>2008-12-15T18:18:00.001+05:30</published><updated>2008-12-15T18:19:54.362+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுமுறைக்கடிதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு</title><content type='html'>என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில‌ வாரங்களாகவே என்னால் வலைப்பூ உலகில் முற்றிலுமாக இயங்க முடியவில்லை. நான் பதிவு எழுதி ஒன்றரை மாதங்கள் ஆனதே இதற்கு சாட்சி. சில வெளியில் சொல்ல இயலாத காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக சக பதிவர்களின் பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் என்னை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டதற்கும் என்னால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. தற்போதைய நிலை இன்னும் சில வாரங்களுக்காவது (மாதங்கள்?) தொடரும் என்பதால் என்னை நீங்கள் வலையுலகில் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே என்னுடன் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் அவ்வப்போது அழையுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் அனைவரின் பதிவுகளையும் படிப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். வருவதற்கு முயற்சி செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நன்றி..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-1193034129322214731?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/1193034129322214731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=1193034129322214731' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1193034129322214731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/1193034129322214731'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/12/blog-post.html' title='என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-3865171273396052348</id><published>2008-11-03T10:50:00.001+05:30</published><updated>2008-11-03T10:51:53.735+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>துணுக்ஸ்</title><content type='html'>சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி: என்னங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் (ச‌ரியாக‌ அவ‌ர் சொன்ன‌தை காதில் வாங்காம‌ல்): த‌லைப்பு "பேய் பிடித்த‌வ‌ன்" அப்ப‌டின்னு வெக்க‌லாம்னு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"டிட‌ங்க்..." (ஹி..ஹி.. அவ‌ங்க‌ கையில‌ இருந்த‌ க‌ர‌ண்டி ஹால்ல‌ லேண்ட் ஆன‌ ச‌த்த‌ம் அது)&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவ‌ன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட‌ செல்ல முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-3865171273396052348?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/3865171273396052348/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=3865171273396052348' title='163 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3865171273396052348'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/3865171273396052348'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/11/blog-post.html' title='துணுக்ஸ்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>163</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-854080814849300786</id><published>2008-10-30T09:00:00.002+05:30</published><updated>2008-10-30T09:04:43.382+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பேய் பிடித்தவன் (சிறுகதை)</title><content type='html'>எனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. மந்திரவாதியாம், எதிர்ல சடைய விரிச்சி போட்டுகிட்டு நெத்தி நெறய விபூதியோட நடுவுல அம்மாம் பெரிய குங்கும பொட்டு.. அவன் அடிக்கிற உடுக்கை சத்தம் வேற காது டமாரமே கிழிஞ்சிடும் போல இருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பேய் புடிச்சி இருக்காம். ஏன்டா.. பேய் உங்கள மாதிரி படிக்காதவனுங்களாதானடா புடிக்கும். நான் படிச்சவன்டா. எங்க ஊர்லயே மொத மொதலா காலேஜ் போய் எம்.எஸ்.சி பயோ டெக் படிச்சவன்டா நானு. என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது? யார்றா இப்படி ஒரு புரளிய கெளப்புனது!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடமே ஒரு மாதிரி பயமாத்தான் இருக்கு. என் கைய வேற ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு இழுத்து புடிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்கள பாத்தா இந்த‌ ம‌ந்திர‌வாதியோட‌ சிஷ்ய‌னுங்க‌ மாதிரி ரெண்டு பேர் இருக்கானுங்க‌. ம‌ந்திர‌வாதிக்கு கொஞ்ச‌மும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ மாதிரி ரெண்டு பேர், அதுல‌ ஒருத்த‌ன் என்னை விட‌ வய‌சு க‌ம்மியா இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ந்திர‌வாதி கேக்குற‌ எந்த‌ கேள்விக்கும் ப‌தில் சொல்ல‌க்கூடாது. இவ‌ன் ஏற்க‌ன‌வே என‌க்கு பேய் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கான். நான் பேசுனா அத‌ வெச்சி எதுனா த‌ப்பா புரிஞ்சிகிட்டாலும் புரிஞ்சிக்குவான்.&lt;br /&gt;&lt;br /&gt;போன‌ வார‌ம் இப்ப‌டித்தான். டவுனுக்கு போனப்ப ப‌ண்ணையாரோட‌ பொண்ணை பாத்து பேசிட்டு இருந்தேன். சின்ன‌ வ‌ய‌சில‌ இருந்தே என்கூட‌ ப‌டிச்ச‌ பொண்ணு அது. சிரிச்ச‌ முக‌மா அழ‌கா இருக்கும். எங்க‌ பாத்தாலும் பேசிட்டுதான் போகும். எதோ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ருக்கு வ‌ந்த‌தாம். அவ‌ங்க‌ அப்பா தீவிர‌மா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துட்டு ப‌க்க‌த்து க‌டையில‌ போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாதாரிப்பயலுவ, எவனோ இத பாத்துட்டு தப்பா நெனச்சிட்டு பண்ணையார்கிட்டபோய் எதோ சொல்லிட்டான் போல. அந்த ஆளுக்காவது அறிவு வேணாம். ஒண்ணும் விசாரிக்காம கரும்பு காட்டுக்குள்ளாற போட்டு என்னை அடி அடின்னு அடிச்சிட்டானுங்க. மரண அடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்குதான் அனுபவிச்சேன். ஊரை விட்டு ஓடிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே!!&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கையில சாட்டையை எடுக்கிறான். அடப்பாவி! அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா? போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா? உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா? இது ஆகறதில்ல. முடிஞ்சவரைக்கும் திமிறி தப்பிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கைய முறுக்கி, ஒரு கைய விடுவிச்சி, இன்னொரு கைய புடிச்சி இழுத்து, புடிச்சிட்டு இருந்தவனுங்கள விடுவிச்சிட்டு, பக்கத்துல இருந்த டேபிள் மேல காலை வெச்சி ஒரே ஜம்ப். நம்பவே முடியல. நானா இப்படி மேட்ரிக்ஸ் படம் மாதிரி ஜம்ப் பண்ணுறேன். மேல சீலிங் பேன்ல உக்காந்துட்டேன். கீழ பாத்தா யாரோ ஒரு சின்ன பையன எல்லாரும் புடிச்சிட்டு இருக்காங்க. அந்த மந்திரவாதி அந்த பையனை போட்டு அடிச்சிருப்பான் போல. அவனுக்கு விபூதி வெச்சிவிட்டு "இனிமே பிரச்சினை இல்லை" அப்படின்னு சொல்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவோ! பைத்தியக்காரனுங்க. இனிமே இங்க இருக்கக்கூடாது. வேற எங்கியாவது போக வேண்டியதுதான். எங்க போறது? ஹலோ! உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-854080814849300786?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/854080814849300786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=854080814849300786' title='67 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/854080814849300786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/854080814849300786'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/10/blog-post_30.html' title='பேய் பிடித்தவன் (சிறுகதை)'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>67</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8353622949772197030</id><published>2008-10-21T13:50:00.002+05:30</published><updated>2008-10-21T13:59:38.191+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='25ம் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்</title><content type='html'>இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).&lt;br /&gt;&lt;br /&gt;அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..&lt;br /&gt;&lt;br /&gt;எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.&lt;br /&gt;&lt;br /&gt;மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மேல சொன்ன கற்பனை கதைக்கும் &lt;a href="http://cyrilalex.com/?p=450"&gt;இதுக்கும்&lt;/a&gt; எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-8353622949772197030?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/8353622949772197030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=8353622949772197030' title='82 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/8353622949772197030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/8353622949772197030'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/10/25.html' title='என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>82</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-6618525796003367583</id><published>2008-10-20T09:06:00.001+05:30</published><updated>2008-10-20T09:07:38.239+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>போடுறா.. சினிமா தொடர் பதிவை...</title><content type='html'>ஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த &lt;a href="http://www.parisalkaaran.com/2008/10/blog-post_13.html"&gt;பரிசல்&lt;/a&gt;, &lt;a href="http://www.narsim.in/2008/10/blog-post_13.html"&gt;நர்சிம்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://thuklak.blogspot.com/2008/10/blog-post_14.html"&gt;துக்ளக் மஹேஷ்&lt;/a&gt; மூணு பேருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;முடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் &amp; ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;என் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;என் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;தசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே &lt;a href="http://venpu.blogspot.com/2008/09/blog-post.html"&gt;பதிவிட்டிருக்கிறேன்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;தாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;சமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.தமிழ்ச்சினிமா இசை?&lt;/strong&gt;&lt;br /&gt;என் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், "ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா &amp; சித்ரா. என்னோட டாப் 5:&lt;br /&gt;&lt;br /&gt;1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி&lt;br /&gt;2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி&lt;br /&gt;3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி&lt;br /&gt;4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு  &lt;br /&gt;5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி&lt;br /&gt;&lt;br /&gt;(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;சின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;இப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் "ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த தொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-6618525796003367583?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/6618525796003367583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=6618525796003367583' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6618525796003367583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/6618525796003367583'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/10/blog-post_20.html' title='போடுறா.. சினிமா தொடர் பதிவை...'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-4973846485634073630</id><published>2008-10-13T08:15:00.001+05:30</published><updated>2008-10-13T08:18:48.960+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுழல்கதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சின்னக்கதைகள்'/><title type='text'>சுழல் கதைகள் (5 இன் 1)</title><content type='html'>டிஸ்கி: இந்த பதிவுல மொத்தம் 5 சின்னக்கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதையும் தனித்தனி. அதனால போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம். ஒவ்வொரு கதையோட முடிவும் அடுத்த கதையோட ஆரம்பம் அப்படின்ற மாதிரி எழுதியிருக்கேன். நல்லாயிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி குண்டை கைகளால் அழுந்தியபடி சரிந்த சரவணபாண்டியன் நம்ப முடியாமல் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா பாக்குற? பி.ஏ.கிட்ட மினிஸ்டரு பணம் குடுத்துவிட்டதா சொன்னாரு, ஆனா இவன் சுட்டுட்டானேன்னா!! ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா? நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;என்றவாறே கிளம்பி சென்றவனை பார்த்தவாறே கண்களை மூடினார் சரவணபாண்டியன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சருக்காக அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்தவுடன் நடந்ததை விளக்கி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது கதவு தட்டப்பட்டது. திற‌ந்த அமைச்சர் இன்ஸ்பெக்டரை பார்த்து அதிர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆளுங்கட்சி பணம் கொடுத்து ஆளுங்களை இழுக்குறத நிரூபிக்கறதுக்காக எதிர்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணின ஸ்டிங் ஆபரேசன்தான் சரவணபாண்டியன் உங்க கட்சிக்கு வந்து சேர்ந்தது. நீங்க பணம் குடுக்குறத படம் புடிக்க உங்களுக்கே தெரியாம வெச்சிருந்த வீடியோ கேமிரால உங்க பி.ஏ. சுட்டதும், பேசுனதும் தெளிவா பதிவாயிடுச்சி. சி.எம் உங்களை அமைச்சர் போஸ்ட்ல இருந்தும், கட்சியில இருந்தும் நீக்கிட்டாரு. போலாமா சார்?"&lt;br /&gt;&lt;br /&gt;என்றவாறே கை விலங்கை காட்டியவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் முன்னாள் அமைச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட அவனை பயத்துடன் பார்த்தனர் கோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும். அவன் பீட்டர் சக்திவேல். தென்னிந்தியாவின் மிகக் கொடூரமான தீவிரவாதி. 2003ல் முத்துநகர் எக்ஸ்பிரஸிலும், 2004ல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், 2005ல் சென்னை வடபழனி பேருந்திலும் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. அதன் சூத்திரதாரி.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் அரிசிக் கடத்தலை தடுக்க நடந்த இரவு நேர சோதனையில் காவல்துறையே நம்பமுடியாத வகையில் மாட்டியவன். எதற்காக அவன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் என்பது புரியாமல் காவல்துறை பெருந்தலைகள் இல்லாத முடியை பிய்த்துக்கொண்டிருப்பது அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை வந்துவிட்டு சென்னை திரும்பும் காவல் வாகனத்தில் 5 காவலர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'இன்னிக்கு மதுரையில அழகர் ஆத்துல இறங்கப்போறாரு. அந்த இடத்துல வெக்கிறதுக்காக நான் பாம் செஞ்சு குடுத்துட்டு வர்றப்பதான் என்னை புடிச்சிட்டீங்க. இதோ நான் மதுரையில இருந்து கிள‌ம்பிட்டேன். இன்னும் 2 ம‌ணி நேர‌த்துல‌ வெடிக்க‌ப்போகுது. போங்க‌டா போக்க‌த்த‌வ‌னுங்க‌ளா'&lt;br /&gt;&lt;br /&gt;என்று நினைத்துக் கொண்டிருந்த‌ அதே வேளையில், அவ‌ன் போலீஸில் சிக்கிய‌தும், போலீஸுக்கு பயந்த அவன் கூட்டாளி வெடிகுண்டை ஒரு பப்ளிக் டாய்லெட்டில் வீசிவிட்டு சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் உணவகத்தில் நிற்கும்போது டாய்லெட் செல்லும் அவன் வெடித்து சிதறப்போவதும் தெரியாம‌ல் ச‌ந்தோச‌ப்ப‌டும் அவ‌னை நினைத்து அழ‌க‌ர் சிரித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா.. எதுக்குயா சிரிக்கிறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா சோலை.. வறட்சி நிவாரணம் பணம் முழுசும் உனக்கே குடுத்துட்டா அப்புறம் எங்களுக்கு நிவாரணம் யாரு குடுக்குறது? ஒனக்கு ஏக்கருக்கு ரெண்டாயிரம்னு மொத்தம் பத்தாயிரம் சாங்ஷன் ஆகியிருக்கு, வெளியில போயி முருகன் இருப்பான், அவன்கிட்ட ஆயிரம் ரூபா குடுத்துட்டு வா, ஒனக்கு நான் டோக்கன் குடுக்குறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் வந்த சோலை "படுபாவிங்க, 6 மாசமா மழையே இல்லாம கடவுள்தான் கழுத்தறுக்குறாருன்னா, கவர்மென்டு குடுக்குற வறட்சி நிவாரணத்தைக் குடுக்குறதுக்கு இவனுங்களும் கழுத்தறுக்கிறானுங்க" என்று நினைத்தவாறே, கடன் வாங்கி வந்திருந்த ஆயிரம் ரூபாயை ஆபிசர் சொல்லியவனிடம் கொடுத்து, பின் டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;'இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும். ஆண்டவனே! எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே! கொஞ்சம் கொஞ்சமா மழை கொறஞ்சி இந்த வருசம் சுத்தமா இல்லாம போச்சே.. ஏன் எங்கள இப்படி சோதிக்கிற' என்று புலம்பியவாறே வறண்டு கிடந்த ஏரிக்குள் நுழைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக வானம் கறுக்க ஆரம்பித்திருந்தது, அவன் அணிந்திருந்த அழுக்கான மெல்லிய சட்டையைத் தாண்டி லேசான குளிர் தெரிய ஆரம்பித்தது. த‌லையைத் தூக்கி வான‌த்தைப் பார்த்த‌வ‌ன் ஆண்ட‌வ‌னை வேண்ட‌ ஆர‌ம்பித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;'ஆண்ட‌வா! இன்னும் ரெண்டு கிலோமீட்ட‌ர் ஊருக்கு போக‌ணும். இந்த பணத்தை நம்பிதான்யா எங்க எதிர்காலமே இருக்கு. ஏரியைத் தாண்டி வூட்டுக்கு போற‌ வ‌ரைக்கும் ம‌ழை வ‌ராம‌ நீதாம்பா காப்பாத்துணும்'&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாது நான் உன்ன காப்பாதுறதா? நான் என்னைய‌ காப்பாத்திக்கவே போராடிட்டு இருக்கேன்" என்றான் மாணிக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்ல மச்சான்.. உனக்குதான் தெரியுமே நான் அந்த சீட்டு கம்பெனியில வேலைக்கு சேந்தது. எங்க குப்பத்துல என்னைய எல்லாருக்கும் நல்லா தெரியும்ன்றதால எல்லார்கிட்டயும் பேசி சீட்டு சேத்து விட்டேன். எனக்கும் கமிஷன் கிடைச்சிது. அந்த நாதாரி இப்படி ஒரே நைட்ல எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடுவான்னு எனக்கென்னா தெரியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. சரி.. அழுவாத.. அதுக்குதான் நான் மொதல்லயே சொன்னேன். இப்பல்லாம் ஏமாத்துறவனுங்க டைரக்டா செய்யுறதில்ல, இப்படி அந்த ஏரியாவுல நல்ல பேர் இருக்குறவனா பாத்து புடிச்சு போடுறானுங்க.. நீயும் அதுக்கு பலிகடா ஆயிட்ட"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா மச்சான்" &lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. ஒண்ணு பண்ணு.. சாப்டுட்டு போய் நம்ம போட்டாண்ட நில்லு, கபாலி வருவான், இன்னிக்கு அவன் மட்டும்தான் கடலுக்கு போறான். நீயும் அவன் கூட போயிட்டு வா. தரையில இருக்குறது ஒனக்கு இப்ப சேஃப் இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணிநேரம் கழித்து கபாலி வந்தான். அவனிடம் விவரம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய பிரச்சினை என்று மட்டும் சொல்லி, அவனுடன் படகில் கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கபாலியும், மச்சானும்தான் சேர்ந்து இந்த படகை வாங்கினார்கள். கபாலி ரொம்ப நல்லவன். 15 வருசமாக இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலும் இதுவரை தகராறு எதுவும் வந்ததில்லை. ஆனால் அவன் ஒரு வாயாடி.. பேசிக்கொண்டே வந்தான். 2 மணிநேரத்திற்கு பிறகு மெதுவாக கபாலி கேட்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் முத்து.. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் புதுசா சீட்டு கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு.. நல்ல மனுசந்தான்.. நானே சேத்து உடறேன்.. நீ வேணா ஒரு அம்பதாயிரம் ரூபா சீட்டு போடேன்"&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது? இன்னொரு சீட்டு போடுறதா? என்னடா விளையாடுறியா?" என்று மெதுவான குரலில் கேட்டான் கிருஷ். அவர்கள் இருந்தது நகரின் பிரபலமான காஸினோவின் ப்ளாக் ஜாக் டேபிளில்..&lt;br /&gt;&lt;br /&gt;"விளையாண்டுட்டுதானேடா இருக்கோம்" சிரித்தான் சித்தார்த்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏற்கனவே 18 இருக்கு, இன்னும் கார்டு கேக்குற, ரெண்டு, மூணு இல்லை ஏஸ் வரலைன்னா நீ தோத்துடுவ"&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்ல, டிரை பண்ணுவோம், லைஃப்ல ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாதுடா. அதுவும் இது என்னா சுண்டைக்கா, ரெண்டாயிரம் டாலர்தான, போயிட்டு போவுது"&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சீட்டு 2 வந்தது. சித்தார்த் ஜெயித்தான். அவன், அமெரிக்க ராணுவத்திற்கு தளவாடம் சப்ளை செய்யும் மிக முக்கியமான நிறுவனத்தின் ஆர் &amp; டி பிரிவின் மிக மிக முக்கியமான நபர். மறுநாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நடக்க இருக்கும் ரகசிய டெமோவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரிலாக்ஸேஷனுக்காக காஸினோ வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னமோ போடா.. உன்னை பாராட்டுறதா திட்டுறதான்னு தெரியல. ஒரு விசயம், எல்லா நேரத்திலயும் அதிர்ஷ்டம் கை குடுக்காது. பாத்து நடந்துக்க"&lt;br /&gt;&lt;br /&gt;"கம்முனு இருடா.. சும்மா பாட்டி மாதிரி புத்தி சொல்லிட்டு" சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள், புதிதாக வடிவமைக்கப்பட்ட குறைந்த எடையுடைய ஆனால் அதி நவீன துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவையும் தடுக்கக்கூடிய கவச உடை டொமோ. கடந்த ஒரு மாதமாக எல்லா விதமாக டெஸ்டிங்கும் செய்து அறிக்கை அளித்திருந்த அவனது டீமிற்கு நன்றி சொல்லிவிட்டு டெமோ பீஸுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சித்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய் சித்.. ஏன் இந்த டெமோவை வெளியில வெச்சிக்கக் கூடாது. ஏன்னா  ரியல் டைம் டெமோவா இருக்கணும்னு பார்க்குறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஷ்யூர்.. வாங்க போகலாம்" வெளியே வந்தான். மே மாத வெயில் 98 டிகிரியில் கொளுத்திக்கொண்டிருந்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போ நானே இதை போட்டுக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் வேற யாராவது..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி பண்ணினா, இந்த ப்ராடக்ட் மேல எனக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்" ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான் சித்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க என் உடம்பை குறி பாத்து சுடுங்க ஜாக்.."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சித்" என்று கூறியவாறே குறி பார்த்து சுட்டான் ஜாக்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் டிரிக்கரை அழுத்திய வினாடி, சித்தார்த்திற்கு முதல் நாள் டெஸ்ட் ரிப்போர்டில் படித்த ஃபெய்லியர் கேஸஸ் லிஸ்ட் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'வெப்பநிலை 95 டிகிரிக்கு அதிகமாகவும் ஈரப்பதம் 30%க்கு அதிகமாகவும் செல்லும்போது கவச உடையில் உள்ள ஃபைபர் நெகிழ்ந்து துப்பாக்கி குண்டை தடுக்கும் சக்தியை இழக்கிறது. 116க்கு 1 முறை இந்த நிகழ்வு காணப்பட்டது'&lt;br /&gt;&lt;br /&gt;வெப்பநிலை கிட்டதட்ட 100 இருக்கும். தன் வேர்வையில் ஏற்கனவே உடை முழுதும் நனைந்துள்ளது. அதிர்ந்து போய் பார்த்தான். துப்பாக்கி குண்டு அவன் நெஞ்சுக்கு நேராக வந்துகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்போ முதல் கதையை படிக்க ஆரம்பிங்க)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-4973846485634073630?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/4973846485634073630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=4973846485634073630' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4973846485634073630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/4973846485634073630'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/10/5-1.html' title='சுழல் கதைகள் (5 இன் 1)'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-8026204484225521867</id><published>2008-10-02T08:52:00.001+05:30</published><updated>2008-10-02T08:54:06.865+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்டோபர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு</title><content type='html'>சென்னை, அக். 1:&lt;br /&gt;சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு நடக்க இருப்பதாக சென்னை பதிவர் சங்க தற்காலிக பொறுப்பாளர் அதிஷா தெரிவித்துள்ளார். இதன் விவரங்கள் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சென்னை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பதிவர் சங்க பொறுப்பாளர் அதிஷா, சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பதிவர்கள் சந்தித்து மொக்கை போடாமல் இருப்பதாக கடற்கரை சாலையில் கால்கடுக்க நின்றிருக்கும் காந்தியடிகள் கவலைப்பட்டுள்ளதாகவும், இதை முன்னிட்டு வரும் அக்டோபர் நான்காம் தேதி மாலை மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் கூறுகையில், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வளர்த்து வரும் அண்ணன் பொட்"டீ"க்கடை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை லக்கிலுக் தலைமையிலான பதிவர் படை இறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாடு டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிவர்களிடையே அரசியல் மிகுந்து இருப்பதாகவும் ஆனால் அந்த அரசியலால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்பதால் எந்த டிவியும் கண்டுகொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருக்கும் அனைத்து தமிழ் பதிவர்களும் அலைகடலென திரண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மாநாடு முடிந்தபின் டமாரு கொமாருவுடன் காண்டு கஜேந்திரனை சந்திக்க செல்வதாக முடிவு செய்திருப்பதாகக் கூறினார். இந்த செய்தியை அவர் சொன்னதற்கு காரணம் தாமிரா மற்றும் வால்பையனை வரவழைக்கவே என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் பதிவர் முரளிகண்ணன் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதால் பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு பிறகு பதிவு எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட தல பாலபாரதிக்கு மாநாட்டில் கறுப்புக் கொடி காட்ட வெண்பூ உள்ளிட்ட பதிவர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்திகளை அடியோடு மறுத்த அவர் இது போன்ற செய்திகளுக்கு வெளிநாட்டு சதியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேல் தகவல்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: அக்டோபர் 4, 2008 (சனிக்கிழமை)&lt;br /&gt;&lt;br /&gt;நேரம்: மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம்&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொள்பவர்கள்: சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும்&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பார்க்கப்படுபவர்கள்: புதிய பதிவர்கள் மற்றும் இதுவரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு அழைப்பாளர்: பொட்"டீ"க்கடை&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்களுக்கு..&lt;br /&gt;அதிஷா மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com&lt;br /&gt;அதிஷா அலைபேசி எண் - 9941611993&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:&lt;br /&gt;அதிஷா : &lt;a href="http://www.athishaonline.com/2008/09/04-10-2008.html"&gt;சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008&lt;/a&gt;&lt;br /&gt;முரளிகண்ணன் : &lt;a href="http://muralikkannan.blogspot.com/2008/09/4.html"&gt;அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8895226144731107621-8026204484225521867?l=venpu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://venpu.blogspot.com/feeds/8026204484225521867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8895226144731107621&amp;postID=8026204484225521867' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/8026204484225521867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8895226144731107621/posts/default/8026204484225521867'/><link rel='alternate' type='text/html' href='http://venpu.blogspot.com/2008/10/blog-post.html' title='சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு'/><author><name>வெண்பூ</name><uri>http://www.blogger.com/profile/09794724509547465558</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp3.blogger.com/_3pqc-DcpdvI/R-j_A8V67KI/AAAAAAAAATo/4Wl6HVQjOwg/S220/Profile.JPG'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8895226144731107621.post-17783168056683086</id><published>2008-09-20T23:59:00.007+05:30</published><updated>2008-09-21T00:22:19.174+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவுஜ‌'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலைவெறி கவிதை'/><title type='text'>என் அன்பு மகனே...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_3pqc-DcpdvI/SNVEQWNB37I/AAAAAAAAArM/Ou4AdyI7VdA/s1600-h/Aadharsh.jpg"&gt;&lt;img style="display:b
